அவதாரம்-பித்தன் -கவிக்கோ (50-51)

 

அவதாரம்

 

எல்லோரும்

மலையின் மீது

ஏறிக்கொண்டிருந்தபோது

 பித்தன் மட்டும்

 கீழே

 இறங்கி கொண்டிருந்தான் .

 

 

நீ ஏன்

இறங்கி கொண்டிருக்கிறாய் ?

என்று கெட்டேன் .

மேலே செல்வதற்காக

என்றான் .

 

அவன் மேலும் சொன்னான் :

 

கீழே விழும்

விதை தான்

மேலே செல்கிறது .

 

ஏற்றம்

இறக்கத்தில்தான்

நீரை முகக்கிறது .

 

 

 

தராசில்

 கனமான தட்டே

 கீழே இறங்குகிறது .

 

 

அரியாசனத்தில்

ஏறுகிறவனுக்கல்ல:

இறங்க்குரவனுக்கே

 இதிகாசம் கிடைக்கிறது .

 

 

இறங்கும் பூமியின்

மேகமே

தாகம் தீர்க்கிறது .

 

 

பறக்கும் போதல்ல :

அறுந்து விழுந்த பிறகே

 பட்டத்திற்கு

அமைதி கிடைக்கிறது .

 

 

 

ஆரோகொனத்தில் அல்ல ,

அவரோகணத்தில் தான்

ஸ்வரங்கள்

 கூட்டை அடைகின்றன .

 

 

இறங்குவது பரவசம் :

அதனாலல்லவா

அருவி பாடிகிறது ?

 

 

பறப்பவன்

முடியைக்

காணாமல் போகலாம் .

இறங்குபவன் அடியைக்

கண்டுவிடுகிறான் .

 

 

பழுத்த கனியே

 கீழே இறங்கும் .

 

 

மேலே என்பது

மேலே இருக்கிறது

என்பது தான்

உங்கள்

பெரிய மூடநம்பிக்கை .

 

 

பித்தன் -கவிக்கோ (50-51)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி