இந்திய தேசிய சின்னங்கள்-



அரசியல் சாசனச் சட்டத்தின் 343வது பிரிவின்படி இந்தியாவின் தேசிய மொழி, அதிகாரப்பூர்வ அலுவலக மொழி இந்தி. ஆனால் இந்தியை ஆட்சி மொழியாக்க தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சியை அன்றைய மத்திய அரசு கைவிட்டது.

இந்தியாவின் தேசிய சின்னம்சாரநாத்தில் உள்ள அசோகத் தூணிலிருந்து இருந்து எடுக்கப்பட்டது. இதில் நான்முகச் சிங்கமும், வலது பக்கம் காளையும், இடது பக்கம் குதிரையும் இருக்கும், மேலும் காளை நாட்டின் கடின உழைப்பு மற்றும் உறுதியையும், குதிரை ஆற்றல் மற்றும் வேகத்தையும் குறிப்பிடத்தக்கது. இதன் பீடத்தின் கீழே வாய்மையே வெல்லும் என்னும் பொருள் கொண்ட ”சத்ய மேவ ஜயதே” என்ற வார்த்தைகள் கொண்ட தேவநாகரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது இந்திய தேசிய சின்னமாக 1950 ம் ஆண்டு சனவரி 26 ல் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தேசியக் கொடி

 

காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய மூவனணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 அரும்புக் கால்களை உடைய அசோக சக்கரம் ஒன்று உள்ளது.காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும்,வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது. மூவர்ண கொடியை அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22 ல் ஒருமித்த கருத்துடன் அங்கீகரித்தது.[2] ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிங்களி வெங்கைய்யா என்பவர் தேசிய கொடியை வடிவமைத்தார்.

 

தேசிய கீதம்

இந்திய அரசியமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ”ஜன கண மன ” பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கிகரித்தது.[3] 1911 டிசம்பர் 27ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது. 1912ல் தாகூரின் ”தத்துவ போதினி” பத்திரிக்கையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது. இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடிமுடிக்க வேண்டும்.

 

தேசியப் பாடல்

தேசிய கீதத்தை விட வந்தே மாதரம் எனத் தொடங்கும் தேசியப்பாடல் பழமையானது. 1882 ல் பங்கிம் சந்திரனின் ”ஆனந்த மட்” நூல் வெளியானது. எனவே இதற்கு முன்பே இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இது முதன்முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் இரவீந்திர நாத் தாகூர்.[4] |- தேசியப் பாடலின் ஸ்ரீஅரவிந்தரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பின் தமிழ் பொருள்.

அம்மா நான் வணங்குகிறேன். இனிய நீர்ப் பெருக்கினை, இன் கனி வளத்தினை, தனி நறுமலயத் தண்காற் சிறப்பினை, பைந்நிறப் படினம் பரவிய வடிவினை வணங்குகிறேன். வெண்ணிலாக் கதிர் மகிழ்விரித்திடும் இரவின் மலர் மணிப் பூந்திகழ் மரன் பல செறிந்தனை, குறுநகையின் செலார் குலவிய மாண்பினை , நல்குவை இன்பம், வரம் பல நல்குவை அம்மா வணங்குகிறேன்.

தேசிய நாட்காட்டி

சக வருட நாட்காட்டி 1957 ஆண்டு மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டியாக அங்கீகரிக்கப்பட்டது. சக ஆண்டு 365 நாள்களை கொண்டது. சாதாரண ஆண்டில் சைத்ரா முதல் தேதி மார்ச் 22 ஆகும். லீப் வருடத்தில் முதல் தேதி மார்ச் 21 ஆகும். தேசிய நாள்காட்டி சக ஆண்டு 1879 ல் சைத்ரா முதல் நாளில் தொடங்கியது.

 

தேசிய விலங்கு

ஊன் உண்ணும் விலங்குகளில் கவர்ச்சியும், கம்பீரமும் மிகுந்த புலி இந்தியாவின் தேசிய விலங்கு ஆகும். 1972 ல் புலி இந்தியாவின் தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. தேசிய விலங்கை கொல்வது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே அவற்றை பாதுகாக்க வேண்டும். 2001 ல் புலிகளின் எண்ணிக்கை 3642 ஆக இருந்தது.ஆனால் இப்போது 1411 ஆக குறைந்துள்ளது. 1973ல் தொடங்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டம் ஒரு முழுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டமாகும்.

 

தேசிய நீர் விலங்கு

 

இந்திய தேசிய நீர் விலங்கு நன்னீரில் வாழும் டால்பின் ஆகும்.இந்தியாவின் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியில் வாழும் கங்கை டால்பின் புனிதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. 2010-ல் தேசிய சின்னமாக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவை சுத்தாமான நீரில் மட்டுமே வாழக்கூடியவை ஆகும்.

 

தேசியப் பறவை[தொகு]

முதன்மைக் கட்டுரை: இந்திய தேசியப் பறவை

இந்தியாவில் உள்ள இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பறவைகளில் மிக கவர்ச்சியான மயிலே இந்தியாவின் தேசிய பறவை ஆகும். 1963 ல் மயில் இந்தியாவின் தேசியப் பறவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மயிலைப் பற்றிய குறிப்புகள் ஆதிநூலான ரிக் வேதத்தில் உள்ளன. இது 2500 மீட்டர் உயரமான பகுதிகளிலும் காணப்படும்.[8]

தேசிய மொழி

அரசியல் சட்டத்தின் பிரிவு 343 (1) ன் படி இந்தி மொழியே நாட்டின் அதிகார பூர்வ அலுவல் மொழி. இத்துடன் ஆங்கிலத்தையும் அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்துள்ளது. அரசியல் சட்டத்தின் எட்டாம் அட்டவணைப் படி தற்போது இந்தி, தமிழ், மலையாளம், வங்காளி, அசாமி, தெலுங்கு,மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, குஜராத்தி, காஷ்மீரி, உருது, கன்னடம், கொங்கணி, மணிப்புரி, நேப்பாளி, தோஹ்ரி, போடோ, சந்தாலி, மைதிலி என்னும் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன.

தேசிய மரம்

இந்தியாவின் இலையுதிர்காடுகளில் காணப்படும் ஆலமரம் தேசிய மரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது

தேசிய நதி

2008 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது. கங்கை இந்தியாவின் நீளமான நதி ஆகும். இமாலயத்தின் கங்கோத்ரி பனிப்படிவுகளில் இது உற்பத்தி ஆகும்போது இது பாகீரதி என்று அழைக்கப்படுகிறது

குடிக்க பயன்படுத்த முடியாத அசுத்த நீர்

 

தேசிய மலர்: தாமரை

தேசியக் கனி: மாம்பழம்

தேசிய விளையாட்டு: ஹாக்கி

 

 


Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி