உதிர்ந்த மெளனம்!-கவிக்கோ எழுதிய கடைசிக் கவிதை !



 

கவிக்கோ எழுதிய கடைசிக் கவிதை !

நிறுத்தம் வந்துவிட்டது

இறங்கிக் கொள்ளுங்கள்

என்றார் நடத்துநர்; ஆனால்

இன்னும் பயணம் முடியவில்லையே !

 

 

நான்

யாருக்கு அனுப்பப்பட்ட

கடிதம்

தெரியவில்லை !

முகவரியில் தவறு

நான்

ஓர் இறந்த கடிதம் !

திரும்பிப் போகலாம் என்றால்

அனுப்பியவர் முகவரியும் இல்லை !

நான் வெள்ளைக் காகிதமாய் இருந்தேன் !

என் மேல்

யார் யாரோ

ஏதேதோ

கிறுக்கினார்கள் !

இப்போது

நான் நானில்லை !

எங்கே போகும்

இந்தப் பாதை ?

யாருக்கும் தெரியவில்லை !

இருந்தாலும்

நடந்துகொண்டிருக்கிறோம் !

கண்ணாடியில் தெறித்த

அவன் முகம் கேட்டது !

உன் உண்மையான

முகம் எது ?

என்னைத் தொலைக்க

முயன்றுகொண்டிருக்கிறேன் !

எவ்வளவுதான்

நிலபுலம் சேர்த்தாலும்

ஆறடி நிலம்தான்

சொந்தம் என்கிறார்கள் !

எனக்குக் கீழே

எத்தனை பிணங்களோ ?

எனக்கு மேலே

எத்தனை பிணங்களோ ?

கண்ணாடி

அப்படியேதான் இருக்கிறது

நான் தான்

உடைந்துவிட்டேன் !

என்னிடமிருந்து புறப்பட்டு

நெடுந்தூரம் வந்துவிட்டேன் !

எங்கே போவது என்றும்

தெரியவில்லை !

திரும்பிப் போகவும்

விருப்பமில்லை !

 

 

கவிக்கோ அப்துல் ரகுமான்... உதிர்ந்த மெளனம்!

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி