பித்தன் –கவிக்கோ (90-93)

 


காயம்

பித்தன் இருட்டில்
வானத்தை பார்த்தபடி


அமர்ந்திருந்தான்
என்ன
செய்து கொண்டிருந்தாய் ?
என்று கேட்டேன் .
காயங்களை
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
இருட்டின் உடலில்
இந்த
நட்சத்திரக் காயங்கள்
எவ்வளவு அழகாக
இருக்கின்றன ! என்றான் .
அவன் மேலும் சொன்னான்
உங்கள் இதயங்ககளை
காயங்களால்
அலங்கரியுங்கள்
காயங்களால் தான்
நீங்கள்
பிரகாசிப்பீர்கள் .
காயம்படும் ஓலைதான்
சுவடியாகிறது
காயம்படும் கல்தான்
சிலையாகிறது.
காயம்படும் மூங்கில்தான்
கானம் பாடுகிறது .
நினைவுகள் என்பவை
உங்கள்
ஆறாத காயங்களிருந்து
வடியும் ரத்தம்தான்
அனுபவங்கள்
காயங்களாலேயே
கையெழுத்திடுகின்றன .
உயிருடைய
இதயத்திற்கு மட்டுமே
கிடைக்கும் தர
முத்திரைகள்
காதலில்
காயம்படாத இதயம்
காதலின் ரகசியத்தை
அறியாது
காயங்களிலிருந்து
கவிதை சுரக்கிறது
வாய் பேசும்
மொழியை விடக்
காயம் பேசும் மொழி
கனமானது .
ஆறு காயம்
காயமல்ல
ரத்தமும் கூட
முறையீடாகி விடலாம்’
ஊமைக்காயமே
உன்னதமானது.
காயங்கள் இல்லையென்றால்
உங்கள்
இதயப் பாத்திரம்
காலியாக இருக்கிறது
என்று அரத்தம்
பித்தன் –கவிக்கோ (90-93)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி