தேவகானம்
நட்ட கல்லைத் தெய்வ மென்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து முணுமு ணுத்துச் சொல்லும் மந்த்ரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாத னுள்ளி ருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ~~தேவகானம் ~~ கனியும் நீ படைத்தனை கையும் நீ கொடுத்தனை கனியை நான் பறிக்கவும் கைய சைக்கச் செய்தனை கனியில் உள்ள சுவையும்நீ கனியை உண்ட மகிழ்வும்நீ கனியையா சுவைத்தனன்? கனியுனைச் சுவைத்தனன் தேவனைப் பற்றிய கானங்கள் என நமக்குக் கிடைக்கும் இவை தனக்கு தேவனால் உணர்த்தப்பட்ட கானங்கள் என்கிறார் கவிக்கோ. ஒருவர் ஒவ்வொரு புத்தகம் வாங்குவதற்கும் பின்னாலேயே கூட ஒரு கதை இருக்கிறது என்று என் முந்தைய விமர்சனப் பதிவில் சொல்லியிருந்தேன். புத்தகம் வாங்கவே கதை உண்டு என்றால், புத்தகம் எழுதிட ஒரு சரித்திரமே இருக்கும் அல்லவா? இந்தப் புத்தகம் எழுத ஏற்பட்ட உந்துதலை கவிக்கோ இப்படிச் சொல்லுகிறார். " சந்தையில் சாமான்கள் வாங்கி கொண்டிருந்த காலத்திலேயே எங்கிருந்தோ ஒரு புல்லாங்குழல் இசை என்னை அழைத்துக் கொண்டே இருந்தது. சந்தையும் சாமான்களும் தேவைப்படாத காலம் வந்ததும் அந்தப் புல்லாங்குழல் இசை உரத்து ஒலித்தது. அதன் ஈர்ப்பைத் தவிர்க்க முடிய