ஒரு நடு இரவில் கணவன் மனைவி நல்ல உறக்கத்தில் இருந்தனர்.


அப்போது மனைவியின் கைபேசியில் “பீப்“ சத்தம் கேட்டது.


கணவன் எழுந்து சென்று மேசையின் மீதிருந்தக் கைபேசியை பார்த்து விட்டு, தன் மனைவியிடம் மிகவும் கோபமாக, “யார் இது? இந்த இரவு நேரத்தில் உன்னை பியுட்டிஃபுல் (beautiful) என்று சொல்லுறது?” என்று சத்தம்போட்டார்.

மனைவியும் “அட.... யாருடா அது.... நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்லுறாங்களே... அது யாருன்னு பார்ப்போம்...” என்று மிகவும் மகிழ்ச்சியுடன் எழுந்து சென்று மேசையிலிருந்த கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

உடனே அவள் கோபத்துடன், அவரைவிடச் சத்தமாகக் கத்தினாள்.




“ஏய் அறிவு கெட்டவனே, முதலில் உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டு பாரு... இது பியுட்டிஃபுல் (beautiful) இல்லை... பேட்டரிஃபுல் (battery full) என்று வந்திருக்கு என்று கத்தினாள்.

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

திருக்குறள் கலைஞர் உரை கலைஞர் மு. கருணாநிதி-குறளோவியம்

(குறுந்தொகை: பாடல்: 32 பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்)-கலைஞர் மு.கருணாநிதி