ஆடை-பித்தன் -கவிக்கோ (20-21)

 

ஆடை

 

பித்தன்

தன் சட்டையைக்

கிழித்துக்கொண்டிருந்தான்

 

 

 

 

சட்டையை ஏன்

கிழிக்கிறாய் ? என்றேன் .

 

கடிதத்தைப் படிக்கவேண்டும்

என்றால் உறையைக்

கிழிக்கத்தானே வேண்டும்? “என்றான்

 

 

அவன் மேலும் சொன்னான் :

 

நான் ஆறிவிட்டேன் .

எனவே

இனிமேல் எனக்கு

இந்த காரச் சீலை

தேவையில்லை .

 

 

 

பொய்க்குத்தான்

ஆடை தேவை .

மெய் க்குத்

தேவையில்லை .

 

 

 

உங்கள் ஆடை

 விலக்கப்பட்ட கனியைத்

 தின்ற பாவத்தால்

நெய்யப்பட்டதல்லவா ?

 

 

 

உங்கள் ஆடை

இறந்து போன கள்ளமின்மைக்குப்

போர்த்திய

சவக்கோடி அல்லவா ?

 

 

 

 

பூக்களும் பறவைகளும்

ஆடை அணிவதில்லையே ?

 

 

 

நீங்கள்

ஆபாசமானீர்கள் :

அதனால் உங்களை

ஆடையால் மறைத்தீர்கள் .

 

 

 

ஆடையை

 முகவரி ஆக்கியபோது

நீங்கள் காணாமல் போனீர்கள்.

 

 

 

உங்கள் ஆடைகளை

ஒப்பனை அறையிலிருந்தே

 பொறுக்கிக் கொள்கிறீர்கள் .

 

 

 

தேங்கிய நீர்தான்

பாசியை

உடுத்திக்கொள்கிறது .

 

 

 

அணைந்த நெருப்புத்தான்

சாம்பலை

அணிந்து கொள்கிறது

தோலும் ஆடைதான் என்பதைப்

பாம்பு அறிந்திருந்தத்து

நீங்கள் அறியவில்லை.

 

 

அர்த்தம்

வார்த்தையை

 உடுத்திக்கொள்வதைப் போல்

உங்களால் உடுக்க முடியவில்லை .

 

பித்தன் -கவிக்கோ (20-21)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி