அவதாரம்-பித்தன் -கவிக்கோ (50-51)
அவதாரம்
எல்லோரும்
மலையின் மீது
ஏறிக்கொண்டிருந்தபோது
பித்தன் மட்டும்
கீழே
இறங்கி கொண்டிருந்தான் .
நீ ஏன்
இறங்கி கொண்டிருக்கிறாய் ?
என்று கெட்டேன் .
மேலே செல்வதற்காக
என்றான் .
அவன் மேலும்
சொன்னான் :
கீழே விழும்
விதை தான்
மேலே செல்கிறது .
ஏற்றம்
இறக்கத்தில்தான்
நீரை முகக்கிறது .
தராசில்
கனமான தட்டே
கீழே இறங்குகிறது .
அரியாசனத்தில்
ஏறுகிறவனுக்கல்ல:
இறங்க்குரவனுக்கே
இதிகாசம் கிடைக்கிறது .
இறங்கும் பூமியின்
மேகமே
தாகம் தீர்க்கிறது .
பறக்கும் போதல்ல :
அறுந்து விழுந்த பிறகே
பட்டத்திற்கு
அமைதி கிடைக்கிறது .
ஆரோகொனத்தில் அல்ல ,
அவரோகணத்தில் தான்
ஸ்வரங்கள்
கூட்டை அடைகின்றன .
இறங்குவது பரவசம் :
அதனாலல்லவா
அருவி பாடிகிறது ?
பறப்பவன்
முடியைக்
காணாமல் போகலாம் .
இறங்குபவன் அடியைக்
கண்டுவிடுகிறான் .
பழுத்த கனியே
கீழே இறங்கும் .
மேலே என்பது
மேலே இருக்கிறது
என்பது தான்
உங்கள்
பெரிய மூடநம்பிக்கை .
பித்தன்
-கவிக்கோ (50-51)

Comments
Post a Comment