வார்த்தை -பித்தன் -கவிக்கோ (86)

 

வார்த்தை :

 

பித்தன் பூவனத்தில் இருந்தான் .

என்ன செய்கிறாய் ?

என்று கேட்டேன் .

 

பூவின் மொழியைக்

கற்றுக் கொண்டிருக்கிறேன்

  என்றான் .

 

 

அவன் மேலும் சொன்னான் .

 

பூவைப் போல

ஐந்து பொறிகளிடமும்

பேசும் வார்த்தை

உங்கள் மொழிகளில்

உண்டா ?

 

 

ஒவ்வொரு

 பூவிலும்

ஒரு வேதம்

வெளிப்படுகிறது .

 

பூவின் மொழி

ஆழமானது :

அதனால் தான்

அதில் சப்தமில்லை .

 

நீங்கள்

அர்த்தத்தை

வார்த்தைக் கூண்டுக்குள்

அடிக்கிறீர்கள் .

 

வார்த்தையின் சப்தம்,

 அர்த்தத்தின் சிறகுகள்

படபடக்கும் ஓசை தான் .

 

 

 

உங்கள் வார்த்தைகளில்

 இடி மட்டும்தான்

இருக்கிறது

மின்னலும் இல்லை :

மழையும் இல்லை .

உங்கள் வார்த்தைகளில்

இடி மட்டும்தான்

இருக்கிறது .

மின்னலும் இல்லை :

மழையும் இல்லை

 

 

சப்தத்திற்குப்

பசியெடுக்கும்போது

அது அர்த்தத்தைத்

தின்றுவிடுகிறது .

 

சப்தத்திற்குப்

பசியெடுக்கும் போது

அது அர்த்தத்தைத்

தின்றுவிடுகிறது.

 

நீங்கள்

அர்த்தத்தை அல்ல.

சப்தத்தையே

வழிபடுகிறீர்கள் .

 

வார்த்தையைச்

 சிலுவையில்

அறையுங்கள் .

அதன் ரத்தம்

உங்கள்

ஜென்ம பாவத்தைக்

 கழுவட்டும் .

 

பித்தன் -கவிக்கோ (86)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி