பெண்-பித்தன் -கவிக்கோ (68-69)


பெண்

 

பெண்களின் கூடடதைக்கண்டு

 பித்தன் விலகி ஓடினான்.

 

 

 

நீ பெண்களை வெறுப்பவனா ?

என்று கேட்டேன் .

 

 

இல்லை :அவர்களை

வெறுக்காமல் இருக்கவே

விலகிசெல்கிறேன் .

பெண்

 தூரத்தில்தான்

அழகாயிருக்கிறாள் என்றான் .

 

 

அவன் மேலும் சொன்னான் .

சொர்க்கத்தையும்

நரகத்தையும் பூமியிலே நாம்

 சுவைத்துப் பார்க்கவே

இறைவன்

பெண்ணைப் படைத்தான் .

 

 

 

நாம்

அவள் வழியாகவே

பிரவேசிக்கிறோம் :

அவள் வழியாகத்தான்

 வெளியேறவும் வேண்டும் .

 

 

அவள்

பொருள் புரியாத கவிதை :

அதனால்தான்

அவள் கவர்ச்சி

 மங்குவதில்லை .

 

 

அவள் தாயாகிப்

பரிபாலிக்கிறாள் .

தாரமாகி

நிக்கிரகம் செய்கிறாள் .

 

 

நெருப்புக்க்கன்னாடியில்

பிரதிபலிக்கும்

நம் விரோத பிம்பம்

 அவள்.

 

நம்மை

வசீகரித்து

நம் சிறகுகளை எரிக்கும்

 விளக்கு அவள்.

அழகான ஆயுதங்களால்

நம்மைத் தாக்கி

விளையாடும்

பிரியமான எதிரி அவள்.

 

 

அவள் சரக்கூடு

தீர்வதில்லை.

 

 

அவளிடம் தோற்பதால்

 நாம் தப்புகிறோம் .

 

நம்மை

 இரையாகப் பிடித்துண்ண

 இருட்டு மூலைகளில்

அவள்

வலை பின்னுகிறாள்.

 

 

நம்மை

விழுங்குவதும்

 உமிழ்வதுமாக

 அவள்

 சலிக்காமல் விளையாடுகிறாள்.

 

அவள் ஆகர்ஷணத்தில்

 அடிமைகளாகி

அவளையே

 சுற்றிச் சுழலும்

பரிதாபமான

 கிரகங்கள் நாம் .

 

நாம்

காணாமல் போவதும்

அவளிடமே :

நம்மைக் கண்டெடுப்பதும்

அவளிடமே .

 

 

பெண்ணே!

உன்னிடமிருந்து

நம்மை காப்பாற்று என்று

 பிராத்திப்போமாக .

 

பித்தன் -கவிக்கோ (68-69)

 

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி