தீக்குச்சி-பித்தன் -கவிக்கோ (80-81)

 

தீக்குச்சி

 

 

தீக்குச்சி

விளக்கை ஏற்றியது .

 

எல்லோரும்

தீக்குச்சியை  வணங்கினார்கள்.

 

 

பித்தன்

கீழே எறியப்பட்ட  

தீக்குச்சியை வணங்கினான் .

 

ஏன் தீக்குச்சியை

வணங்குகிறாய் ?

என்று கேட்டேன் .

 

ஏற்றப்பட்டதை விட

 ஏற்றிவைத்தது

 உயர்ந்ததல்லவா ? என்றான்.

 

 

அவன் மேலும் சொன்னான் :

 

தீக்குச்சி தான்

பிரசவிக்கிறது .

விளக்கோ

 வெறும் தொட்டில் .

 

 

தீக்குச்சி தான்

எழுதுகிறது

விளக்கோ

வெறும் காகிதம் .

 

தீக்குச்சி

பிச்சை போடுகிறது

விளக்கோ

வெறும் பிச்சைப் பாத்திரம்.

 

தீக்குச்சி

ஒரே வார்த்தையில்

பேசி விடுகிறது .

விளக்கோ

வளவளக்கிறது .

 

 

 

தீக்குச்சி

ஒளிக்காகத் தன்னையே

தியாகம் செய்து கொள்கிறது.

விளக்கோ

 ஒளியினால் பிழைக்கிறது

 

நீங்கள்

உங்கள் தீக்குச்சிகளைக்

கொண்டாடுவாதில்லை .

விளக்குகளையே

கொண்டாடுகிறீர்கள் .

 

 

 

அதனால்தான்

உங்கள் திருவிழாக்கள்

 இருட்டாகவே இருக்கின்றன

 

நீங்களும்

தீக்குச்சியாக இருக்க

 விரும்புவதில்லை .

விளக்காக இருக்கவே  

விரும்புகிறீர்கள்

 

அதனால்

சூரிய வேளையில்

நீங்கள் அணைக்கப்பட்டு

விடுகிறீர்கள் .

 

 

இதோ ,இந்தக்

குச்சியிலிருந்து புறப்படும்

அமர ஒளியை

உங்களால்

 காண முடிந்திருந்திருந்தால்

உங்கள் ஆடபர விளக்குகளின்

பிரகாசத்தில்

உங்கள் கண்

குருடாயிருந்திருக்காது .

 

 

பித்தன் -கவிக்கோ (80-81)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி