பித்தன் - உரிமை -கவிக்கோ (87-90)
உரிமை
உரிமை முழக்கமிட்டுச்சென்ற
ஊர்வலத்தை பார்த்துச்
சிரித்தான் பித்தன்.
ஏன் சிரிக்கிறாய் ?
என்று கேட்டேன் .
சூரியோதோதயத்தைக் கோரும்
குருடர்களைக் கண்டதால்
சிரிப்பு வராதா ?
என்றான் பித்தன்.
அவன் மேலும் சொன்னான் .
சூரியன் உதித்தாலும்
இவர்கள்
பார்க்கப் போவதில்லை.
ஒளியைப் பற்றி
அறியாமலே
இவர்கள்
ஒளியைக் கேட்கிறார்கள்.
இவர்கள்
அடைப்தையெல்லாம்
சிறை என்கிறார்கள் :
கட்டுவதை எல்லாம்
விலங்கு என்கிறார்கள் .
வானத்தில் பறக்கும்
பட்டம்
நுலை விலங்கென்று
அறுத்துக்கொண்டால்
தரையில் விழுந்துவிடும் .
தீபச் சுடர்
சிம்னியைக் கூண்டென்று
உடைத்து விட்டால்
காற்றில் அணைந்து போகும்.
பூக்கள் வெலியைச்
சிறையென்று
தகரத்து விட்டால்
மாடுகளுக்குத்
தீனியாகிவிடும்.
நதிகளை நீங்கள்
பார்த்ததில்லையா ?
அவை
சுதந்திரமாகத்தான்
ஓடுகின்றன .
ஆனால்
தங்களுக்கெனக்
கரைகளைத் தாங்களே
உண்டாகிக்கிக் கொள்கின்றன .
சுதந்திரமாகத் திரயும்
காற்று
புல்லாங்குழலுக்குள்
அடைபட்டு
விரல்களின் ஆணைக்கு
இணங்கும் போதுதான்
இசையாகிறது.
காதலில்
சிறைப்படுவது
சுதந்திரத்தை விடச்
சுகமானதல்லவா ?
அன்புக்குக்
கட்டுப்படுவது
உரிமை விட
உன்னதமானதல்லவா ?
வேர்களை
விலங்கென்று நினைக்கும்
மரங்களுக்குப்
பூக்கள் கிடைக்குமா ?
பறவைக்குச்
சிறகு முளைப்பதே
முட்டைச் சிறைக்குள்தான் .
இவர்கள்
சிறகுகளைச்
சிறகுகளுக்காகவே
கேட்கிறார்கள் .
இவர்கள்
சிறகுகள்
பறப்பதற்கே
என்கிறார்கள் .
இவர்கள்
சிறகுகளை
இலட்சியம்
என்கிறார்கள் .
அவை வெறும்
சாதனம்தான் என்பதை
இவர்கள் அறிவதில்லை .
இவர்கள்
இரைதேடிச்
செல்வதுமில்லை :
கூட்டுக்குத்
திரும்புவதுமில்லை .
சிறகை விரிக்க
ஒரு நேரம் உண்டு :
அப்படியே
சிறகை மடக்கவும்
ஒரு நேரம் உண்டு.
சிறகை
மடக்காத பறவை
கூட்டை அடைவதில்லை .
பித்தன் -கவிக்கோ (87-90)

Comments
Post a Comment