பிரளயம்-பித்தன் -கவிக்கோ (27-28)
பிரளயம்
நீ சீர்திருத்தவாதியா
?
என்று கேட்டேன் .
இல்லை :நான்
திருத்துவதற்காக அல்ல ,
சங்காரத்திற்காக
வந்திருக்கிறேன்
என்றான் பித்தன் .
அவன் மேலும் சொன்னான் :
குப்பைகளை எப்படிச்
சீர்திருத்துவது ?
நான் கூட்டித் தள்ளவே
வந்திருக்கிறேன் .
இல்லை
என் துடைப்பம் .
உங்கள் ஆபாசமான
உண்டு களை எல்லாம்
மறுக்கவே வந்திருக்கிறேன்
.
‘இல்லை ‘யின்
தூதுவன் நான் .
‘இல்லை ‘ என்
மகாவாக்கியம் .
‘இல்லை ‘ என்
ஒற்றைச்சொல் வேதம் .
போதிக்க அல்ல .
உங்களுக்குப்
போதிக்கப்பட்டத்தை
அழிக்கவே வந்திருக்கிறேன்
.
நினைவூட்ட அல்ல ,
உங்களுக்கு
மறதியைத்
தரவே வந்திருக்கிறேன் .
உங்கள் நினைவுகள்
இறந்த காலத்துக்
குப்பைகளாகவே
இருக்கின்றன .
ஒளியைத் தர அல்ல ,
உங்களுக்கு
இருளைத் தரவே
வந்திருக்கிறேன் .
மூர்க்கத்தனமான ஒளியில்
உங்கள் நட்சத்திரங்கள்
மங்கிப் போய்விட்டன .
விழிப்பைத்தர அல்ல ,
உங்களுக்கு
உறக்கத்தைத் தரவே
வந்திருக்கிறேன்
.
உங்கள்
பார்வையற்ற விழிப்பில்
உங்கள் கனவுகளை
நீங்கள் இழந்துவிட்டீர்கள்.
வழிகாட்ட அல்ல ,
உங்களை
வழிமறிக்கவே
வந்திருக்கிறேன் .
உங்கள்
பார்வைகள் எல்லாம்
மயானத்திற்கே செல்கின்றன .
நிலாவின்
ஒளிப் பக்கத்தையே
பார்த்துக்
கொண்டிருப்பவர்களுக்கு
அதன்
இருண்ட பக்கத்தையும்
காட்டவே வந்திருக்கிறேன் .
இருண்ட பக்கமும்
சேர்ந்துதான் நிலா :
அதுவும் அழகானதே
என்பதை
உணர்த்தவே வந்திருக்கிறேன்
.
உங்கள் எடைக் கற்களை
எடை போடவே
வந்திருக்கிறேன் .
உங்கள் பீடங்கள்
சமாதிகள் என்று
காட்டவே வந்திருக்கிறேன் .
மழையாக அல்ல ,
பிரளயமாகவே
வந்திருக்கிறேன் .
அது
நோவாவின் பேழையையும்
மூழ்கடிக்கும் .
பித்தன்
-கவிக்கோ (27-28)

Comments
Post a Comment