இந்து மதம் எங்கே போகிறது?


 

 தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல்பகுதி – 6

தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல்.

தமிழர்களின் வழிபாட்டிற்குள் ஊடுருவி கைகூப்ப கற்றுக்கொடுத்து தமிழை தள்ளி வைத்து தமிழர்களை ஆதிக்கம் செய்த பிராமணர்கள்

தமிழ் பூக்களால் தமிழர்கள் செய்த பூஜை (பூ செய்) எப்படி பூஜையானது என பார்த்தோம்.

இது மட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது.

சிற்பக் கலைகளில் ஓங்கி உயர்ந்திருந்த தமிழர்கள் பல பெண் உருவச் சிலைகளை வடித்தனர். சிறு சிறு குழுக்களுக்கு ஊர்களுக்கு அவற்றை காவல் தெய்வமாக வைத்தனர் அச்சிலைகளின் முன் நின்று உரத்த குரலில்…‘ஏ… காவல் காக்கும் அம்மா… என் வீட்டில் மாடுகள் நிறைய கொடு… எங்கள் ஊருக்கு மழையைக் கொடு… என அச்சிலை முன் நின்று சத்தம் போடுவார்கள்.

ஏன் என்று கேட்டால்… சிலைக்கு கல் காதல்லவா? அதனால் நாம் உரக்கச் சத்தம் போட்டால் தான் நமது வேண்டுகோள் அச்சிலையின் காதில் விழும். அப்போது தான் நமது கோரிக்கை நிறைவேற்றப்படும்… என்பது நம்பிக்கை.

இப்படியே கொஞ்ச காலம் போக… ஒருவன் சொன்னான் நாம் நமக்குள் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தால் சிலையின் காதில் கேட்குமா?

க்ரீம் த்ரீம் ப்ரீம்… என அடி வயிற்றிலிருந்து அதிரும்படியான சொற்களை உச்சரித்தால் அந்த அதிர்வில் சிலையின் காது திறக்கும் என்றான்.

இந்த உரத்த வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க தமிழர்களுக்கு கைகூப்ப கற்றுக் கொடுத்தார்கள் பிராமணர்கள். எப்படி?

தொடக்க கால ஆரியர்களோடு தாஸே எனும் பழங்குடியின மக்கள் பல வகைகளில் மோதினர். சிந்தனை சக்தியில்லாத முரட்டுக் கூட்டத்தை உயர உயரமாய் இருந்த ஆரியர்கள் பதிலுக்குச் சண்டையிட்டு வெல்ல… அப்போது தாஸே இனத்தவர்கள் ஆரியர்கள் முன் குனிந்து இரு உள்ளங் கைகளையும் பிணைத்து… ‘இனி உங்களை தாக்கமாட்டோம் என அடிபணிந்தனர்

.அதுபோல வைத்துப் பாருங்கள் கும்பிடுவது போல் தோன்றும். அந்த ‘தாஸே‘ இனப் பெயரிலிருந்து தான் தாஸன் என்ற சொல் முளைத்தது. தாஸன் என்ற சொல்லுக்கு அடிமை என்ற அர்த்தமும் அதன் வழியேதான் முளைத்தது. தங்களை அன்று கும்பிட்ட ‘தாஸே‘ இன மக்கள் மாதிரியே… பிற்காலத்தில் தெய்வங்களை வழிபடக் கற்றுக் கொடுத்தனர் பிராமணர்கள்

கடவுளுக்காக கை கூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக… தமிழர்களின் உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள்.

“நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா? நாங்கள் சில மந்திரங்கள் சொல்கிறோம். அதை உச்சரித்தால்தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி வரும். தவிர மனிதர்களுக்குள் பேசும் மொழியை நீங்கள் தெய்வத்திடம் எப்படி பேசுவீர்கள்?.. என வேத சமஸ்கிருத மந்த்ரங்களை அச்சிலை முன்னர் கூறத் தொடங்கினார்கள்.

புதிதாக இருக்கிறதே என கேட்க ஆரம்பித்த தமிழர்கள் தான் இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால்… கடவுளுக்கு உருவம் கிடையாது. உபநிஷத்துகள் உபதேசிப்பது என்னவென்றால்… “கடவுளுக்கு உருவம் எதுவும் கிடையாது. உருவம் இல்லாதது தான் உண்மையான உருவம்

வேதம், உபநிஷத்து இவற்றையெல்லாம் தாண்டிக் குதித்து தமிழகத்தில் சிலைகளுக்கு முன்னாள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.

தமிழன் வழிபாட்டு முறையான பூவோடு… தெய்வம் சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டாமா? பழம் கொண்டு வா, அன்னம் கொண்டு வா’ தொடங்கியது படையல் பண்பாடு. நந்தா விளக்கு தீபம், பூ இவற்றோடு வழிபாட்டு பொருள்களுக்கான பட்டியலில் பழம் சேர்ந்தது. உணவுப் பொருள்கள் சேர்ந்தன.

தமிழ் மட்டும் தள்ளி வைக்கப்பட்டது.

வழிபாட்டு முறையில் மாற்றம். அடுத்தது சமூக ரீதியாக மாற்றங்கள் உண்டாக வேண்டியதுதானே நியதி?… உண்டானது.

கலாச்சாரத்தின் முதல் மாற்றம் கல்யாணத்தில் தொடங்கியது. தமிழர்களின் கல்யாணமுறை எப்படி இருந்தது என தெரிந்து கொண்டால்தானே அது எவ்வாறு மாறியது என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.

இலக்கியங்களை சித்தரிப்பது போல களவியல் என்பதுதான் பழந்தமிழர்களின் திருமணமுறை அதென்ன களவியல்?

பெண்ணொருத்தி பூப்பெய்துகிறாள் உறவுப் பெண்கள் சுற்றிலும் மகிழ்ச்சி பொங்க முற்றுகை யிட்டிருக்கிறார்கள். பெண்மை, தாய்மை என்னும் பெருமைக்கெல்லாம் அடிப்படையே இந்த திருநாள்தானே. அதனால்தான் சுற்றத்தின் முகத்தில் மகிழ்ச்சி. அந்த யுவதியின் முகத்தில் வெட்கம்.

இதை பக்கத்து வீட்டுக் காளை பார்த்து பூரிக்கிறான். அவளது அழகு அவனை அழைப்பதாய் அவனுக்குத் தோன்றுகிறது. பெண்மையின் முதல் வெட்கத்தின் முகவரி அவள் முகத்தில் தெரிகிறது. அதை படிக்க அந்த காளை ஆசைப்படுகிறான்.

சுற்றிலும் உறவினர்கள். பெண்களின் பாதுகாப்பு… அன்ன நடை போட்டா அவளை அடைய முடியும்?

பொறுத்திருக்கிறது காளை. பொழுது சாயத் தொடங்கிய உடன் பாயத் தயாராகிறது. ராத்திரியின் மெல்லிய ஒளியில் தன் ராணியை நெருங்கியவன் நேரம் காலம் பார்ப்பதில்லை.ஒரே தூக்கு. அந்த ஆளான அழகை தன் இளங்கரங்களில் ஏந்தி சிற்சில நொடிகளில் சீறிப்பாய்ந்து மறைகிறான்.

ருதுவான மங்கை மாய மாய்ப்போன பின்னே… தேடுகிறார்கள்.

சுற்றுவட்டாரத்தையே அப்பெண்ணின் ஆண் உறவினர் கூட்டம் அணு அணுவாய் அலசுகிறது. கடைசியில் அந்த ஜோடி ஜொலித்துக் கொண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடுகிறது கூட்டம். பக்கத்து வீட்டு காளை அவளை பருகி நெடுநேரம் ஆகியிருந்தது. கையும் களவுமாக பிடித்த பின் என்ன தண்டனை தெரியுமா? — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்)


பிராமணர்கள் உருவாக்கிய கல்யாண சடங்குகள்  பகுதி – 7

 இந்து மதம் எங்கே போகிறது?

`தாலி’ வந்த கதை. கல்யாணங்களில் பிராமணர்கள் எக்கச்சக்க சடங்குகளை கொண்டு வந்தனர்.

“நிச்சயதாம்பூலம்” “காசியாத்திரை” “ஊஞ்சலாட்டுதல்” “திருஷ்டி சுத்தி போடுவது” “ஆரத்தி எடுப்பது” “குளிப்பாட்டு” “புடைவைச் சடங்கு” …..  இன்னும் இருக்கு!!! 

கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பக்கத்து வீட்டு காளைக்கு தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா?

`இதோ பாரடா… நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன். அதனால் அவள் உனக்குரியவள் தான். உன்னுடன் தான் வாழ வேண்டும் அவள்’ என இரண்டு பேரையும் சேர்த்து வைத்தது தீர்ப்பு. இஃது களவியல் என்றால்… தமிழர்களின் இன்னொரு சிறப்பு, சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள்.

காதலை அஃதாவது கற்பியலை.“யாயும் ஞாயும் யாராகியரோஎந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே…’’நானும் நீயும் யார் யாராகவோ இருந்தோம். என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் சொந்தக்காரர்கள் என்றும் தெரியாது. நானும், நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது தெரியவில்லை.

ஆனாலும்… இந்த அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அன்பு கொண்டோம்… எப்படி தெரியுமா…

செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே. அதுபோல அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.

இப்படி காதல் வாழ்க்கையிலும் நாகரிகத்தின் சிகரத்தில் இருந்தனர் தமிழர்கள்.

இவ்வாறு களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் `தாலி’ வந்த கதை சுவாரஸ்யமானது.

திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்துகொண்டான் என்றால்… பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் `இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்’ என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள்.

பனைமரத்துக்கு `தால்’ என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது.

பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்… பவுன் கட்டித் தொங்க விட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.

“இவ்வளவு கஷ்டப்பட்டு களவியல் செய்கிறீர்களே… இவ்வளவு மகிழ்ச்சியுடன் காதல் மணம் புரிகிறீர்களே? இவற்றையெல்லாம் முறைப்படி சடங்குகள் செய்து விழாக்களாக கொண்டாடினால் தானே மகிழ்ச்சி என்றும் கூடும்?’’

கல்யாண கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள். ஒன்றா, இரண்டா? எக்கச்சக்க சடங்குகள். என்னென்ன…. ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.

1. திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன் தான் கணவன் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருள்களை மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு பெயர் நிச்சயதாம்பூலம்.

2. கல்யாணச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன. முதலில் காசி யாத்திரை.சந்நியாசம் வாங்க வேண்டுமென்றால்… மகனே கல்யாணத்துக்கு முன்னரே நீ சந்நியாசம் வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்துக்குப் பிறகு துறவறம் போகிறேன் என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே.. என சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் கல்யாணத்துக்கு முன் `காசியாத்திரை’ என்றொரு சடங்கு.

அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல `பாவ்லா’ (Drama) செய்யவேண்டும். மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி திருமணத்துக்கு அழைத்துப் போவார்கள்.

3. ஊஞ்சலாட்டுதல் குழந்தாய்… நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக என்பது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது கல்யாணம் என்றால் மஹஸ். அதாவது (Festival) கொண்டாட்டம் இதற்காகத்தான் ஊஞ்சல்.

4. மாலை மாற்றுவது:இது க்ஷத்திரியர்களின் கலாச்சாரம். மணமகனும், மணமகளும் சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.

5. திருஷ்டி சுத்தி போடுவது. மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.

6. நீராஜனம் எனப்படும் ஆரத்தி எடுப்பது.

7. இது முக்கியமானது. பெண்ணும், பையனும் இப்போது தான் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளவேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க… பெண்ணை உட்கார வைத்து அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றி குளிப்பாட்ட வேண்டும்.

8. பிறகு… முழுக்க நனைந்த அவளை… உள்ளே அழைத்துச் சென்று மணமகனே அவளுக்கு புடைவை உடுத்திவிட வேண்டும்.

அவளது நனைந்த புடைவையை களைந்து விட்டு… புதுப் புடைவையை மணமகன் உடுத்தி விடும் போது… இந்த சேலை வளர்வது போல் நம்முடைய மகிழ்ச்சி. சந்ததியெல்லாம் வளரவேண்டும் என்பதற்காகத்தான் இப்புடைவைச் சடங்கு. இன்னும் இருக்கும் கல்யாணச் சடங்குகளையும்… அவை மறுபடியும் எப்படி மாறின என்பதையும் அடுத்து பார்ப்போம். அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், (தொடரும்)


திருமண சடங்குகளின் விளக்கங்கள் பகுதி – 8
கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில் இது வரை ஏழு பார்த்தோம்.

எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம். பாணிக்ரஹனம். இதுதான் முக்கியமான சடங்கு. `கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி’ என ஆண்டாள் பாசுரம் போலவும், மேற்கத்திய கலாச்சாரத்தில் `கை’ப்பற்றுவது போலவும் அமைந்தது இச்சடங்கு.மணமகள் – மணமகனை கைப்பிடிப்பது! இனி வாழ்விற்கு நீதான் இணை, துணை, எல்லாம் நீயே என்ற அர்த்தத்தில் இருவரும் கைப்பிடித்துக் கொள்வது தான் கல்யாணத்தின் முக்கிய அம்சம்.

கைத்தலம் பற்றிய பின், மணமகள் 7 அடி எடுத்து வைக்கவேண்டும். எதற்காக தெரியுமா?

முதல் அடி அன்னம் பெருகவேண்டும் என்பதற்காக.

இரண்டாவது அடி அந்த அன்னம் உண்டபின் செரிக்க வேண்டும்,

மூன்றாவது அடி கணவனுக்காக விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக…

நான்காவது, குடும்பம் சந்தோசமாக விருத்தியாக வேண்டும் என்பதற்காக…

5-ஆவது அடி வீட்டில் மாடுகள் பெருகவேண்டும் என்ற வேண்டுதலுக்காக…

6-ஆவது அடி வைப்பது குடும்பத்தில் அய்ஸ்வர்யம் (செல்வம்) கொழிப்பதற்கு…

7-ஆவது அடி இந்த சகல சவுபாக்கியங்களும் சேர்ந்து கிடைக்க… தாலிக்கு அதாவது, `நம் குடும்பம் இனிமேல் ஒன்று. உன் அப்பா யாரோ. என் அப்பா யாரோ… ஆனால், இன்று முதல் நாம் ஒன்று’ என சங்கப் பாடல் படித்தோமே அதே பொருளுக்காக… யாகத்தை நெருங்குவதுதான் 7-ஆவது அடி.

இந்த சடங்குகளோடு தமிழ்த் தாலியையும் சேர்த்தனர்.

இப்படியாகத் தூக்கிப் போவது, காதலிப்பது என சம்பிரதாயங்களில் சிக்காமல் இருந்த தமிழ் திருமண முறையும், பிராமண திருமண முறையும் திருமணம் செய்துகொண்டன.

இதன் விளைவாக தமிழனின் களவியல், கற்பியலில் மந்த்ர இயல் புகுந்தது. சடங்குகள் பிறந்தன. கல்யாணம் என்பது வேதக் கட்டளைப்படி நடக்கும் விழா ஆனது.“மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலமும் உண்டே…’’ என்கிறது தொல்காப்பியம்.

கரணம் என்றால் கல்யாணம். அதாவது… மேலோர்களான பிராமணர்கள் வகுத்த கல்யாண கர்மாக்கள்… மற்றவர்களுக்கும் வழக்கத்தில் இருந்தது. விளக்கம் என்னவென்றால்… தொடர்ந்து 10 நாள்கள் வரை நடக்கும்

கல்யாணச் சடங்குகளை பிராமணர்கள், தங்களால் சூத்திரர்கள் என அழைக்கப்பட்ட தமிழர்களுக்கும் பண்ணி வைத்தனர்.

மந்த்ர பூர்வமான கல்யாணத்தில் இடமில்லை. ஆனால், தமிழர்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போது… அவர்களின் வழக்கத்துக்கு விரோதமாக செயல்பட இயலாதென்பதால் தாலியை… பனை ஓலை கயிறை – மெல்ல மந்த்ர மஞ்சளில் இழைத்து மாங்கல்யமாக்கி விட்டார்கள், தங்களுக்கும் சேர்த்து.

மேற்கூறிய… தொல்காப்பிய வாசகத்தில் கவனிக்கவேண்டிய பதம் ஒன்று உண்டு. “மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலம் உண்டே.’’என்பதில் கீழோர்க்கு ஆன காலம் உண்டே என்பதை மட்டும் உற்றுப் பாருங்கள். `பிற்பாடு – இந்த கல்யாண முறையில் மாற்றம் வந்துவிட்டது ஒன்றாக இருந்த காலம் உண்டு’ என்று தெரிய வரும்.

ஏன் மாறிப் போனது?
முதல் காரணம் தனக்கும் கீழானவர்கள் அதாவது சூத்திரர்களின் கல்யாணச் சடங்குகளும் ஒன்றாக இருக்கலாமா? அவர்களுக்கும் நாமே கல்யாணம் செய்து வைப்போம். அதனால் சடங்குகளில் சிற்சில மாற்றங்களைக் கொண்டு வருவோம் என நினைத்தார்கள் பிராமணர்கள்.

இரண்டாவது காரணம்… இவ்வளவு நீண்ட சடங்குகளை நடத்தி திருமண விழாவை பத்து நாள்கள் நகர்த்திச் செல்ல தமிழர்களுக்கு பொறுமையோ அல்லது விருப்பமோ இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கன்னியை தூக்கிக் கொண்டோடி சுகித்து திடீர் திருமணங்களை நடத்திக்கொண்ட `களவியல்’ மரபுக்காரர்களாயிற்றே.

அவனது கண்களும், அவளது கண்களும் சந்தித்துக்கொண்ட சிற்சில நொடிகளில்… மவுனப் புன்னகையே மந்திரமாக… கற்பியல் முறையில் காதல் மணம் கண்டவர்களாயிற்றே. அதனால் தமிழர்களுக்கு அந்த நீண்ட நெடிய சடங்குகளில் பிடிப்பு வரவில்லை. கல்யாண கலாச்சாரங்களுக் கிடையில் `விவாகரத்து’ ஏற்பட்டுவிட்டது.

இத்தகைய காரணங்களால்… சூத்திரர்களை தனியாகப் பிரித்து வைத்த பிராமணர்கள் கல்யாண முறை மட்டுமல்லாது அனைத்து வகையிலும் சூத்திரர்களை கீழ்ப்படுத்தினார்கள்.

இப்படி செய்வதற்கு… அவர்கள் கையில் கசங்காமல் இருந்த `மனு ஸ்மிருதி’ தான் ரொம்ப உதவியாக இருந்தது.

மனுமூலம் சூத்திரர்களை கெடுபிடி செய்த பிராமணர்கள்… இந்தக் கொடுமைக்கும் அதிகமான கொடுமைகளை இன்னொரு பிரிவினருக்குச் செய்தார்கள்.யாருக்கு க்ஷத்திரியர்களுக்கா…? வைஸியர்களுக்கா…? இல்லை, இல்லை சண்டாளர்களுக்கு.

சண்டாளர்களா? யாரவர்கள்? மனு கூற்றுப்படி `சண்டாளர்கள்’ யார் என்பதை என் எழுத்தில் என்னால் கூற முடியவில்லை.

என்னிடம் மகாத்மா காந்தி கூறியதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன். – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்…. )


”தலித்” துகள் சண்டாளர்களாம். ? தலித் களுடன் பிராமண ஆண் பெண்களின் கள்ள உறவு பகுதி – 9

தலித் களுடன் பிராமண ஆண் பெண்களின் கள்ள உறவு. யார் அந்த சண்டாளர்கள்? ” தலித் ” துகள் சண்டாளர்களாம். ? துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனை தான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.

ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள். எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி கூட்டத்தினர் இப்படியாக அருவருப்புடன் வர்ணிக்கப்படும் தலித்துகளைத்தான் மநு தனது அகராதியில் பஞ்சமர்கள் என்று சண்டாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏன் அவர்களைச் சண்டாளர்கள் என குறிப்பிடவேண்டும்? அவர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்?

இதற்கான பதிலைத்தான் தானே எழுதிட முன் வரவில்லை. அண்ணல் காந்தியடிகள் எனக்கு உரைத்த பதிலை அப்படியே உங்களுக்குத் தருகிறேன் என குறிப்பிட்டேன்.

முதலில் காந்தியாரை நான் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி விரிவாகச் சொல்லுகிறேன். இந்திய நேரத்தின் விடுதலைக்கு முந்தைய காலம்.

சுதந்திர போராட்டத்தை விடவும் காந்தியடிகள் சமூக சீர்திருத்த போராட்டத்தில் தான் அதிகம் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் எங்கள் ஊரான கும்பகோணத்திற்கு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்துக்காக காந்தி பல தடவை வந்தார்.

அப்படி ஒரு தடவை வந்தபோது ஊரிலுள்ள நான் உட்பட சில பிராமண இளைஞர்கள் ஒன்று கூடினோம். காந்தி சனாதன தர்மத்தை சாய்க்க வருகிறார். அவரை நாம் எதிர்க்கவேண்டும். அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.

உடனடியாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயலாக்க வடிவம் பெறத் தொடங்கின. அதில் முதல் திட்டம்தான் முதன்மையான . காந்தியடிகளுக்கு கருப்புக் கொடி காட்டுவது தான்.

திட்டப்படி காந்தியடிகள் கும்பகோணம் நகருக்கு வந்தபோது, நானும் சில சனாதன இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கருப்புக்கொடிகளைப் பிடித்துக்கொண்டோம். தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடும் காந்தியாரே திரும்பிப் போங்கள். சனாதன வர்ணாஸ்ரமத்தை எதிர்க்காதீர்கள் என்று நாங்கள் பல முழக்கங்களை போட்டோம். காந்தி மேடைக்கு வந்துவிட்டார்.

அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர் கூடியிருக்கிறார்கள். நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக முழக்கங்களை எழுப்பி கருப்புக் கொடிகளை உயர்த்திக் காட்டினோம்.

அப்போதைய கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் பந்தலு அய்யர் என நினைக்கின்றேன். காந்தி பந்துலு அய்யரை தன் அருகே அழைத்தார்.

என்ன விவகாரம்? என கேட்டார். அய்யரும் எங்களின் எதிர்ப்புணர்வை சுட்டிக்காட்டி, ‘உங்களை தீண்டாமைக்கு எதிராக பேச வேண்டாம் என்கிறார்கள். கொஞ்ச நேரம் போராடிவிட்டு போய்விடுவார்கள். நீங்கள் பேசுங்கள் என காந்தியடிகளிடம் தெரிவித்தார். ஆனால், காந்தி அவ்வாறு எங்களை அலட்சியப் படுத்தவில்லை.

எங்களை நோக்கி கையசைத்து கூப்பிட்டார். போனோம். முன்வரிசையில் நான்தான் இருந்தேன் Why are you demonitpte young men? என கேட்டார்

நாங்கள் போராட்டம் பற்றி சொன்னோம். அதற்குப் பிறகு காந்தி முதலில் எங்களிடம் பதிலளிக்க ஆரம்பித்தார்.

நான் தீண்டாமை முற்றாக வேண்டாம் என்கிறேன். பஞ்சமர்கள் என பட்டம் கட்டி அவர்களை கொடுமைபடுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை தீண்டத் தகாதவர்கள் என ஒதுக்கிவைக்காதீர்கள். அவர்களையும் பொது இடங்களில் அனுமதியுங்கள். கோயில்களில் நுழைய விடுங்கள் என பிரச்சாரம் செய்யவந்தேன்.

இதையெல்லாம் வர்ணாஸ்ரமம் பேசும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். நீங்கள் மநு ஸ்மிருதி படித்துள்ளீர்களா? மநுவில் பஞ்சமர்களை சண்டாளர்கள் என அபாண்ட வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த காலத்தில் பிராமணர்கள் சூத்திரர்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதாவது, தாங்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு சூத்திரர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

இத்தகைய காலகட்டத்தில் பிராமண சமூகத்துப் பெண்கள் சிலருக்கு சூத்திரர்கள் மீது பரிதாபம் , அனுதாபம் ஏன் ப்ரியம் ஏற்பட்டது.

தனது வீட்டிலுள்ள பிராமணர்களுக்கு தெரியாமல் அப்பெண்கள் சூத்திரர்களுடன் நட்பு பாராட்டினார்கள். உறவு கொண்டாடினார்கள். ஏன்? கல்யாணம் கூட பண்ணிக் கொண்டார்கள்.

சூத்திரர்களை கடுமையாக நடத்திவந்த பிராமணர்கள் தங்கள் வீட்டு பெண்களில் சிலரே அவர்களுடன் வாழ்க்கை அமைத்துக்கொண்டதை பெரும் அவமானமாக கருதினார்கள்.

பிராமண ஸ்திரீகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை அதனால்தான் சண்டாளர்கள் என பெயரிட்டு ஒதுக்கிவைத்தனர்.
நாளடைவில் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களை கள்ளத்தனமாக உறவு கொண்டனர்.

இவர்களுக்கு பிறந்த சந்ததியினருக்கும் அதே சண்டாளர்கள் என்றுதான் பெயர். அதனால்தான் சண்டாளர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து நீ என் கண்ணில்பட்டாலே தீட்டு, அபச்சாரம் என புறந்தள்ளி வைத்தார்கள் பிராமணர்கள். நான் சொல்வது வெகு காலம் முன்பு.

இப்படி வளர்ந்த சந்ததியைத்தான் இப்போது நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கிறீர்கள் அவர்களின் தாயார் தகப்பனார் யார் என எண்ணிப் பாருங்கள். இதெல்லாம் புஸ்தகத்தில்தான் இருக்கிறது. நானாக சொல்லவில்லை என எங்களிடம் ஆங்கிலத்தில் சரசரவென பேசிமுடித்தார் காந்தியடிகள்.முன்வரிசையில் இருந்த நான் திரும்பிக்கொண்டேன்.

ஜாதியை உருவாக்கிய பிராமணன். பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்.– அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்…. )


பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் கள்ளஉறவு கொண்டால்? பகுதி – 10

பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் உறவு கொண்டால் ? தவறு செய்யும் ஆணை விட்டுவிடலாம். பெண்ணை ஊருக்கு வெளியே புறம் தள்ளி வைக்க வேண்டும்.

என்ன?… அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா?

நீங்கள் இப்போது கேட்டதை நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி வாயால் கேட்டு லேசாக அதிர்ந்தேன். பிறகு… நான் மநுவுக்குள் மூழ்க ஆரம்பித்தேன். ‘சண்டாளர்கள்’ என குறிப்பிட்ட மநு அவர்களைப் பற்றி மேலும் என்ன சொல்லியிருக்கிறது என்பதுதான் தேடல்.

பிராமண வீட்டுப் பெண்கள் சூத்திரர்களோடு ப்பிரியப்பட்டார்கள் அல்லவா?… அதே காரணத்துக்காக அவர்கள் சமூகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டார்கள்.சமூகம்?…ஆமாம்… தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை பிராமணர்கள் பார்த்தார்கள்.

‘நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி அழைப்பது’-சிந்தித்தார்கள். a stable society அதாவது நிலையான சமூகக் கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு.

அதற்காக? பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்.

சூத்திரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்திரன்தான். வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான். க்ஷத்திரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில் நின்றாலும் அவன் க்ஷத்திரியன்தான். இதுதான் அவர்கள் வகுத்த stable society.

மறுபடியும் மநுவுக்குள் செல்வோம்.

சாதி விட்டு சாதி மாறிய காதல்கள் பிராமண ஸ்திரிகளுக்கும், சூத்ர புத்ரர்களுக்கும் மட்டுமல்ல க்ஷத்திரிய ஸ்த்ரிகள்-சூத்ர புத்ரர்கள்வைசிய ஸ்திரிகள்-சூத்ர புத்ரர்கள்மேலும்…சூத்ர ஸ்திரிகள்-பிராமண, க்ஷத்திரிய, வைஸிய புத்ரர்கள்.

இப்படி காதல்தேவன் கட்டுகளை உடைத்து கல்யாணங்களை கள்ளத்தனமாக பண்ணிக் கொண்டிருந்தான்.

காதல் தேவனும், காமதேனும் கூட்டணி வைத்துஇஷ்டத்துக்கு திருவிளையாடல் நடத்திக் கொண்டிருந்தால் மநு நினைத்த stable society அமையுமா? அமையாதே.

இதுவும் தெரிந்திருந்தது மநுவுக்கு. அதனால் தான் இந்த பிரச்சினைக்காக மாற்றுச் சட்டமும் இயற்றியிருக்கிறார்.

என்ன மாற்றுச் சட்டம்? முறைகேடான சாஸ்திரங்களை சாகடிக்கக்கூடிய வகையில் இது போல கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவுகோல் வைத்துப் பார்த்தார். மநு

ஒன்று.. அனுலோம சங்கரம்…

இரண்டு… ப்ரதிலோம சங்கரம் அனுலோம…

பிரதிலோம என்றால் என்ன என தெரிந்து கொள்வதற்கு முன் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

முறைகேடான.. சபிக்கப் படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

முறைகேடான… சபிக்கப்படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’.

சரி அனுலோம சங்கரம் என்றால்? இந்த உறவில்.. ஆண் மேல் ஜாதிக்காரனாக இருந்தால், இதற்கு பெயர் அனுலோம சங்கரம்.

ஆனால், இவர்களை மநு சண்டாளர்களாக பார்ப்பதில்லை. ஏனென்றால் மேல் ஜாதி ஆண் அல்லவா? கீழ் ஜாதிப்பெண்ணை எடுத்துக் கொண்டிருக்கிறான்.

நம் இனத்து ஆண்… பிற இன பெண்களை பார்ப்பது, பறிப்பது, நுகர்வது, உறவுகள், உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் பொதுவாய் ‘சங்கரம்’.

இக்கட்டுரையின் முற்பகுதியிலேயே சொன்னது போல எல்லா ஜாதிக் காரர்களுக்கும் அந்த ப்ரியம் பொதுவானதாக இருந்தது.
இந்த சம்மந்தத்தில் ஆண் மேல் ஜாதிக்காரனாகவும் பெண் கீழ்ஜாதிக்காரியாகவும் இருந்தால் இதற்கு பெயர் அனுலோம ‘சங்கரம்’. உலகத்துக்கே அமைதியைத் தருவது பெண்களின் அழகுதான்… என்றது வேதம்.

மநுவோ… கீழ்ஜாதிப் பெண்கள் மேல் ஜாதி ஆண்களைக் கவர்ந்தபோது மட்டும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. என்ன செய்தாலும் அது பாபம் அல்ல என்கிறது மநு.

இவர்களை அடித்துத் துரத்தி கொடுமைகள் செய்யாமல் தங்கள் உடனேயே தங்க வைத்துக் கொள்கிறது மநு சாஸ்திரம்.

அடுத்து சொல்லப்போகும் ‘ப்ரதிலோம சங்கரம்’ பற்றி நீங்கள் யூகித்திருக்கலாம். அதாவது….மேல்ஜாதிப் பெண்களை கீழ்ஜாதி ஆண்கள் கவர்ந்தது, பறித்து நுகர்ந்து சென்றால் மநுவின் பார்வையில் இது பிரதிலோம சங்கரம்.

அடேய்.. அதெப்படி நம் இனத்து பெண்ணை ஒரு கீழ்சாதிப் பயல் கவர்ந்து செல்லலாம்?… இவளுக்கு எங்கே போயிற்று புத்தி? ஊரைவிட்டே பகிஷ்காரம் பண்ணுங்கள் நாம் வாழும் தெருவில் அவர்களின் பாபத்தடங்கள் படக்கூடாது அவர்களின் சுவாசக்காற்று நமது தெருக்காற்றை உரசக்கூடாது.அவர்களும், அவர்களைத் தொடர்ந்துவரும் சந்ததிகள் அத்தனை பேரும் சண்டாளர்கள் தான் சட்டம் இயற்றி தண்டனை விதித்தது மநு.

இதன் காரணமாக பிரதிலோம சங்கர கூட்டம் ஊரைவிட்டு விரட்டப்பட்டது. இன்று வரை அவர்கள் ஊரோரம் குடியிருக்கும் காரணம் புரிகிறதா?

ஆனால்… ‘அனுலோம சங்கர’ கூட்டத்துக்கு ஊரிலேயே இடம் கொடுத்து தேர் ஓட்டுங்கள் என ஆணையிட்டது மநு மநுவின் ‘சண்டாளன்’ என்ற பதத்துக்கு… சமஸ்கிருத மொழியியல் பேரறிஞரான பாணினி கூட அர்த்தம் தேடுகிறேன் எனச் சொல்லியிருக்கிறார்




மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள் பகுதி 11

நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்’ என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம்.

வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப் பிறந்தவன் வணிகன்தான், சூத்திரனுக்குப் பிறந்தவன் வேளாண்மையை மறந்தாலும் அவன் சூத்திரன்தான். க்ஷத்திரியனுக்குப் பிறந்தவன் ஆள ராஜ்யமின்றி நடுத்தெருவுக்கு வந்தாலும் அவன் க்ஷத்திரியன்தான்.

-என ஸ்டேபிள் சொசைட்டிக்கு மனு முடிந்து வைத்த சாதி முடிச்சுகளைப் படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.

அப்படியானால், பிராமணனுக்குப் பிறந்தவன் என்ன தொழில் செய்தாலும் பிராமணன் என்றாகுமே. உண்மையில் பிராமணர்களுக்கு இன்னது தான் தொழில் என சாஸ்திரம் ஏதாவது சொல்லியிருக்கிறதா? என்ற கேள்விதான் அது.

இந்த கேள்வியின் பதிலுக்குள் செல்வதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ‘படம் பார்த்து தெரிந்துகொள்’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்டிருந்த பாடத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்.

‘என்னடா… ஒண்ணாவது பிள்ளைகள் படிப்பதையெல்லாம் நமக்கும் சொல்லிக் கொடுக்கிறாரே இந்த ஆள்’ என நினைக்காதீர்கள். அந்த பாடத்திலிருந்து தான் பதிலை ஆரம்பிக்கவேண்டும்.

சொல்லிக் கொடுத்தவுடனேயே ‘பசுமரத்தில் இறங்கிய ஆணிபோல’; ‘பற்றிக்கொள்ளும் கற்பூரம் போல கிரகித்துக் கொள்ளும் சின்னக் குழந்தைகளுக்கு என்ன தெரியுமா சொல்லிக் கொடுக்கப்பட்டது –

அந்த புத்தகத்தில்? க்ஷத்திரியன் (ராஜா போல் படம்) நாட்டை ஆள்பவன் வைசியன் (ஒரு வியாபாரி படம்), வியாபாரம் செய்பவன் சூத்திரன் (ஏர் உழுவது மாதிரி படம்), விவசாயம் செய்பவன் அய்யர் (ஒரு பிராமணர் படம்) நல்லவர். இந்த ஒன்றாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடத்தை வைத்துதான் நீங்கள் மேலும் மேலும் படித்திருப்பீர்கள். ஆனால், அதில் பிராமணர் என்பவருக்கான தொழிலாக ‘நல்லவர்’ என எழுதப்பட்டிருக்கிறது

ஏன்? பிராமணியம் தனிச் சிறப்பு வாய்ந்தது. தனி நோக்கம் கொண்டது. பிராமணன் ப்ரம்மத்தின் அவதாரம்.

பிராமணன் தெய்வம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்விக்க வந்தவன். தெய்வ நம்பிக்கையை வளர்க்க வந்தவன். பொய் சொல்லமாட்டான். கொலை செய்யமாட்டான். லோக சாந்திக்காக வாழ்வான். இவனால் தான் அரசர்கள் முதற் கொண்டு அனைவரும் சமாதானமாக சேமமாக வாழ்கிறார்கள் என வேத நூல் நீட்டி முழக்கிச் சொன்னதைத் தான் நமது பாட நூல் அய்யர் – நல்லவர் என இரண்டு வார்த்தைகளில் திரட்டித் திரட்டி தந்திருக்கிறது.

சரி… நல்லவனாக இருப்பது ஒரு தொழிலா? அப்படியானால், மற்ற வர்ணத்தவர்கள் கெட்டவர்களா? இப்படியும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். சிலருக்கு ஒன்றாம் வகுப்பிலேயே எழுந்திருக்கலாம்.

அப்போது கேள்விகள் கேட்டால் வாத்தியார் அதட்டி அமர வைத்து விடுவார். ஆனால், சாஸ்திர புஸ்தகங்கள் அப்படியல்ல, பிராமணர்களின் கடமைகள், வேலைகள் என்னென்ன என்பதுபற்றி அவைகளில் ரொம்ப விளக்கமாக விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்கள். சாஸ்திரக்காரர்கள்.

“அய்யர் – நல்லவர்” மாதிரி இங்கேயும் முதலில் இரண்டே இரண்டு பதங்கள்தான் யஜனம். யாஜனம் அப்படி என்றால்? யஜனம் – பண்ணுவது யாஜனம் – பண்ணுவிப்பது பண்ணிவைப்பது எதை? மந்த்ரம், யாகம், ஹோமம் ஆகியவற்றைதான்.

எப்படி? இங்கேயும் பள்ளிக் குழந்தைகளை உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது. சின்னக் குழந்தைகள் டைம் டேபிள் பயன்படுத்துவது போல ஒரு நாளில் இன்னின்ன சமயத்தில் இன்னதை செய்யவேண்டும். காலக்ரமப்படி கர்மாக்கள் வகித்துள்ளது சாஸ்திரம்.

என்னென்ன என்று பார்ப்போம்! காலை 4.30-இல் இருந்து 5 6 மணிக்குள் அதாவது சூரியோதயத்துக்கு முன் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவேண்டும்.

சிறுநீர் கழிக்கச் செல்லும் போது பூணூலை எடுத்து காதில் சுற்றிக் கொள்ள வேண்டும். காலைக் கடன்கள் கழித்த பின் கை, கால்களை அலம்பிக் கொண்டு சில மந்திரங்களைச் சொல்லவேண்டும்.

பிறகு ஸ்நானம் செய்வதற்கென சில மந்த்ரங்கள்.சூரியோதயத்துக்கு முன்னரே செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான சடங்கு சந்தியாவந்தனம்.

(பின்னாளில் ராட்சஸர்கள் சூரியனை மறைத்துக் கொண்டதாகவும், அதனால் ராட்சஸர்களிடமிருந்து சூரியனை மீட்பதற்காகவே எல்லோரும் பிராமணர்களைத் தேடியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. பிறகு பிராமணர்கள் சிறிது தீர்த்தத்தை எடுத்து மந்த்ரங்கள் சொல்லித் தெளிக்க அதன் வலிமையினால் அசுரர்கள் ஓடிவிட்டனர். சூரியன் மெல்ல மேலெழுந்தான் என சந்தியாவந்தனத்துக்கும் ஒரு திரைக்கதை தயாரித்தார்கள் பின் வந்தவர்கள்.

இந்தச் சடங்கில் ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியும் உண்டு. இதனை காலையிலும் மாலையிலும் செய்தால் உடம்புக்கு நல்லது என அன்றே அறிந்தவர்கள் பிராமணர்கள். இன்றைக்கு அனைவருக்கும் தேவைப்படுவது இந்த மூச்சுப் பயிற்சிதான்.

அடுத்ததாக யஜனம், யாஜனம். இரண்டும் தான் அன்று முழுக்க பிராமணர்களின் பிரதானப் பணி. அதாவது தங்களுக்குரிய பிற கர்மாக்கள் செய்யவேண்டும். பிறருக்கும் அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள கர்மாக்களை செய்து வைத்து தட்சணைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இக்கர்மாக்களில் அக்னிஹோத்ர உள்ளிட்ட மந்த்ர சம்பிரதாயங்கள் அடங்கும்.
சூரியன் உச்சி வரும் வேளையில் போஜனம் முடித்து, பின் கொஞ்ச நேரம் சயனம் அதாவது தூக்கம்.

பிறகு சில சாஸ்திர புஸ்தகங்களைப் படிப்பது. மாலையில் சூரியன் சாயும் வேளையில் மறுபடியும் சந்தியாவந்தனம் செய்வது, பின் உண்டு உறங்குவது.

இது தான் பிராமணர்களுக்கென சாஸ்த்திர புஸ்தகங்கள் வகுத்து வைத்த க்ரமம்.

இப்படி இருந்துகொண்டு மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்களுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது.– அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.  (தொடரும்)


பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு பகுதி – 12

பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் லிங்கத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால் ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை.

பிராமணர்களிடையே பிளவா? லோக சேமத்துக்காகவே தெய்வத்தின் அவதாரமாக வாழ்பவர்கள் எப்படி பிளவுபடுவார்கள். இதற்கான பதில் அறிவதற்கு முன்பு தமிழர்களின் முக்கிய வழிபாட்டு முறையைப்பற்றி ஓரளவு தெரிந்துகொள்வோம்.

உலகிலேயே பக்தியை காதலிலும், காமத்திலும் தோய்த்தெடுத்தவர்கள் தமிழர்கள்தான் என்பதை முதலிலேயே பார்த்திருக்கிறோம். காதலையும், காமத்தையும் பக்தியாகப் பாவித்து கடவுளை ஆணாகவும், தன்னைப் பெண்ணாகவும்…. கடவுளை பெண்ணாகவும், தன்னை ஆணாகவும் உருவகித்து “நாயக- நாயகி – பாவ”த்தை காட்டியது தமிழ் வழிபாடு.

பல வழிபாட்டு வடிவங்களுக்கு முன்னுதாரணமான இந்த நாயக – நாயகி பாவ வழிபாட்டு முறைக்காக தமிழர்கள் வைத்துக்கொண்ட வடிவம் தான் லிங்கம்

இன்னும் லிங்கத்தைப் பார்ப்பவர்கள் அது கடவுளின் உருவம் என்றும், அதில் கண்கூட வைத்திருக்கிறார்கள் என்றும் நினைக்கலாம்.

வழிபாட்டு முறையிலேயே அணுகப்போனால் லிங்கம் ஓர் உருவம் அல்ல. அது ஒரு சின்னம்.ஆமாம்… காமமே பக்தியின் சின்னமாக காட்சியளிப்பதுதான் லிங்கத்தின் தத்துவம்.

ஆணும்… பெண்ணும் ஆலிங்கனம் செய்து ஆனந்தத்தில் கூத்தாடும்போது அவர்களது அங்கங்களை மட்டும் தனியே வைத்தால் என்ன தோற்றம் தருமோ அதுதான் லிங்கம்.

தமிழர்களின் இந்த வழிபாட்டு முறைக்கு ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் இவ்வடிவத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால்

லிங்கத்தை மரத்தடிகள், குளத்தங்கரைகள், ஆற்றங்கரைகள் என இயற்கையின் மடியிலேயே வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அங்கங்கே அன்றலர்ந்த பூக்களைக் கொண்டு பூசை செய்தும் வந்தனர். அதிலும் வில்வ மரத்தடிகளில்தான் லிங்கத்தை அதிகளவில் வைத்து வழிபட்டனர் என்றும் ஒரு தகவல்.

இப்படி லிங்க வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க வேத வழி வந்த பிராமணர்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரம்மமாகிய விஷ்ணுவை வழிபடுபவன் சூத்திரனாக இருந்தாலும் பிராமணனாகி விடுகிறான்.

விஷ்ணு பக்தி இல்லாத பிராமணன்கூட சூத்திரனாவான் என்கிறார் வேதாந்த தேசிகர்.‘நசூத்ரஜா பகவத் பக்தாஜாலிப்ரா பாகவதா’என போகும் ஸ்லோகத்தில்தான் இப்படி விஷ்ணு பக்தியை பிரதானப்படுத்தி சொல்லப் பட்டிருக்கிறது.

ஆரிய மதம் – வேத மதம் – ப்ராமணமதம் – வைஷ்ணவ மதம் என வைஷ்ணவம் தழைத்திருந்த அந்த நேரத்தில்…ஒரு குரல் எழுந்தது.

இன்றைய வடாற்காடு மாவட்டத்தில் இருக்கும் அடையப்பலம் எனும் ஊரைச் சேர்ந்த அப்பய்ய தீட்சிதர் என்பவரின் குரல்தான் அது.

“வேதத்தில் ப்ரம்மம் என சொல்லப் பட்டிருப்பதெல்லாம் சிவனைத்தான். விஷ்ணுவை அல்ல…” என குரல் கொடுத்த அப்பய்ய தீட்சிதர் ‘ஷிவோத் கிருஷ்டம்’ என அழைக்கப்பட்டவர். அதாவது பரமசிவனையே போற்றிப் புகழ்பவர் – சிவனையே துதிப்பவர் என்பது இதன் பொருள். வேதத்தில் சிவன்தான் மையப்படுத்தப் பட்டிருக்கிறார் என்பதை நிறுவ அப்பய்ய தீட்சிதர் நீலகண்ட விஜயம் எனும் நூல் உள்பட பல புஸ்தகங்களை எழுதினார்.

தீட்சிதரும் பிராமணர்தான். ஆனாலும், சிவனே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கடவுள் என அப்பய்ய தீட்சிதர் வரையறுத்ததற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்தன.

வேதாந்த தேசிகன் உள்ளிட்ட வைஷ்ணவ வித்வான்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரண்டு பிரிவுகள் உண்டு. கர்மாக்களை எப்படிச் செய்யவேண்டும் என்பதைப்பற்றியது கர்ம காண்டம். கர்மாக்களை செய்தால் மட்டும் மோட்சம் கிடைத்துவிடாது. அதற்கு பகவான் நாராயணனை வழிபடவேண்டும். அப்போதுதான் மோட்சகதி கிடைக்கும் என சொல்வது வேதத்தில் ஞான காண்டம் என அழைக்கப்படுகிற உபநிஷது.

இந்த உபநிஷத்திலுள்ள ஸ்லோகங்களை அடிப்படையாக எடுத்து வைத்துக்கொண்டு வேதத்தின் நாயகன் நாராயணனே என வைஷ்ணவ பிராமணர்கள் வாதிட்டனர்.

நாராயணம் மகாக்ஞயம் விஸ்வாத்மானாம் பராயணம்‘நாராயண பரம்ப்ரும்ஹா தத்வம் நாராயணா பரஹா…’என்கிறது தைத்ரிய உபநிஷது. அதாவது உலகத்தை உய்விக்க ஒரே சக்தி நாராயணன் தான். அவன் தான் அனைத்துலகுக்கும் பரம்பொருள். ‘அதனால் நாராயண தத்துவத்தை நாடிச் சென்று வழிபட்டு வழிபட்டு மோட்சத்தைப் பெறுங்கள்’ என்கிறது தைத்ரிய உபநிஷத்தின் இந்த ஸ்லோகம்.

“மோட்ச மிச்சேது ஜனார்த்தனாது” என்ற இன்னொரு ஸ்லோகமும் இதற்கு கட்டியம் கூறுகிறது.

சைவ சம்பிரதாயத்தினர் லிங்க வழிபாட்டை ஏற்றுக்கொள்ள…

வைஷ்ணவ சம்பிரதாயத்தினர் நாராயணனை மட்டும் வழிபடவேண்டும் என வாதிட…

சைவ… வைணவ வாத, பிரதிவாதங்களால் பிராமணர்களே பிளவுபட்டனர். — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்…. )


ஆதிசங்கரர் யார்? ‘எல்லாமே பொய்… எதுவும் மெய்யில்லை’ பகுதி – 13

‘எல்லாமே பொய்… எதுவும் மெய்யில்லை’ ஆதிசங்கரர். இவர் எழுதியது என்ன? செய்தது என்ன? உபதேசித்தது என்ன?

விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

இப்போது நாம் ஒரு புதியவரைத் தரிசிப்போம். இன்றுவரை இவரை மையமாக வைத்து ஒரு பக்தி உலகமே சுழன்று வருகிறது. இவர் எழுதியது என்ன? செய்தது என்ன?-உபதேசித்தது என்ன? இதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ இவரையே தெய்வமாக வழிபடும் ஓர் ஆன்மீக உலகம்தான் அது.

இவரைப் பின்பற்றும் சீடர்களும் இன்று இருக்கிறார்கள். அவர்களுக்கும் சீடர்கள் இருக்கிறார்கள். ஆன்மீக உலகில் இவரை மையமாக வைத்து ஸ்தோத்ரங்கள் மட்டுமல்ல கோஷங்களும்கூட, எழுந்து கொண்டிருக்கின்றன.

யார் இவர்? கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து சில தொலைவு போனால் ஆல்வே… அங்கிருந்து கொஞ்சம் திரும்ப வந்தால் அங்கமாலி என்கிற ஊர். அங்கமாலியிலிருந்து சில பல காலடிகள் எடுத்து வைத்து நடந்தால் வருவதுதான் காலடி… தற்போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே பிரச்சினைகள் எழும்பியிருக்கும் ‘பெரியாறு’ நதி அழகாக காலடி வழியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இயற்கை செழிப்பான இந்த காலடியில்…ஷிவகுரு எனும் பிராமணர் இவருக்கு ஆரியம்பாள் எனும் பத்தினி இவர்களுக்கு மகனாக பிறந்த செழுமை பூமியில் தன் மழலை காலடிகளைப் பதித்தான் சங்கரன். காலடியே இவனைக் கண்டு துள்ளிக் குதித்தது. ‘அழகான குழந்தை… கண்ணைப் பாருங்கள். ஞானம் சிரிக்கிறது. காதுகள் பாருங்கள் உலகத்தையே கேட்பது மாதிரி விரிந்திருக்கிறது.’ என பார்த்த ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் சங்கரனுக்கு திருஷ்டி வைத்தார்கள்.

அப்பாவும்… அம்மாவும் சங்கரனைப் பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தமாயிருக்க.. ஆனந்தம் அக்குடும்பத்துக்கு நிரந்தரமாய் நீடிக்கவில்லை. சங்கரன் சிறு குழந்தையாய் இருக்கும் போதே அவனது அப்பா இறந்து விட்டார்.

அதுவரை அக்குடும்பத்தை கொஞ்சிக் கொண்டிருந்தவர்கள்… கொஞ்சம் கொஞ்சமாய் விலகத் தொடங்கினர். விதவையாய் போன சங்கரனின் அம்மாவை பார்த்தாலே பாபம் என சாஸ்திர சாலையில் நடந்து போனார்கள். சங்கரனின் குடும்பம் ஏழ்மையில் விழுந்தது.ஆனாலும்… சங்கரனின் ஞானத்தேடலுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை அவனது அப்பா.

அவனது வயிற்றுப் பசியையும் போக்கி… அறிவுப்பசிக்கும் பல்வேறு சாஸ்திர பண்டிதர்களிடம் சேர்த்து படிக்க வைத்தாள். உள்ளூர் பண்டிதர்களிடம் படித்துக் கொண்டிருக்கும் போதே 8 வயதில் சங்கரனுக்கு உபநய சடங்கை செவ்வனே செய்து வைத்தார்கள்.இதன்பிறகு சங்கரனின் சாஸ்திர தேடல் வீரியம் கொண்டது.

அம்மாவிடம் ஒருநாள் சங்கரன் சொன்னான். “அம்மா… உள்ளூர் பண்டிதர்களிடம் படித்தது போதும் அம்மா… நர்மதா நதிக்கரையில் சில பண்டிதர்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர்களிடம் பயில்கிறேனே…” அம்மாவிடம் சொல்லி விட்டு…பெரியாறு நதிக்கரையிலிருந்து நர்மதா நதிக்கரைக்கு பயணம் செய்தான் சங்கரன். அறிவு நதியில் குளிப்பதற்காக, மூழ்குவதற்காக, நர்மதா நதிக்கரையில் கோவிந்த பாதர், பத்மபாதர், கவுடபாதர் போன்ற வித்வான்களிடம் அங்கேயே வாசம் செய்து கற்ற சங்கரர்… அங்கே பல விடயங்களைத் தெரிந்து கொண்டார்.அவர்கள் உபதேசித்த விடயங்களை உள் வாங்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார்.

சங்கரர் கற்ற வேதம், பகவத் கீதை, பிரம்ம சூத்ரம் போன்றவற்றுக் கெல்லாம் பாஷ்யம் அதாவது உரை எழுதிய சங்கரர்… அப்போது புத்தரையும் வாசிக்க ஆரம்பித்தார்.

அதுவரை அவர் படித்த வேதம்.. பிரம்ம சூத்ரம், ஆகியவற்றை பற்றியெல்லாம் சங்கரரை மறுபரிசீலனை செய்ய வைத்தது புத்தம்.

புத்தன் சங்கரருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார். மறுபடியும் மற்ற சாஸ்திரங்களையும் வாசிக்கத் தொடங்கிய சங்கரர்.. இறுதியில் ஒரு தெளிவிற்கு வந்தார்.

புத்தன் சொன்ன ஞானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் உள்ள அனைத்தும் பொய்… அதுதான் எனக்கு கிடைத்த ஞானம்.

நம் பிறப்பு பொய்.. வாழ்வு பொய் இவ்வுலகத்தில் ஞானம். அக்ஞானம் ஆகிய இரண்டும்தான் உண்டு, மற்ற எதுவுமே கிடையாது” என தனக்கு கிடைத்த ஞானத்தை ஊருக்கெல்லாம் சொல்ல ஆரம்பித்தார் சங்கரர்.

வேதம் அது சொன்ன கர்மாக்கள் எல்லாம் பொய் கடவுளைத் தவிர… என சங்கரர் மேலும் உபதேசம் செய்யச் செய்ய வைதீகர்கள் சங்கரரை எதிர்க்க ஆரம்பித்தனர்.

இதெல்லாம் சங்கரரின் இளமைக்காலம். ஆண் பொய், பெண் பொய் அனைவரும் பொய் என்ற சங்கரர் கல்யாணம் பண்ணிக் கொள்ளவும் மறுத்தார். அம்மா எவ்வளவோ சொல்லியும் ஏற்றுக் கொள்ளவில்லை. இளமை பொங்கும் வயதில் சந்யாசம் போனார். தான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட உலகையே மாயம் என ஒப்புக் கொள்கிற இளைஞர்களை திரட்டினார் சங்கரர்.

அவருக்கு முதன் முதலில் கிடைத்தவர்கள் நான்குபேர். ஆனந்தகிரி, சுரேஷ்வரன், பத்மநாபர், ஹஸ்தாமலகம். இவர்கள் தன்னை பின்தொடர ஒவ்வொரு ஊராய் சென்றார்.

உலகமே மாயம் எதுவுமே உண்மையில்லை. எதற்கும் கலங்காதே… தனது அத்வைதத்தை ஊர் முழுக்க பரப்பினார் ஆதிசங்கரர்…‘எல்லாமே பொய்… எதுவும் மெய்யில்லை’ என அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்த ஆதி சங்கரரை அந்த சம்பவம் அழுத்தமாக உலுக்கியது. – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)


சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது பகுதி – 14

உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது. அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது. மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு. சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம்…

வேதம், கர்மாக்களை பொய் என்று சொல்லி பிரச்சாரம், உபந்யாசம் என அருளிக் கொண்டிருந்த ஆதிசங்கரரைஅழுத்தமாகப் பாதித்த சம்பவம். இளமைப் பருவத்திலேயே – அவரது தாயாரும் இறந்ததுதான், அனைத்தையும் பொய் என்ற போதும் அன்னையின் இறப்பு சங்கரரை ரொம்பவே பாதித்தது.

வைதீகர்கள் வந்தார்கள். ‘பாரப்பா உன் அம்மாவுக்குரிய இறுதிச் சடங்குகளை நீதான் செய்யவேண்டும். வழக்கம்போல அது பொய், இது பொய் என உளறாதே…’ என அவர்கள் பலவந்தப்படுத்தியதை அடுத்து தன் அம்மாவுக்கான கடைசிக் காரியங்களை தான் இதுவரை உபதேசித்து வந்த கருத்துகளுக்கு மாறாக இருந்தபோதும் செய்து முடித்தார் சங்கரர்.

‘இனி நமக்காக, நம்மை நம்பி யாருமில்லை…’ என்ற நிலைமை அன்னையின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்டதால் சந்யாசத்தில் தீவிரமானார் ஆதிசங்கரர். மறுபடியும் ஒவ்வொரு ஊராகச் சுற்றினார்.

சந்யாசம் வாங்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொரு இளைஞனுக்கும் சூடான ஸ்லோகங்கள் மூலம் பரப்பினார்.

பிற்பாடு கேரளாவைத் தாண்டியும் சங்கரர் பயணம் மேற்கொண்டு அத்வைதத்தையும் சந்நியாசத்தையும் உபதேசித்தார் என்றும் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றில் தகவல்கள் வழிகின்றன.

சங்கரர், சந்யாசிகள் எப்படி வாழவேண்டும் என கடும் நிபந்தனைகளை தனக்கும் விதித்துக் கொண்டு… தன்னைப் பின்பற்றும் அதாவது சந்யாசத்தைப் பின்பற்றும் சீடர்களுக்கும் அதை உபதேசித்தார்.

சந்நியாசியானவன் தனக்கென எதுவும் வைத்திருக்கக் கூடாது. தனக்கு உணவு தேவையென்றால்கூட பொருள்களை வாங்கி அவன் சமைக்கக் கூடாது. நமக்கென்று உலகில் எதுவும் இல்லை என்றபோது… மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு.

சந்யாசி அக்னியைக்கூட தேவைக்காக நெருங்கக்கூடாது. ஒவ்வொரு வீடாய் போய் பிச்சையெடுக்கவேண்டும். அதில் கிடைப்பவற்றை சாப்பிட்டுக் கொள்ளவேண்டும் என்றசங்கரர்… சந்யாச ஸ்மிருதி வகுத்த விதிகளை கடுமையாக பின்பற்றினார்.

சந்யாச ஸ்மிருதியா? அது என்ன சொல்கிறது? ஆசையைத் துறந்த சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது என்பவற்றை வகுத்தது தான் சந்யாச ஸ்மிருதி.

‘பததீ அஸோவ் ஸ்வயம்பிக்க்ஷஹீ யஸ்ய ஏததுத்வயம் பவேது…’ — சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம்…என்று சொன்ன சந்யாச ஸ்மிருதி, சந்யாசிகள் எவ்வளவு எளிமையாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறது.

எங்கு போனாலும் சந்யாசி கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். அல்லது பல்லக்கில் போகவேண்டும்.

இதைத் தவிர்த்து வேறு எந்த வசதிகளையும் சந்யாசிகள் பயன்படுத்தக் கூடாது என்பதை பின்வரும் ஸ்லோகத்தில் சொல்கிறார்கள்.

“வாகனஸ்த்தம் யதீம் திருஷ்ட்வாசஜேஸ ஸ்நான மாசரேது…”என போகும் இந்த ஸ்லோகத்தின் உள்ளர்த்தம் என்ன தெரியுமா?

சந்யாசியானவன் எத்தனை மாற்றங்கள் உலகியலில் வந்த பன்னாலும் தன்னை மாற்றிக் கொள்ளாதவனாக இருக்க வேண்டும். கால்நடையாக திரிந்து உன் உபதேசங்களைப் பரப்பவேண்டும். அதை விட்டுவிட்டு வண்டி வாகனங்களை தேடிக் கொண்டிருக்காதே. அவற்றில் ஏறி ஜம்மென உட்கார்ந்து கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்காதே. அதைவிட மிகப்பெரிய பாவம் வேறெதும் இருக்க முடியாது. 

உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது.

பிறகு அவர் எப்படி பயணம் செய்ய முடியும்? தவிர்க்க முடியாத துரதிருஷ்டவசமாக சந்யாசி அப்படிப்பட்ட வண்டிகளைப் பார்த்துவிட்டால் அந்த கணமே தலைமுழுகி ஸ்நானம் செய்து அப்பாவத்தை தீர்த்துக் கொள்ளவேண்டும் என ‘வாகன’த் தீட்டு பற்றி சந்நியாசிகளுக்கு அப்போதே அறிவுறுத்தியிருக்கிறது சந்யாச ஸ்மிருதி.

இத்தனைக் கட்டுப்பாடுகளையும், நியதிகளையும் துளிகூட வழுவாமல் தன் சந்யாசத்தை மேற்கொண்டிருந்தார் சங்கரர்.
இந்த இடத்தில் நானொரு விஷயத்தைச் சொல்வது மெத்தப் பொருத்தமாகயிருக்கும். மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த வாகனத் தீட்டு விஷயத்தில் ரொம்ப கவனமாயிருந்தார்.

தான் இருக்கும்வரை எவ்வித இயந்திர வாகனத்திலும் அவர் பயணித்ததில்லை. (பல்லக்குகளில் தான் ஏறிச் சென்று கொண்டிருந்தார்).

இளமையிலேயே இவ்வாறு சந்யாச ஸ்மிருதிகள்படி வாழ்ந்து வந்த ஆதிசங்கரர் இதோடு இல்லாமல் தானே பஜகோவிந்தம் என்னும் சாஸ்திர நூலையும் இயற்றினார்.

மூடமதே… அதாவது மூட மடனமே என மனங்களை அழைக்கும் பஜகோவிந்தத்தில் – ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகங்கள் இன்றளவும் சராசரி புருஷர்களுக்கும், சந்யாசிகளுக்கும் புத்தி சொல்லக் கூடியதாக… அறிவூட்டக் கூடியதாக அமைந்திருக்கின்றன.

பணத்தாசை பிடித்தால் என்ன நேரும்? பெண் பித்து பிடித்தால் என்ன நேரும்? என பல சூடான கருத்துகளை பஜகோவிந்தத்தில் (பஜகோவிந்தம் என்றால் கோவிந்தனை பஜனை செய்கிறேன் என பொருள்) எடுத்துக் காட்டியிருக்கிறார்

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 55
சிவனின் சிந்திய‌ இந்திரியம். முருகன் யார்?

முருகன் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை.

சிவனின் மன்மத புயல் கிளம்ப‌‍ ‍பார்வதி விலகிக் கொள்ள… சிவனின் உயிர்த்துளிகள் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை.. முடிவு?? !! அதன் பெயர்தான் ஸ்கந்தன். இப்போது புரிகிறதா?

சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்… பரமசிவன் – பார்வதியின் மகனாக்கி விட்டார்கள்

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 55

சைவத்தில் இது மட்டுமல்ல மொழி பேதமும் உண்டு. முருகன் அழகான தமிழ்ப்பெயர். இச்சொல்லின் பொருளே அழகு என்றுதான் அர்த்தம். சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்… பரமசிவன் – பார்வதியின் மகனாக்கி விட்டார்கள்

சமஸ்கிருதக்காரர்கள்.அப்படியென்றால் முருகன் பரமசிவனின் மகன் இல்லையா? இல்லை என்பது தமிழ் பதில். ஆமாம் என்பது சமஸ்கிருத பதில்.

எப்படி என்று கேட்டால் பெயர்க்காரணங்களை வைத்தே எளிதில் கூறிவிடலாம். முருகன் என்றால் அழகன். அதாவது தொன்மையான பழந்தமிழ் சங்க இலக்கியத்தில் பரிபாடல் நூலில் முருகன் என்ற தமிழ்க் கடவுள் பெயர்தான் வழங்கப்பட்டிருக்கிறது.

சரவணபவ, கந்தன்… இவையெல்லாம்…? அர்த்தம் சொல்கிறேன். பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை முருகன். இது தமிழ் பதில் என்று சொன்னேன்.அப்படியென்றால் சமஸ்கிருத பதில் என்ன? கந்தன், சரவணபவ என்றெல்லாம் சொல்கிறோமே? என்றெல்லாம் கேட்கிறீர்கள்.

வடமொழிக் கதையை தான் இங்கே வாசித்துக்காட்ட வேண்டியிருக்கிறது. பரமசிவனும், பார்வதியும் தங்களது லோகத்தில் லயித்திருக்கிறார்கள். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது… பார்வதியின் மீது மோகனம் பொங்குகிறார் பரமசிவன். பார்வதியை நெருங்குகிறார்.
பார்வதிக்கு அப்போது என்ன வேலையோ? இல்லை ஸ்வாமி… இப்போது வேண்டாம். நான் தயாரில்லை… என்கிறார்.

பரமசிவனுக்குள்ளோ மன்மதப்புயல், பார்வதியை பார்க்கப் பார்க்க சுற்றிச் சுழன்று அவரை தாக்குகிறது. பார்வதி மீது மன்மத தாண்டவம் ஆடிட மிகத்தயாராக இருக்கிறார். ஆனால்… சக்திக்கு சம்மதமில்லை.பார்வதியை துரத்துகிறார் பரமசிவன். நாதனின் வேட்டையிலிருந்து தப்பிக்க நழுவி ஓடுகிறார் பார்வதி. பரமசிவனாயிற்றே… விட்டு விடுவாரா? பார்வதியை வளைத்து தன் கைகளின் எல்லைக்குள் இழுத்து விட்டார்.

`தேவி… உன்னை சுகிக்க சித்தமாயுள்ளேன்… தேக சம்பந்தம் கொள்ள தாகமாயிருக்கிறேன். ஏன் நீ விலகிச் செல்கிறாய்? என்னாயிற்று உனக்கு?’ – பார்வதியை ஒரு கொடிபோல சுற்றிக்கொண்டு பரமசிவன் விரகதாபத்தோடு வினா கேட்கிறார்.

`இல்லை நாதா… இப்போது வேண்டாமே…’ – மறுபடியும் அவளது பதில் இதுதான்.பகவானாக இருந்தாலும் தன் பாகங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முழுதாக பார்வதியை இறுக்கி கட்டியணைத்தவர்… அவளது ஆடைகளையும் அகற்ற ஆரம்பிக்கிறார்.

`ஸ்வாமி… நாதா…’ கெஞ்சுகிறார் பார்வதி. ஆனால்… இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் சுகத்துக்கான போருக்கு தான் மட்டுமே தயாராகி விட்டார் சிவன்.

பார்வதியின் ஒவ்வொரு பாகங்களையும் தன் கட்டுக்குள் பரமசிவன் வைத்திருக்க… இப்போதும் சக்தி சம்மதிக்கவில்லை. சிவனுக்கோ தாங்க முடியவில்லை. மன்மதக் கோபம் அவருக்குள் கொந்தளித்தது. பார்வதி மீது பாய்ந்து படர்ந்தார்.

ஆனால்… பார்வதியோ… சரியாக அந்த க்ஷணத்தில் தன் உடலை சற்று விலக்கிக் கொள்ள… பரமசிவனின் உயிர்த்துளிகள் போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை.

பார்வதி விலகிவிட்டதால் பரமசிவனின் ரேதஸ் (இந்த்ரிய துளிகள்) அப்படியே ஆகாயத்திலிருந்து கீழே விழுந்தன. அந்த உயிர்த்துளிகள் அப்படியே கங்கையில் வந்து விழுந்தன. சிவபெருமானின் சொத்தாயிற்றே…. கங்கை நீரோட்டத்தோடு வேக வேகமாக பயணித்தன.

கங்கா மேலே சவாரி செய்த அந்தத் துளிகள்… கங்கைக்கரையோரம் படர்ந்திருந்த ஒரு நாணல் காட்டுக்குள் சென்று தேங்க…அப்படியே அது குழந்தையாக அவதரித்தது.

நாணலுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சரம். காட்டுக்கு வனம். சரவனம்… – நாணல் காட்டில் பின் உருவானவன் – என்பதால் சரவணன் – இப்போது சரவணன் என்று அழைக்கப்படுகிறான் முருகன்.சமஸ்கிருதத்தின்படி, சரவணன் இப்படித்தான் அவதரித்தான். பெயர் தரித்தான்.

கந்தன் என்றால்…? அதை கந்தன் என்று சொல்லக்கூடாது. உண்மையான சரியான சமஸ்கிருதப் பெயர் ஸ்கந்தன்.சரி… ஸ்கந்தன் என்றால்? இப்போது ஒரு வடமொழி கதை வாசித்தீர்களே… அதற்குள் வரும் மூலப் பெயர்தான் இது.

அதாவது… ஆணுடைய உயிர்த்துளிகள் பெண்ணுடைய பாகத்தில் சேராமல் வழிதவறி விழுந்தால்… அதன் பெயர்தான் ஸ்கந்தன். இப்போது புரிகிறதா?

முதலில் ஸ்கந்தன். அதன் பிறகுதான் சரவணன்… இப்படித்தான் சிவனுக்கு சரவணன் `பிறந்தான்’ என்கின்றன சமஸ்கிருத காவ்யங்கள். ஆனால்… அழகானவன் என்ற அர்த்தத்தில் அவனை ஒரு மலைக்கடவுளாக வணங்குகிறது தமிழ்க்குடி.

முருகனை ஸ்கந்தன், சரவணன் என கருத தமிழ் இடம் கொடுக்காது.  தவிரவும் ஆபாசமான காரணங்களை வரையறுத்திருக்கிறது சமஸ்கிருதம்.

இப்படிப்பட்ட ஸ்கந்தன், சரவணனுக்கு சுப்ரமணியர் எனவும் ஒரு பெயர். இதன் அர்த்தம் உயர்ந்த பிராமணன். இப்போது புரிகிறதா? முருகனை சிவனின் மகனாக்கியது போலவே… கணபதியையும் மகனாக்கி விட்டார்கள். கணபதி யார்? — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் ( தொடரும் )


இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 54

“அதை” காட்டிஜெயித்த‌ சிவ‌ன். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

சிவபெருமானும் காளியும் போட்டி நடனமாட… சிவன் வேண்டுமென்றே காலை தூக்கி ஆணுறுப்பை வெளிக்கொண்டு வந்து தெரியும்படியாக்கி… சிவபெருமானின் திட்டம் பலித்து ஜெயித்துவிட்டார்.

இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ? இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது.இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம்.

பெண் தெய்வங்கள் இந்த பாடுபடுவது வைஷ்ணவ சம்ப்பிரதாயத்தில் மாத்திரம்தானா? சைவத்தில் எப்படி? உங்களுடைய இந்தக் கேள்விக்கு பதில்கூற நாம் சிதம்பரம் வரை போகவேண்டும். சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சிலபேர் அவரது ஆலயத்துக்குச் சென்று தரிசனமும் செய்திருப்பீர்கள்.

இந்த ஸ்தலத்துக்கு விசேஷமே சிவபெருமானான நடராஜ பெருமானின் நர்த்தனம் தான். ஒருநாள்… மிகப்பழைய காலத்தின் அழகான நாள்… சிதம்பரத்தில் ஒரு போட்டி நடனப்போட்டி. கலந்து கொள்பவர்கள் யார், யார்?

பரமசிவன், தில்லை காளி. யாரிந்த தில்லை காளி? சிவபெருமானுடன் நடனப்போட்டி போட வந்தவள். மிகச் சிறந்த நர்த்தன நாட்டியக்காரி. இயற்கையிலேயே ஆண்களை விட பெண்கள்தான் நடன அசைவுகளிலும் இசைத் துடிப்புகளிலும் அழகாக இழைவார்கள். புருஷர்கள் ஆடும்போது ஏற்படும் ரசனையை விட ஸ்தீரிகள் நர்த்தனமாடும் போது அதிகபட்ச அழகு மிளிரும். இது இயற்கையின் ஏற்பாடு. அதிலும், தில்லைகாளி நடனப்பயிற்சி பெற்றவள் பின் சொல்ல வேண்டுமா?

அவளது சலங்கை ஒலி கேட்டு காற்றே ஆடிப்போகும். அவளது நடனத்துக்குப் போட்டியாக ஆட வருபவர்களே ஆடிப்போய் விடுவார்கள். இப்படிப்பட்ட தில்லை காளிதான் சிவபெருமானின் நடனப் போட்டிக்கு வந்தாள். ஏற்பாடுகள் நடந்தன.

இரண்டு மேடைகள் எதிரெதிரே. அதில்தான் சிவபெருமானும் காளியும் நடனமாட வேண்டும். கூட்டம் கூடியிருக்கிறது. ஆட்டம் தொடங்க இருக்கிறது. போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என கூடியிருந்தவர்களிடையே ஒரு கிசுகிசு நுழைந்து நெளிந்து கொண்டிருந்தது.

தொடங்கியாகி விட்டது. தனது ஆர்ப்பாட்டமான அசைவுகளோடு ஆட ஆரம்பித்தாள் காளி. அவளது பாதங்கள் சலங்கைகளை ஒலியோடு சுருதி சேர்த்தன. காளியின் கைவிரல்கள் காற்றில் நடனச் சித்திரங்கள் தீட்டின.

மறுபக்கம் சிவன் தனது தாண்டவத்தை ஆரம்பித்தார். சிவனின் தாண்டவத்தை அய்ந்து வகையாக அவரது அடியார்கள் போற்றுவர். அற்புத தாண்டவம், அநவாத தாண்டவம், ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், சங்கார தாண்டவம், இங்கே சிவன் ஆடியது ஆனந்த தாண்டவம். காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங்களும் பார்ப்பவர்களை வசீகரித்தன.

சிவனின் தாண்டவம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை…பார்த்தார் சிவபெருமான், ஒரு பெண்ணிடம் நான் தோற்பதா?

அவள் கால்கள் செய்யும் நடனம் அவருக்குள் கலவரம் செய்தது. ‘ஆஹா… சிவபெருமானை தில்லை காளி ஜெயித்துவிட்டாளே’ என குரல்கள் கிளம்பப் போகிற நேரம்… இனியும் இவளை ஆடவிடக்கூடாது என முடிவுகட்டிய சிவன்… தன் இடதுகாலை சற்றே தூக்கினார்.

நடனத்தின் ஒருவகைதான் என நினைத்து ஈடுகொடுத்து ஆடிக்கொண்டிருந்தாள் காளி. சிவனின் இடது கால் இன்னும் எழும்பியது, ஆமாம்… இன்னும் உயரமானது. கொஞ்சம் கொஞ்சமாக இடது காலை விலக்கி எடுத்துச் சென்ற சிவபெருமானின் திட்டம் பலித்தது.

வலதுகாலை ஊன்றி இடது காலை உயர விலக்கிக்கொண்டே போக… சபையே ஒருகணம் அதிர்ந்தது. ஏன்?…வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காத்தான் இடது காலை விலக்கி தூக்கியிருக்கிறார்

சிவன்.வெற்றியின் விளிம்பில் நடனமாடிக் கொண்டிருந்த தில்லை காளி இக்காட்சியை பார்க்கவேண்டிய கட்டாயம் நேர்ந்துவிட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது தலைகுனிந்தாள். தனக்கு முன் ஒரு ஆண் இப்படிப்பட்ட கோலத்தில் நிற்பதை எந்தவொரு பெண் பார்த்துக்கொண்டே தன் வேலையை தொடருவாள்? காளியின் நர்த்தனம் நின்றதா? நிறுத்தப்பட்டது.

ஆனால், சிவபெருமான்… தொடர்ந்து தாண்டவமாடிக்கொண்டே இருந்தார். ஆக… சிவன் ஜெயித்தார் என்றாகிவிட்டது. வலதுகாலை ஊன்றி இடது காலை தூக்கி சிஷ்டத்தை (ஆணுறுப்பை) வெளிக்காண்டு வந்து… ஜெயித்துவிட்டார். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

‘இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது.

இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம். இதை நானாகச் சொல்லவில்லை. நடராஜ மகாத்மியம் என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது சிதம்பரம் சொல்லும் செய்தி என்ன? ஆணிடம் பெண் போட்டி போடக்கூடாது. அப்படியே திமிராக போட்டி போட்டாலும் ஜெயித்துவிடக்கூடாது. அவளை தோற்கடிக்க ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தோற்றவள் காளி.

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். காளி… ஆகமத்துக்கு அப்பாற்பட்ட காவல் தெய்வம். இங்கேதான் முக்கியமான இன்னொன்றைக் கவனிக்க வேண்டும். “Siva is a hig class God. „But Kali is low class rural God” என்று சொல்லி காளி ஒதுக்கப்பட்டாள். எங்கே…?

இன்னமும் நீங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போய் தில்லை காளி எங்கே என்று கேளுங்கள். கோயிலுக்கு வெளியே வடக்கு நோக்கி கை காட்டுவார்கள்.

கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தூரத்தில் சிதம்பரத்தின் எல்லையில் ஒரு சின்ன கோயிலுக்குள் கோபமாக உட்கார்ந்திருப்பாள் காளி.

‘அதாவது ஆணுக்கு பெண் போட்டி போட முடியாது. போட்டியிட்டால் இப்படித்தான் விரட்டப்படுவாள்’ என்று நமக்கு நடராஜர் மூலம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

இன்னும் சிதம்பரம் கோயிலில் அர்ச்சனையில் ஈடுபடும் தீட்சிதர்கள் அக்காளியை திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

இவ்வாறு தெய்வங்களுக்கிடையிலேயே ஆண்… பெண் பேதம் போற்றி வளர்க்கப்பட்டிருக்கிறது. அதோடு வர்க்கமொழி பேதமும் பின்பற்றப்பட்டிருக்கின்றன.– அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)


இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 53 

பகவானின் சாப்பாட்டுப்பட்டியலை பார்த்தீர்களா?

பார்த்தீர்களா பெண் தெய்வங்கள் படும் பாட்டை?… பெண் தெய்வத்தை வெளியே விடுவதில்லை.

மோட்சம் கொடுக்கும் சக்தி பெண் தெய்வத்துக்கு இல்லை. ஆண் தெய்வம் சாப்பிடும் சாப்பாட்டை சாப்பிடும் பேறு கூட பெண் தெய்வத்துக்கு இல்லை.

பகவானின் போஜனப் பட்டியலை பார்த்தீர்களா?… காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் நித்யப்படி (தினந்தோறும்) சாப்பிடும் இஷ்டமான போஜனம் இட்லி நாம் சாப்பிடும் சாதாரண இட்லியல்ல.

குடலை இட்லி, அப்படியென்றால்?…பெருமாள் கோவில்களில் துளசி பறிப்பதற்கென்றே ‘குடலை’ என அழைக்கப்படும் ஒரு நீண்ட கூடை வைத்திருப்பார்கள். நீண்ட உருளை வடிவில் இருக்கும் இந்த கூடை…இதே போன்று ஒரு பாத்திரம் செய்து… அதில் மாவை ஊற்றி வேகவைத்து வெளியே எடுத்தால் அதுதான் குடலை இட்லி.சரி… இவ்வளவு நளபாகங்களை சொல்லியாகிவிட்டது.

இத்தனை நளபாகங்களும் நிர்மால்யம் என்றது ஆஹமம்

அப்படியென்றால்?…பாஞ்சராத்ர ஆகமம் சொன்னது…

“சொரூபாம் பிரதிமாம் விஷ்ணோஹோப்ரஸன்ன வதனே க்ஷணாம் க்ருத்துவாஆத்மன ப்ரீதிகரீம் சொர்ண ரஜதா திபிதாமர்ச்சயேது தாம்ப்ரணமேது தாமே விசிந்தேதுவிஷதீ அபாஸ்த தோஷஸ்துதாமேவ ப்ரம்ம ரூபிணிம்….”

வேத வழிமுறைகளை கர்மாக்களை புத்தர் வேகமாக வீரியமாக அடித்து புரட்டி போட்ட காலத்துக்குப் பிறகு…“உனக்கொரு புதுவழி சொல்கிறேன் கேள்.

விஷ்ணுவை பிரதானமாக்கி உனக்கு பிடித்தமான உருவத்தை சிறிய அளவில் தயார் செய்து கொள். அது கல்லாக இருக்கக்கூடாது. தங்கத்திலேயோ வெள்ளியிலேயோ செய்ததாக இருக்கவேண்டும். அதை நீ தனியே வைத்து பூஜை செய்து கொள்…” என்றது.

இதன் பிறகு தென்னாட்டில் பெரிய பெரிய கோவில்களையும்… சிலைகளையும் பார்த்தவர்கள் ‘இது நன்னா இருக்கே… இதுக்கும் நாங்களே பூஜை பண்றோம்…’ என்று வந்தனர். பிறகுதான் பகவானுக்கும் பசிக்கும் அவனுக்கு நைவேத்யம் செய்யணுமே என்று சொல்லி… இவ்வளவு நளபாகங்களை கண்டுபிடித்தனர்.

சரி… நிர்மால்யம் என்றால் என்ன என்று இன்னும் சொல்லவில்லையே?… பகவானுக்கு இத்தனை விதம் விதமான பட்சணங்கள், பலகாரங்கள் இத்தியாதிகளை நைவேத்யம் பண்ணுகிறீர்களே…

அவன் அதை சாப்பிடுகிறானா?… அவன் முன்னால் வைத்துவிட்டு அதை கொஞ்ச நேரத்திலேயே எடுத்து வந்து விடுகிறீர்களே?… அதற்குள் அவன் அதை ஸ்வீகரித்துக் கொண்டிருப்பானா?…எடுத்துக் கொண்டு போய் என்ன செய்கிறோம்?

பகவானின் பேரைச் சொல்லி நாம் சாப்பிடுகிறோம். இன்றும் கூட பெருமாள் கோவில்களில் உத்ஸவத்தின் போது புளியோதரையில் காரமில்லை, உப்புமாவில் உப்பில்லை என்று பெரிய சண்டையே நடக்கிறது.

இதெல்லாம் எதற்கு?…. பகவான் சாப்பிட்டதை நாம் ஏன் சாப்பிட வேண்டும்?… அது எச்சிலாயிற்றே?… அவன் எச்சில் செய்ததை நான் சாப்பிடுவதாவது… அதை தூக்கிப் போடுங்கள். தூர தூக்கிப்போடுங்கள். அதை உபயோகப்படுத்தாதீர்கள். இதுதான் நிர்மால்யம்.

அதாவது ‘எச்சிலை சாப்பிடாதே’ சாப்பிட்டால் உனக்கு நிர்மால்ய தோஷம். ஆகமம் சொன்னபடி சிலை செய்து, பூஜித்தவர்கள் இந்த விஷயத்தை கேட்டவுடன் ‘அடிமடியில் கைவைக்கிறதே’ என்று நினைத்தார்கள்.

அப்படியென்றால் நாம் எப்படி பிழைப்பது?… யோசித்தனர்அதெல்லாம் முடியாது என்றனர். பகவானின் எச்சில்தானே அதை சாப்பிட்டு விட்டுப் போகிறோம். விடுங்கள் என்று அன்னக்கொடி பிடித்தனர்.

இதைத்தான் வேதாந்த தேசிகன் தனது ‘பாஞ்சராத்ர ரட்சை’யிலே சொல்லியிருக்கிறார். இவ்வளவு பட்சணம் பலகாரம் பண்ணி பகவானுக்கு படைத்துவிட்டு அதை நிர்மால்யம் என்று தூக்கிப் போட்டால் எப்படி?…

அது சரிப்பட்டு வராது.எனவே பெருமாள் கோவில்களில் இந்த நிர்மால்யம் சரிப்பட்டு வராது. பெருமாளுக்கு படைத்தவற்றை சாப்பிடுவதால் நிர்மால்ய தோஷம் வராது.

சிவன் கோயில்களில் வேண்டுமானால் நிர்மால்ய (எச்சில்) தோஷம் இருக்கட்டும். இங்கே வேண்டாம்…” என்கிறார் வேதாந்த தேசிக ஸ்வாமி… அதாவது இதன் உள்ளர்த்தம் என்ன?

பெருமாள் கோவில்களில் தான் வகை வகையாய் நைவேத்யங்கள் படைக்கப்படுகின்றன.

சிவன் கோவில்களில் இப்படி வகை வகையாய் சுவை சுவையான பதார்த்தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை.

எனவே சிவன் கோவில்களில் வேண்டுமானால் எச்சில் தோஷம் என கருதி அதிகபட்சம் சம்பா சாதம்தான். அதை ஒதுக்கி விடலாம்.

ஆனால் சுவையான ‘சப்பு’ கொட்டி சாப்பிடும் பெருமாள் கோவில் பதார்த்தங்களை எப்படி நிர்மால்யம் என்று தூரப் போட முடியும்?… இப்போது புரிகிறதா?

சரி… எதற்கு இதைச் சொல்ல வந்தேன். நாம் தெய்வங்களிலும் பெண் தெய்வங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி பார்த்து வருகிறோம் அல்லவா?… சாப்பாட்டு விஷயத்தில் கூட அது பின்பற்றப்படுகிறது என்பதை சொல்லத்தான் இவ்வளவு விஷயங்களையும் விளக்கினேன்.

அதாவது பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும் நைவேத்யத்தை பிராட்டிக்கு நைவேத்யம் செய்யக்கூடாது. அது ஆண் தெய்வமான பெருமாளுக்கு மட்டும்தான். அவர் சுவைக்க மட்டும்தான்.

பிராட்டிக்கு தனித்தளிகைதான். இன்றும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலுக்கு போய்ப் பாருங்கள்.

பெருமாளுக்கு செய்த தளிகையை தாயாருக்கு அதாவது பெண் தெய்வமான பிராட்டி பக்கம் கூட கொண்டு போக மாட்டார்கள். பொருளாதார வசதியில்லாத பெருமாள் கோவில்களில் மட்டும்தான் தவிர்க்க முடியாமல் பெருமாளுக்கும் தாயாருக்கும் சாப்பாட்டு சமாச்சாரம் சமமாக இருக்கிறது.

பெண் தெய்வத்தை வெளியே விடுவதில்லை. மோட்சம் கொடுக்கும் சக்தி பெண் தெய்வத்துக்கு இல்லை. ஆண் தெய்வம் சாப்பிடும் சாப்பாட்டை சாப்பிடும் பேறு கூட பெண் தெய்வத்துக்கு இல்லை. பார்த்தீர்களா பெண் தெய்வங்கள் படும் பாட்டை?… –அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்



"அதை" காட்டிஜெயித்த‌ சிவ‌ன். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

சிவபெருமானும் காளியும் போட்டி நடனமாட... சிவன் வேண்டுமென்றே காலை தூக்கி ஆணுறுப்பை வெளிக்கொண்டு வந்து தெரியும்படியாக்கி... சிவபெருமானின் திட்டம் பலித்து ஜெயித்துவிட்டார்.

இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ? இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது.இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம்.


பெண் தெய்வங்கள் இந்த பாடுபடுவது வைஷ்ணவ சம்ப்பிரதாயத்தில் மாத்திரம்தானா? சைவத்தில் எப்படி? உங்களுடைய இந்தக் கேள்விக்கு பதில்கூற நாம் சிதம்பரம் வரை போகவேண்டும். சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சிலபேர் அவரது ஆலயத்துக்குச் சென்று தரிசனமும் செய்திருப்பீர்கள்.

இந்த ஸ்தலத்துக்கு விசேஷமே சிவபெருமானான நடராஜ பெருமானின் நர்த்தனம் தான். ஒருநாள்... மிகப்பழைய காலத்தின் அழகான நாள்... சிதம்பரத்தில் ஒரு போட்டி நடனப்போட்டி. கலந்து கொள்பவர்கள் யார், யார்?

பரமசிவன், தில்லை காளி. யாரிந்த தில்லை காளி? சிவபெருமானுடன் நடனப்போட்டி போட வந்தவள். மிகச் சிறந்த நர்த்தன நாட்டியக்காரி. இயற்கையிலேயே ஆண்களை விட பெண்கள்தான் நடன அசைவுகளிலும் இசைத் துடிப்புகளிலும் அழகாக இழைவார்கள். புருஷர்கள் ஆடும்போது ஏற்படும் ரசனையை விட ஸ்தீரிகள் நர்த்தனமாடும் போது அதிகபட்ச அழகு மிளிரும். இது இயற்கையின் ஏற்பாடு. அதிலும், தில்லைகாளி நடனப்பயிற்சி பெற்றவள் பின் சொல்ல வேண்டுமா?

அவளது சலங்கை ஒலி கேட்டு காற்றே ஆடிப்போகும். அவளது நடனத்துக்குப் போட்டியாக ஆட வருபவர்களே ஆடிப்போய் விடுவார்கள். இப்படிப்பட்ட தில்லை காளிதான் சிவபெருமானின் நடனப் போட்டிக்கு வந்தாள். ஏற்பாடுகள் நடந்தன.

இரண்டு மேடைகள் எதிரெதிரே. அதில்தான் சிவபெருமானும் காளியும் நடனமாட வேண்டும். கூட்டம் கூடியிருக்கிறது. ஆட்டம் தொடங்க இருக்கிறது. போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என கூடியிருந்தவர்களிடையே ஒரு கிசுகிசு நுழைந்து நெளிந்து கொண்டிருந்தது.

தொடங்கியாகி விட்டது. தனது ஆர்ப்பாட்டமான அசைவுகளோடு ஆட ஆரம்பித்தாள் காளி. அவளது பாதங்கள் சலங்கைகளை ஒலியோடு சுருதி சேர்த்தன. காளியின் கைவிரல்கள் காற்றில் நடனச் சித்திரங்கள் தீட்டின.

மறுபக்கம் சிவன் தனது தாண்டவத்தை ஆரம்பித்தார். சிவனின் தாண்டவத்தை அய்ந்து வகையாக அவரது அடியார்கள் போற்றுவர். அற்புத தாண்டவம், அநவாத தாண்டவம், ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், சங்கார தாண்டவம், இங்கே சிவன் ஆடியது ஆனந்த தாண்டவம். காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங்களும் பார்ப்பவர்களை வசீகரித்தன.

சிவனின் தாண்டவம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை...பார்த்தார் சிவபெருமான், ஒரு பெண்ணிடம் நான் தோற்பதா?

அவள் கால்கள் செய்யும் நடனம் அவருக்குள் கலவரம் செய்தது. ‘ஆஹா... சிவபெருமானை தில்லை காளி ஜெயித்துவிட்டாளே’ என குரல்கள் கிளம்பப் போகிற நேரம்... இனியும் இவளை ஆடவிடக்கூடாது என முடிவுகட்டிய சிவன்... தன் இடதுகாலை சற்றே தூக்கினார்.

நடனத்தின் ஒருவகைதான் என நினைத்து ஈடுகொடுத்து ஆடிக்கொண்டிருந்தாள் காளி. சிவனின் இடது கால் இன்னும் எழும்பியது, ஆமாம்... இன்னும் உயரமானது. கொஞ்சம் கொஞ்சமாக இடது காலை விலக்கி எடுத்துச் சென்ற சிவபெருமானின் திட்டம் பலித்தது.

வலதுகாலை ஊன்றி இடது காலை உயர விலக்கிக்கொண்டே போக... சபையே ஒருகணம் அதிர்ந்தது. ஏன்?...வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காத்தான் இடது காலை விலக்கி தூக்கியிருக்கிறார்

சிவன்.வெற்றியின் விளிம்பில் நடனமாடிக் கொண்டிருந்த தில்லை காளி இக்காட்சியை பார்க்கவேண்டிய கட்டாயம் நேர்ந்துவிட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது தலைகுனிந்தாள். தனக்கு முன் ஒரு ஆண் இப்படிப்பட்ட கோலத்தில் நிற்பதை எந்தவொரு பெண் பார்த்துக்கொண்டே தன் வேலையை தொடருவாள்? காளியின் நர்த்தனம் நின்றதா? நிறுத்தப்பட்டது.

ஆனால், சிவபெருமான்... தொடர்ந்து தாண்டவமாடிக்கொண்டே இருந்தார். ஆக... சிவன் ஜெயித்தார் என்றாகிவிட்டது. வலதுகாலை ஊன்றி இடது காலை தூக்கி சிஷ்டத்தை (ஆணுறுப்பை) வெளிக்காண்டு வந்து... ஜெயித்துவிட்டார். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

‘இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது.

இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம். இதை நானாகச் சொல்லவில்லை. நடராஜ மகாத்மியம் என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது சிதம்பரம் சொல்லும் செய்தி என்ன? ஆணிடம் பெண் போட்டி போடக்கூடாது. அப்படியே திமிராக போட்டி போட்டாலும் ஜெயித்துவிடக்கூடாது. அவளை தோற்கடிக்க ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தோற்றவள் காளி.

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். காளி... ஆகமத்துக்கு அப்பாற்பட்ட காவல் தெய்வம். இங்கேதான் முக்கியமான இன்னொன்றைக் கவனிக்க வேண்டும். “Siva is a hig class God. „But Kali is low class rural God” என்று சொல்லி காளி ஒதுக்கப்பட்டாள். எங்கே...?

இன்னமும் நீங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போய் தில்லை காளி எங்கே என்று கேளுங்கள். கோயிலுக்கு வெளியே வடக்கு நோக்கி கை காட்டுவார்கள்.

கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தூரத்தில் சிதம்பரத்தின் எல்லையில் ஒரு சின்ன கோயிலுக்குள் கோபமாக உட்கார்ந்திருப்பாள் காளி.

‘அதாவது ஆணுக்கு பெண் போட்டி போட முடியாது. போட்டியிட்டால் இப்படித்தான் விரட்டப்படுவாள்’ என்று நமக்கு நடராஜர் மூலம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

இன்னும் சிதம்பரம் கோயிலில் அர்ச்சனையில் ஈடுபடும் தீட்சிதர்கள் அக்காளியை திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

இவ்வாறு தெய்வங்களுக்கிடையிலேயே ஆண்... பெண் பேதம் போற்றி வளர்க்கப்பட்டிருக்கிறது. 

"அதை" காட்டிஜெயித்த‌ சிவ‌ன். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

சிவபெருமானும் காளியும் போட்டி நடனமாட... சிவன் வேண்டுமென்றே காலை தூக்கி ஆணுறுப்பை வெளிக்கொண்டு வந்து தெரியும்படியாக்கி... சிவபெருமானின் திட்டம் பலித்து ஜெயித்துவிட்டார்.

இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ? இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது.இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம்.



பெண் தெய்வங்கள் இந்த பாடுபடுவது வைஷ்ணவ சம்ப்பிரதாயத்தில் மாத்திரம்தானா? சைவத்தில் எப்படி? உங்களுடைய இந்தக் கேள்விக்கு பதில்கூற நாம் சிதம்பரம் வரை போகவேண்டும். சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சிலபேர் அவரது ஆலயத்துக்குச் சென்று தரிசனமும் செய்திருப்பீர்கள்.

இந்த ஸ்தலத்துக்கு விசேஷமே சிவபெருமானான நடராஜ பெருமானின் நர்த்தனம் தான். ஒருநாள்... மிகப்பழைய காலத்தின் அழகான நாள்... சிதம்பரத்தில் ஒரு போட்டி நடனப்போட்டி. கலந்து கொள்பவர்கள் யார், யார்?

பரமசிவன், தில்லை காளி. யாரிந்த தில்லை காளி? சிவபெருமானுடன் நடனப்போட்டி போட வந்தவள். மிகச் சிறந்த நர்த்தன நாட்டியக்காரி. இயற்கையிலேயே ஆண்களை விட பெண்கள்தான் நடன அசைவுகளிலும் இசைத் துடிப்புகளிலும் அழகாக இழைவார்கள். புருஷர்கள் ஆடும்போது ஏற்படும் ரசனையை விட ஸ்தீரிகள் நர்த்தனமாடும் போது அதிகபட்ச அழகு மிளிரும். இது இயற்கையின் ஏற்பாடு. அதிலும், தில்லைகாளி நடனப்பயிற்சி பெற்றவள் பின் சொல்ல வேண்டுமா?

அவளது சலங்கை ஒலி கேட்டு காற்றே ஆடிப்போகும். அவளது நடனத்துக்குப் போட்டியாக ஆட வருபவர்களே ஆடிப்போய் விடுவார்கள். இப்படிப்பட்ட தில்லை காளிதான் சிவபெருமானின் நடனப் போட்டிக்கு வந்தாள். ஏற்பாடுகள் நடந்தன.

இரண்டு மேடைகள் எதிரெதிரே. அதில்தான் சிவபெருமானும் காளியும் நடனமாட வேண்டும். கூட்டம் கூடியிருக்கிறது. ஆட்டம் தொடங்க இருக்கிறது. போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என கூடியிருந்தவர்களிடையே ஒரு கிசுகிசு நுழைந்து நெளிந்து கொண்டிருந்தது.

தொடங்கியாகி விட்டது. தனது ஆர்ப்பாட்டமான அசைவுகளோடு ஆட ஆரம்பித்தாள் காளி. அவளது பாதங்கள் சலங்கைகளை ஒலியோடு சுருதி சேர்த்தன. காளியின் கைவிரல்கள் காற்றில் நடனச் சித்திரங்கள் தீட்டின.

மறுபக்கம் சிவன் தனது தாண்டவத்தை ஆரம்பித்தார். சிவனின் தாண்டவத்தை அய்ந்து வகையாக அவரது அடியார்கள் போற்றுவர். அற்புத தாண்டவம், அநவாத தாண்டவம், ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், சங்கார தாண்டவம், இங்கே சிவன் ஆடியது ஆனந்த தாண்டவம். காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங்களும் பார்ப்பவர்களை வசீகரித்தன.

சிவனின் தாண்டவம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை...பார்த்தார் சிவபெருமான், ஒரு பெண்ணிடம் நான் தோற்பதா?

அவள் கால்கள் செய்யும் நடனம் அவருக்குள் கலவரம் செய்தது. ‘ஆஹா... சிவபெருமானை தில்லை காளி ஜெயித்துவிட்டாளே’ என குரல்கள் கிளம்பப் போகிற நேரம்... இனியும் இவளை ஆடவிடக்கூடாது என முடிவுகட்டிய சிவன்... தன் இடதுகாலை சற்றே தூக்கினார்.

நடனத்தின் ஒருவகைதான் என நினைத்து ஈடுகொடுத்து ஆடிக்கொண்டிருந்தாள் காளி. சிவனின் இடது கால் இன்னும் எழும்பியது, ஆமாம்... இன்னும் உயரமானது. கொஞ்சம் கொஞ்சமாக இடது காலை விலக்கி எடுத்துச் சென்ற சிவபெருமானின் திட்டம் பலித்தது.

வலதுகாலை ஊன்றி இடது காலை உயர விலக்கிக்கொண்டே போக... சபையே ஒருகணம் அதிர்ந்தது. ஏன்?...வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காத்தான் இடது காலை விலக்கி தூக்கியிருக்கிறார்

சிவன்.வெற்றியின் விளிம்பில் நடனமாடிக் கொண்டிருந்த தில்லை காளி இக்காட்சியை பார்க்கவேண்டிய கட்டாயம் நேர்ந்துவிட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது தலைகுனிந்தாள். தனக்கு முன் ஒரு ஆண் இப்படிப்பட்ட கோலத்தில் நிற்பதை எந்தவொரு பெண் பார்த்துக்கொண்டே தன் வேலையை தொடருவாள்? காளியின் நர்த்தனம் நின்றதா? நிறுத்தப்பட்டது.

ஆனால், சிவபெருமான்... தொடர்ந்து தாண்டவமாடிக்கொண்டே இருந்தார். ஆக... சிவன் ஜெயித்தார் என்றாகிவிட்டது. வலதுகாலை ஊன்றி இடது காலை தூக்கி சிஷ்டத்தை (ஆணுறுப்பை) வெளிக்காண்டு வந்து... ஜெயித்துவிட்டார். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

‘இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது.

இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம். இதை நானாகச் சொல்லவில்லை. நடராஜ மகாத்மியம் என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது சிதம்பரம் சொல்லும் செய்தி என்ன? ஆணிடம் பெண் போட்டி போடக்கூடாது. அப்படியே திமிராக போட்டி போட்டாலும் ஜெயித்துவிடக்கூடாது. அவளை தோற்கடிக்க ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தோற்றவள் காளி.

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். காளி... ஆகமத்துக்கு அப்பாற்பட்ட காவல் தெய்வம். இங்கேதான் முக்கியமான இன்னொன்றைக் கவனிக்க வேண்டும். “Siva is a hig class God. „But Kali is low class rural God” என்று சொல்லி காளி ஒதுக்கப்பட்டாள். எங்கே...?

இன்னமும் நீங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போய் தில்லை காளி எங்கே என்று கேளுங்கள். கோயிலுக்கு வெளியே வடக்கு நோக்கி கை காட்டுவார்கள்.

கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தூரத்தில் சிதம்பரத்தின் எல்லையில் ஒரு சின்ன கோயிலுக்குள் கோபமாக உட்கார்ந்திருப்பாள் காளி.

‘அதாவது ஆணுக்கு பெண் போட்டி போட முடியாது. போட்டியிட்டால் இப்படித்தான் விரட்டப்படுவாள்’ என்று நமக்கு நடராஜர் மூலம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

இன்னும் சிதம்பரம் கோயிலில் அர்ச்சனையில் ஈடுபடும் தீட்சிதர்கள் அக்காளியை திரும்பிக்கூட பார்ப்பதில்லை.


பார்வதி குளிப்பதை மறைந்து பார்த்த சிவன். விநாயகன் பரமசிவன் தான்.

குறும்பு, லீலைகள் என்பவையெல்லாம் மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்ததே தெய்வங்கள் தானோ என நினைக்கும் அளவுக்கு பகவத் சிலுவிஷமங்கள் புராணங்களில் நிறைந்து கிடக்கின்றன.

விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன் தான்.

‘டேய்... குளிப்பது உன் பத்தினியாக இருந்தாலும் எட்டிப் பார்க்காதே. பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று பரமசிவன் ஆண்களிடம் சொல்வதற்குத்தான். இது கதை.


முருகன் என்ற பேருக்கும் ஸ்கந்தன், சரவணன் என்ற பேர்களுக்கும் இடையே நிலவும் மொழி, கலாச்சார வேறுபாட்டைப் பார்த்தோம்.

அப்படியென்றால் முருகனின் அண்ணான விநாயகர், கணபதி யார் என்கிறீர்களா? அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மச்சினன் என தெய்வங்களுக்கிடையே உறவு வைத்ததெல்லாம் Humanistic Worship -ஆல் வந்தது.சரி... கணபதிக்கு வருவோம்.

கணபதி முருகனின் அண்ணன், சிவனின் மூத்த மகன் என்றுதான் பரவலாக நம்மவர்கள் பேசி வருகிறோம். நம்பி வருகிறோம்.

ஆனால்... சமஸ்கிருதக் கதைகள் இதற்கும் வேட்டு வைக்கின்றன. என்ன கதை? பரமசிவனின் மனைவியாகிய பார்வதி, ஒருநாள் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருக்கிறாள்.

குறும்பு, லீலைகள் என்பவையெல்லாம் மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்ததே தெய்வங்கள்தானோ என நினைக்கும் அளவுக்கு பகவத் சிலுவிஷமங்கள் புராணங்களில் நிறைந்து கிடக்கின்றன

சரி... சிவன் இங்கு என்ன செய்கிறார்? பார்வதி தேவி தண்ணீர் கொட்டிக் கொட்டி குளித்துக் கொண்டிருக்கிறாள். சிவனுக்கு ஒரு நப்பாசை. நம் தேவி எப்படி குளிக்கிறாள் என்பதை அவள் அறியாமல் பார்க்கவேண்டும். அதாவது... ஒருபெண் குளிப்பதை அவளுக்குத் தெரியாமல் இன்னொரு ஆண் (கணவனே என்றாலும் தெரியாமல் பார்க்கிறானல்லவா?) பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டார் சிவன்.

அதுபோலவே பார்வதி தேவி ஜலக்கிரீடை செய்யும்போது மறைந்து மறைந்து நின்று தேவியின் தரிசனத்தை அவருக்கே தெரியாமல் பெற்றுக் கொண்டிருந்தான் பரமசிவன்.

‘சகல லோகங்களையும் கண்காணிக்கும் சக்தி பெற்ற’ பராசக்திக்கு தான் குளிப்பதை இரண்டு கண்கள் திருட்டுத்தனமாக பார்ப்பது தெரிந்திருக்காதா என்ன?உணர்ந்தாள்.

தான் தன்னந்தனியாக குளித்துக் கொண்டிருப்பதை யாரோ ரசம் சொட்ட பார்த்துக் கொண்டிருப்பதை தன் சக்தியால் தெரிந்துகொண்ட பார்வதி திடுக்கிட்டாள். பெண் தெய்வம் என்றாலும் பெண் தானே?

உடனே... அவசரமாக தனது கச்சைகளையும், வஸ்திரங்களையும் பதறியபடியே உடுத்திக்கொண்ட பார்வதி, தன்னைப் பார்த்தவனை தேடினாள். டேய்... யாரங்கே? பராசக்தியின் ஸ்நானத்தை ஒளிந்து பார்க்கும் அளவுக்கு துணிச்சல்காரன் யார்?

என கோபத்தில் பார்வதிதேவி சத்தம்போட... பட்டென்று வெளியே வந்த சிவன்... ‘தேவி... யாம்தான் ஒரு சின்ன திருவிளையாடல்... அதற்குப் போய் ஏன் இப்படி கோபப்படுகிறாய்? சாந்தம்... சாந்தம்...’ என்கிறார்.

எது ஸ்வாமி திருவிளையாடல் ஒரு பெண் குளிப்பதை இன்னொரு ஆண் மறைந்து நின்று கண்களால் சுகிப்பது உங்கள் திருவிளையாடல் என்றால்... என் திருவிளையாடலையும் கொஞ்சம் பாருங்கள்.

சக்தியும் தன் திருவிளையாடலை அரங்கேற்றினாள். “மனைவியென்றும் ‘பாராமல்’ நான் குளித்ததைப் பார்த்த நீர்... யானைத் தலையனாகவும், மனித உடம்பாகவும் மாறக் கடவுவது...” என கோபத்தால் சாபமிட்டாள்.

அந்த க்ஷணத்திலேயே பரமசிவன் அவ்வாறே ஆனார். அதாவது யானை முகத்துடனும் மனித உடம்பாகவும் புது வடிவம் பெற்றார். அதாவது... விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன்தான் என்கிறது இக்கதை.

இன்றும் ஆற்றங்கரை, குளத்தங்கரைகளில் எல்லாம் விநாயகர்கள் நிறைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.அது எதற்கு என்றால்...?

‘டேய்... குளிப்பது உன் பத்தினியாக இருந்தாலும் எட்டிப் பார்க்காதே. பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று பரமசிவன் ஆண்களிடம் சொல்வதற்குத்தான். இது கதை.

பகவானுக்கும் பசிக்கும். குளிரும். திருஷ்டி படும். சளி பிடிக்கும்.

அதாவது... பகவானுக்கு பசிக்கும். அவன் சாப்பிட்டால்தானே நமக்கு அனுக்ரஹம் செய்வான்.

எனவே, அவனுக்கு, அவளுக்கு (தெய்வங்களுக்கு) தினமும் முறையாக நைவேத்யம் படைக்கவேண்டும் என்றார்கள்.

பகவானுக்கு குளிரும். அதனால் குளிர்காலத்தில் கடவுள் சிலைகளுக்கு கம்பளி ஆடை.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 52 - 2

பிராமணர்கள். அதன் பிறகு சிலைக்கு நைவேத்யம் வழங்கும் வழக்கம் வருகிறது.

அதாவது ஆகமத்துக்கு அப்பாற்பட்ட தேவதைகளையும் பூஜிக்கத் தொடங்கிய பிராமணர்கள் நைவேத்யத்தை கட்டாயமாக்கினார்கள்.

அதாவது... பகவானுக்கு பசிக்கும். அவன் சாப்பிட்டால்தானே நமக்கு அனுக்ரஹம் செய்வான். எனவே, அவனுக்கு, அவளுக்கு (தெய்வங்களுக்கு) தினமும் முறையாக நைவேத்யம் படைக்கவேண்டும் என்றார்கள்.

இங்கே ஒரு முக்கியமான விஷயம்... தினமும் பகவானுக்கு வழக்கமாகப்படைக்கும் நிவேதனம் வேறு. விசேஷ காலங்களில் ஒவ்வொரு விசேஷத்துக்கும் ஒவ்வொரு வகை நைவேத்யம்.

பெருமாள் கோயில்களில் சொல்கிறேன் கேளுங்கள். காலையில் தினமும் நடக்கும் காலசந்தி என்ற பூஜைக்கு தயிர்ச்சாதம், மதியம் உச்சிகாலம் எனப்படும் பூஜைக்கு சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், இத்யாதிகள். இதற்குப் பெயர் அலங்காரத்தளிகை.

அதாவது நாம் சாப்பிடும் மதியச்சாப்பாட்டை பகவான் சாப்பிட்டால் அதற்குப் பெயர் அலங்கார தளிகை. பெருமாள் வெளியே வாகனங்களில் சுற்றி விட்டு கோயில் திரும்புவார் என்று சொன்னேன் இல்லையா?

அப்போது ஊரெல்லாம் திருஷ்டி போட்டிருக்கும் என கருதப்பட்டு... பெருமாளுக்கு திருஷ்டி கழிப்பதற்காக ‘திருவந்தி காப்பு’ என்றொரு விசேஷம்.

இதில் பால், பழம், பயத்தம்பருப்பை ஊற வைத்து செய்த வடைப் பருப்பு, தோசை எல்லாம் நைவேத்யம் செய்து திருஷ்டி கழிப்பார்கள்.

இதுதவிர அமாவாசை, ஏகாதசி காலங்களில் ஒரே நைவேத்யம் உப்புமா. இதுதவிர அய்ப்பசி மாதம் மூல நட்சத்திரம் அன்று... பால் புடலங்காய்... அதாவது பாலில் புடலங்காயை ஊற வைத்து செய்யப்படும் இனிப்பான உணவு.

வைகாசி விசாகம் அன்று பால்மாங்காய். இதுவும் அதுபோலவே ஓர் இனிப்பு. நாச்சியார் திருமொழி சாத்துமறை திருநாளன்று அக்காரவடிசில் அதாவது சர்க்கரைப் பொங்கல். இதுதவிர புளியோதரை போன்ற புகழ் பெற்ற உணவு வகைகள் திருவிழாக்களில்.

பெருமாள் கோயிலைப்போன்று சிவன் கோயில்களில் உணவுக்கு இந்த அளவு முக்கியத்துவம் இல்லை. அங்கே ‘சம்பா’ சாதம் தான் முக்கியம். அதாவது மிளகு, ஜீரகம், பொடியோடு நெய் ஊற்றி சாதம் பிசைந்து படைப்பார்கள்.இவ்வளவு கேட்டு உங்கள் நாக்கில் உமிழ் நீர் ஊறுகிறதா? இவையெல்லாம் நிர்மால்யம். அப்படியென்றால்...?
-- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
.....................

பகவானுக்கு குளிரும் அதனால் குளிர்காலத்தில் கம்பளி ஆடை. கடவுள் சிலைகளுக்கு கம்பளி ஆடை

பூரி, டிச.15-  ஒரிசா மாநிலம் பூரி நகரில் தற்போது கடுமையான குளிர் வாட்டுகிறது. இதைத்தொடர்ந்து அங்குள்ள ஜெகநாதர் ஆலயத்தில் உள்ள ஜெகநாதர், பால பத்ரா, தேவி சுபத்ரா ஆகிய சாமி சிலைகளுக்கு மாலை நேரத்தில் கம்பளி ஆடைகளை கோவில் நிர்வாகத்தினர் அணிவிக்கிறார்கள்.

அதைத்தவிர, ஒவ்வொரு நாளும் சுவாமி சிலைகளுக்கு ஒவ்வொரு நிறத்தில் ஆடைகள் அணிவிக்கிறார்கள். அந்தந்த நாளுக்கு உரிய நட்சத்திர பலனுக்கு ஏற்ப இந்த வண்ண ஆடைகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றன.

உதாரணமாக புதன் கிழமை நீல நிறத்திலும், வியாழக்கிழமை மஞ்சள் நிறத்திலும், வெள்ளிக்கிழமை வெள்ளை நிறத்திலும், சனிக்கிழமை கறுப்பு நிறத்திலும் கம்பளி ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.

கடவுள் சிலைகளுக்கு வண்ண கம்பளி ஆடைகளை அணிவிப்பதால், பக்தர்களும் அதே வண்ணத்தில் ஆடைகளை அணிந்து கோவிலுக்கு செல்ல தொடங்கி விட்டனர்.-

கல் சிலைக்கும் சளி பிடிக்குமா?
குற்றால ``சீசன்’ என்பதால்

குற்றால நாதனுக்கும் அதன் சகதர்மிணி செண்பகக் குழல்வாய் மொழி அம்மைக்கும் தினமும் சுக்குக்காப்பி நைவேத்யம் செய்கிறார்கள், ஏன் தெரியுமா?

இவர்கள் இருவரின் தலையிலும் எந்நேரமும் தண்ணீர் கொட்டிக் கொண்டேயிருப்பதால் சளி பிடித்துக் கொள்ளாமல் தடுக்கவே சுக்குக் காப்பியாம்!


வேதப்படி கணபதி கடவுள் இல்லை.?? மிருகங்களை வழிபடுதல்.

இவர் வேதத்திலேயே வருகிறார். இவர்தான் உலகத்தின் தொடக்கம், என்றெல்லாம் பின்னர் ‘பிள்ளையார் சுழி’ போட்டார்கள்.

அதெல்லாம் கிடையாது. வேதத்தில் கணபதி... என்ற சொல் வருகிறது. அவர் யாரென்றால்...?

வேதப்படி கணபதி கடவுள் இல்லை?.

மிருகங்களை வழிபடுதல்.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி  56 – 2.

வரலாற்று ரீதியாக பார்த்தோம் என்றால், நான் முன்பே சொல்லியிருக்கிறேன். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவியிருந்த வழிபாட்டு முறைகளில் முக்கியமான இரண்டாவது வழிபாட்டு முறை Totamism Worhip அதாவது மிருகங்களை வழிபடுதல்.

அப்படியாகத்தான் ‘ஒரு காலத்தில் காட்டுக்குள் வாழ்ந்த மக்கள் வித்தியாசமான, பெரிய உருவம் கொண்ட யானைகளை பயந்து வழிபடத் தொடங்கினார்கள்.

நாம் மனித உடலில் யானைகளை வைத்ததுபோல்... எகிப்தில் பல மிருகங்களை வழிபட்டு வருகின்றனர். இதுதான் கணபதியின் வரலாற்றுக் கதை.

கணபதி என்றவுடன்... இவர் வேதத்திலேயே வருகிறார். இவர்தான் உலகத்தின் தொடக்கம், என்றெல்லாம் பின்னர் ‘பிள்ளையார் சுழி’ போட்டார்கள்.

அதெல்லாம் கிடையாது. வேதத்தில் கணபதி... என்ற சொல் வருகிறது. அவர் யாரென்றால்...? ரிக்வேதத்தின் இந்த மந்த்ரத்தைப் பாருங்கள்.

“கணானந்தவா கணபதிஹிம் ஷவாமஹேகவிகம் கவினாம் உபமஸ் ஸ்ரவஸ்தமம்தேஷ்டராஜம் ப்ரம்மனாம் ப்ரம்மனாஸ்பதி”

வேதத்தில், வேதகாலத்தில் மக்கள், ரிஷிகள் எல்லாம் கூட்டம் கூட்டமாய் போவார்கள்.

அப்போது அவர்கள் தங்களுக்குள் ஒரு தலைவனை தேர்ந்தெடுத்துக் கொண்டு அவன் சொல்படி நடப்பார்கள். அதாவது Leader of the Group. கணபதி என்றால் இதுதான் அர்த்தம். அந்த சிறுசிறு கூட்டங்களின் தலைவர்கள்தான் கணபதிகள்.


இதுபோல் வேதம் நிறைய கணபதிகளைக் காட்டுகிறது.

‘ஏ... தலைவா... உன் தலைமையில் நாங்கள் நடந்தால் எங்களுக்கு எல்லாம் கிடைக்கும். செல்வம் பெருகும்...’ என தங்கள் தலைவனை போற்றிப் புகழ்வதுதான் இந்த மந்த்ரம். இந்த Leader of the Group- அய்த்தான் பிற்காலங்களில் கணபதி என்ற கடவுள் ஆக்கிவிட்டார்கள்.

வேதப்படி கணபதி கடவுள் இல்லை.

பெண்கள் விஷயத்தில் நமது கடவுளர்களின் கண்ணியத் தன்மையையும் இந்த கண்ணியத் தன்மையாலேயே இன்னொரு கடவுள் உதித்ததையும் கண்டோம்.


நவராத்திரி நதிமூலம், ரிஷிமூலம், உண்மையான மூலம்.

இதுதானப்பா கொலுவின் ரிஷி மூலம், நதிமூலம் உண்மையான மூலம் எல்லாம்.

நவராத்திரியின் ஜோடிக்கப்பட்ட கதை புராணக்காரர்கள் பல ஜோடனைகள் பண்ணி கொலுவின் உண்மையான தத்துவத்தையே கொன்றுவிட்டார்கள்.

ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது. சாதிக்க முடியாது’ என்று சொல்வதுதான் கொலு(!) தத்துவம்.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 57. & 58

பகுதி – 57-- சில பல அத்தியாயங்களாக பெண்கள், பெண் தெய்வங்கள் ஆகியோருக்கு நமது சம்ப்ரதாயம் சபித்து வைத்த அநியாயங்களை யெல்லாம் விஸ்தாரமாகவே பார்த்தோம். அவற்றைப் படித்து விட்டு... சில ஸ்திரீகள் என்னிடம் ‘இப்படியா ஸ்வாமீ... அப்படியா ஸ்வாமீ... என ஆச்சரியத்தை கொட்டினார்கள். அனுபந்தமாக ஒரு கேள்வியையும் கேட்டனர்.

பெண் தெய்வங்கள் கூட படாதபாடு படறாள்னு சொன்னீர்கள். ஆனா... பெண் தெய்வங்களுக்காகவே பிரத்யேகமாக நவராத்திரி கொண்டாடுகிறோமே... நான்கூட எங்க ஆத்துல நவராத்திரி 9 நாளும் கொலு வைக்கிறேனே... இது பெண் தெய்வத்துக்கு பெரிய விசேஷம்தானே...” என்றாள் அந்த சின்னப்பெண்.‘அப்படி வா வழிக்கு...’ என்று சொல்லிவிட்டு நவராத்திரி கொலுபற்றி அவளிடம் விளக்கத் தொடங்கினேன். அதை நீங்களும் கேளுங்கள்

நவராத்திரி, கொலு என்பதெல்லாம் பெண் தெய்வங்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர்களின் ஆராதனைக்காக விசேஷமாக நடத்தப்படுகிறது என்பது இப்போது பொதுவான நம்பிக்கை. ஆனால்... இதன் நதிமூலம், ரிஷிமூலத்தைப் பார்த்தால் விஷயமும் வேறு. விசேஷமும் வேறு. அந்த ரிஷிமூலத்தை பார்ப்பதற்கு முன்பு... நவராத்திரியின் ஜோடிக்கப்பட்ட கதையைப் பார்த்து விடுவோம்.

மகிஷாசுரன் என்றொரு அரக்கன் எருமைத்தலையை உடையவன். தேவர்களுக்கு பெரும் துன்பங்கள் கொடுத்துக் கொண்டிருந்தவன். காரணம் அவன் பெற்றிருந்த ஒரு வரமாம். ‘என்னை கொல்ல முடியுமானால் அது ஒரு பெண்ணால்தான் நடக்கவேண்டும் என்பதுதான் வரம். அதாவது... பெண்ணால் என்ன செய்ய முடியும்? பெண் தெய்வங்களே கோயிலை விட்டு வெளியே வருவதில்லை. பிறகு எப்படி நம்மை அழிக்க முடியும்-என்ற நினைப்பு நம்பிக்கை அப்போது தேவர்களிடம் நிலவி இருந்ததால் அந்த அரக்கன் அப்படியொரு வரத்தை கேட்டான்.

தெய்வங்களும்... ‘பெண்கள்’ மீது வைத்திருந்த அபிப்ராயத்தாலோ என்னமோ வரம் கொடுத்துவிட்டன. பெண்தானே நம்மை அழிக்கவேண்டும். எந்த பெண்ணால் அது முடியும்?... என்ற திமிரில் கொடுமைகள் செய்ய ஆரம்பித்து விட்டான். இது சிவனின் மனைவி பராசக்திக்கு எட்டியது. “பெண்தானம்மா அவனை அழிக்க வேண்டும். அது எப்படி முடியப் போகிறது.உன்னால் அவனை அழிக்க முடியுமா?...” என்று பராசக்தியிடம் மற்ற தேவ, தேவதைகள் பிரார்த்திக்கிறார்கள்.

பராசக்தி யோசிக்கிறாள். ‘நம்மால் முடியுமா?...’ பக்கத்து வீட்டு பெண்கள் (!) போன்ற லட்சுமியிடமும், சரஸ்வதியிடமும் ஆலோசிக்கிறாள்.அவர்கள் சொல்கிறார்கள். ‘நமக்கு ஏது அவ்வளவு பலம்?... இறந்து போனவர்களுக்கு மோட்சம் கொடுக்கக்கூட வக்கில்லாதவர்கள் நாம். நம்மால் எப்படி ஒரு அரக்கனை கொல்லமுடியும்?...”...என பெண் தெய்வங்களே தங்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையோடு பேசுகின்றன.

சரி பிறகு?... என்ன செய்வது? அப்போது ஒரு கருத்து அங்கே உதிக்கிறது. அரக்கனை அழிக்க வேண்டுமென்றால் ஆண்களின் பலம் வேண்டும். ஆனால், பெண்ணால்தான் அவன் அழிவான் என அவன் தலையில் வரம் விதி வரைந்திருக்கிறது. அப்படியென்றால் என்ன செய்யலாம். தேவர்கள் அத்தனை பேரின் பலத்தையும் நாம் வாங்கிக் கொள்ளவேண்டும். அதன் மூலம் மகிஷாசுரனை அழிக்கவேண்டும்.

...என பெண் தெய்வங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த இடத்தில் வேதம் சொன்ன ஒரு உண்மையை இங்கே உங்களுக்கு சுட்டிக்காட்டி... புராணத்தை அதனுடன் ஒப்பிட்டுக் காட்ட பிரயாசைப்படுகிறேன்.

வேதம் என்ன சொன்னது?...“ஸ்த்ரீனாம் த்விகனம் ஆஹாரம்புத்தீஸ் சாபிசதுர் குணம்...” இதை வேதத்தில் பெண்களைப் பற்றிப் பார்க்கும் போதே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். அதாவது... பெண்கள் ஆண்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் அவர்கள், 4 மடங்கு புத்தியும், பலமும் ஆண்களைவிட அதிகமாக பெற்றிருப்பார்கள் என்றது வேதம்.

ஆனால்... புராணத்தில் நடக்கும் பெண் தெய்வங்களின் ‘Meeting’-கில் என்ன நடக்கிறது?‘ஆண்களின் பலத்தைப் பெற்றால்தான் நாம் பலமாக முடியும். அதன் மூலமாகத்தான் நாம் அசுரனை அழிக்க முடியும்...’ என்று பேசுகிறார்கள்.

அதாவது ‘கொடுத்த’ பலத்தை புராணம் பலவீனமாக்கியது.
சரி... விஷயத்துக்கு வருவோம். அனைத்து தேவாதி தேவர்களின் புஜபலம், பராக்கிரம பலம் அனைத்தையும் பெற முடிவு செய்தாள் பராசக்தி. பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் இந்திரன் உள்பட அனைத்து தேவர்களின் ஆற்றலையும் கேட்டாள் பராசக்தி. நீங்கள் உங்களது அனைத்து பலத்தையும் கொடுத்தால்தான்... நான் அந்த அரக்கனை அழிக்க முடியும். பெண்ணாகிய என்னால் தனித்து இயங்க முடியாது. உங்கள் கூட்டணி எனக்கு வேண்டும். தாருங்களேன் என்கிறாள்.

என்ன செய்வது?... வரம் கொடுத்து மாட்டிக் கொண்டவர்களாயிற்றே. தங்கள் பலத்தை கொடுத்தார்கள். அனைத்து ஆண் தெய்வங்களின் பலத்தையும் உறிஞ்சிய பராசக்தி அந்த அரக்கனை அழித்தாள். உடனே தேவர்களெல்லாம் பராசக்தியை போற்றிப் புகழ்ந்து துதிபாடியிருக்க வேண்டுமே... எங்களைக் காப்பாற்றினாய் என்று அவளின் தாழ் பணிந்திருக்க வேண்டுமே... ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த பராசக்தி பெண்ணை யாரும் போற்றவில்லை புகழவில்லை. காரணம்...எல்லா பலத்தையும் கொடுத்துவிட்டார்களே...

அதனால் தேவர்கள் அனைவரும் அதுவரைக்கும் அப்படியே அசைவற்று பொம்மைகளாய் நின்றார்கள்...அந்த பொம்மைகள்தான்...

பகுதி – 58 -- கடந்த அத்தியாயத்தில் சொன்ன பொம்மைகளை நினைவுக்கு இழுத்து வாருங்கள்.அதைத்தான் கொலு... கொலு... என்று கொண்டாடுகிறார்கள். அதாவது... `பெண்ணால் எதையும் தனித்துச் செய்ய முடியாது, ஆண்களின் உதவியோடு தான் அவள் காலந்தள்ள முடியும்’ என்ற கருத்தைச் சொல்வதுதான் கொலுவின் உள்ளே குடியிருக்கும் நீதி.

சரி... இந்தப் புராணக் கதையை வைத்து பின்னிப்பின்னி பின்னர் செய்தது தான் கொலு பண்டிகையா?

இந்தப் புராணக் கதையின் மேல்தான் கொலு பொம்மைகளை நிறுத்தி வைத்தார்கள். அதாவது தேவர்களெல்லாம் பொம்மைகள் ஆகிவிட்டனர். அவர்களை நாம் வழிபட்டு, பராசக்தியின் புகழைப் போற்றவேண்டும் என்று அய்தீகம் வகுத்தனர்.பின்னர் இந்த கொலு கலாசாரத்தில் ஒரு பாகப் பிரிவினை போட்டி வந்தது. யாராருக்கு...? பார்வதி, லட்சுமி, சரஸ்வதி. யாரை அதிகம் போற்றுவது என்பதுதான் பிரச்சினை. அதையும் இங்கேயே முடிவெடுத்து விட்டார்கள்.

லட்சுமிக்கு மூன்று நாள், சரஸ்வதிக்கு மூன்று நாள், பராசக்திக்கு மூன்று நாள் சரியான பாகப் பிரிவினைதான்.

பிறகு... இதற்கு நைவேத்யத்தையும் நிர்ணயித்து விட்டார்கள். அதானே... விடுவார்களா. முதல் நாள் வெண்பொங்கல் படைக்கவேண்டும். இரண்டாம் நாள் புளியோதரையாம். மூன்றாம் நாள் சர்க்கரைப் பொங்கல். நான்காம் நாள் கதம்பசாதம். அதாவது பலதரப்பட்ட காய்கறிகளைப் போட்டு பண்ணப்படும் சாதம். அய்ந்தாம் நாள் தயிர் சாதம். ஆறாம் நாள் கொஞ்சம் வித்தியாசமாகத் தேங்காய் சாதம். ஏழாம் நாள் எலுமிச்சை சாதம். எட்டாம் நாள் பாயாசம் வை. ஒன்பதாம் நாள் மறுபடியும் சர்க்கரைப் பொங்கல் பண்ணு... என்றெல்லாம் நவராத்திரியின் பெயரைச் சொல்லி நவ நைவேத்யங்களையும் படைத்து விட்டார்கள்.

இதிலே இன்னொன்று... தினமும் சுண்டல் கடலை வேறு சேர்த்து விட்டார்கள். எனக்கொரு சந்தேகம்.. இந்த புளியோதரை, தயிர் சாதமெல்லாம் சாப்பிட்டுவிட்டு அரக்கர்களை அழிக்க முடியுமோ என்னமோ?

இப்படியாக வருஷத்துக்கு 9 நாள்கள் கொண்டாடப்படும் நிகழ்ச்சியைத்தான் கொலு என்கிறார்கள். கொலு... என்பதற்கு என்ன அர்த்தம் சொல்லப்படுகிறது என்றால்... இதுதான். ஆனால்... கொலுவின் நதிமூலம், ரிஷிமூலமே வேறு. நாம் கொண்டாடும் கொலு... நமது வாழ்க்கை முறையிலிருந்து வந்ததுதான். ஆனால்... புராணக்காரர்கள் பல ஜோடனைகள் பண்ணி கொலுவின் உண்மையான தத்துவத்தையே கொன்றுவிட்டார்கள்.

கொலுவுக்கும், பராசக்திக்கும் சம்பந்தம் இல்லை. கொலுவுக்கும், லட்சுமிக்கும் சம்பந்தம் இல்லை. கொலுவுக்கும், சரஸ்வதிக்கும் சம்பந்தமே இல்லை. பிறகு இதெல்லாம் எப்படி வந்தது?

அரக்கனை சொல்லி... அவனை அழிப்பதற்கு காரணம் சொல்லி... அதற்காக ஒரு கதையையும் சொல்லி - இன்று 9 நாள்கள் நவ நைவேத்யம் படைப்பதுதான் மிச்சம்.

அப்படியென்றால், கொலுவுக்கு என்னதான் அர்த்தம்? இதற்குப் பதில் காண மன்னர் காலத்துக்கு நாம் செல்லவேண்டும். அதாவது, பழங்கால தமிழ் மன்னர்கள் யுத்தத்துக்கு தயாராவதற்கு முன் பல விஷயங்களை சிந்திப்பார்கள். இப்போது போன்று அப்போதெல்லாம் நினைத்த உடனே பீரங்கிகளையும், யுத்த தளவாடங்களையும் தயாரித்துக் கொண்டு யுத்தத்தில் இறங்கிவிட முடியாது. சீதோஷ்ண நிலையை பொறுத்து தான் யுத்த தந்திரமே வகுக்கப்படும். ஏனென்றால், இயற்கையை அனுசரித்து வாழ்ந்த, வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்த காலம் அது.

அதில் மழைதான் மிக முக்கியமான அம்சம். எத்தனை பெரிய மன்னனாக இருந்தாலும் மழைக்காலத்தில் போர் தொடுக்க யோசிப்பான். ஏனென்றால்... காயும் சூரியனை தாங்கிக் கொண்டு போர் நடத்திவிட முடியும். ஆனால்... பேயெனக் கொட்டும் மழைக்குள் திட்டம், தந்திரம், தாக்குதல், வியூகம் எல்லாமே தலைகீழாக மாறிப் போய்விடக்கூடிய காலம் அது. இத்தனை காரணங்களால்... மன்னர்கள் தங்கள் சேனைகளையும், யுத்த தளவாடங்களையும் மழைக்காலத்தில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். வரிசையாக அவற்றை நிறுத்தி வைத்திருப்பார்கள். அதை பார்ப்பதற்கே ஒரு கம்பீரமாக, அழகாக வசீகரமாக இருக்கும்.

தனக்கு வெற்றி தேடித்தரும் செல்வங்கள் இவைதான் என்பதால்... படைத்தளபதியும், சேனாதிபதிகளும் அந்தப் போர் ஆயுதங்களை பழுது நீக்கி, புதிதாக்கி யுத்தத்துக்கு தயார் ஆவார்கள். வெற்றித் தேடித் தரவேண்டும் என்று வீரத்தோடு தங்கள் படைக்கலங்களுக்கு வணக்கம் செலுத்துவார்கள். மழை மெல்ல முடிந்ததும்... பதுங்கியிருந்த புலி பாய்வதுபோல பாய்ந்து எதிரிகளை வெல்வார்கள். இதுதானப்பா கொலுவின் ரிஷி மூலம், நதிமூலம் உண்மையான மூலம் எல்லாம்.

இதைப் பார்த்த பிராமணர்கள் தான்... இந்த தத்துவம் நன்றாக இருக்கிறதே. இதை பகவான் பெயரைச் சொல்லி பயன்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்குமே? என யோசித்தார்கள். உண்டானது நவராத்திரி. 9 நாள் முடிந்ததும்... வெற்றிக்காக போருக்கு புறப்படுவதை விஜயதசமி ஆக்கினார்கள்.

இதில் லட்சுமி எங்கிருந்து வந்தாள்? பார்வதி எங்கிருந்து வந்தாள்? சரஸ்வதி எங்கிருந்து வந்தாள்? பெண் தெய்வங்களின் புகழ் பாடுகிறேன் என்று சொல்லியே... `ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது. சாதிக்க முடியாது’ என்று சொல்வதுதான் கொலு(!) தத்துவம்.

இந்த கொலு தத்துவத்தை செயல்படுத்துவதில் கூட நமக்குள் பற்பல வேறுபாடுகள். சிவனின் பெண்டாட்டி பார்வதி, விஷ்ணுவை பொம்மையாக்குவதா? அதை நாம் பண்டிகையாகக் கொண்டாடுவதா? என்று வைஷ்ணவர்கள் மத்தியில் ஒரு சங்கல்பம். எனவே, இன்றும் கொலு வைப்பதை வைஷ்ணவர்கள் சம்பிரதாயப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை.


தெய்வங்களிடம் எதற்கு ஆயுதம்? பகவானின் ஆயுதப்பட்டியல்

பகவான் சர்வ சித்தன் என்கிறபோது... அவனுக்கு ஆயுதங்கள் எதற்கு? சாதி உணர்வு கடவுளுக்கும் உண்டு... வேண்டும் என்று வலியுறுத்துகிறது

தன்னந்தனியாக நிற்கின்ற அய்யனாரில் இருந்து தேவிகள் புடைசூழ நிற்கிற சிவன், நாராயணன் வரை எல்லா கடவுள்களும் கையில் சுத்தி, அரிவாள், சூலம், வேல், வில், அம்பு என ‘ரவுடியிஸம்’ போலவே நிற்பதை பார்க்கிறோம்.

இவர்களுக்கு ஆயுதம் வேண்டுமா? ஏன் வேண்டும்?


இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 59 – 60 -- 61.

பகுதி - 59.  கொலு தத்துவம் பற்றி பார்த்து முடித்தோம். கொலு என்பது உண்மையில் பெண்தெய்வங்களைப் போற்றிப் புகழ்வதற்கா? அல்லது பெண் தெய்வங்களை சிறுமைப்படுத்தும் சடங்கா என்பதை விளக்கிக்கொண்டிருப்பீர்கள்.

ஒருவேளை.... இது பெண்களைப் போற்றிப்புகழும் சடங்கு என்றே வைத்துக் கொண்டாலும்... கொலு, கோயில்களில் வைக்கப் படுவதில்லை. அவரவர் வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அய்தீகம்.

ஒருவேளை பெண்களைப் போற்றினாலும் வீட்டுக்குள்ளேயே வைத்துப் போற்றிக்கொள்... வெளியே வேண்டாம்’ என்று சொல்லாமல் சொல்கிறதோ என்னவோ?

சரி... கொலுவின் ரிஷிமூலமாக நாம் பார்த்தோமல்லவா? மன்னர்கள் தங்கள் படைகளை, படைக்கலன்களை வழிபாடு செய்வார்கள் என்று அந்த செய்கையிலிருந்து நம்பிக்கையாக, வழக்கமாக உருமாறியதுதான் ஆயுத பூஜை.மன்னன் மட்டுமன்றி அவனது தேசத்திலுள்ள பிரஜைகளையும் அவன் செய்ததை பின்பற்றினார்கள்.

மன்னனுக்கு போர் செய்வது ஒரு தொழில். அதனால் அவன் யுத்த தளவாடங்களை வழிபட்டான். அதுபோல்... ஒவ்வொரு பிரஜையும் தான் என்ன தொழில் செய்கிறானோ அந்த தொழில் செய்ய பயன்படும் உபகரணங்களை வைத்து வழிபாடு செய்தான்.

அந்தக்காலத்தில் பிராமணர்களுக்கு என்ன தொழில்? இந்தக் கேள்விக்கான பதிலை நாம் இத்தொடரின் 11-வது அத்தியாயத்திலேயே பார்த்திருக்கிறோம். அதாவது... யஜனம், யாஜனம் இரண்டுதான் பிராமணர்களின் தொழில் மந்திரம், ஹோமம், யாகம் ஆகியவற்றை பண்ணுவது, பண்ணுவிப்பது இதுதான். அப்படியென்றால் ஆயுதபூஜை என்று எதை வணங்க முடியும்?

யோசித்துப் பார்த்தார்கள் ஆயுத பூஜையை அப்படியே சரஸ்வதி பூஜையாக்கிவிட்டார்கள். இந்த இடத்தில் இன்னொரு கிளைக் கேள்வி முளைக்கிறது.

ஆயுதம் என்பது மனிதர்களுக்குத் தானே தேவையாக இருந்தது. இருக்கிறது. தெய்வங்களிடமும் எதற்கு ஆயுதம் இருக்கவேண்டும். பகவான் சர்வ சித்தன் என்கிறபோது... அவனுக்கு ஆயுதங்கள் எதற்கு?

நாம் இன்னும் தன்னந்தனியாக நிற்கின்ற அய்யனாரில் இருந்து தேவிகள் புடைசூழ நிற்கிற சிவன், நாராயணன் வரை எல்லா கடவுள்களும் கையில் சுத்தி, அரிவாள், சூலம், வேல், வில், அம்பு என ‘ரவுடியிஸம்’ போலவே நிற்பதை பார்க்கிறோம்.

இவர்களுக்கு ஆயுதம் வேண்டுமா? ஏன் வேண்டும்? இதற்கான பதிலை வேதத்திலிருந்து தொடங்கி பார்த்தால் நமக்குத் தெளிவான பதில் கிடைக்கும்.

வேதத்தில் தெய்வங்களை இரண்டு வகையாக பிரித்துப் பார்த்திருக்கிறார்கள் ரிஷிகள்.

“ருத்ரோவா ஏஷஹ அக்னிஹிதஸ்யைதே தனுவஸ் கோரான்யசிவான்ய யச்சதயதுசத ருத்ரியஞ்ஜோதி யதேவாஸ்து கோராதனுதாம்தேன சமயதீ யத்வஸோர் தாதாம் தியோதீயைவாஸ்ய சிவாகனு தாந்தனே ப்ரினாதீ...”

இந்த வேத மந்த்ரம் என்ன சொல்கிறது. தெய்வத்தின் இயல்பைச் சொல்கிறது. அதாவது “Character of God” வேதகாலத்தில் ரிஷிகள் யாகம் பண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கும் போது... பெருங்காற்று காதை கிழிக்கும், மனசை உலுக்கும் சத்தத்தோடு அடிக்கிறது. ரிஷிகள் பயந்து சாகிறார்கள்.

‘அய்யோ ருத்ரன் வந்துவிடுவானே... அவன் கொலைகார தேவதையாச்சே... எல்லாவற்றையும் துவம்சம் பண்ணிவிடுவானே...’ என அலறுகிறார்கள்.

உடனே, ருத்ரனை நினைத்து...ருத்ரா உன் கோபத்துக்கு ஒரு நமஸ்காரம்ருத்ரா என் கோரத்துக்கு ஒரு நமஸ்காரம் ருத்ரா உன் குரூரத்துக்கு ஒரு நமஸ்காரம் உனக்குப் பயந்து உன்னைப் போற்றுகிறோம். நீ இங்கே வராதே. ஓடிப்போய்விடு...’ என்று ருத்ரனை விரட்டுவதற்காகவே அவனை போற்றுகிறார்கள்.

அந்த வேதமந்திரம் விளக்குவது இதைத்தான்.அதாவது ருத்ரன் பார்க்கவே கோரமாக கொடூரமாக இருப்பான். அவனது வேலை மக்களுக்கு கெடுதல் செய்வதுதான். ‘ருத்ராஹா குரூரஹா’ என்றது வேதம். ருத்ரன் அயோக்கியன்.‘சக்ஸ்ரானி, சகஸ்ரஸ்ய ருத்ரானி பூம்யாம்’

அதாவது இந்த லோகத்தில் ஆயிரமாயிரம் ருத்ரர்கள், (அயோக்கியர்கள், கொடுமைக்காரர்கள்) இருக்கின்றனர். அதனால்? “அந்த ஏவ ருத்ரன் நிரவதேதே...” ‘சயனம்’ என்றொரு யாகத்தை நடத்த எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும் போது ருத்ரன் தலையை விரித்துப்போட்டுக் கொண்டு கையில் தனுஸ்... பாணத்தோடு வருகிறான்.

இங்கேதான் கவனிக்கவேண்டும்.வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே ஆயுதம் தனுஸ்-பாணம் தான். இது ருத்ரனின் கையில் இருக்கும். அதை எடுத்துக்கொண்டு அவன்... யாகத்தை குலைப்பான். சோகத்தை உருவாக்குவான். சத்(நல்ல) விஷயங்கள் செய்து கொண்டிருக்கும் இடத்தில் வில்லை எடுத்துக்கொண்டு வந்து எல்லாரையும் விரட்டுகிறான்.

இப்படியெல்லாம் ருத்ரன் தாண்டவம் ஆடும் முன்னமேயே... அவனை மந்த்ரம் மூலம் போற்றி மந்த்ரத்தால் அடித்து விரட்டு என்பதைத்தான் ‘அந்தத ஏவ ருத்ரன் நிரவதேதே....’ என்கிறது வேதம்.இப்படிப்பட்ட, அயோக்கியன், திருடன், குரூரன், பெருங்காற்றின் தகப்பனார் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ருத்ரன் கையில் தனுஸ்-பாணம் (வில், அம்பு) என்ற ஆயுதம் இருந்தது. அதே நேரம் ருத்ரனுக்கு இன்னொரு சாந்த வடிவமும் இருக்கிறது. அன்பே உருவான, கருணையே சொரூபமான அவன்?....

பகுதி – 60.  வேதத்தில் கொடுமைக்காரனாக சித்தரிக்கப்பட்ட ருத்ரனின் இன்னொரு வடிவான சாந்தரூபன், கருணை சொரூபன் யார்?...விஷ்ணு !

வேதம், அழகு என்பதை அத்புதம் என்னும் வார்த்தையால் வடித்துக் கொடுக்கிறது. அது பிற்பாடு நம் பாஷையில் அற்புதம் என்று மயங்கி மருவிற்று. ‘சதசத்பதி அத்புதம்....’ என்கிற மந்த்ர வார்த்தைகள் விஷ்ணுவை Leader of the Society ஆக சித்தரிக்கின்றன.சமுதாயத்தின் தலைவனான நீ அழகாக சாந்தமாக இருக்கிறாய் என்கிறது வேதம்.

இன்னொரு இடத்தில்...‘தொம்ஹி சத்யோ அத்புதஹா தாதா வாஜஸ்ய’....அதாவது நீ உண்மையான அழகுள்ளவனாய் இருக்கிறாய் என்று அர்த்தம்.

வேதப்படி கடவுளுக்கு உருவம் இல்லையென்றீர்களே... பிறகு எப்படி ஆயுதம், அழகெல்லாம் வந்தது? என உங்களுக்கு சந்தேகம் முளைக்க வேண்டும். அதே வேதம்தான்...’நீ நினைத்தால் கடவுளுக்கு உன் இஷ்டப்படி உருவம் கற்பிதம் செய்துகொள்’ என்று கூறியிருக்கிறதே!

சரி... வேதம் சொன்னதுபோல் ருத்ரனுக்கு வில்-அம்பு ஆயுதம். ருத்ரன் போன்ற கொடுமைக்காரனே வில்-அம்பு மட்டும்தான் வைத்திருந்தான் என்றால்... சாந்த சொரூபி... கருணை வடிவான விஷ்ணுவுக்கு பட்டு பீதாம்பரம், ஜொலிக்கும் நகைகள் மட்டும்தானே உடைமைகளாக இருக்கவேண்டும்.

ஆனால்... ருத்ரன் போன்ற குரூரனுக்கே இல்லாத வகையில் பஞ்சாயுதம் தரித்திருக்கிறார் விஷ்ணுபஞ்சு ஆயுதமா?... ஆமாம் ஆயுதங்களுக்கு பஞ்சமில்லை. ஆமாம் விஷ்ணுவின் கைகளில் அய்ந்து ஆயுதங்கள்.சங்கு, சக்கரம், கதை, சாரங்கம், கட்கம்! ஒவ்வொன்றாய் விளக்குகிறேன்.

சங்கு... அந்தகாலத்தில் Premetive Culture காலத்துப் பழக்கப்படி சண்டை போடச் செல்லும்போது... ‘நாம் சண்டைக்கு தயார்... புறப்படட்டும் நமது பரிவாரங்கள்’ என்று சமிக்ஞை கொடுப்பதற்காகவும்... டேய்... என் படை கிளம்பி விட்டதடா... என எதிரிக்கு சவால் விடுவதற்கும்தான் சங்கு ஊதுவார்கள். அதேபோல் எல்லாம் முடிந்தபின்னரும் சங்கை ஊதி முடிவை தெரிவிப்பார்கள்.

சண்டை ஆரம்பித்து முடியும் வரை உபயோகப்படும் சங்குதான் சாந்த சொரூபியான விஷ்ணுவின் முதல் ஆயுதம்.அடுத்தது சக்கரம்...வேதத்தில் முக்யத்துவம் கொடுத்து கூறப்பட்டுள்ள அக்னியின் அம்சம்தான் இந்த சக்கரம். சக்கரத்தை ஏவினால் அதிலிருந்து கக்கப்படும் நெருப்பு எதிரியைக் கொளுத்தி வேகவைத்து சாகவைத்துவிடும்.

இதுதான் அழகான விஷ்ணுவின் அடுத்த ஆயுதம். சக்கரத்துக்கு இன்னொரு விசேஷம் உண்டு. அதை அய்ந்து ஆயுதங்கள் பற்றி விளக்கி விட்டு தனியாகச் சொல்கிறேன். மூன்றாவது ஆயுதம் கதை (Gadha). இதுவும் Premetive Culture காலத்து... அதாவது ஏறத்தாழ காட்டுமிராண்டிகள் பயன்படுத்திய ஆயுதம்தான். பெரிய மரக்கட்டை அடித்தால் ஒரே அடியில் மோட்சம்தான். அப்படிப்பட்ட கட்டைதான் இது.

இன்றும் செய்தித்தாள்களில்.... ‘உருட்டுக் கட்டையால் அடித்து ஒருவர் பலி’ என்று கொட்டை எழுத்தில் செய்தி பிரசுரம் பண்ணுகிறார்களே. அந்த உருட்டுக் கட்டைதான்.

கிராமப்புறங்களில் சுக்குமாந்தடி என பயத்தோடு அழைக்கப்படும் ஆயுதம் தான் கதை (Gadha). நான்காவது சாரங்கம் அதாவது வில்... இதுவும் பழங்காலத்தில் காட்டில் உள்ளவர்கள் வேட்டையாடப் பயன்படுத்திய ஆயுதம்.

அய்ந்தாவது கட்கம், ‘தனியாய் போன ஸ்த்ரீயை கத்தியை காட்டி தங்கச் சங்கிலி பறித்தான் திருடன்’ என்று News paper களில் வாசிக்கிறோமே... கத்திதான் கட்கம்.இப்படியாக அய்ந்து ஆயுதங்களை தாங்கிக் கொண்டிருப்பவர்தான் ருத்ரனின் சாந்த வடிவமான விஷ்ணு.

இதில் சக்கராயுதத்துக்கு மட்டும் பெரிய விசேஷம் உண்டு என குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அது என்ன விசேஷம்? பகவான் விஷ்ணுவின் சங்கல்பம்தான் சக்கரம். அதாவது, சுதர்ஸனர் என மரியாதையாக அழைக்கப்படும் ஆயுதம். பகவான் நாராயணன்தான் நினைப்பனவற்றை எல்லாம் செய்து முடிப்பதற்காகவே சுதர்ஸனரை வைத்திருக்கிறார். பகவான் எண்ணியதை எல்லாம் சுதர்ஸனர் (சக்கர ஆயுதம்) நடத்தி முடிக்கிறார்.

இவ்வாறு... ஒரு ஆயுதத்துக்கு இவ்வளவு அந்தஸ்து தந்துள்ளது. நமது சம்ப்ரதாயம்.சுதர்ஸனருக்கு இன்னொரு சீரும் சிறப்பும் உண்டு.என்ன?...

“யஸ்மின் விண்யஸ்யபாரம் விஜயினீஜகதாம் ஜங்கமஸ்தாவரணாம் லக்ஷ்மி நாராயணாக்யம் மிதுனம் அனுபவதீ உதிஉதாரன் விஹாரான்ஆரோக்கியம் பூதிமாயுஸீம்க்ருதமிஹ பஹீனா...” சுதர்ஸன ஸதகம் என்றும் புஸ்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கடைசி ஸ்லோகம் இது. இதை பண்ணியவர் சுரநாராயண ஜீயர்.

சரி... இந்த ஸ்லோகம் என்ன சொல்கிறது?  நாராயணன் பல காரியங்களைக் கவனித்து வருகிறார். இதனாலேயே தன் மனைவியான லட்சுமியோடு அதிக நேரத்தை அவரால் செலவிட முடிகிறதில்லை.

ஆனால்... பகவான் தன் பத்தினியான லட்சுமியோடு உல்லாசமாக பொழுது போக்குவதற்கு... Relax செய்வதற்காக லட்சுமியோடு தனியாகச் செல்லும்போது எல்லா பொறுப்புகளையும் தன் முக்கிய ஆயுதமான சுதர்ஸனரிடம் தான் கொடுத்து விட்டுப் போகிறார்.

இதைவிட விசேஷம்... இந்த சுதர்ஸன ஆயுதத்தின் கையில் 16 ஆயுதங்கள் இருக்கின்றன.என்னது? ஆயுதத்தின் கையிலும் ஆயுதங்களா?


பகுதி - 61.  என்னது ஆயுதத்தின் கையில் 16 ஆயுதங்களா? அப்படியென்hல் சுதர்சனர் என்ற சக்கராயுதத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் பாருங்கள். அந்த ஆயுதத்தை அது இது என்று குறிப்பிடாமல் அவர் இவர் என்ற மரியாதை விகுதியுடன் அழைக்கின்றனர். ஆமாம் சக்கரத்தாழ்வார் என நாமகரணம் சூட்டப்பட்டது சுதர்சனத்துக்கு. சமஸ்கிருதத்தில் அப்படியே சுதர்சனர் என்று மரியாதை கலந்து பெயர் சூட்டினார்கள்.

பெருமாளின் கையில் இருக்கும் சுதர்சனரின் கையில் 16 ஆயுதங்கள். பெருமாளுக்கே பஞ்சாயுதம்தான். ஆனால் இவருடைய ஆயுதத்துக்கு 16 ஆயுதங்கள்.

என்னென்ன என்று பார்ப்பதற்கு முன்னர்... பெருமாள் சுதர்சனத்தை கையில் வைத்துக்கொண்டு செய்த சாகசங்களில் ஒரு சிலவற்றைப் பார்த்துவிடுவோம்.

பவுண்டரக வாசுதேவன் என்னும் மன்னன். காசியை ஒரு காலத்தில் ஆண்டவனாம். அவனுக்கு தன் பெயரின் மேல் அலாதி பற்று. அந்தப் பற்று கொஞ்சம் கொஞ்சமாக கர்வமாயிற்று. கர்வம் தலைக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டு அவனை அழிச்சாட்டியம் பண்ண வைத்தது. அவன் என்ன நினைத்தான் என்றால் என் பெயரில் வாசுதேவன் என்று வருகிறது. அதனால் வாசுதேவனாகிய விஷ்ணு நான்தான். நானே கடவுள். என் முன் அந்த விஷ்ணு கைகளில் பஞ்சாயுதம் தரித்துக் கொண்டு நிற்கக்கூடாது. அவன் கடவுள் அல்ல. இந்த உலகத்தை ரட்சிக்க வந்த கடவுள் நானே.

அதனால்... அடே விஷ்ணு... உன்னுடைய சங்கு சக்கரத்தை நீ விட்டுவிட வேண்டும். என்னிடம் ஒப்படைத்து விடவேண்டும். ஏனென்றால் உண்மையான வாசுதேவன் உண்மையான விஷ்ணு நான்தான் என கர்வம் தலைக்கேறி குதித்தான் வாசுதேவன்.

விஷ்ணு பார்த்தார்... சங்கு - சக்கரத்தையா கேட்கிறாய்? முதலில் சக்கரத்தை தருகிறேன் வைத்துக்கொள்... கையில் அல்ல... கழுத்தில் வாங்கிக்கொள் என தனது சக்கராயுதத்தை ஏவினார் விஷ்ணு. அந்த சக்ராயுதம் பவுண்டரக வாசுதேவனின் கழுத்தில் இறங்கியது. ``நான்தான் கடவுள், உன் ஆயுதத்தைக் கொடு’’ என்றவனுக்கு தன் சக்ராயுதத்தைக் கொடுத்து அவன் உயிரை எடுத்தார் விஷ்ணு.

இது ஒரு சாகசம் என்றால்... இன்னொன்று... விஷ்ணுவாகிய கிருஷ்ணன் சம்பந்தப்பட்டது.

சிசுபாலன். இவன் யாரென்றால்... சேதி நாட்டு அரசன். இவன் கிருஷ்ணனோடு விரோதம் புரிந்தே வந்தான். கிருஷ்ணரை திட்டிக் கொண்டே வந்தான். விஷ்ணுவாகிய கிருஷ்ணர் நூறு திட்டுவரை பொறுத்துக் கொள்ளலாம் என்று இருந்தார். சிசுபாலனின் திட்டு மொழிகளும் நூறை கடந்தன.

கடைசியாய் ``போடா இடைப்பயலே...’’ என கிருஷ்ணரின் ஜாதிப் பெயரை சொல்லி திட்டினானாம் சிசுபாலன். அதுவரை பொறுத்த கிருஷ்ணன் சாதிப் பேரை சொல்லி திட்டுகிறாயே...? என கோபப்பட்டு - சுதர்சனத்தை தன் சக்ராயுதத்தை எடுத்தார்... சிசுபாலனின் தலையை கழுத்திலிருந்து கத்தரித்து கீழே விட்டெறிந்தார்.

இந்த சிசுபாலன்தான், வைகுண்டத்தின் துவாரபாலகர்களில் ஒருவராம். விஷ்ணுவே இவனுக்கு மோட்சம் அளிக்கிறாராம். எப்படியென்றால்... ``டேய்... நீ என் நண்பனாக இருந்து தாமதமாக மோட்சம் பெறுகிறாயாஅல்லது எனக்கு எதிரியாக மாறி உடனே மோட்சம் பெறுகிறாயா? எது வசதி...?’’ என சிசுபாலனிடம் கேட்டாராம் விஷ்ணு. எதிரியாகவே இருந்து சீக்கிரம் மோட்சம் பெற்று விடுகிறேன் என்கிறான் சிசுபாலன்.

ஆக... கடவுளின் நண்பர்களைவிட எதிரிகளுக்குத்தான் மோட்சம் விரைவில் கிடைக்கும் என்பதை விஷ்ணுவே சொல்லியிருக்கிறார். இது பாகவதத்தில் வருகிறது.

தவிர, சாதி உணர்வு கடவுளுக்கும் உண்டு... வேண்டும் என்று வலியுறுத்துகிறது இக்கதை.

கூடவே சக்கராயுதத்தின் சாகசத்தையும் காட்டுகிறது. சக்கராயுதத்தைப்பற்றி இன்னொரு குறிப்பும் உண்டு. இந்திரனுடைய வஜ்ராயுதம் ததீசு முனிவருடைய எலும்பை எடுத்து உடைத்து செய்யப்பட்டது. அந்த மனித எலும்பு ஆயுதத்துக்கு சக்தி கொடுத்ததே இந்த சக்கராயுதம்தான்.

சரி... சக்கராயுதத்தின் சாகசக் கதைகளைப் பார்த்தோம். 16 ஆயுதங்கள் என்று சொன்னீர்களே... அது என்ன என்று கேட்கிறீர்களா?

பகவான் விஷ்ணுவின் ஒரு ஆயுதமான சக்கரத்தின் இரு பக்கம் எட்டெட்டு கைகளிலும் தலா 8 ஆயுதங்கள். இதைப்பற்றி வேதாந்த தேசிகனே ``சோடஸ ஆயுத ஸ்தோத்ரம்’’ என்று பண்ணியிருக்கிறார். அதாவது 16 ஆயுதங்கள் பற்றிய ஸ்தோத்தரம். ஆயுத ஸ்தோத்திரத்தில் என்னென்ன ஆயுதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன?

சுதர்சனத்தின் வலது கைகளை முதலில் பார்ப்போம்.
1. சக்கரம் 2. மழு 3. குந்தம் (ஈட்டி) 4. தண்டம் (தடி) 5. அங்குசம் 6. சதாமுகாக்னி (ஒரே நேரத்தில் நூறு வாய்களிலிருந்து அக்னி உமிழும் ஆயுதம்) 7. மிஸ்க்ரிஸம் (கத்தி) 8. வேல்.

இவையெல்லாம் வலது கைகளில் உள்ள ஆயுதங்கள்.
அப்புறம் இடது கையில்,  1. பாஞ்ஜ சண்யம் (சங்கு) 2. சாரங்கம் (வில்) 3. பாசம் (கயிறு) 4. கலப்பை 5. வஜ்ராயுதம் 6. கதை (குண்டாந்தடி) 7. உலக்கை 8. திரிசூலம்.
மொத்தம் எட்டெட்டும் பதினாறு ஆயுதங்கள் ஆயிற்றா...?

பிராமணர்கள் அனுபவித்த‌ ராஜபெண்கள். யாகங்கள் ஏன்? கூலி எவ்வளவு?

மன்னர்களுக்காக யாகம் நடத்திவிட்டு சம்பளமாக‌ ராணிகளையும் ராஜகுமாரிகளையும் அழைத்துச் சென்று ராஜசுகம் அனுபவித்து விட்டு திரும்ப அரண்மனைக்கு அனுப்பிய‌  பிராமணர்கள்.

யாகங்களின் பட்டியல். பிராமணர்களுக்கு யாகங்களுக்கான‌ சம்பளம் என்னென்ன?

பாவம் என்றால் என்ன? நாம் ஒரு பதார்த்ததை வாங்கி சாப்பிடுகிறோம் என்றால்... அந்த பதார்த்தம் வேறு எவனோ வாங்கி சாப்பிட வேண்டியது. அதை அவனுக்கு கிடைக்காமல் நாம் சாப்பிட்டு விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான்.

நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்று... வேறு யாருக்கோ கிடைக்க வேண்டியது. அதை நாம் சுவாசித்து விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான்.

இந்த லோகத்தில்.. நீங்கள் பஸ் பிரயாணம் மேற்கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்து பயணம் செய்கிறீர்கள். இது ஒருவகை பாவம்தான்.பக்கத்தில் பலபேர் நின்று கொண்டிருக்கும்போது நீங்கள் உட்கார்ந்திருப்பது பாவம்தானே. நின்று கொண்டே வந்தாலும் அதுவும் பாவம்தான். ஏனென்றால் நீங்கள் இன்னொருவர் நிற்க இருந்த இடத்தில்தானே நிற்கிறீர்கள்?

பாவத்தை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், பிராமணன் இடத்தில் போய் யாகம் செய் என்கிறது வேதம்


இந்து மதம் எங்கே போகிறது ?  பகுதி 62 – 63 – 64.

பகுதி – 62. பதினாறும் (ஆயுதங்களும்) பெற்று பெருவாழ்வு வாழ்ந்து வரும் பகவானின்... ஆயுதப்பட்டியலை தரிசித்தோம்.

எல்லாம் வல்லவனான அன்பால் ஆகப்பெற்ற... வேதத்திலேயே சாந்தவடிவம் கொண்டவன் என சொல்லப்பட்ட விஷ்ணுவுக்கு ஏன் இத்தனை ஆயுதங்கள்?

விஷ்ணுவை விடுங்கள்... மற்ற எல்லா தெய்வங்களும் அன்பை போதிக்கின்றன என்றால் ஏன் ஆயுதங்களுடன் சேவை சாதிக்கின்றன.

இங்கேயும் Humanistic Worship தான் காரணமாகிறது. அதாவது... முதன் முதலில் பயம் வந்த பிறகுதான் மனிதன் கடவுளை நம்பினான். நம்மை யாராவது அழித்து விடுவார்களோ என இருதயத்துக்குள் துடித்த அந்த முதல் படபடப்புதான் கடவுளைப் படைத்தது. ஏனென்றால் Primitive Culture அதாவது காட்டுமிராண்டி காலத்துக்கு, நாகரிகத்துக்கு முந்தைய மனிதர்கள் idol worship உருவ வழிபாடு செய்யும் போது வெறும் உருவத்தோடு கடவுளை விட்டுவிடவில்லை.

நம்மை பாதுகாக்க வேண்டும் என்றால்... இவர் வெறும் கையோடு இருந்து என்ன பயன்? அதனால் அவர் கையில் நாம் பயன்படுத்தும் ஆயுதங்களைக் கொடுப்போம். அதை அவர் வைத்திருந்தால் நம்மை பாதுகாப்பார் என்று நினைத்தார்கள்.

சக்கராயுதம் வேதத்தில் அக்னியாக சொல்லப்பட்டிருக்கிறது. சங்கு முதலான மற்ற எல்லா ஆயுதங்களுமே மக்கள் பயன் படுத்தியவைதான். கடவுளுக்கு ஆயுதங்களைக் கொடுத்தவர்கள் நாகரிகமடையாத Primitive காலத்து மனிதர்களே.

புராணங்களில் இந்த ஆயுதங்கள் அதிக அந்தஸ்து பெற்றன. தீயவர்களை அழிப்பதற்காக பகவான் பற்பல ஆயுதங்களைப் பயன்படுத்துவார். இந்த இடத்தில் இன்னொரு முக்கிய விஷயத்தை உங்களுக்குச் சொல்லவேண்டும்.ஆரம்பகால ஆயுதங்கள் எல்லாமே தங்கத்தினால் செய்யப்பட்டவை. தங்கம் அன்று தங்கு தடையின்றி கிடைத்ததாம்.

வேதத்திலேயே தங்கத்தின் முக்கியத்துவம் நிறைய சொல்லப் பட்டிருக்கிறது. `வேதத்தில் பெண்கள்’ பகுதியிலேயே... பெண்கள் உடல் முழுவதும் தங்க நகைகள் தகதகக்க வந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

அதேபோல... வேதத்தில் தங்கம் இன்னொரு பெரிய விஷயத்துக்கும் பயன்படுத்தப்பட்டது.என்ன விஷயம்? அதற்கு முன்...

வேதத்தில் யாகங்கள் முக்கியமானவை. இந்த யாகங்களை பிராமணர்கள் பண்ணி வைக்கவேண்டும். பிராமணர்கள் Manthra labours. அதாவது மந்திரத் தொழிலாளர்கள்.

வேதத்தில் 6 அங்கங்கள் இருக்கின்றன.

வேத சொற்களின் உச்சரிப்பைப்பற்றி சொல்லும் சிக்ஷா என்பது முதல் அங்கம். மொழியியலைப் பற்றி சொல்வது வ்யாகரண அங்கம். யாப்பு இலக்கணம்பற்றி கூறுகிறது சந்தஸு அங்கம். சொற்பிறப்பு பற்றி சொல்வது நிருப்தம். ஜோதிஷம் பற்றி சொல்லாது ஜோதிஷ அங்கம். வேதத்தில் கூறப்பட்ட யாகங்களை எப்படி எப்படி செய்யவேண்டும் என்று சொல்வது கல்பம் என்னும் அங்கம்.

இப்படியாக யாகங்களை அனல் முன் நின்று மந்த்ரங்களை ஓதி சும்மாவா சொல்லிக் கொடுப்பார்கள். அதற்கு Charge வேண்டாமா? Fees வேண்டாமா? சம்பளம் கொடுக்கவேண்டும் அல்லவா? இதற்குப் பெயர்தான் தட்சணை. அதாவது யாகங்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம்தான் தட்சணை!

அசுவமேத யாகம் பற்றி இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியில் நான் சொல்லியிருந்தேன். அதில் மன்னர்களுக்காக அஸ்வமேத யாகம் நடத்திவிட்டு... அதன் பின்னர் மன்னர் வீட்டுப் பெண்களான ராணிகளையும், ராஜகுமாரிகளையும் தங்களோடு அழைத்துச் சென்று விடுவார்கள். ராஜ பெண்களோடு ராஜ சுகம் அனுபவித்து விட்டு திரும்ப அரண்மனைக்கு அனுப்புவார்கள் யாகம் நடத்துபவர்கள்.
******
அவசியம் முழுக்கதையும் முழு விளக்கமும் அறிய‌ சுட்டியை க்ளிக் செய்து படிக்கவும்.

************

இப்படியாக...ஒவ்வொரு யாகத்துக்கும் தட்சணை இன்னது என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்... வித்தியாசமான யாகம் சத்திரயாகம்.அதென்ன சத்திரயாகம்?

பலர் கூடிப் பல நாள்கள், பல வருடங்கள் லோக சேமத்துக்காக செய்யப்படுகிற வேள்வி. ஒவ்வொரு யாகத்துக்கும் அக்னி குண்டம் வளர்த்து அதில் பல பொருள்களை ஆகுதி செய்வார்கள். அதுபோல... இந்த யாகம் பண்ணும் எஜமானர்கள் என்னென்ன பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும்?

வீடு, ஆஸ்ரமம், இருப்பிடம் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும். யாகம் பண்ணுபவருக்கு கொடுக்கும் தட்சணையையும், நன்கொடையையும் யாகத்துக்கே அர்ப்பணிக்கவேண்டும்.

இந்த யாகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட வீடுகள், ஆஸ்ரமங்கள், மாளிகைகள்தான் எல்லோராலும் உபயோகப்படுத்தப்படும். யார் வேண்டுமானாலும் அங்கு வசிக்கலாம். சத்திர யாகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட வீடுகள், இருப்பிடங்கள், ஆஸ்ரமங்கள்தான் சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த சத்திர யாகத்துக்கு மட்டும்தான் தட்சணை கிடையாது.

சரி... தங்கம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்... எதற்கு திடீரென்று தட்சணைபற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என நீங்கள் நினைக்கலாம்.சம்பந்தம் இருக்கிறது. வேதத்தில் தங்கத்தின் முக்கியத்துவம்பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா?

யாகங்களுக்கும் அந்த முக்கியத்துவம் உண்டு. யாகம் செய்பவர்களுக்குத் தட்சணையாக தங்கம் மட்டும்தான் கொடுக்கவேண்டும். மற்ற உலோகங்களை கொடுக்கக் கூடாது.

விலை மதிப்பற்ற... தங்கம்தான் தட்சணைக்கு தகுந்தது என `சொர்ண’த்தை மட்டுமே தட்சணையாக வரையறுத்திருக்கிறது வேதம்.அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பிரம்மா ருத்ரனை படைத்தபோது....

முதன் முதலில் உலகத்துக்குப் பிரவேசித்த அந்தக் குழந்தை `ங்ஙே...’ என அழுததாம். சாதாரண அழுகையல்ல. பயங்கரமான அழுகை. ரோதனம் என்றால் அழுவது. தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் அவனுக்கு ருத்ரன் என பெயர்.

அந்த ருத்ரனின் கண்ணீர் இருக்கிறதே...

பகுதி – 63. ருத்ரன் பிறந்ததிலிருந்தே அழுது கொண்டிருப்பதை பற்றி சொன்னேன். யஜூர் வேதத்தின் முதல் காண்டத்தின் 5-ஆம் பட்சத்தில்தான் ருத்ரனின் கண்ணீர்த் துளிகள் காட்டப்பட்டிருக்கின்றன.

ருத்ரன் அழுதால் என்ன சிரித்தால் என்ன என சும்மா விட்டுவிட்டு போய்விட முடியாது. தட்சணையைப்பற்றி சொன்னீர்கள். பிறகு தங்கத்தைப்பற்றி சொன்னீர்கள்? இப்போது திடீரென ருத்ரனின் கண்ணீர் எதற்கு...? என்று நீங்கள் கேட்கலாம். ருத்ரன் அழுதது ஒரு வகையில் பிராமணர்கள் சிரிக்கத்தான்.

ஏன்...? எப்படி...?    ருத்ரன் அழுது அந்த கண்ணீர் வருகிறது இல்லையா...? அது அப்படியே உறைந்து உலோகமாக மாறிவிட்டது. என்ன உலோகம்...? வெள்ளியாக மாறிவிட்டது. அதாவது ருத்ரனின் கண்ணீர் தான் வெள்ளி.

ருத்ரன் எப்படிப்பட்டவன் என்பதை நாம் முதலிலேயே பார்த்தோம். `கொடூரமானவன், வம்புகள் செய்பவன், வதம் பண்ணுபவன், ஆக அவன் அயோக்கியன்’ என்று சொன்ன வேதம்.

ருத்ரனின் கண்ணீர்தான் வெள்ளி. அதனால் அந்த வெள்ளியை யாகம் செய்து வைக்கும் பிராமணர்களுக்கு தட்சணையாக கொடுக்கக் கூடாது. வெள்ளியை தட்சணையாக வாங்கவும் கூடாது. அதனால் தங்கத்தை மட்டுமே தட்சணையாக வாங்குவது என்றது வேதம்.

இன்றும் யாக, ஹோமங்களுக்கு வெள்ளிப் பொருள்களை பிராமணர்கள் தட்சணையாக வாங்குவதில்லை. பணம் அல்லது தங்கம். இப்போது புரிகிறதா... ருத்ரனின் அழுகை யாகம் செய்யும் பிராமணர்களை சிரிக்க வைத்தது எப்படி என்று.

வெள்ளியை விட தங்கத்தின் மதிப்பு அதிகம் என்று அறிந்தே வேதக்காரர்கள் தங்கத்தை தாங்கிப் பிடித்து வெள்ளியை ஓரங்கட்டினார்கள். வெள்ளி கொடுக்காதே, தங்கம் மட்டுமே கொடு என சும்மா சொன்னால் கேட்பார்களா? அதனால்தான் ருத்ரனை அழ வைத்தார்கள். அப்போது விழிகளில் இருந்து கண்ணீரை வெள்ளியாக விழ வைத்தார்கள்.

தட்சணைக்கு இன்னும் ஒரு அந்தஸ்து உண்டு... பாகவதத்தில் ஒரு மேற்கோள் சொல்லப்படுகிறது.

அதாவது பகவான் யக்ஞயம் என்றால் தட்சணை என்பது பகவானின் பத்தினி போன்றது. இன்னும் சொல்லப் போனால்... யாகம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த யாகம் தான் பகவான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால் பகவானின் பத்தினி இருக்கிறாளே அவள்தான் தட்சணை.

இன்னும் விஸ்தாரமாக சொல்லப்போனால்... பத்தினியின்றி பகவான் எப்படியோ, அதுபோல்தான் தட்சணை இல்லாத யாகம். தட்சணையை எப்படியாவது வாங்கியே தீரவேண்டும் என்பதால்... `பகவானின் பத்தினி’ என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.

இதைத்தான் ப்ரம்ம சூத்திரக்காரர்.... யாகத்தின் சம்பளம் என்று குறிப்பிட்டார். யாகம் முடிந்துதான் தட்சணை கொடுக்கவேண்டும். ஆனால், நான் தட்சணை பற்றிய தகவல்களை முன்கூட்டியே கொடுத்துவிட்டேன்.

யாகங்களின் முக்கியத்துவம் என்ன? பிராமணர்கள் ஆயுள் முழுதும் செய்து கொண்டே இருக்கவேண்டிய தொழில்தான் யாகம். யாக சாலையில்தான் பிராமணர்கள் நடந்து செல்லவேண்டும்.

நாட்டின் ராஜாவிலிருந்து... அன்று கடையனாக மதிக்கப்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் வரை அனைவருக்காகவும் பிராமணன் தட்சணை வாங்கிக் கொண்டு யாகம் செய்வான்.

யாகத்தின்போது ராஜாவே, ப்ராம்மணனைப் பார்த்து பணிந்து அமர்ந்திருப்பான். ஏன் என்றால்...

``தஸ்மாது சோமராஜா னாஹா
ப்ராம்மணாஹா...’’ இப்படியென்றால் என்ன?

``உங்களுக்கெல்லாம் என்று ஒரு ராஜா இருப்பான். அவன் உங்களை கட்டியாண்டு வருவான். ஆனால்... எங்களுக்கு ராஜா இவன் அல்ல. இந்த க்ஷத்ரிய ராஜாவுக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் ப்ராமணர்கள். இந்த ராஜாவை விட மேலானவர்கள்.

அதனால் உங்கள் ராஜா எங்களுக்கு கீழே தான். எங்கள் ராஜா, சோமராஜா தான்’’ என்றுதான் அந்த சின்ன மந்த்ர வாக்கியத்துக்கு அர்த்தம்.

இப்படியாக ராஜாவே கீழ்ப்படிந்தவன் என்றால்... மற்றவர்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள்.

யாகம் நடத்தும்போது என்ன எதிர்பார்க்கிறார்கள்? உலக நன்மைக்காக நடத்துவார்கள். புத்ர பாக்யம் வேண்டுமென்று சில யாகங்கள் உண்டு.

யாகங்களின் பெரும்பாலான முக்கியத்துவம்... நமது பாவங்களை தொலைக்கத்தான். (பாவங்களை பற்றி உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டியுள்ளது. அடுத்து சொல்கிறேன்).

அக்னி ஹோத்ரம் என்னும் யாகம் தனக்காக பண்ணிக் கொள்வது. இதற்கு தட்சணை தனக்குத்தானே கொடுத்துக் கொள்வதுதான்.

தர்ஷம்பூர்ணமாசம் எனப்படும் ஒரு யாகம் அமாவாசை, பவுர்ணமியை அடிப்படையாக வைத்து செய்யவேண்டிய ஒரு யாகம்.

தர்ஷம் என்பது அமாவாசை. பூர்ணம் என்றால் பவுர்ணமி. இந்த யாகத்து தட்சணை என்ன தெரியுமா?

அன்வாஹார்யம். அதாவது சாப்பாடு தான் தட்சணை.
இதுபோல் இன்னும் பல யாகங்கள். இன்னும் பல தட்சணைகள்.

யாகங்களை ஒரே ஒரு ஆள் மட்டும் நடத்த முடியாது. குழுக்குழுவாய் தான் நடத்துவார்கள். அதனால் தட்சணையும் ‘க்ஷரடம’ ஆகத்தான் இருக்கும்.

100 பசுக்கள், 1000 பசுக்கள், 100 கன்றுக்குட்டிகள், 1000 கன்றுக்குட்டிகள் என தட்சணைகள் தங்கத்தைத் தவிரவும் நிறைய உண்டு.யாகம் முடிந்ததா...? அவருக்கு 1000 நிஷ்கத்தை கொடப்பா. நிஷ்கம் என்றால்...

பகுதி – 64.   நிஷ்கம் என்றால்?
நாணயம் தங்க நாணயம் Vedic மற்றும் Post Vedic கால கட்டங்களில் புழக்கத்திலிருந்த தங்க நாணயத்துக்கு பெயர் தான் நிஷ்கம்

யாகம் முடிந்த உடன் தங்கத்தாலான பொருள்களை மட்டுமல்ல.. இதேபோன்ற நிஷ்கங்களையும் வாங்குவார்கள்.

ஸ்வாமிக்கு 1000 நிஷ்கம் கொடுங்கோ என குரல் வரும் அரசர்கள் நடத்தும் யாகம் என்றால் நிறைய நிஷ்கம்கள் கிடைக்கும். மற்றவர்களின் யாகம் என்றால்... நிஷ்கத்தை கூட்டிக் குறைத்துக் கொள்வார்கள்.

சரி... யாகங்கள் பாவத்தை தொலைக்க நடைபெறுகின்றன என்று சொல்லி இதைப்பற்றி விரிவாகவே பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன்.

பாவம் என்றால் என்ன? பகவானை போல இதுவும் நம்மை சூழ்ந்திருக்கிறது. அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே பாவம்தான்.


நாம் ஒரு பதார்த்ததை வாங்கி சாப்பிடுகிறோம் என்றால்... அந்த பதார்த்தம் வேறு எவனோ வாங்கி சாப்பிட வேண்டியது. அதை அவனுக்கு கிடைக்காமல் நாம் சாப்பிட்டு விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான்.


நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்று... வேறு யாருக்கோ கிடைக்க வேண்டியது. அதை நாம் சுவாசித்து விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான்.


இந்த லோகத்தில்.. நீங்கள் பஸ் பிரயாணம் மேற்கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்து பயணம் செய்கிறீர்கள்.


இது ஒருவகை பாவம்தான். பக்கத்தில் பலபேர் நின்று கொண்டிருக்கும்போது நீங்கள் உட்கார்ந்திருப்பது பாவம்தானே. நின்று கொண்டே வந்தாலும் அதுவும் பாவம்தான். ஏனென்றால் நீங்கள் இன்னொருவர் நிற்க இருந்த இடத்தில்தானே நிற்கிறீர்கள்?


இப்படி பாவம் பலவகைப்படும். நம்மை சுற்றி பாவசக்தி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்த பாவத்தை போக்க நாம் யாகம் செய்யவேண்டும்.

யாகத்தை பிராமணர்கள் செய்யும்போது பாவம் அக்னியாகும் . அதில் யாகம் செய்கையில் பாவங்கள் எல்லாம் யாகம் செய்கின்ற பிராமணன் இடத்திலே வரும். கூடவே தட்சணை வாங்குகிறார்களல்லவா, அதுவும் பாவம்தான். இப்படிப்பட்ட பாவங்கள் எல்லாம் வேத மந்தரங்களை உச்சரிக்கும்போது அழிந்துவிடும்.

அதனால்தான்... பாவத்தை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், பிராமணன் இடத்தில் போய் யாகம் செய் என்கிறது வேதம்.

கிறிஸ்தவமும் கிட்டத்தட்ட இப்படித்தான். கிறிஸ்தவத்துக்கு பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே வேதம் பாவ மன்னிப்பை பாவ நிவர்த்தியை வழங்கியிருக்கிறது. இந்த விஷயம் தெரியாமல் இப்போதைய பெரியவர் ஜெயேந்திரர்....

கிறிஸ்தவம் என்ன கிறிஸ்தவம்?... பாவத்தை செய்துவிட்டு என்ன பாவத்தை வேண்டுமானாலும் செய்துவிட்டு, அதை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொல்கிறது. அப்படியென்றால் பாவம் செய்யலாம் என சொல்கிறதா? என்று கேள்வி கேட்டவர்.

பிராமணர்கள் சந்தியா வந்தனம் என்று ஒரு சடங்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று முன்பு பிராமணர்களின் தொழில்பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். ஞாபகம் இருக்கிறதா? அதற்கு யாகங்களுக்கும் பெரிய தொடர்பு உண்டு. சந்தியா வந்தனம் காலை மதியம் மாலை 3 வேளையும் செய்யவேண்டும் என்பது பிராமணர்களின் அனுஷ்டானம்.

காலையில் செய்கிறார்கள். பிறகு மாலையில் தான் செய்கிறார்கள். அப்போது மதியம்? அதை காலையிலேயே சேர்த்துச் செய்துவிடுகிறார்கள். ஏனென்றால் மதியம் அவர்கள் ஆபிஸ் போய்விடுகிறார்கள். அல்லது வேலை நிமித்தம் இருந்து விடுகிறார்கள். இதில் காலையில் `அஸ்னம்’ எனப்படும் மந்த்ரத்தை கவனியுங்கள்.

`ஸுர்யச்ச மாமன்யுச்ச மன்யு
பதயச்ச மன்யுக்ரு தேப்ய:
பாபேப்யோ ரக்ஷந்தாம்
யத்ராத்ரியா பாபம் அகார்ஷம்
மனஸா வாசா
ஹஸ்தாப்யாம் பதப்யாம்
உதரேண சிச்ஞாராத்திரி
ஸ்த தவலும்பது யத்கிஞ்ச துரிதம்மயி
இதமஹம் மாம் அம்ருதயோனௌ
ஸுர்யே ஜ்யோதிஷி ஜுஹோபி ஸ்வாஹா...’’
இதிலே காலையிலே விரைவில் எழுந்து சூரிய உதயத்துக்கு முன் சூரியனை வேண்டும் காட்சி.

அப்படி என்ன வேண்டுகிறார்கள்...
சூர்ய தேவனே நான் உலகத்தின் சட்டதிட்ட சம்ப்ரதாயங்களை மீறி செய்த பாவங்களை நீதான் ரட்சிக்க வேண்டும்.

ராத்திரி பொழுது போயிற்று. அந்த போதிலே நான் நிறைய பாவங்கள் செய்திருக்கலாம். மனஸா மனதால் பிறருக்கு தீங்கு நினைத்திருந்தால் அறுவும் பாவம். வாசா வாக்குகளால் பிறரை புண்படுத்தி பாவம் செய்திருக்கேன். ஹஸ்தாப்யாம் கைகளால் அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுத்து பாவம் செய்திருக்கலாம். பத்ப்யாம் கால்களால் உயிர்களை மிதித்து வயது முதிர்ந்தவர்களை தீண்டி பாவம் இழைத்திருக்கலாம்.

உதரேண ராத்திரி வேறு யாராவது சாப்பிட வேண்டிய சாப்பாட்டை நான் அபகரித்து வயிற்றால் பாவம் செய்திருக்கலாம்.

சிச்ஞா என்னுடைய ஆணுறுப்பால் ஸ்திரிகளுக்கு ஏதாவது இடைஞ்சல்கள் கொடுத்து, ஒழுக்கத்தை மீறி தேக ஸம்பந்தம் வைத்துக் கொண்டு அதனால் பாவம் செய்திருக்கலாம். கடந்துபோன ராத்திரியில் நான் இத்தனை பாவங்களை செய்திருக்கலாம். அப்படி செய்த பாவங்களை நீ ரட்சித்து எனக்கு பாவ நிவர்த்தியை தரவேண்டும்.


பிராம‌ணர்களின் பாவமன்னிப்பு வேண்டுதல். தெரியுமா?

என் ஆண் உறுப்பு, கை, கால், வாய், மனசு... வரை ராத்திரி செய்த பாவங்களையெல்லாம் பனித்துளியை எப்படி போக்குவாயோ அதேபோல போக்கிவிடு...’ என்று வேண்டினான்.

புத்தி கெட்டு நான் பாவம் பண்ணி விட்டேன். சூதாட்டம் போன்ற பாவங்களைக் கூட பண்ணிவிட்டேன். என் பாவங்களையெல்லாம் நிவர்த்தித்து என்னை ரட்சிப்பாய் வர்ணா...”

எச்சில் பொருள்கள், புனிதம் கெட்டவர்களிடமிருந்து வாங்கி வந்த தானங்கள் ஆகியவற்றால் எனக்கு வரும் பாவங்களை நிவர்த்தி செய்யவேண்டும்...” என வேண்டுகிறான் பிராமணன்.


இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 65.
பகுதி – 65. பாவ மன்னிப்பு பற்றி பார்த்து வருகிறோம்.
சந்தியா வந்தனத்தில் காலையில் எழுந்திருந்து சூரியதேவனிடம் என்ன வேண்டினான்...?

‘கை, கால், வாய், மனசு... ஆண் உறுப்பு வரை ராத்திரி செய்த பாவங்களையெல்லாம் பனித்துளியை எப்படி போக்குவாயோ அதேபோல போக்கிவிடு...’ என்று வேண்டினான். இது காலை நேரத்து வழக்கம். சரி... ராத்திரி செய்த பாவங்களை காலையில் போக்கிக் கொள்ள இந்த மந்த்ரம். சந்தியா வந்தனத்தில் அடுத்து மதியானம் ஒரு ‘அஸனம்’ பண்ண வேண்டும்.

இதை இப்போது தீவிர வைதீகத்தில் இருக்கும் ஒரு சிலர்தான் உச்சி வேளையிலேயே பண்ணுகிறார்கள். மற்ற பெரும்பாலான பிராமணர்கள், இதை காலையிலேயே சேர்த்து ‘two in one’ பாணியில் பண்ணிவிட்டுப் போய்விடுகிறார்கள். சரி... மதிய மந்த்ரம் என்ன சொல்கிறது...

“ஆப புநந்து ப்ருதிவீம் ப்ருத்வீ
பூதா புநாதுமாம் புநந்து ப்ரஹ்மணஸ்
பதி ப்ரஹ்மபூதா புநாது மாம்
யதீச்சிஷ்டம் அபோஜ்யம் யத்வா
துஸ்சரிதம் மம ஸர்வம் புனந்துமாம்
ஆப அஸதாம்ச ப்ரதிக்ரஹம் ஸ்வாஹா”

இதற்கென்ன அர்த்தம்...?
“அய்யா தேவதைகளே... நான் (பிராமணன்) காலை கிளம்பி பல இடங்களுக்கும், கிரகங்களுக்கும் (வீடு) ஹோமம் பண்ணி வைக்கப் போகிறேன். யாகம் பண்ணி வைக்கப் போய் வருகிறேன்.

அப்போது... எனக்கு முன்பின் தெரியாதவர்கள் கொடுக்கிற சாமான்களையெல்லாம் தானமாக வாங்கிக் கொள்கிறேன். அவர்களில் சிலர் எனக்குக் கொடுத்த தானங்கள் எச்சில் படுத்தப்பட்டதாக இருக்கலாம்.

ஒருவேளை அவர்கள் புனிதம் கெட்ட கீழ் வர்ணத்தவர்களாக இருக்கலாம். அவர்களிடமிருந்து தானம் வாங்கினால் எனக்கு பாவம் ஆயிற்றே... நானும் தெரியாமல் வாங்கி வந்து வீட்டில் போட்டிருப்பேன். அதனால்... அந்த எச்சில் பொருள்கள், புனிதம் கெட்டவர்களிடமிருந்து வாங்கி வந்த தானங்கள் ஆகியவற்றால் எனக்கு வரும் பாவங்களை நிவர்த்தி செய்யவேண்டும்...” என வேண்டுகிறான் பிராமணன்.

அதாவது ஒரே நாளில் இரண்டாவது முறையாக பாவ மன்னிப்பு கோருகிறான். அடுத்து... மாலை....

மறுபடியும் காலையில் சொன்ன பாவ மன்னிப்பு மந்த்ரத்தையே.... கொஞ்சம் மாற்றி திரும்பச் சொல்கிறான்.

அதாவது....‘அக்னி தேவா... காலையில் கேட்டதைத்தான்’ இப்போதும் கேட்கிறோம். காலையிலிருந்து மாலைவரை நான் கையால், காலால், வயிறால், வாக்கால், என் ஆணுறுப்பால் ஏதேனும் அறிந்தும், அறியாமலும் பாவம் செய்திருந்தால் என்னை அப்பாவங்களில் இருந்து நிவர்த்தி செய்வாயாக...’ என்கிறான்.

இப்படியாக ஒரு நாளைக்கு மூன்று முறை அஸனம் செய்து மன்னிப்பு கேட்கிறான். அதாவது... அஸனம் என்றால் நீரை சிறிது சிறிதாக எடுத்துக்கொண்டு... அதில் வேத மந்த்ரங்களை சொல்லி புனிதப்படுத்தி அந்தத் தண்ணீரை உட்கொண்டு வேண்டுவது.

இதுபோல காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் மன்னிப்பு கேட்பதோடு... உபஸ்தானம் என்ற வேண்டுதலும் உண்டு. சந்தியாவந்தனத்தில் வருண உபஸ்தானம் முக்கியமானது.

அதாவது... மழைக்கு பொறுப்பு வகிக்கும் தேவதையான வருணனிடம் வேண்டுவது. அதென்ன...?கொஞ்சம் பெரிய மந்த்ரம்

“இமம்மே வருண ச்ருதீஹவம்
அத்யாச ம்ருடய த்வாமவஸ்யு:
ஆசகே தத்வாயாமி
ப்ரஹ்மணா
வந்தமானது ததாசாஸ்தே
யஜமான ஹவிர்பி:
அஹேட
மான: வருணேஹபோதி
உருசம்ஸமான: ஆயு:
ப்ரமோஷீ:
யச்சித்திதே விசோயதா
ப்ரதேவ வருண
வ்ரதம் மினீமஸி
த்யவித்யவி யத்கிஞ்
சேதம் வருணதைவ்யே ஜனபித்ரோஹம்
மனுஷ்யா: சரமாஸி அசித்தீயத்வ
தர்மா யுயோபிம மானஸ்தஸ்மாத்
ஏனஸோ தேவரீரிஷ: கிதவாஸ:
யத்ரிரிபு நதீவி யத்வாஹா ஸத்யம்
உதயந் நவித்ம ஸர்வாதா விஷ்ய
சிதிரேவ தேவ அதாதேஸ் யாம
வருணப் ரியாஸ.”

ஹே... வர்ணா நான் ரொம்ப கஷ்டப்படறேன். like ordinary people I am also committed sins. சாதாரண மக்களைப் போல நானும் தவறு செய்துட்டேன். நீ லோக வாழ்க்கைக்குனு ஒரு கோட்பாடு வைத்திருக்கிறாய். நான் அதை மீறிவிட்டேன். புத்தி கெட்டு நான் பாவம் பண்ணி விட்டேன்.

சூதாட்டம் போன்ற பாவங்களைக் கூட பண்ணிவிட்டேன். என் பாவங்களையெல்லாம் நிவர்த்தித்து என்னை ரட்சிப்பாய் வர்ணா...”

இந்த சந்தியா வந்தன மந்த்ரங்கள் எல்லாம் வேத மந்த்ரங்கள். வேதங்களில் யாகத்தின் போது சொல்லப்படும் மந்த்ரங்கள். பிராமணர்கள் வேத கர்மாக்களை பெருமளவு குறைத்துக் கொண்டு விட்டதால் தான், அந்த மந்த்ரங்களை சந்தியா வந்தனத்தில் வைத்தார்கள். அதனால் இவ்வேத மந்த்ரங்களை சொல்லும்போது பாவங்கள் அகலும் என்பது நம்பிக்கை. இது வேதம் சொன்னது.

ஏன்சாமி! வீட்லபேசற தமிழ்லயே பகவான்ட்டயும் பேசுங்களேன்

“ஏங்காணும்... இப்படி திடீர்னு தமிழ்ல அர்ச்சனை பண்ணுன்னா எப்படி? எங்களுக்குனு சம்ப்ரதாயங்கள் இருக்கு. அனுஷ்டானங்கள் இருக்கு. அது எல்லாத்தையும் தமிழ்ல பண்ண முடியாதே...” என குரல் கொடுத்தனர்.

“ஏன் சாமி... வீட்ல பேசும்போது உங்க மனைவிகிட்ட மகள்கிட்டயெல்லாம் சமஸ்கிருதத்துலயா பேசறீங்க. அதுபோல... பகவான்ட்டயும் தமிழ்லயே பேசுங்களேன்...”

அவனை வழிபடும் முறைகள் பலவிதம் என்றாலும் எல்லாம் சரியே.... அதனால் அவன் பெயரால் யாரும் யாரையும் தூஷிப்பதோ, நிந்திப்பதோ கூடாது...”


இந்து மதம் எங்கே போகிறது? - பகுதி – 66 -67,

பகுதி – 66. வேதம் அறியாதவர்கள் மற்ற மதத்தை துவேஷிப்பார்கள் என்பதை பாவ மன்னிப்பு மந்த்ரங்கள்மூலம் பார்த்தோம். இதை நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது தமிழ் பேப்பர்களையும், இங்கிலீஷ் பேப்பர்களையும் உற்றுப் பார்த்தேன். பெரிய பெரிய எழுத்துகளில் ஒரு செய்தியை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் பண்ணியிருந்தார்கள்.

அது என்னவென்றால், சிறீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாவத்தைப் போக்க ராமேஸ்வரத்துக்குப் போய் வந்தார் என்று ஒரு செய்தியைப் படித்தேன்.

ஒன்று பாவ மன்னிப்பையே துவேஷித்த ஸ்வாமிகள் இன்று தனக்காகவே பாவ நிவர்த்தி செய்யப் போகிறார் என்றால் அதை என்னவென்று சொல்வது.

இன்னொன்று... இந்த நேரத்தில் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது ப்ரம்மசூத்திரக்காரர் படைத்த ப்ரம்ம சூத்திரத்தில் முக்கியமான வரி வருகிறது.

“பஹிஸ்து உபயதாபி ஸ்பிரு தேஹே ஆசாரஸ...”
என்று போகும் இந்த சூத்திரம் சொல்வது என்ன?

ரிஷிகள், சந்நியாசிகள், யதிகள், ஞானிகள் பாவம் பண்ணினால் அவர்களுக்கு அந்தப் பாவத்திலிருந்து விமோசனம் கிடையாது. ப்ராயசித்தம் கிடையாது. அவர்கள் செய்த பாவம் பாவம்தான். அது தீராது, போகாது என்கிறார் ப்ரம்ம சூத்ரக்காரர்.

மூத்தோர் சொல் அமிர்தங்கள் இப்படியிருக்க பாவ மன்னிப்பை அடிப்படையாக வைத்து மற்ற மதங்களை தூஷிப்பது வேதத்துக்கே அடுக்கவில்லை அதர்வண வேதம் சொல்கிறது பாருங்கள்:
“சமேத விஷ்வா வசஸா
பதிந்திவிபு யயேஹ
விபுஹீ யயேஹ
விபுஹீ அதிதிஹி தனனாம்
சபூர்யஹா நூதனம் ஆளவாசதீ
திம்வர்த்தனிஹி அனுவாவ்ருத்தே
ஏகையித் பூரி...”

மக்களே ஒன்று கூடுங்கள். கடவுள் ஒருவன்தான். அவனை யார் கூப்பிடுகிறார்களோ... அவர்களின் வீட்டுக்கு போவான். அவன் பழைமைக்கும், பழைமையானவன். புதுமைக்கும் புதுமையானவன். கடவுள் ஒருவன் என்றாலும், அவனை வழிபடும் வழிகள் லோகத்தில் பல்வேறு பட்டதாக இருக்கின்றன.

அவனை வழிபடும் முறைகள் பலவிதம் என்றாலும் எல்லாம் சரியே.... அதனால் அவன் பெயரால் யாரும் யாரையும் தூஷிப்பதோ, நிந்திப்பதோ கூடாது...”

இது அதர்வண வேதம் சொல்லும் அறிவுரை.
இந்த வேத மந்த்ரம் அறியாதவர்கள்தான் அல்லது அறிந்தும் அறியாததுபோல இருப்பவர்கள்தான் பிற மதங்களை தூஷிப்பார்கள். பாவத்தை சம்பாதிப்பார்கள்.

பாவம் பற்றி விஸ்தாரமாகவே பார்த்தாயிற்று. அடுத்து உங்களுக்கு ஒரு சம்பவத்தை சொல்கிறேன். அதிலிருந்து நாம் அடுத்துப் பார்க்கப் போகும் தலைப்பு என்னவென்று உங்களுக்கும் புரிந்துவிடும்.

சுமார் 30 - 40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்துக்கு பக்கத்திலேயே உள்ள நாச்சியார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திடீரென இந்தக் கூட்டம் கூட்டப்படவில்லை. அந்தக் காலத்தில் கோயில்களில் முழுக்க முழுக்க சமஸ்கிருத மந்த்ரங்களே அனுஷ்டானத்தில் இருந்து வந்ததால்... தமிழும் ஒலிக்க வேண்டும். வழிபாடுகள் தமிழிலும் நடைபெறவேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

அப்போது அறநிலையத்துறை ஆணையராக கே.எஸ். நரசிம்மன் இருந்தார் என்று ஞாபகம் (தொண்ணூறை கடந்துவிட்ட போதிலும் வேதத்தில் உள்ளவற்றையே ஞாபகப்படுத்தி விட முடிகிறது. ஆனால், மிகச் சமீபத்தில் நடந்தது சட்டென ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது).

முக்கியமான அதிகாரிகள் நாச்சியார் கோயிலில் கூடியிருந்தனர்.கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலிலிருந்து சிறீ ராமதேசிகாச்சார் ஸ்வாமிகளும் மற்ற அர்ச்சகர்களும் வந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் அடியேனும் அமர்ந்திருந்தேன். துணை ஆணையர்தான் கூட்டம் கூட்டப்பட்ட காரணத்தை விளக்கினார்.

“தமிழ்லயும் அர்ச்சனை பண்ணணும்னு முடிவெடுத்திருக்கோம். அதனால தமிழ்ல எப்படி எப்படி அர்ச்சனைகள் செய்யலாம்னு எழுதிக் கொடுங்கோ” என கேட்கிறார்.

இதைக் கேட்ட உடனேயே... அர்ச்சகர்கள் தரப்பில்...
“ஏங்காணும்... இப்படி திடீர்னு தமிழ்ல அர்ச்சனை பண்ணுன்னா எப்படி? எங்களுக்குனு சம்ப்ரதாயங்கள் இருக்கு. அனுஷ்டானங்கள் இருக்கு. அது எல்லாத்தையும் தமிழ்ல பண்ண முடியாதே...” என குரல் கொடுத்தனர்.

அப்போது அதிகாரிகளில் ஒருத்தர்...
“ஏன் சாமி... வீட்ல பேசும்போது உங்க மனைவிகிட்ட மகள்கிட்டயெல்லாம் சமஸ்கிருதத்துலயா பேசறீங்க. அதுபோல... பகவான்ட்டயும் தமிழ்லயே பேசுங்களேன்...” என்று இடைச்செருகல் செய்தார்.

துணை ஆணையர் என்னிடம் கேட்டார். அப்போது நானும் தமிழ் அர்ச்சனைகளை ஆதரித்து... ஒரு பேப்பரை எடுத்து அவர்களிடம் கொடுத்தேன்.அவர்கள் படித்துப் பார்க்கத் தொடங்கினார்கள்.

பகுதி – 67. `நாச்சியார்கோவிலில் நடந்து கொண்டிருக்கும் மீட்டிங்பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லையா?

சம்பவத்தைச் சொல்கிறேன். நீங்கள் அடுத்து பார்க்கப்போகும் `சப்ஜெட்டை முடிவு செய்துகொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தேன்.ஆம்... நாம் பார்க்கப்போவது வழிபாட்டில் தமிழ் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறது என்பதைத்தான்.

மறுபடியும், நாச்சியார் கோயில் மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம் வாருங்கள். துணை ஆணையர் `நாங்கள் கோயில்களில் தமிழில் அர்ச்சனை பண்ணுவதென்று முடிவெடுத்துள்ளோம். அதனால் நீங்கள் இனிமேல் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என கூற...எப்படி? எப்படி? தமிழில் அர்ச்சனை செய்வது எப்படி? என மொழிப் போர் நடத்த ஆரம்பித்தார்கள் சில பட்டாச்சார்யார்கள்.

ஆனால், அதிகாரிகளோ... ஏன்? தமிழில் அர்ச்சனை நடத்த முடியாதா? தமிழில் அர்ச்சனையை இதுவரை யாரும் எழுதவில்லையா? அப்படியானால் நீங்களே எழுதிக் கொள்ளுங்கள். இதை நாங்கள் கூட்டம் கூட்டும் முன்பே சொல்லியிருந்தோமே... எழுதி வந்துள்ளீர்களா என கேட்டனர்.

சில பட்டாச்சார்யார்கள் தாங்கள் எழுதி வந்ததை எடுத்துக் கொடுத்தனர். தமிழில் அர்ச்சனை செய்வது நடைமுறை சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தும் வகையில் அவர்கள் எழுதி வைத்திருந்ததை கொடுத்தனர். இது அதிகாரிகளுக்கு திருப்தியை தரவில்லை.

நானும் அந்த மீட்டிங்கில் இருந்தேன் அல்லவா, என்னிடம் தமிழ் அர்ச்சனை கேட்டார்கள். நானும் எழுதி வைத்திருந்ததை எடுத்துக் கொடுத்தேன். என்னவென்றால்...

``உயர்வு அற உயர் நலம் உடையவன் போற்றி...
மயர்வு அற மதிநலம் அருளினன் போற்றி...
அயர்வு அற அமரர்கள் அதிபதி போற்றி...

இப்படியாக செந்தமிழில் நாராயணனை போற்றும் நாமங்கள் 108 எழுதிக் கொடுத்தேன். இது நானாக யோசித்து எழுதவில்லை. தமிழ் அர்ச்சனை என்றதுமே என் நினைவுக்கு வந்தவர்கள் ஆழ்வார்கள்.

நான் எழுதிக் கொடுத்தது நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழியில் தொடங்கி சில பாசுரங்களை `சஹஸ்ரநாமம் பாணியில் எடுத்துக் கொடுத்ததுதான்.

சஹஸ்ரநாமம் என்றால்...?

இன்னும் பல பிராமணர்களின் வீடுகளிலும் விஷ்ணு பக்தர்களின் வீடுகளிலும் டேப் ரெக்காடர்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது சஹஸ்ரநாமம். பல பிராமணர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சஹஸ்ரநாமம் சொன்னால் புண்ணியம் என்ற கொள்கை முடிவில் இருக்கிறார்கள்.

அதாவது பகவானின் ஆயிரம் பெயர்களைக் கூறி அவனைப் போற்றிச் சொல்வதுதான் சஹஸ்ரநாமம். ஆயிரம் நாமங்கள். அதாவது சமஸ்கிருத நாமங்கள். அதுதான் சஹஸ்ரநாமம்.

``சுக்லாம் ப்ரதரம் விஷ்ணும்'' என்ற தனியனோடு ஆரம்பமாகி...
``விஸ்வம் விஷ்ணும் வஷட்காரோ பூத பவ்ய பவத் பிரபுஹு...''
என ஆரம்பிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் `பல ஸ்ருதி' என்ற சஹஸ்ரநாமத்தைப்பற்றி மற்ற க்ரந்தங்கள் சொல்லியுள்ள புகழுரையோடு முடிகிறது. இதைத்தான் பெருமாள் கோயில்களில் அர்ச்சனைக்காக பயன்படுத்துகிறார்கள்.

இதற்கு... தமிழ் அர்ச்சனை, தமிழ் பூஜை செய்யவேண்டும் என்றுதான் நான் ஆழ்வார்களில் தலைமையும் பெருமையும் உடையவரான காரிமாறன் என இலக்கிய பக்தர்களால் அழைக்கப்படும் நம்மாழ்வாரின் பாசுரங்களை தமிழில் நாம அர்ச்சனைக்கு எழுதிக் கொடுத்தேன்.

இதைப் படித்துப் பார்த்த அதிகாரிகளுக்கு பரம இன்பம். தமிழில் இவ்வளவு இனிமையான கருத்து அடர்த்தியுள்ள பக்தி கானங்கள் இருக்கும்போது ஏன் சமஸ்கிருத பாஷையை கட்டிக்கொண்டு நாம் அழவேண்டும்?

இதுபோல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தரும் நல்ல தமிழ் சொற்கோவைகளுடன் தமிழிலேயே இறை பூஜைகள் செய்யலாமே என்றனர். அப்படியே ஆகட்டும் என பணித்தனர்.

அதன்படி ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் அடிப்படையில் நான் எழுதிக் கொடுத்த 108 தமிழ் நாம வழிபாட்டு மொழிகள்... அப்போதே அர்ச்சகர்களின் எதிர்ப்போடு... 30-40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயிலில் அரங்கேற்றப்பட்டது.

சமஸ்கிருத சஹஸ்ரநாமம் கேட்டே பழக்கப்பட்டுப்போன சாரங்கபாணி பெருமாள்... அன்றுதான் தன் இனிய தமிழ் நாமங்களை - அர்ச்சனை போற்றி பாணியில் கேட்டு மகிழ்ந்தார்.

தாத்தாச்சாரியாரே... இப்ப திருப்தியா? என கேட்டார் என்னிடம் ஒரு அதிகாரி. நான் சொன்னேன், ``பெருமாளைக் கேட்டுப் பாருங்கோ, டபுள் திருப்தினு சொல்வார்'' என்று. அவர் மகிழ்ந்து சிரித்தார். இது ஒன்றும் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. மொழி விளையாட்டைப் பற்றித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்று சாரங்கபாணி கோயிலில் அரங்கேறிய தமிழ் அப்போதே பல கோயில்களிலும் அரங்கேறியதா? இன்னும் பல கோயில்களில் தமிழில் அர்ச்சனை பண்ணுங்கோ என்றால் நம்மை ஏற இறங்க பார்க்கிறார்களே. இவ்வளவு இனிமையான கருத்து அடர்த்தியுள்ள பக்தி கானங்கள் தமிழில் இருந்தும்... ``தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்'' என்று கோயில்களில் போர்டு வைத்திருக்கிறார்களே.... இந்த `உம்' ஏன் வந்தது? உம்...?-

ஏன்சாமி! வீட்லபேசற தமிழ்லயே பகவான்ட்டயும் பேசுங்களேன்

“ஏங்காணும்... இப்படி திடீர்னு தமிழ்ல அர்ச்சனை பண்ணுன்னா எப்படி? எங்களுக்குனு சம்ப்ரதாயங்கள் இருக்கு. அனுஷ்டானங்கள் இருக்கு. அது எல்லாத்தையும் தமிழ்ல பண்ண முடியாதே...” என குரல் கொடுத்தனர்.

“ஏன் சாமி... வீட்ல பேசும்போது உங்க மனைவிகிட்ட மகள்கிட்டயெல்லாம் சமஸ்கிருதத்துலயா பேசறீங்க. அதுபோல... பகவான்ட்டயும் தமிழ்லயே பேசுங்களேன்...”

அவனை வழிபடும் முறைகள் பலவிதம் என்றாலும் எல்லாம் சரியே.... அதனால் அவன் பெயரால் யாரும் யாரையும் தூஷிப்பதோ, நிந்திப்பதோ கூடாது...”


இந்து மதம் எங்கே போகிறது? - பகுதி – 66 -67,

பகுதி – 66. வேதம் அறியாதவர்கள் மற்ற மதத்தை துவேஷிப்பார்கள் என்பதை பாவ மன்னிப்பு மந்த்ரங்கள்மூலம் பார்த்தோம். இதை நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது தமிழ் பேப்பர்களையும், இங்கிலீஷ் பேப்பர்களையும் உற்றுப் பார்த்தேன். பெரிய பெரிய எழுத்துகளில் ஒரு செய்தியை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் பண்ணியிருந்தார்கள்.

அது என்னவென்றால், சிறீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாவத்தைப் போக்க ராமேஸ்வரத்துக்குப் போய் வந்தார் என்று ஒரு செய்தியைப் படித்தேன்.

ஒன்று பாவ மன்னிப்பையே துவேஷித்த ஸ்வாமிகள் இன்று தனக்காகவே பாவ நிவர்த்தி செய்யப் போகிறார் என்றால் அதை என்னவென்று சொல்வது.

இன்னொன்று... இந்த நேரத்தில் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது ப்ரம்மசூத்திரக்காரர் படைத்த ப்ரம்ம சூத்திரத்தில் முக்கியமான வரி வருகிறது.

“பஹிஸ்து உபயதாபி ஸ்பிரு தேஹே ஆசாரஸ...”
என்று போகும் இந்த சூத்திரம் சொல்வது என்ன?

ரிஷிகள், சந்நியாசிகள், யதிகள், ஞானிகள் பாவம் பண்ணினால் அவர்களுக்கு அந்தப் பாவத்திலிருந்து விமோசனம் கிடையாது. ப்ராயசித்தம் கிடையாது. அவர்கள் செய்த பாவம் பாவம்தான். அது தீராது, போகாது என்கிறார் ப்ரம்ம சூத்ரக்காரர்.

மூத்தோர் சொல் அமிர்தங்கள் இப்படியிருக்க பாவ மன்னிப்பை அடிப்படையாக வைத்து மற்ற மதங்களை தூஷிப்பது வேதத்துக்கே அடுக்கவில்லை அதர்வண வேதம் சொல்கிறது பாருங்கள்:
“சமேத விஷ்வா வசஸா
பதிந்திவிபு யயேஹ
விபுஹீ யயேஹ
விபுஹீ அதிதிஹி தனனாம்
சபூர்யஹா நூதனம் ஆளவாசதீ
திம்வர்த்தனிஹி அனுவாவ்ருத்தே
ஏகையித் பூரி...”

மக்களே ஒன்று கூடுங்கள். கடவுள் ஒருவன்தான். அவனை யார் கூப்பிடுகிறார்களோ... அவர்களின் வீட்டுக்கு போவான். அவன் பழைமைக்கும், பழைமையானவன். புதுமைக்கும் புதுமையானவன். கடவுள் ஒருவன் என்றாலும், அவனை வழிபடும் வழிகள் லோகத்தில் பல்வேறு பட்டதாக இருக்கின்றன.

அவனை வழிபடும் முறைகள் பலவிதம் என்றாலும் எல்லாம் சரியே.... அதனால் அவன் பெயரால் யாரும் யாரையும் தூஷிப்பதோ, நிந்திப்பதோ கூடாது...”

இது அதர்வண வேதம் சொல்லும் அறிவுரை.
இந்த வேத மந்த்ரம் அறியாதவர்கள்தான் அல்லது அறிந்தும் அறியாததுபோல இருப்பவர்கள்தான் பிற மதங்களை தூஷிப்பார்கள். பாவத்தை சம்பாதிப்பார்கள்.

பாவம் பற்றி விஸ்தாரமாகவே பார்த்தாயிற்று. அடுத்து உங்களுக்கு ஒரு சம்பவத்தை சொல்கிறேன். அதிலிருந்து நாம் அடுத்துப் பார்க்கப் போகும் தலைப்பு என்னவென்று உங்களுக்கும் புரிந்துவிடும்.

சுமார் 30 - 40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்துக்கு பக்கத்திலேயே உள்ள நாச்சியார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திடீரென இந்தக் கூட்டம் கூட்டப்படவில்லை. அந்தக் காலத்தில் கோயில்களில் முழுக்க முழுக்க சமஸ்கிருத மந்த்ரங்களே அனுஷ்டானத்தில் இருந்து வந்ததால்... தமிழும் ஒலிக்க வேண்டும். வழிபாடுகள் தமிழிலும் நடைபெறவேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

அப்போது அறநிலையத்துறை ஆணையராக கே.எஸ். நரசிம்மன் இருந்தார் என்று ஞாபகம் (தொண்ணூறை கடந்துவிட்ட போதிலும் வேதத்தில் உள்ளவற்றையே ஞாபகப்படுத்தி விட முடிகிறது. ஆனால், மிகச் சமீபத்தில் நடந்தது சட்டென ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது).

முக்கியமான அதிகாரிகள் நாச்சியார் கோயிலில் கூடியிருந்தனர்.கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலிலிருந்து சிறீ ராமதேசிகாச்சார் ஸ்வாமிகளும் மற்ற அர்ச்சகர்களும் வந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் அடியேனும் அமர்ந்திருந்தேன். துணை ஆணையர்தான் கூட்டம் கூட்டப்பட்ட காரணத்தை விளக்கினார்.

“தமிழ்லயும் அர்ச்சனை பண்ணணும்னு முடிவெடுத்திருக்கோம். அதனால தமிழ்ல எப்படி எப்படி அர்ச்சனைகள் செய்யலாம்னு எழுதிக் கொடுங்கோ” என கேட்கிறார்.

இதைக் கேட்ட உடனேயே... அர்ச்சகர்கள் தரப்பில்...
“ஏங்காணும்... இப்படி திடீர்னு தமிழ்ல அர்ச்சனை பண்ணுன்னா எப்படி? எங்களுக்குனு சம்ப்ரதாயங்கள் இருக்கு. அனுஷ்டானங்கள் இருக்கு. அது எல்லாத்தையும் தமிழ்ல பண்ண முடியாதே...” என குரல் கொடுத்தனர்.

அப்போது அதிகாரிகளில் ஒருத்தர்...
“ஏன் சாமி... வீட்ல பேசும்போது உங்க மனைவிகிட்ட மகள்கிட்டயெல்லாம் சமஸ்கிருதத்துலயா பேசறீங்க. அதுபோல... பகவான்ட்டயும் தமிழ்லயே பேசுங்களேன்...” என்று இடைச்செருகல் செய்தார்.

துணை ஆணையர் என்னிடம் கேட்டார். அப்போது நானும் தமிழ் அர்ச்சனைகளை ஆதரித்து... ஒரு பேப்பரை எடுத்து அவர்களிடம் கொடுத்தேன்.அவர்கள் படித்துப் பார்க்கத் தொடங்கினார்கள்.

பகுதி – 67. `நாச்சியார்கோவிலில் நடந்து கொண்டிருக்கும் மீட்டிங்பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லையா?

சம்பவத்தைச் சொல்கிறேன். நீங்கள் அடுத்து பார்க்கப்போகும் `சப்ஜெட்டை முடிவு செய்துகொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தேன்.ஆம்... நாம் பார்க்கப்போவது வழிபாட்டில் தமிழ் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறது என்பதைத்தான்.

மறுபடியும், நாச்சியார் கோயில் மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம் வாருங்கள். துணை ஆணையர் `நாங்கள் கோயில்களில் தமிழில் அர்ச்சனை பண்ணுவதென்று முடிவெடுத்துள்ளோம். அதனால் நீங்கள் இனிமேல் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என கூற...எப்படி? எப்படி? தமிழில் அர்ச்சனை செய்வது எப்படி? என மொழிப் போர் நடத்த ஆரம்பித்தார்கள் சில பட்டாச்சார்யார்கள்.

ஆனால், அதிகாரிகளோ... ஏன்? தமிழில் அர்ச்சனை நடத்த முடியாதா? தமிழில் அர்ச்சனையை இதுவரை யாரும் எழுதவில்லையா? அப்படியானால் நீங்களே எழுதிக் கொள்ளுங்கள். இதை நாங்கள் கூட்டம் கூட்டும் முன்பே சொல்லியிருந்தோமே... எழுதி வந்துள்ளீர்களா என கேட்டனர்.

சில பட்டாச்சார்யார்கள் தாங்கள் எழுதி வந்ததை எடுத்துக் கொடுத்தனர். தமிழில் அர்ச்சனை செய்வது நடைமுறை சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தும் வகையில் அவர்கள் எழுதி வைத்திருந்ததை கொடுத்தனர். இது அதிகாரிகளுக்கு திருப்தியை தரவில்லை.

நானும் அந்த மீட்டிங்கில் இருந்தேன் அல்லவா, என்னிடம் தமிழ் அர்ச்சனை கேட்டார்கள். நானும் எழுதி வைத்திருந்ததை எடுத்துக் கொடுத்தேன். என்னவென்றால்...

``உயர்வு அற உயர் நலம் உடையவன் போற்றி...
மயர்வு அற மதிநலம் அருளினன் போற்றி...
அயர்வு அற அமரர்கள் அதிபதி போற்றி...

இப்படியாக செந்தமிழில் நாராயணனை போற்றும் நாமங்கள் 108 எழுதிக் கொடுத்தேன். இது நானாக யோசித்து எழுதவில்லை. தமிழ் அர்ச்சனை என்றதுமே என் நினைவுக்கு வந்தவர்கள் ஆழ்வார்கள்.

நான் எழுதிக் கொடுத்தது நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழியில் தொடங்கி சில பாசுரங்களை `சஹஸ்ரநாமம் பாணியில் எடுத்துக் கொடுத்ததுதான்.

சஹஸ்ரநாமம் என்றால்...?

இன்னும் பல பிராமணர்களின் வீடுகளிலும் விஷ்ணு பக்தர்களின் வீடுகளிலும் டேப் ரெக்காடர்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது சஹஸ்ரநாமம். பல பிராமணர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சஹஸ்ரநாமம் சொன்னால் புண்ணியம் என்ற கொள்கை முடிவில் இருக்கிறார்கள்.

அதாவது பகவானின் ஆயிரம் பெயர்களைக் கூறி அவனைப் போற்றிச் சொல்வதுதான் சஹஸ்ரநாமம். ஆயிரம் நாமங்கள். அதாவது சமஸ்கிருத நாமங்கள். அதுதான் சஹஸ்ரநாமம்.

``சுக்லாம் ப்ரதரம் விஷ்ணும்'' என்ற தனியனோடு ஆரம்பமாகி...
``விஸ்வம் விஷ்ணும் வஷட்காரோ பூத பவ்ய பவத் பிரபுஹு...''
என ஆரம்பிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் `பல ஸ்ருதி' என்ற சஹஸ்ரநாமத்தைப்பற்றி மற்ற க்ரந்தங்கள் சொல்லியுள்ள புகழுரையோடு முடிகிறது. இதைத்தான் பெருமாள் கோயில்களில் அர்ச்சனைக்காக பயன்படுத்துகிறார்கள்.

இதற்கு... தமிழ் அர்ச்சனை, தமிழ் பூஜை செய்யவேண்டும் என்றுதான் நான் ஆழ்வார்களில் தலைமையும் பெருமையும் உடையவரான காரிமாறன் என இலக்கிய பக்தர்களால் அழைக்கப்படும் நம்மாழ்வாரின் பாசுரங்களை தமிழில் நாம அர்ச்சனைக்கு எழுதிக் கொடுத்தேன்.

இதைப் படித்துப் பார்த்த அதிகாரிகளுக்கு பரம இன்பம். தமிழில் இவ்வளவு இனிமையான கருத்து அடர்த்தியுள்ள பக்தி கானங்கள் இருக்கும்போது ஏன் சமஸ்கிருத பாஷையை கட்டிக்கொண்டு நாம் அழவேண்டும்?

இதுபோல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தரும் நல்ல தமிழ் சொற்கோவைகளுடன் தமிழிலேயே இறை பூஜைகள் செய்யலாமே என்றனர். அப்படியே ஆகட்டும் என பணித்தனர்.

அதன்படி ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் அடிப்படையில் நான் எழுதிக் கொடுத்த 108 தமிழ் நாம வழிபாட்டு மொழிகள்... அப்போதே அர்ச்சகர்களின் எதிர்ப்போடு... 30-40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயிலில் அரங்கேற்றப்பட்டது.

சமஸ்கிருத சஹஸ்ரநாமம் கேட்டே பழக்கப்பட்டுப்போன சாரங்கபாணி பெருமாள்... அன்றுதான் தன் இனிய தமிழ் நாமங்களை - அர்ச்சனை போற்றி பாணியில் கேட்டு மகிழ்ந்தார்.

தாத்தாச்சாரியாரே... இப்ப திருப்தியா? என கேட்டார் என்னிடம் ஒரு அதிகாரி. நான் சொன்னேன், ``பெருமாளைக் கேட்டுப் பாருங்கோ, டபுள் திருப்தினு சொல்வார்'' என்று. அவர் மகிழ்ந்து சிரித்தார். இது ஒன்றும் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. மொழி விளையாட்டைப் பற்றித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.


சிவனின் நெற்றியில் ரத்தப் போக்கு எப்படி ஏற்பட்டது? திலகத்தின் திருக்கதை!

சிவனின் நெற்றியில் ரத்தப் போக்கு எப்படி ஏற்பட்டது? சிவன் தன் ஜடையினில் இருக்கும் கங்கையின் மாதவிடாய் சிவன் நெற்றியில் வழிந்ததாம்.

வரப்போகுதய்யே . . . ! கேட்க ஆபாசமானது, அந்தத் திலகத்தின் திருக்கதை!

மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுதய்யே, என்று பாடினாராமே நந்தன், அந்தநாள் வருகிறது. ஊர்பலவற்றிலே, உள்ளே கிடக்கும் உற்சவமூர்த்திகள், வெளிக்கிளம்புவர்!திருவாதிரை ஒருவாய்க்களி, என்ற பேச்சும், திரும்பிப் பார்த்தால் உலக்கைத்தடி என்ற ஏசலும், நடக்கும். அத்திருவிழாவிலே கலந்துகொள்பவர்கள், சேவை செய்துவிட்டு, நெற்றியிலே அர்ச்சகர் அளிக்கும் திருச்சாந்தினை அணிந்து வீடு திரும்புவர், மோட்சத்திற்கு அச்சாரம் தந்துவிட்டதாகக் கருதிக்கொண்டு, அந்த விழாவிலே, திலகமிடும் செயல்புரியும் சீலர்கட்கு, அதை ஒட்டியுள்ள புராணம் தெரியுமோ, என்பது சந்தேகந்தான். தெரிந்தால், தன்மானமுள்ளவன், இத்தகைய திருவிழாவிலே கலந்துகொள்ளமாட்டன். கேட்க ஆபாசமானது, அந்தத் திலகத்தின் திருக்கதை!

சிவனுக்கும் காளிக்கும், நர்த்தனம், நடந்ததாம் முன்பொருபோது. சளைக்காமல் சதிராடிய காளியை எப்படியேனும் தோற்கடிக்க வேண்டுமென்ற கருத்துடன் தோடுடைய செவியன், காலைத் தூக்கி நின்று ஆடினாராம். ஒரு ஆடவன், பெண்ணின் எதிரே காலைத்தூக்கி நின்று ஆடினால், காட்சியின் கோரத்தையும் அதைக்காண நேரிடும் அம்மையின் கண்ணிலும் கருத்திலுமுண்டாகும் மிரட்சியையும் விவரிக்க வேண்டுமா! அதிலும், அவர் எப்படி எப்படி ஆடுகிறாரோ, அப்படியெல்லாம் அம்மையும் ஆடவேண்டும் என்பதே நர்த்தனப்போட்டியிலே முக்கியாம்சம்; என்ன செய்வாள் காளி? எப்படிக் காலைத்தூக்கி ஆடுவது? தோற்றாளாம்; இந்தக்கேவலமான முறையில் கெலித்த கடவுள், களித்தாராம், இன்றும் பக்தர்கள் இதைத்தான், காலைத் தூக்கி நின்றாடிய தெய்வமே! என்று பாடிக் களிக்கின்றனர்.




ஆபாசத்தின் உச்சம். துளசி பிரசாதமானது எப்படி?

 

 

துளசிக்கு மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் இந்தக் காரணங்களாலெல்லாம் துளசி பிரசாதமாகிவிடவில்லை.

பெருமாள் கோவிலில் துளசி பிரசாதமானது எப்படி? துளசி பிரசாதம் ஆன புராணக் கதை பலருக்குத் தெரியாது. இதில் தத்துவார்த்தமோ, ரகசிய அர்த்தமோ எதுவும் கிடையாது.

இராமனின் அவதாரமும், இராமாயணமும் உண்டாவதற்குத் துளசி பற்றிய கதையும் காரணம்.

பெருமாள் கோவில்களில் துளசி பிரசாதமானது எப்படி? திருத்துழாய் என்று வைணவர்கள் துளசியைப் போற்றுகிறார்கள்.

துளசிக்கு மருத்துவ குணங்கள் உண்டு. தலையில் பேன் இருந்தால் தலையணை உறைக்குள் துளசியை அடைத்து அதன்மீது படுத்தால் பேன் உதிர்த்து விடும். இருமல், சளிக்குச் சுக்குக் கஷாயத்தோடு துளசியைச் சேர்த்துச் சாப்பிடுவதும் உண்டு.

ஆனால் இந்தக் காரணங்களாலெல்லாம் துளசி பிரசாதமாகிவிடவில்லை.

துளசி பிரசாதம் ஆன புராணக் கதை பலருக்குத் தெரியாது. இதில் தத்துவார்த்தமோ, ரகசிய அர்த்தமோ எதுவும் கிடையாது.

அவ்வாறு நல்ல வாய்ப்பாக எந்தப் பண்டிதரும் சொல்லவுமில்லை. துளசி பற்றிய புராண மூடநம்பிக்கைக் கதை புராணத்திலுள்ளதுதான்.

 


எனவே துளசிபற்றிய மூடக்கதை என்று சொல்லும் பகுத்தறிவாளரைக் குறை கூறக்கூடாது. இதில் இன்னொரு சுவையான தகவலும் கூடுதலாக உண்டு.

இராமனின் அவதாரமும், இராமாயணமும் உண்டாவதற்குத் துளசி பற்றிய கதையும் காரணம். துளசி பற்றிய கதை

பகுத்தறிவுவாதிகளோ, வரலாற்று ஆசிரியர்களோ கற்பனையாகப் புனைந்த கதையும் அன்று. சைவ புராணங்களில் கந்த புராணத்தில் உள்ளது. இந்தப் புராணத்தை எடுத்து விட்டால் சைவமில்லை என்று கூறுமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுவர்.

இனி கதைக்கு வருவோம்.

விருத்தாசுரன் என்கிற ஒரு வலிமை மிக்கவன் இருந்தான். அவனுடைய மனைவி பெயர் விருதை என்பதாகும். விருத்தாசுரனின் துணைவி அழகிலும் கற்பிலும் சிறந்தவள்.

விருதையை மகாவிஷ்ணு கண்டு மோகித்து வசப்படுத்தத் தந்திரங்கள் பல செய்தும், தம்முடைய கடவுள் சக்தி எல்லாம் காட்டியும் முடியாமல் சூரனிடம் சண்டையிட்டார். சூரன் மகாவிஷ்ணுவைவிட வலிமைமிக்கவன் ஆதலால், சூரனிடம் சண்டையிட்ட அவர் தோற்று ஓடி விட்டார்.

ஓடியவர் சிவனைக் கண்டு அவரிடம் தன் ஆசையையும் கவலையையும் தெரியப்படுத்தினார். சிவன் சூரனிடம் சண்டையிட்டுச் சூரனைக் கொன்றார். விஷ்ணு சூரன் உடலுக்குள் புகுத்து கொண்டார். விருதையிடம் திருட்டுத்தனமாகக் கலந்து இருந்தார்.

விஷ்ணுதான் தன் புருஷன் உடலில் புகுந்து திருட்டுத்தனமாகத் தன்னைக் கூடி விட்டான் அன்று தெரிந்து விஷ்ணுவை நீ அயோக்கியனினும் அயோக்கியன். நீ ஒரு சண்டாளன். நீ செய்த காரியத்திற்கு மன்னிப்புக் கிடையாது.

ஆகையால் நீ மனிதனாகப் பிறந்து உன் மனைவியை அசுரகுலத்தவன் தூக்கிச் சென்று சிறை வைத்துக் கற்பை அழிக்கும்படியாகச் சாபம் கொடுக்கிறேன் என்று சாபம் கொடுத்துவிட்டாள்.

பத்தினி சாபம் பலிக்கும் என்று சொல்வார்கள் அல்லவா? எனவே விருதையின் சாபம் பலித்தது.

சாபம் கொடுத்த விருதை அக்கினியில் விழுந்து சாம்பலானாள். மகாவிஷ்ணுவுக்கோ விருதை சாம்பலான பின்னரும் மோகம் தணியவில்லை.

விருதையின் மோக ஆசையால் அந்தச் சாம்பலில் விழுந்து புரண்டு கிடந்தார்.

இந்த அவமானத்தை விஷ்ணுவின் சகோதரியும், சிவனின் மனைவியுமான பார்வதி பொறுக்காமல் துளசி என்னும் தன்னுடைய தாதிப் பெண்ணை அனுப்பி விஷ்ணுவின் சோகங்களை எல்லாம் தீர்த்து அழைத்து வருமாறு அனுப்பினாள்.

அவ்வாறே துளசி என்னும் பெண் சென்று திருமாலின் சோகங்களையெல்லாம் நீக்கி, அவரை அழைத்து வந்தாள். அந்தத் துளசி என்னும் பெண்ணை மகாவிஷ்ணு தம் மார்பில் வைத்துக் கொண்டார்.

இவ்வாறு இராம அவதாரமும், இராமாயணமும் உண்டாவதற்கு இந்தக் கதை அடிப்படையாயிற்று.

ஜனகாதி மகரிஷிகள் விஷ்ணுவின் காவற்காரர்களான துவாரபாலகர்களுக்குக் கொடுத்த சாபத்தால் விஷ்ணு ராமராக அவதாரம் செய்தார் என விஷ்ணு புராணம் கூறும்.


எப்படியாயினும் சாபத்தால் விஷ்ணு அவதாரம் செய்தார் என்று ஆகிறது.

பார்வதியின் பணிப்பெண் துளசி விருதையின் பிணச் சாம்பலில் சோகத்தில் புரண்டு உருண்ட மகாவிஷ்ணுவின் சோகத்தைத் தீர்த்தமையால் துளசியை மகாவிஷ்ணு மார்பில் அணிந்து கொண்டார்.

அதுபோல் எல்லாரும் துளசியை அணிந்து கொண்டால் எல்லாவித சோகத்தினின்றும் சுகம் பெறலாம் என்று நினைத்து வைணவ பக்தர்கள் துளசியை அணிந்து கொள்கிறார்கள்.

மகாவிஷ்ணு பார்வதி தேவியின் அண்ணனானபடியால் அவருக்குப் பணிப் பெண் துளசி கிடைத்தது.

அவ்விதம் எல்லாருக்கும் கிடைக்க வழியில்லாததால் விஷ்ணுவின் பெயர் சொல்லித் துளசித் தழையை அணிந்து கொள்கிறார்கள்.

வைதீக மதம் பொய்யைப் புளுகி வயிறு வளர்க்கும் கதையில் இதுவும் ஒன்று என்று கூறுவார் கைவல்யம் சுவாமிகள்.

இதுவரை புராணக் கதை கேட்டோம். துளசியை நம்பி தஞ்சாவூர் ஒழிந்த உண்மையான வரலாறு ஒன்று இருக்கிறது.

இது நாயக்க மன்னர்கள் காலத்து வரலாறு.தஞ்சாவூரை நாயக்க மன்னர்கள் ஆண்டார்கள். மதுரையை ஆண்டவர்கள் மதுரை நாயக்கர்கள். தஞ்சையை ஆண்டவர்கள் தஞ்சை நாயக்கர்கள். தஞ்சை நாயக்கர்கள் வைணவர்கள். அதாவது நாமக்காரர்கள்.

எனவே இந்த வைணவர்களின் அரசாட்சியை ஒழித்துக் கட்ட சைவர்கள், மராத்தியர்களுடன் பேசித் தஞ்சாவூர்மீது படையெடுத்து வரும்படி செய்தார்கள்.

மராத்தியர்களுக்குச் சைவர்கள் கூறிய யோசனை இது. நவராத்திரி சமயம் தஞ்சைமீது படையெடுங்கள். அதுதான் சரியான சமயம். ஏனென்றால் நவராத்திரியின் போது ஆயுதங்கள் எல்லாம் பூசையில் இருக்கும். அதை எடுக்காமலிருக்க ஏற்பாடு செய்கிறோம் என்றும் கூறினார்கள்.

அதுபடி மராத்தியர்கள் நவராத்திரியின் போது வந்தார்கள். மராத்தியர்கள் படை எடுத்து வந்திருக்கிறார்கள்; தடுத்து நிறுத்த வேண்டும் என்று தஞ்சை நாயக்க மன்னரின் தளபதிகள் சொன்னார்கள். ஆயுதமோ இல்லை, பூசையில் இருக்கிறது. என்ன செய்வது?

குருக்களையும் புரோகிதர்களையும் கேட்டார்கள். குருக்களின் யோசனை எப்படி இருக்கும்? குருக்கள் சொன்னார்: ஆயுதத்தைப் பூசையில் வைத்திருக்கிறோம். எனவே ஆயுதத்தை எடுத்தால் அம்பாள் கோபிப்பாள், மகாதோஷம் என்றார்.

மன்னர் கேட்டார்: மராத்தியர் படை எடுத்து வந்திருக்கிறார்களே, தடுக்க என்ன வழி?

குருக்கள் அருமையான ஆன்மிக யோசனை ஒன்று சொன்னார். பூசைக்கு ஏராளமான துளசி வந்திருக்கிறது. அதைக் கோட்டை வாசலில் போட்டு விட்டால் அதைத் தாண்டி எதிரிகள் வர மாட்டார்கள். துளசியைத் தாண்டுவது மகாபாவம் என்றனர்.

இவ்வாறு புரோகிதர்களின் புளுகை அன்றும் நாயக்க மன்னர்களும், அவருடைய பக்தர்களும் நம்பினார்கள்.

அங்குள்ள துளசியையெல்லாம் கோட்டை வாயிலில் போட்டார்கள். துளசியின் விசேடம்(!) மராத்தியனுக்குத் தெரியுமா?

தெரியவில்லை. மராத்தியர்களிள் குதிரைகளுக்கும் தெரியவில்லை. கோட்டைக்குள் மராத்தியர்கள் மளமளவென்று வெள்ளம் போல் புகுந்தார்கள். தஞ்சை நாயக்கர்களின் தலைகளைப் பனங்காய்களைப் போல் சீவித் தள்ளினார்கள். தஞ்சை நாயக்கர் ஆட்சி மறைந்து நாயக்கர் ஆட்சி இருந்த இடத்தில் மராத்தியர் ஆட்சி ஏற்பட்டது.

அன்று துளசியின் பித்தலாட்டத்தைச் சொல்ல தந்தை பெரியார் போல் வேறு ஒருவரும் இல்லை. இராப்பகலாய் இருபது நாள் கொள்ளையடித்தார்கள்.

துளசி பார்த்துக் கொண்டிருந்தது. துளசிக்குள்ளிருந்த அம்பாளும், சக்திகளும் பட்ட அடியால் அங்கேயே மாண்டு போனார்கள்.

தஞ்சை நாயக்கர் ஆதிக்கம் துளசிப் பிரசாதத்தின் மகிமையால் நம்பி மன்னர்களின் அலுவலர்கள் தம் கடமையைக் கைவிட்டனர்.

எனவே அந்தக் காலத்துப் புலவன் பார்ப்பான் பெருத்து வடுகன் துரைத்தனம் பாழ்ந்ததுவே என்று பாடினார். பிரசாதமும், பூசையும் மலிந்து விட்டது என்பதுதான் இதன் பொருள்


பார்வதியின் மாத விலக்கு . யோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள்.

பெண் குறி வழி பாடு சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரியது.பகவதி வீட்டுவிலக்காகறாங்கன்னு நடக்கும் விழா.
இப்படியெல்லாம் வணங்குபவன் காட்டுமிராண்டிதானே? 
அஸ்ஸாமில் பார்வதிக்கு வருடம் ஒரு முறை மாதவிலக்கு. கேரளாவில் பார்வதிக்கு மாதாமாதம் மாத விலக்கு.

இது ஓரு யோனி பூஜை.
பிறப்பு உறுப்புகளை வழிபடும் பழக்கம். இப்படியெல்லாம் வணங்குபவன் காட்டுமிராண்டிதானே?

பெண் குறி வழி பாடு, சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரியது.


இதற்கு சொல்லப்படும் கதை.

கைலாயத்திலிருக்கும் சிவன் சொன்னதைக் கேட்காமல் அவர் மனைவி பார்வதி தேவி தன் தந்தை தக்‌ஷனின் யாகத்தில் கலந்து கொள்கிறாள். அவமானப்படுகிறாள். அது பொறுக்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்
அவள் தற்கொலையைத் தடுக்க ஓடி வரும் சிவன் 51 பாகங்களாக சிதறிப்போன தன் தேவியின் உடலில் யோனி விழுந்த இடம் தெரியாமல் அல்லாடுகிறார். காமதேவன் கண்டுபிடித்து வழிபடுகிறான். அந்த யோனி வழிபாட்டு ஸ்தலம் தான் இக்கோவிலாம்!

அசாம் மாநிலம் - கௌஹாத்தியில் நீலாச்சல் மலைச் சாரலில் அமைந்துள்ளது 'காமாக்யா' சக்தி பீடம். அன்னை சதி தேவி (பார்வதி) யின் யோனி பாகம் விழுந்த யோனி பீடமாய் இத்தலம் அறியப்படுகிறது. சக்தி பீடங்கள் அனைத்திற்கும் முதன்மையானது யோனி பீடமே என்று புராணங்கள் அறுதியிட்டுப் போற்றுகின்றன.



அதனால் அந்தயோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள். கற்பாறையில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தப் பாறைப் பகுதியில் நீர் கசிந்து வழிந்து கொண்டிருக்கும்.

ஆண்டுக்கு ஒரு முறை இந்தப் பெண் குறியில் `மாத விலக்கு’ ஏற்படுகிறதாம். ஆண்டுக்கொரு முறை நான்கு நாட்கள் உதிரப் போக்கு ஏற்படுவதால் இதை மாத விலக்கு என்று சொல்லக் கூடாது. வருஷ விலக்கு எனலாம். இந்தக்கோவிலில் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில் வாசலை அடைத்துவிடுவார்கள். தேவி தீட்டாகும் நாட்கள். அந்நாட்களில் திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது அந்த 3 நாட்கள் முடிந்தப் பின் மீண்டும் கோவில் வாசல் திறக்கும்.

இந்த மூன்று நாள்களிலும் அந்த நீரில் சிவப்பு சாயத்தைக் கலக்கிச் சிவப்பு நீர் வழிவது போல ஏற்பாடு செய்கிறார்கள்.

`ருது ரத்தம் போலக் காட்சியளிக்கச் செய்கிறார்களாம். மாதாந்திர ருதுவுக்குப் பதில் கடவுளச்சிக்கு வருடாந்திர ருதுதானாம் !

பார்வதியின் மாதவிடாயாக பக்தர்களுக்கு (புனித நீராக) கொடுப்பார்கள்.

உலகெங்கும் இருந்து இந்த மூன்று நாள்களிலும் பத்து லட்சம் பக்தர்கள் அங்கே கூடுவார்களாம். சாதுக்களும், சன்னியாசிகளும், சன்னியாசினிகளும் இங்கே கூடுவார்களாம்.

அந்த மூன்று நாள்களாம் இந்த மூன்று நாள்களும்! பூஜை, புனஸ்காரம் எதுவும் இந்த மூன்று நாள்களில் கிடையாதாம். பூசாரிகளும் பக்தர்களும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த மூன்று நாள்களில் செவ்வாடைதான் அணிய வேண்டுமாம் (மேல் மருவத்தூர் போல) கடவுளச்சியான `காமாக்யாவும் செவ்வாடை தான் அணியுமாம்.

கைம்மையர், பிரம்மச்சாரிகள், பார்ப்பனர்கள் இந்த மூன்று நாள்களில் சமைத்த உணவைச் சாப்பிடக் கூடாதாம். திருமணமாகாத பெண்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டுமாம்.மூன்று நாள்கள் முடிந்ததும் எல்லாரும் வீடுகளைக் கழுவி, துணிகளைத் துவைத்து, ஏனங்களைக் கழவி, வீடு முழுக்க நீர் தெளித்துத் தூய்மைப்படுத்த வேண்டுமாம்.

மூன்றாம் நாள் கடவுளச்சிக்கு `சடங்கு செய்யப்பட்டுக் கழுவிக் குளிப்பாட்டி அதன்பிறகுதான் கோயில் கதவுகள் திறக்கப்படுமாம்.இத்தனை மூடத்தனங்கள் போதாது என்று மூடத்தனத்தின் உச்சமே இனிமேல்தான்.
அப்போது இக்கோயில் நான்கு நாள்களுக்கு மூடப்படுகிறது..கோயில் கிணற்றின் மேல் சிகப்புத் துணி போர்த்தப்படுகிறது. நான்கு நாள்கள் முடிந்ததும் நாடெங்கும் வந்திருந்த பக்தர்களுக்கு சிவப்புத்துணியில் ஒரு பகுதி அல்லது ஒரு நூலிழை பிரசாதமாக வழங்கப்படுகிறது. மாதாவின் மாத விலக்கு ரத்தம் படிந்தது எனக் கருதப்படும் இது அவர்களுக்கு `மாலை’ யாம்!

இதை வாங்கிப் பூஜை செய்து வந்தால் - நினைப்பதெல்லாம் நடந்து விடுமாம்! அதனாலே அதை வாங்க ஏகப்பட்ட போட்டி, நெரிசல்!

இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. கருவறையிலேயே உயிர்ப்பலி கொடுக்கின்றனர். பலி கொடுத்த ஆடு, கோழி போன்றவற்றின் தலைகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.

19-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோயிலில் மனிதர்களைப் பலி தருவது வழக்கம். பிரிட்டிஷ் அரசு தடை செய்து விட்டது.

கேரளாவில் செங்கண்ணூர் பகவதி அம்மனுக்கும் மாதா மாதம் 'அந்த' மூன்று நாட்கள் !

அசாமில் தான் அப்படி என்றால் தமிழ்நாட்டிலும் இதெல்லாம் உண்டு. இன்றைய கேரளாவில் இருக்கும் செங்கனூர் பகவதி அம்மன் கோவில் கேரளாவில் இருக்கும் சடங்குகளும் வழிபாடுகளும் தமிழருக்கானவைதான். கேரளா என்றவுடன் இன்றைய முல்லைப்பெரியாறு கேரளாவை நினைக்கவேண்டாம்.

கேரளாவில் செங்கண்ணூர் அம்மன் என்ற கோயில் ஒன்று இருக்கிறது. இந்த அம்மனுக்கு மாதா மாதம் மாதவிடாய் வருமாம். அதனால்தான் அந்த அம்மனை யாரும் ஒளிப் படம் (போட்டோ) எடுக்க அனுமதிப்பதில்லையாம்.

அதெல்லாம் சரி.. மாதா மாதம் மாதவிடாய் வரும் இந்தப் பகவதி அம்மன் கோயிலுக்காவது பெண் அர்ச்சகர் ஒருவரை நியமிக்கக் கூடாதா?

மாதவிடாய் வருவதால் ஏற்படும் எல்லாவற்றையும் கவனித் துக் கொள்ள தடியனான ஆண் அர்ச்சகன்தான் இருக்க வேண் டுமா? இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது - இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்!

சிலப்பதிகாரம் செங்குட்டுவன் காலத்து மலையாள பூமி. இந்தப் பகவதி அம்மன் கோவில் தீட்டுத்துணி ரொம்பவும் பிரசித்திப் பெற்றது. இந்த தீட்டுத்துணி எவரிடமிருக்கிறதோ அவருக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு என்று கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமாம்.

அதனால் தான் முதலமைச்சர் முதல் நீதிபதிகள் வரை இந்த தீட்டுத்துணியை வாங்கிச் செல்ல போட்டி. பலவருடங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

செங்கண்ணூர் மஹாதேவர் க்ஷேத்ரம். சபரிமல எடத்தாவளம் , செங்கண்ணூர் தேவஸ்வம் என்ற போர்டு. சபரிமலைக்குப்போகும் பக்தர்கள் அனைவருமே பயணத்தினிடையில் இங்கு வந்து, மஹாதேவரையும் பகவதியையும் தரிசனம் செஞ்சுட்டுத்தான் போவாங்களாம்.

பாரதப்போரில் அசுவத்தாமா (என்ற யானை) இறந்துவிட்டது உண்மைன்னு, பொய் சொன்ன தருமர், இங்கே வந்து மஹாதேவரையும் பகவதியையும் வழிபட்டு தன் பாவத்தை மன்னிக்கும்படி வேண்டினாராம்.

அம்பத்தியோரு துண்டுகளா வெட்டப்பட்ட சதியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களைத்தான் சக்தி பீடம் என்று சொல்றாங்க. சதியின் அடிவயிற்றுக்குக் கீழே உள்ள அரைப்பகுதி விழுந்த இடம் இது என்று கோவில் சொல்லுது.. அஸ்ஸாமில் இருக்கும் காமாக்யா கோவிலையும் இப்படி இதே பாகம் விழுந்த இடமுன்னுதான் சொல்றாங்க. உடலைத் துண்டாக்கி எறியப்பட்ட போது இடுப்பின் கீழுள்ள அரைப்பகுதி இங்கேயும் அஸ்ஸாமிலுமா அரை அரையா விழுந்துச்சுன்னு வச்சுக்கலாம்.

இந்தக்கோவிலில் ஒரு சிறப்புத்திருவிழா நடக்குது. த்ரிப்பூத்தராட்டு என்ற பெயர் இந்த விழாவுக்கு. பகவதி வீட்டுவிலக்காகறாங்கன்னு நடக்கும் விழா.

தினமும் காலை அபிஷேகத்தின் போது முதல்நாள் சாமிக்கு உடுத்தி இருந்த புடவையைக் களையும்போது அதில் இருந்த ஒரு கறையைக் கண்ட மேல்சாந்தி (அர்ச்சகர்) புடவையை , கோவிலுக்குப் பொறுப்பான பாரம்பரிய (தரவாடு) மடமான வங்கிப்புழாவில் இருக்கும் மூத்த பெண்களிடம் கொண்டுபோய்க் காட்டியிருக்கார். அவர்கள் இது வீட்டு விலக்கான தீட்டுஅடையாளம் என்றதும். அம்மன் சிலையை அங்கிருந்து எடுத்து இன்னொரு அறையில் வச்சு, மூத்த பெண்கள் வெளியில் காவலுக்கு இருக்க ஏற்பாடு செஞ்சுருக்காங்க. மூணுநாள் இப்படி வேறொரு அறையில் தங்கிய அம்மனை நாலாம் நாள் அருகில் உள்ள ஆற்றுக்குக் கொண்டுபோய் நீராட்டி ( ஆராட்டு) அலங்கரிச்சு யானை மேல் ஏற்றி ஊர்வலமாகக் கோவிலுக்குக் கொண்டு வந்து அம்மனின் சொந்த இடத்தில் கருவறையில் மீண்டும் வைக்கிறாங்க. இளம் கன்னியர் பூப்பெய்ததும் நடக்கும் விழா போலத்தான். அம்மன் மீண்டும் கோவிலுக்குள் வரும் சமயம், சிவன் வாசலில் நின்று வரவேற்று, பிரகாரங்களில் இருவரும் ஊர்வலமாகப்போய் பின்னே தனி சந்நிதிகளுக்குப் போயிருவாங்களாம்.

இந்தியாவில் வேறெங்கும் இப்படி ஒரு விழா நடப்பதே இல்லையாம். ஐ மீன் சாமிக்கு. சாமிக்கு அதிலும் பஞ்சலோக விக்ரஹத்துக்கு இப்படியெல்லாம் நடக்குமான்னு கேள்வி கேட்கக் கிளம்பாம இருந்தால் நல்லது.

அசுரனை வதைத்த நாள், போருக்குப்போய் சம்ஹாரம் செய்தது, ஜென்ம நக்ஷத்திரம் (பிறந்தநாள்) திருக்கல்யாண உற்சவங்கள், இப்படி எல்லாம் நடத்தும்போது, இதையும் நடத்தினால் தப்பே இல்லை.

கொண்டாட்டங்கள் எது என்றாலும் ஊர்மக்கள், சொந்தபந்தம் எல்லாம் சேர்ந்து கூடிக்களித்து, ஆக்கித் தின்னு மகிழ்ச்சியா இருப்பதற்குத்தானே வழி செய்யுது.

ஆதிகாலத்தில்(!) மாதா மாதம் நடந்துக்கிட்டு இருந்த விழா இப்போ சில வருசங்களா வருசத்துக்கு மூணு, இல்லை நாலுமுறைன்னு நடக்குதாம். மே பி பகவதி இஸ் கோயிங் இன்டு மெனொபாஸ். வருங்காலத்தில் இந்த விழா நின்னு போனால்கூட வியப்பில்லை. மக்கள் சிந்தனைகள் மாறி வர்றதுக்கு ஏற்பதான் கோவில்களும், சாமிகளும் இல்லையா?

இன்னொரு கதையும் இந்த பகவதிக்கு இருக்கு. இந்த பகவதிதான் சிலப்பதிகாரத்துக் கண்ணகி என்பவர்களும் உண்டு. மதுரை மாநகரை தீக்கிரையாக்கிட்டு அங்கிருந்து விடுவிடுன்னு நடந்து இங்கே வந்து இந்தச் செங்குன்றுமேல் ஒரு மரத்தடியில் நின்னு தவம் செய்தாள். அப்பதான் கோவலன், இந்திரனுடைய புஷ்பக விமானத்தில் வந்து அவளை தேவலோகம் கொண்டு சென்றான் என்று ஒரு கதை. இதே கதையை கொடுங்கல்லூர் பகவதிக்கும் சொல்றாங்க.

ஆடி மாதத்தில் நல்லவிதமான மங்கலகரமான காரியங்கள் நடக்கக் கூடாது என்று சொன்னால் புரோகிதர்களின் பக்தித் தொழில் நடக்க வேண்டாமா?

கோயில் விழாக்களுக்கு மட்டும் பஞ்சம் கிடையாது. உருவமற்றவர் கடவுள் என்று கதைப்பார்கள். ஆனால் நாட்டு நடப்பு என்ன? வீதிக்கு வீதி கோயில்கள்! ஒவ்வொருவிதமான கோயில் சிலைகள். சிவன் என்றால் ஒரே மாதிரியான உருவம் எல்லாக் கோயில்களிலும் இருக்காது. அதிலும் பலபல உருவங்கள் அவற்றிற் கெல்லாம் தனித்தனித் தலப் புராணங்கள், கட்டுக் கதைகள்.
விஷ்ணு என்றாலும் அப்படியே! மனிதனுக்கு என்னென் னவெல்லாம் நடக்குமோ அவ் வளவும் இந்தக் கடவுள்கள் மீதும் ஏற்றி வைக்கப்பட்டதுதான் படுதமாஷ்!

நாகப்பட்டினத்தில் நீலாய தாட்சி என்னும் கோயில்; இந்த அம்மனுக்கு ருது சாந்தி விழா வாம்! புரியவில்லையா! இந்த அம்மன் ருதுவாகிவிட்டாளாம். இதற்காக வருடம் தோறும் ஆடிப் பூரம் என்று சொல்லி பத்து நாள் திருவிழாக் கூத்தாம்.
ஆமாம். அந்தச் சிலைதான் உலோகங்களால் செய்யப்பட்டதாயிற்றே! அம்மணி ருது ஆனதை எப்படி கண்டுபிடித்தார்களாம்?
இன்னொரு கூத்து; இதையும் கொஞ்சம் கேளுங்கள். நெல்லை காந்திமதிக்குச் சீமந்த விழாவாம்! புரியவில்லையா? வளையல் காப்புவிழாவாம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆடி மாதத்தில் 10 நாட்கள் இந்த அம்மணிக்கு விழா; அதில் நான்காம் நாள் தான் இந்தச் சீமந்த விழாவாம்!

அப்படியே பார்த்தாலும் சீமந்தம் என்பது ஒரு தடவை தானே நடக்கும். அதுவும் முதல் பிரசவத்துக்கு முன்னதாக. நெல்லை காந்திமதிக்கு மட்டும் அது எப்படி ஆண்டுதோறும் சீமந்தம் விழா?

இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! இது அர்த்தமுள்ள இந்துமதம் அல்லவா!

ஹி... ஹி... ஹி....

சிவன், பிரம்மா, விஷ்ணு யோக்கியதை.

கொஞ்சமாவது அறிவுக்கு இடமிருக்கிறதா இதில்? இந்தக் கதையின் பேரால் ஒரு பண்டிகையா? உற்சவம் கொண்டாடுவதா? வெட்கமாக இல்லை?

ஒரு நாள் சிவன் பெண்டாட்டியிடம் நாரதர் இரும்புத் துண்டுகளைக் கொடுத்து இதை கடலையாக வறுத்துக் கொடு என்றானாம். இரும்பை எப்படி கடலையாக வறுக்க முடியும் என்று அவள் கூறிவிட்டாளாம். பிறகு விஷ்ணு பெண்டாட்டியிடமும், பின் பிரம்மாவின் பெண்டாட்டியிடமும் அதுபோலவே அந்த இரும்பைக் கொடுத்து வறுத்துத் தரும்படி கூறினான். இரும்பையாவது வறுப்பதாவது, இது எப்படி முடியும் என்று கூறிவிட்டார்கள்.

அதற்கு நாரதர், நான் வறுத்து வருகிறேன்; பார் என்று கூறிவிட்டு பூலோகத்திலுள்ள அனுசுயா என்ற பத்தினியிடம் கொடுத்து வறுத்துக் கொடு என்று கூற, அவள் அது என்னவென்று கூடப் பார்க்காமல் சட்டியில் போட்டு வறுத்தாளாம். அது கடலையாகப் பொரிந்து வந்ததாம். அதை நாரதர் சிவன், விஷ்ணு, பிரம்மா முதலியோருடைய பெண்டாட்டிகளிடம் போய், பார் பார் நான் இரும்பை கடலையாக வறுத்து வந்துவிட்டேன் என்றானாம்.

அதற்கு அவர்கள் ஆச்சரியப்பட்டு அது எப்படி முடிந்தது என்று கேட்க, அதற்கு நாரதர், அந்தம்மாள் பதிவிரதை - அதனால் வறுக்க முடிந்தது என்றானாம். உடனே அவள் பதி விரதையானால் எங்கள் சங்கதி என்ன என்று கோபம் வந்து விட்டதாம் அவர்களுக்கு. பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று பேர்களுடைய பெண்டாட்டிகளும் விசனப்பட்டார்களாம்.

இதற்குப் பரிகாரம் காண வேண்டுமென்று அவர்கள் புருஷன்கள் வந்ததும், ``நீ கடவுள்! கடவுள் பெண்டாட்டி நாங்கள். எவனோ காட்டி இருக்கிற ஒரு ரிஷியின் மனைவி பெரிய பதிவிரதையாம்; இரும்பை வறுத்து விட்டாள். அவள் பதிவிரதையானால் எங்கள் சங்கதி என்ன?'' என்று கேட்டார்களாம்.

சரி இப்போ என்ன பண்ணச் சொல்லுகிறீர்கள் என்று கடவுள்கள் கேட்க, ``நீங்கள் போய் அவளையும் அபசாரியாக ஆக்கிவிட்டு வா'' என்றார்களாம். ``பதிவிரதைத் தன்மையை போக்கிவிட்டு வா'' என்றார்களாம். இந்த மூன்று பேரும் (சிவன், விஷ்ணு, பிரம்மா) சாமியார் வேடம் போட்டுக் கொண்டு அந்த ரிஷிபத்தினியிடம் போய், அம்மா பசிக்குது சோறு போடு என்று கேட்டார்கள். அவளும் இவர்களை உட்கார வைத்து இலை போட்டு உணவு பரிமாறினாள்.

இவர்கள், ``சாப்பிடுகிறோம்; ஆனால், சாப்பிடுவதற்கு முன் ஒரு பூசை செய்வது வழக்கம். அது செய்துவிட்டுத்தான் சாப்பிடுவோம்'' என்று கூறினார்கள். அந்தம்மாள், ``அப்படியா, அதற்கு என்ன வேணும்? தேங்காய், பழம், சூடம் என்ன தேவை கூறுங்கள்'' என்று கேட்டாள். அதற்கு இவர்கள் ``அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்; நீ உன் சேலையை அவிழ்த்துவிட்டு நிற்கணும்; நாங்கள் அதைப் பார்த்துவிட்டு சாப்பிடுவோம்'' என்றார்கள்.

இவர்கள் சொன்னதுதான் தாமதம், அவள் சிறிதும் தயங்கவில்லையாம். உடனே சேலையை அவிழ்க்க ஆரம்பித்து விட்டாள். அவள் அவிழ்க்க அவிழ்க்க இந்த கடவுள்கள் மூவரும் குழந்தைகளாக மாறிவிட்டார்களாம். அவளுடைய பதிவிரதாத்தன்மை அப்படியே அழிவில்லாமல் இருந்துவிட்டதாம்.

உடனே அந்தக் குழந்தைகளை எடுத்துப் பால் கொடுத்து தொட்டிலில் போட்டு ஆட்டினாள். அவளுடைய புருஷன் வந்தான், பார்த்தான் குழந்தையை. ``நான் போகும்போது சும்மாயிருந்தாய்; வருவதற்குள் ஏது குழந்தை? எப்படி பெற்றெடுத்தாய்?'' என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டான். அவள், ``மூன்று பேர் வந்து பிச்சை கேட்டார்கள்; போட்டேன். நான் அம்மணமாக நிற்கணும் என்றார்கள். அப்படியே செய்தேன். அவர்கள் குழந்தைகளாக மாறிவிட்டார்கள்'' என்று நடந்ததைக் கூறினாள்.

அவன் ரிஷியாயிற்றே. உடனே ஞானக்கண்ணால் பார்த்து விஷயம் தெரிந்து கொண்டானாம். ``நல்ல வேலை செய்தாய். இவர்கள் யார் தெரியுமா? சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகும். உன்னைக் கெடுக்க வேண்டுமென்று வந்திருக்கிறார்கள்! நீ நல்ல வேலைதான் செய்தாய்'' என்று கூறி அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டான்.

இப்படி உலகத்தில் காத்தல், அழித்தல், பிறத்தல் வேலை பார்க்கிற கடவுள்கள் இவள் வீட்டு தொட்டியில் குவா குவா கொட்டிக் கொண்டிருந்தது. உலகத்தில் வேலைகள் எல்லாம் நின்று போயிற்றாம். மக்கள் தேவர்கள் எல்லாம் திண்டாடுகிறார்கள். ஒன்றும் புரியவில்லை. எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை. அப்புறம் விஷயம் தெரிந்தது. ரிஷியிடம் ஓடிவந்து ``உலகத்தில் எல்லா வேலையும் நின்று போச்சு, நாங்கள் திண்டாடுகிறோம். மூன்று தேவர்களையும் விட்டு விடுங்கள்'' என்று கேட்டார்கள். ``அதற்கு என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்! அவளைப் போய்க் கேளுங்கள்'' என்று கூறினார்.

அந்த ரிஷி பத்தினியிடம் போய், ``புத்தி வந்தது, தேவர்களைவிடு'' என்று கெஞ்ச அவளும் சரி என்று தேவர்களாக பழைய உருவாக்கி அனுப்பி விட்டாளாம்.

கொஞ்சமாவது அறிவுக்கு இடமிருக்கிறதா இதில்? இந்தக் கதையின் பேரால் ஒரு பண்டிகையா? உற்சவம் கொண்டாடுவதா? வெட்கமாக இல்லை? கடவுள் இல்லை என்று சொல்ல வரவில்லை. யோக்கியமான ஒரு கடவுளைக் கும்பிடுங்கள்; வேண்டாம் என்று கூறவில்லை. முஸ்லீமும் கிறிஸ்தவனும் சாமி இருக்கு என்கிறான். அவன் எப்படி கூறுகிறான்? ஒரே கடவுள், அவர் அன்பானவர், அருளானவர், யோக்கியமானவர், அவர் ஒன்றும் கேட்க மாட்டார், பிறப்பு இறப்பு இல்லாதவர், உருவமில்லாதவர் என்கிறான்!

நீ என்னடா என்றால் பல ஆயிரக்கணக்கான கடவுள்கள் என்கிறாய். எல்லாம் பித்தலாட்டமான கடவுள், அடுத்தவன் பெண்டாட்டிமீது ஆசைப்பட்ட கடவுள், பல பெண்டாட்டிகளையும், சோற்றுப் பூசையும் கேட்கும் கடவுள்! கடவுள் பிறப்பு இறப்பு உடையவர், அவருக்கு பல உருவங்கள் உண்டு என்கிறாய். என்ன அர்த்தம்?


இன்னும் நாம் காட்டுமிராண்டியாக இருந்தால் என்ன அர்த்தம்? இவ்வளவு உற்சவம் பூசை விழா செய்து வந்தால் நாம் சூத்திரன் என்பதை ஒத்துக் கொள்வதாகத்தான் அர்த்தம். இதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். லக்னோவில் நான் இதையெல்லாம் கூறும்போது அங்கு யாரும் இது தப்பு என்ன மறுத்துக் கூறவில்லை. நீங்கள் உங்கள் பகுத்தறிவைச் செலுத்தி அறிவு பெற வேண்டும்.

-----தந்தைபெரியார் -"விடுதலை" 4-6-1959


சிவன் ஒரு காமாந்தக்காரன். சிவன் ஒரு முட்டாள்!

கடவுள்களை சிருஷ்டித்து, அவர்களை அயோக்கியர்களாக, மடையர்களாகக் கற்பித்து, சாஸ்திரபுராணம், இதிகாசங்கள் ஏற்படுத்தியவர்கள்  அயோக்கியர்களாக இருந்திருக்க வேண்டுமென்றும். ஒரு முழுமுதற்கடவுள் என்று கூறப் பெறும் சிவன் தன் மனைவியின் பாதங்களிலே நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினான் என்று கூறுவது எவ்வளவு முட்டாள்தனம்.
பார்வதி தன்னிடம் கொண்ட ஊடலைத் தணிக்கச் சிவன், பார்வதியின் காலில் வீழ்ந்து வணங்கிய போது, சிவன் மட்டுமன்றி அவன் தலையிலே இருந்த பிறைச் சந்திரனும், கங்கையும் வணங்கியதை எண்ணிப் பார்வதி பெருமிதம் அடைகிறாள்.

சிவனின் தலையில் உள்ள பிறைச்சந்திரன் பார்வதியின் நெற்றிக்குப் பகையாம். நாகப் பாம்பு பார்வதியின் அல்குலுக்குப் பகையாம். இந்தப் பகையுடையவை வணங்குவதிலோ, தன் கணவன் சிவன் வணங்குவதிலோ பார்வதிக்குப் பெருமகிழ்ச்சி இல்லையாம். ஆனால் சிவனின் சடாமுடியில் தங்கியுள்ள கங்கை பார்வதியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கியதை எண்ணிப் பார்வதி பெருமகிழ்ச்சி கொண்டாளாம். ஏனென்றால் எந்தப் பெண்ணும் தனது சக்களத்தி தன் காலில் வீழ்ந்து வணங்கினால் பெருமகிழ்ச்சி கொள்ளத்தானே செய்வாள். அதுபோலப் பார்வதியும் தன் சக்களத்தியான கங்கை தன் காலில் வீழ்ந்து வணங்கியதை எண்ணி மகிழ்கிறாள். சிவனின் தலை பார்வதியின் பாதங்களில் வீழ்ந்து கிடந்த செய்தியைப் புலவர் சிவப்பிரகாசர் நல்ல  நயந்தோன்ற விளக்கியுள்ளார்.

ஒரு கடவுளை இந்தக்கதிக்கு ஆளாக்கிவிட்டு அக்கடவுளை நம்மையும் வணங்கச் சொல்கிறானே என்று எண்ணி அவனது முட்டாள்தனத்தை நினைத்துப் பரிதாபப்படுவான்.

ஒரு முழுமுதற்கடவுள் என்று கூறப் பெறும் சிவன் தன் மனைவியின் பாதங்களிலே நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினான் என்று கூறுவது எவ்வளவு முட்டாள்தனம்.

-------------------நன்றி:-"விடுதலை"5-6-2009
http://thamizhoviya.blogspot.sg/2009/06/blog-post_06.html

சிவபெருமானின் முட்டாள்தனம்! கடவுள்களை முட்டாளாக்குபவர் யார்?

"சிவபெருமானின்" முட்டாள்தனம்! நம் கடவுள்களைப் போல முட்டாள்களையும், அயோக்கியர்களையும் மனித ஜென்மங்களில் கூட காண்பது அதிசயமாக இருக்கின்றது. ஆனால் கடவுள் என்பவர் அப்படி முட்டாளாகவும், அயோக்கியனாகவும் இருக்க முடியாது என்பது உண்மையான யோக்கியமான கடவுள் நம்பிக்கைக்காரர்களின் கருத்தாகவே இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

மற்றபடி கடவுள்களை சிருஷ்டித்து, அவர்களை அயோக்கியர்களாக, மடையர்களாகக் கற்பித்து, சாஸ்திரபுராணம், இதிகாசங்கள் ஏற்படுத்தியவர்கள்  அயோக்கியர்களாக இருந்திருக்க வேண்டுமென்று கருதுகிறேன்.

சைவ சமயிகளுக்கு அருணாசலபுராணம் என்பது மிகவும் உவப்பானது. அந்தப் புராணத்தை ஆதாரமாகக் கொண்டதுதான் திருவண்ணாமலை நாதர், கார்த்திகை தீபம் முதலியனைளாகும்.
.
அருணாசல புராணம் தீர்த்தச் சுருக்கம் - 13 –ம் பாட்டு:

"தென்திசை தரும தீர்த்தக்
குளத்திற் செரிந்து மூழ்கில்
பொன்திகழ் வடிவமாகும்
உடற்பிணி பொடி பட்டோடும்."

அதாவது "திருவண்ணாமலைக்கு தெற்கே "யமதீர்த்தம்" என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. அதில் முழுகினால் உடல் பொன்னிறமான வடிவினதாகும். உடலில் உள்ள நோய்கள் எல்லாம் பொடிப் பொடியாகி பறந்து போகும்" என்பது இதன் பொருளாகும்.

ஒரு குளத்தில் நீராடினால் சொறி பிடித்த உடல் பொன்னிறமாகி நோய் கொண்ட உடல் நலமாகி விடுகிறது என்று, கடவுள் பேரில் - ஸ்தலத்தின் பேரில் - குளத்தின் பேரில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது எவ்வளவு முட்டாள்தனமும், அயோக்கியத்தனமுமான காரியம் என்பதை ஆஸ்திகர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு அழுக்குப் பிடித்த, அதுவும் புழுவும், கொசுவும் நிறைந்த நாற்றமுள்ள ஆபாசக் குளத்திற்கு இந்த மாதிரியான சக்திகளைக் கற்பித்து விட்டால், இதை நம்பும் மூடர்கள் அதில் குளித்தும், அருந்தியும், அதிகமான நோயை உண்டாக்கிக் கொள்வார்களே ஒழிய, இதனால் குணமடைய முடியுமா?

இதுதான் போகட்டும் என்றால் மனிதர் தாம் செய்த பாவங்களை போக்கிக் கொள்வதற்கு ஆக மதவாதிகள் கற்பித்து இருக்கும் மார்க்கமானது எவ்வளவு அயோக்கியத்தனமாக கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள்.

தீர்த்தச் சுருக்கம் 36-ம் பாட்டு:

"காகமுன் பலி பீடத்தில்
பலிதனைக் கவரும் போதில்
ஆகமார் சிறகைக் கீழே
புடைத் தாலை யத்தினூடே
ஓகையால் நமது கோயில்
விளங்கிய தெனஉட் கொண்டு
பாகசா தனனார் வாழும்
பதியினைப் பரமன் ஈந்தான்."

இதன் பொருள் :

காக்கையானது திருவண்ணாமலைக் கோயிலில் உள்ள பலி பீடத்தில் வைத்திருந்த சோற்றை தின்னும் போது தன் சிறகை விரித்து அசைத்தது. அதனைக் கண்ட பரமசிவன் இந்தக் காக்கை நட்முடைய கோயிலை சுத்தம் செய்தது என மகிழ்ந்து அதற்கு உடனே தேவேந்திரன் வாழும் உலகத்தைக் கொடுத்தார் - என்பதாகும்.

மேற்படி 37 –ம் பாட்டு:

"மூடிக மொன்று கோயில்
முளையினைக் கிளறும்போது
தேடரு மணி யொன்றங்கே
சிதறியோர் விளக்கிற் காட்ட
ஆடிய பெருமாள் தீபம்
அளித்ததென் றதற்கு நல்ல
வீடுயர் நெறியுங் காட்டி
விரைந்துசா லோக மீந்தார்".

இதன் பொருள்:

ஒரு பெருச்சாலியானது (மூஷிகம்) கோயிலில் வளை தோண்டும் போது அது பறித்துத் தள்ளிய மண்ணில் இருந்து ஒரு ரத்தினமானது சன்னதியில் விளக்கு போல் ஒளி மின்னியது. அதனைக் கண்ட சிவபெருமான் அந்தப் பெருச்சாளி தன் சன்னதிக்கு தீபம் போட்டது என்று கருதி மோட்ச வழியைக் காட்டி சாலோகப் பதவியைக் கொடுத்தார் - என்பதாகும்.

மேற்படிச் சுருக்கம் 38 –ம் பாட்டு:

"சிலந்தி யொன் றொரு நாள் அந்தத்
திருமலை யிடத்து நூலைக்
கலந்துடன் இழைக்க, ஈது
கலைநமக் களித்த தென்று
நலத்திக ழரச னாக்கி
அதற்குநல் லறிவு நல்கி
உலர்ந்தபின் நெடிய மாயன்
உலகினை உதவினானே."

இதன் பொருள் :

திருவண்ணாமலையில் ஒருநாள் ஒரு சிலந்திப் பூச்சியானது தன் வாய் நூலால் ஒரு கூடு கட்டியது. அதனை சிவபெருமான் அச்சிலந்தியானது தனக்கு நல்ல வஸ்திரத்தை செய்து கொடுத்ததாகக் கருதி அதை ராஜாவாக்கி – நல்ல ஞானம் உண்டாக்கி – அது இறந்த பிறகு வைகுந்த லோகத்தைக் கொடுத்தார் - என்பதாகும்.

வாசகர்கள் இம்மூன்று பாட்டினையும் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். காக்கை சிறகை ஆட்டினதினால் அது குப்பையைக் கூட்டி சுத்தம் செய்ததாக எவனாவது கருதுவானா?

பெருச்சாளி தோண்டிய மண்ணில் ஒரு ஒளி மின்னும் கல்லு காணப்பட்டால் அதை அந்தப் பெருச்சாளி விளக்கேற்றியது என்று கருதுபவனைவிட மூடன் இருக்க முடியுமா?

சிலந்திப் பூச்சி கூடு கட்டியதைக் கண்டு அது தனக்கு வேட்டி நெய்து கொடுத்ததாகக் கருதுவது கடுகளவு புத்தியுள்ளவனுக்காவது பொருந்துமா?

எனவே இப்பாட்டுக்களிலிருந்து பரமசிவனை எவ்வளவு முட்டாளாக்கி இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

இவ்வளவு முட்டாள்தனமானக எழுதும் கருத்து என்ன என்று பார்ப்போமானால், எந்த முட்டாளாவது இதை நம்பி காசு கேட்காமல் குப்பைக் கூட்டவும், விளக்கு போடவும், துணி வாங்கித் தரவும் முன்வரமாட்டானா என்பது தானே. அதற்கு ஏற்றாற் போலவே இப்படிப்பட்ட முட்டாள்தனமான கூற்றுக்களை நம்பித்தானே அநேக மூடர்களும் அங்கு விளக்குப் போடவும், குப்பைக் கூட்டவும், சாமிக்கென்று துணி வாங்கிக் கொடுக்கவும் முன் வருகிறார்கள்.இதைப் பார்க்கும் போது இதுபோன்ற புராணங்கள் எல்லாம் எவ்வளவு பித்தலாட்டமாக மூடத்தனமாக எழுதப்பட்டு இருக்க வேண்டுமென்பது விளங்கவில்லையா?

இம்மாதிரி கடவுள்கள் முட்டாளாக ஆக்கிவிட்டு, எவனாவது இந்த முட்டாள்தனத்தை எடுத்துக் காட்டினால் "அய்யோ! கடவுளை குறை கூறுகிறானே," "மதத்தை இழிவுபடுத்துகிறானே" என்று கூக்குரலிடுவதில் அறிவுடைமை ஏது? ஆகவே மதவாதிகளும், புலவர்களும், சுயநலக்காரர்களும் செய்த காரியங்களால் தான் இன்று கடவுள்கள் சந்தி சிரிக்கப்படுகிறார்களே ஒழிய சுயமரியாதைக்காரர்களால் அல்ல என்பேன்.

----------- 09-03-1950 விடுதலை இதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. நூல்: "பெரியார்களஞ்சியம்" தொகுதி:2 … பக்கம்:235 -240


பெண்களுக்கு மோட்சம் கிடையாது. கடவுளுக்கு வேலை என்ன?. இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 90. - 91-1


மோட்சம் பெறுவது எப்படி? கடவுளுக்கு வேலை மகாலட்சுமியுடன் இருந்து சந்தோஷிப்பதுதான்.

பெண்களுக்கு மோட்சம் கிடையாது அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம்.

உடலுறவுக்கு மோட்சலோகத்தில் ஸ்த்ரிகள் நிறைய பேரை அங்கு போனவன் படைத்துக் கொள்வான்.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 90. 91-1

பகுதி 90. உன்னை இங்கு படைப்பவள் அம்மா - நீ நினைத்தால் உன் அம்மாவையே அங்கு படைக்கலாம் உன்னைப் படைத்தவர் அப்பா நீ நினைத்தால் உன் அப்பாவையே அங்கு படைக்கலாம் இப்படியொரு Super Nature சூத்திரத்தின் படி சொல்லப்பட்டு வரும் மோட்ச உலகத்தைப்பற்றி போன அத்தியாயத்தில் பார்த்தோம்.

இப்படியெல்லாம் இருக்குமா? பசி, பட்டினியற்ற இந்த உலகத்துக்குப் போகவேண்டும் என்றால் எப்படிப் போவது?

இதற்காக சாந்தோக்ய உபநிஷத்தில் பல வித்யையைகள் ஓதப் பெற்றிருக்கின்றன அதாவது இந்த உபநிஷதுவின் மூன்றாம் அத்தியாயம் முதலாக. மதுவித்யை, காயத்ரீ ப்ரம்ம வித்யை, சாண்டில்ய வித்யை, ஸம்வர்க வித்யை, ஷோட சகல ப்ரம்ம வித்யை உபகோஸல வித்யை, ப்ராண வித்யை, பஞ்சாக்னி வித்யை இப்படியாக பல வித்யைகள் போய்க் கொண்டே இருக்கின்றன.

இந்த வித்யைகளை ப்ரம்மன் ப்ராஜபதிக்கும் ப்ராஜபதி மநுவுக்கும், மநு பிரஜைகளுக்கும் உபதேசித்தாராம்.

அப்படி என்ன இருக்கின்றன அந்த வித்யைகளில்?

ஆத்மாவை அறிபவன் மோட்சம் பெறுகிறான் இதுதான் இந்த ONE LINE உபநிஷது.

இந்த ப்ராஜபதிக்கு தேவர்களும், அசுரர்களும் பிள்ளைகள் ஆத்மாவை அதன் எட்டு குணங்களோடு அறிந்தவனுக்கே மோட்சம் என வாக்கியமொன்றை உலகமெங்கும் பரவவிட்டார்.

உடனே. தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் பிரதிநிதியாக விரோசனனும் தங்கள் அப்பாவான ப்ராஜபதியிடம் 'மோட்சம் பெறுவது எப்படி? என கற்பதற்காக 32 வருஷம் ப்ரம்மச்சர்யம் இருந்து வந்தார்கள் அப்போது அப்பா சொன்னார்

ஒரு மடக்கில் ஜலம் வார்த்து நன்றாகப் பாருங்கள் நல்ல அலங்காரங்களை செய்துகொண்டு பாருங்கள் ஏதும் தெரியாமல் இருந்தால் கேளுங்கள் என்றார்.

அசுரர் தலைவர் விரோசனன் பார்த்தான் அவன் ரூபமே மடக்கு தண்ணீரில் தெரிந்தது ஓ இதுதான் ஆத்மா என தீர்மானித்து தன் அசுரர்களுக்கு இதையே உபதேசித்தான் இதனால் அசுர குலமே தேஹாத்மவாதிகளாகி விட்டார்கள் அதாவது தேகத்தை தான் ஆத்மா என தப்பாக நினைத்தவர்களாகி விட்டார்கள்

ஆனால், தேவர் தலைவர் இந்திரன் இது நமது முகம் மாதிரியே இருக்கிறதே என யோசித்து மறுபடியும் தன் அப்பாவிடமே வந்தான். அவர் மறுபடியும் இந்திரனை 101 வருஷங்கள் காக்க வைத்து உபதேசம் செய்து மோட்சத்துக்கு அனுப்பினாராம்.

அதாவது அசுராளுக்கு மோட்சம் இல்லை தேவர்களுக்கு தான் மோட்சம் என்ற பாகுபாட்டை நிரூபிப்பதற்காக இந்தக் கதை நினைத்திருந்தால் அன்றே அந்த ப்ராஜபதி அசுராளுக்கும், ஆத்மாவைப்பற்றி சரியாக உபதேசித்திருக்க முடியுமல்லவா?

இதை உபநிஷது பண்ணிய ரிஷிகள் நினைக்கவில்லை அவ்வளவு தான்.

அதே உபநிஷதுகளில் இன்னொரு வித்யை.

அருணமகரிஷியின் பிள்ளை உத்தாலகர் உத்தாலகரின் மகன் ச்வேதகேது அந்த ச்வேதகேது வேதம், சம்பிரதாயம் எதுவும் கற்க விருப்பமில்லாமல் சுதந்திரமாய் திரிந்தான்.

இதைக் கண்ட அவன் அப்பா உத்தாலகர் 'டேய் இதுமாதிரி வேத அத்யயனம் பண்ணாத பிராம்மணனாய் இருந்து என்ன பயன்? வெளியே போய் குருகுல வாசம் செய்து கற்றுக்கொண்டு வாடான்னு அனுப்பி வைத்தார்.

அப்பா பேச்சால் உணர்ச்சி வசப்பட்ட ச்வேதகேது வெளியே போனான் எல்லா வேதங்களையும் ஸாங்கோபாங்கமாகக் கற்று இனி நாம் கற்க எதுவும் இல்லையென்று வீட்டுக்கு வந்துவிட்டான்.

அப்பா உத்தாலகர், 'என்னடா திரும்பி வந்துவிட்டாய்? என்றார்.

'12 ஆண்டுகளாகப் படித்து விட்டேன் இனிமேல் நான் படிக்க ஒன்றுமில்லை. என்றான் அந்த 24 வயது இளைஞன். 'எதைக் கேட்டு சிந்தித்தால் உலகத்தில் எல்லாம் கேட்டு சிந்தித்த பயன் வருமோ அது என்னவென்று உன் ஆச்சார்யனிடம் கேட்டாயா? என்றார் அப்பா.

'என்னப்பா சொல்கிறீர் உலகம் எவ்வளவு பெரியது ஒன்றையறிந்தால் உலகெல்லாம் அறிய முடியுமா?. அப்படியொரு வஸ்துவெல்லாம் இல்லையப்பா.’

அப்பா உத்தாலகர் அவனுக்கு என்னென்னவோ உபதேசம் செய்தார்

இன்னொரு காட்சி ச்வேதகேது பாஞ்சால தேசத்திலே ஸதஸ்க்கு சென்றான். ஸதஸ் என்றால் மன்றம் பல அறிஞர்கள் விவாதிக்கும் இடம் அங்கே ப்ரவாஹணன் என்ற ராஜரிஷியை சந்தித்தான்.

ராஜரிஷி கேட்டார் 'பிள்ளாய் உனக்கு தகப்பனார் உபதேசங்களை செய்தருளினாரா? ’'ஆம்.’'. அப்படியானால் ப்ரஜைகள் மரணமடைந்த பின்னால் போகும் இடம் எது தெரியுமா?'தெரியாது’. திரும்பி வரும்போதுள்ள வழி தெரியுமா? ’'தெரியாது’' சரி மேலுலகம் போய்ச் சேர்ந்த ப்ராணிகளாவது யார் தெரியுமா? ’'தெரியாது ’' சரி தேவயாந மார்க்கம், பித்ருயாண மார்க்கம் என்றவையின் வேறுபாடு தெரியுமா? ’'தெரியாது’'

அப்படியென்றால் நீ உபதேசம் பெற்றது என்ன? இவைகளை அறியவில்லையென்றால், உபதேசம் பெற்றதாக எங்கனம் கூறுவது?

’ச்வேதகேது தன் தகப்பனார் இருக்கும் இடத்துக்கு ஓடிவந்து தான் பட்ட மானபங்கத்தைச் சொல்லி வருத்தப்பட்டான் பின்னர் தன் அப்பாவிடம் அந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னப்பா பதில்? என கேட்டான்.

அதற்குத் தகப்பனார் உத்தாலகர். 'குமாரனே எனக்குத் தெரிந்திருந்தால் சொல்லாமல் இருப்பேனா? என்கிறார். இப்படித்தான் இருக்கின்றன மோட்சம் பற்றிய விசாரணைகள். -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

பகுதி – 91- 1. மோட்சம் பற்றிய விசாரணைகளை விரிவாகவே பார்த்தோம். வ்யாஸர் - ஜெய்மினி உரையாடல், உத்தாலகர் - ச்வேதகேது - வ்ராஷ்ணன் உரையாடல் என உதாரணங்களும் பார்த்தோம்.

என்ன விளங்கினோம் அதாவது இந்த உலகத்தில் நீ நல்லவனாக வாழவேண்டும் வாழ்ந்தால் இதைவிட இன்பம் மிகுந்த உலகம் உனக்கென இருக்கிறது என ஆசை காட்டும் வேலை தான் மோட்சம்.

பெண்களுக்கு மோட்சம் கிடையாது அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம் என முன்னர் நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படியென்றால்.. மோட்சலோகத்தில் ஸ்த்ரிகள் நிறைய பேரை அங்கு போனவன் படைத்துக் கொள்வான் என்றும் பார்த்தோம். அப்படியென்றால் அங்கு கடவுளுக்கு வேலை என்ன என்று கேள்வி வருகிறது.

அங்கே கடவுளுக்கு வேலை மகாலட்சுமியுடன் இருந்து சந்தோஷிப்பதுதான் அதாவது மோட்சலோகம் என்பது இதே போன்றதொரு இன்னொரு ஆனந்த மயமான லோகம்தான் அதை அடைவதற்குப் பல கடுமையான நிபந்தனைகள் இருக்கிறது என்பது நம்மை நெறிப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட விஷயம் வேறொன்றும் அல்ல.

சரி.. 'குழந்தாய் இந்தா பால் இதைக் குடித்து நன்றாக வளர்வாயாக என பிறந்த சிறு குழந்தைகளுக்கு வேதம் சொன்னதிலிருந்து இறப்புக்குப் பிறகான மோட்சம்பற்றி உபநிஷது சொல்லியவரை அனேக விஷயங்களை அலசி விட்டோம். -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

உனக்கு இப்போது ஒரு தேவடியாள் வேண்டுமா? குடும்பஸ்திரீ வேண்டுமா? அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு..?  எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம்.

 இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம். பரலோகத்தில் பேரின்பமாக மாறும்
இந்து மதம் எங்கே போகிறது?  பகுதி 89.

விரஜா என்னும் நதி மிக சன்னமாக சீராக ஜலஜலவென ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நதியைத் தாண்டி அபராஜிதை என்னும் ஒரு பட்டணம் இருக்கிறதாம். பட்டணம் என்றால் அப்பேர்ப்பட்ட பட்டணம் அதாவது எங்கு பார்த்தாலும் ஆண்கள், பெண்கள் ரொம்ப சந்தோஷமா கூடிக் குலவி களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் நிறைந்த இங்கே.. ஆயிரங்கால் மண்டபம் ஒன்று உள்ளதாம் அந்த மண்டபத்திலும் ஒரே ஆனந்த மயம்தான். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் திவ்யபர்யங்கம் என்னும் உயர்ந்த கட்டில் ஒன்று இருக்கிறது அதிலேதான்.. பாம்புப் படுக்கையிலே பெருமாள் இருக்கிறார்.

பக்கத்திலே அங்குள்ளவன் தனது விருப்பத்துக்கு தக்கபடி பித்ரு லோகம், ஸ்த்ரி லோகம் முதலியவற்றை படைத்துக் கொள்கிறான் சுகத்தையும் அனுபவித்துக் கொள்கிறான். இதெல்லாம் என்ன? இதுதான் மோட்சமாம். மோட்ச லோகத்தில் குடும்பம்  குட்டிகள் உண்டா? சன்னியாசிகள் உண்டா? ஒருவனுடைய பத்னியை இன்னொருவன் அபகரிப்பானா?

என்றெல்லாம் கேள்விகளைப் போன அத்தியாயத்தில் பார்த்திருப்பீர்கள்.

இதெல்லாம் நான் எழுப்பிய கேள்விகள் இல்லை.. மும்மதஸாரம் என்னும் புத்தகத்தில் சக்கரவர்த்தி ஆச்சாரியார் எழுப்பிய கேள்விகள். பின் அவரே விளக்குகிறார் பாருங்கள்.மோட்ச ஸ்வருபம் என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கிறார்.

இவர்கள் இணைந்துள்ள மோட்சம் எல்லோராலும் போற்றத் தகுந்தது ஜாதி, வர்ணம், மதம், பாகுபாடு இதில் கிடையாது எல்லாரும் ஏக ஜாதியைச் சேர்ந்தவர்கள் அங்கு போகத்திலும் வேற்றுமை இல்லை அனைவருக்கும் சமமான போகம் இதைத்தான் ஸாயுஜ்யம் என்பர் எல்லா வகைகளும் எல்லாருக்கும் சமமாகப் பரிமாறப்படுகின்றன என்றிருந்தால் தான் அது ஸாயுஜ்யம்.

குயில், கிளி, கருடன், கஜானன் (யானை) செடி, கொடி, மரம் முதலியவைகளும் அங்கு வைகுண்ட லோகத்தில் உள்ளனவே.. இவர்களும் ஜீவராசியை சேர்ந்தவர்கள்தானே, இதைக் கொண்டு வேற்றுமை ஏற்பட்டுவிடாதா என்கிற அய்யம் சிலருக்கு வரலாம்.

இதற்குப் பதில்.. இவர்கள் அனைவரும் அங்குள்ள நித்ய ஸ்திரீகள் ஆண், பெண் என்கிற வேறுபாடு அங்கிருந்தாலும்.. எவ்வகையிலும் அவர்களுக்குக் குறைவில்லை. கிளி, குயில் முதலியவைகளும் தத்தம் விருப்பப்படி பல உடல்களை எடுத்துக்கொண்டு பணிவிடை செய்யலாம்.

ஒரு முக்தாத்மா பல உடல்களை எடுக்கும்போது ஆண், பெண், குழந்தை முதலிய உடல்களை எடுத்துக்கொண்டு குடும்பமாக அடிமை செய்யலாம் அல்லது மற்றொரு முக்தாத்மாவை உதவியாக வைத்துக்கொண்டு அதற்குத் தக்கபடி இரு முக்தர்களும் பல உடல்களை எடுத்து குடும்ப தாஸ்யம் செய்யலாம்.

இவ்வாறு குடும்ப தாஸ்யம் செய்யும் போது.. ஆண் உருவமும், பெண் உருவமும் உடையவர்களாக இருந்து கொண்டு விளையாடினால் காமம் என்கிற இன்பம் இவர்களுக்கு வரும். ஆகையால், அது மோட்ச சொரூபத்துக்கு விரோதமா என்று சந்தேகப்பட வேண்டாம். இவர்களது எல்லா ரமணமும் அதாவது விளையாட்டும் பகவானுடையதே..

கிருஷ்ணன் கோபி ஸ்திரிகளுடன் ஏன் காம போகத்தை அனுபவிக்கவேண்டும்?

சிறீரங்கநாதன் தனது ஆனந்த நாடிகளைக் கொண்டு சிறீ ரங்கநாயகியுடன் ஆனந்தமாகக் கலவியை அனுபவிக்கிறான் என பாரசரபட்டர் சிறீகுணாத்ர கோசத்தில் எப்படி சாதித்தார்?




இவையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்தால்.. இங்கு போல் அங்கும் சகல போகங்களும் உள்ளன. அங்குள்ளவர்கள் நித்ய சுத்தர்களாக இருந்தாலும் லீலையாக ஜலக்ரீடை முதலியவைகளை செய்கிறார்கள் 'எல்லாம் பகவான் செயல்' என விளக்கமாக சொல்லிக் கொண்டே போகிறார் சக்கரவர்த்தி ஆச்சாரியார்.

இன்னும் நாம் உபநிஷது வாக்கியங்களின் மூலமாகவே அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போமா? "சஹ யதீ பிதுர் லோககாமோ பவதீ...சங்கல்பா தேவாஸ்யபிதர உபதிஷ்ட ந்தே...”

உனக்கு என்ன வேண்டும்? உன் அம்மாவை பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள் உன் அப்பாவைப் பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள் உன் புத்திரனை பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள்!

சரி.. குடும்ப உறவுகள் வெறுத்துப் போய் விட்டது உனக்கு இப்போது ஒரு பரஸ்த்ரீ வேண்டுமா? அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு.. நீ நினைத்தால் உன் முன்னே வந்து நிற்பாள் உன்னைப் பார்த்து சிரிப்பாள் நெருங்குவாள் அணைப்பாள் ஆனந்தம் தருவாள். இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம் அங்கே பேரின்பமாக மாறும். இந்த லோகத்தின் ஆனந்தங்கள் அல்பம் அங்கே பகவத் ஆனந்தம்.

இது Nature அது Super Nature. "யஷனன்னே க்ரீடன்னேரமமானாஹா ஸ்த்ரீபிர்வாயானிர்வா...”
என்று போகிற உபநிஷது.

இங்கு நீ மோட்டாரில் சுற்றுவது போல அங்கேயும் ஜாலியாக சுற்றலாம் அதுவும் எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம்.. அவளை நீயே படைத்துக் கொண்டு என்கிறது. அப்படியென்றால், அங்கே பகவானின் வேலை என்ன? 

கர்ப்பமாகி குட்டிபோட்ட கிளி ? நம்புங்கள்.!! இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 88.


கிளி கர்ப்பமானால் முட்டை போட்டு குஞ்சு பொரிக்கும். அது இன்னொரு அழகான கிளியாகும். ஆனால்... இந்த கிளி அப்படி அல்ல..
 குட்டிபோட்டது. புராணம் அப்படித்தான் சொல்கிறது.

ரிஷிகள் காம சுகத்தை அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள் அப்படி காம சுகத்தை அனுபவிக்காத சந்தர்ப்பங்களில் அவர்களது ‘உயிர்த் திரவியம்’ வெளியாவது இயற்கைத்தானே.

என்னடா இவ்வளவு வயதானவர் இப்படி கதை சொல்கிறாரே என வருத்தப்பட வேண்டாம். புராணங்களை புரட்டிப் போட்டு ஆராய்ந்து பார்த்தால் இப்படிப்பட்ட காட்சிகள் சர்வ சாதாரணமாக இருக்கின்றன.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 88.

யாரது?... கிளி போன்ற தலை உடம்பெல்லாம் மனிதன் போன்ற தோற்றம். அதுவும் நாம் பார்த்த வ்யாஸருக்கு சம்பந்தம் உள்ளவரா?... வ்யாஸர் பிறந்த வரலாற்றை பார்த்தோம். வித்தியாசமாக இருந்தது. அதாவது... பராசரர் மச்சகந்தி என்னும் மீனவப் பெண்ணோடு கூடிக் குலவ... திடுதிப்பென பிறந்தவர் தான் வ்யாஸர்.


சரி... வ்யாஸருக்குப் பிறந்த ஒருவர் எப்படி பிறந்தார்?... இதையும் புராணங்கள் சொல்லுகின்றன?... என்னடா இவ்வளவு வயதானவர் இப்படி கதை சொல்கிறாரே என வருத்தப்பட வேண்டாம். புராணங்களை புரட்டிப் போட்டு ஆராய்ந்து பார்த்தால் இப்படிப்பட்ட காட்சிகள் சர்வ சாதாரணமாக இருக்கின்றன. சரி... Come to the subject வ்யாஸருக்கு ஒருவர் பிறந்தார். அவர் எப்படிப் பிறந்தார்.

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ரிஷிகள் காம்ய சுகத்தை அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள் என்று. அப்படி காம்ய சுகத்தை அனுபவிக்காத சந்தர்ப்பங்களில் அவர்களது ரேதஸ்... அதாவது ‘உயிர்த் திரவியம்’ வெளியாவது இயற்கைத்தானே.

அப்படியோர் பொழுது வ்யாஸரிடமிருந்து வெளிப்பட்டு விட்டது ரேதஸ். சிந்தி கிடந்த அந்த ‘ரேதஸ்’ஸை ஒரு கிளி என்ன பண்ணியது. கொத்தித் தின்றுவிட்டது.

கிளியாக வந்த அழகியுடன் கூடினார் என்றும் சொல்வார்கள். அதை கொத்தித் தின்ற கிளி சும்மாயிருக்குமா?... அந்தக் கிளி கர்ப்பமாகி விட்டதாம். கிளி கர்ப்பமானால் என்ன செய்யும்? முட்டை போடும். குஞ்சு பொரிக்கும். அது இன்னொரு அழகான கிளியாகும். ஆனால்... இந்த கிளி அப்படி அல்ல. வ்யாஸரின் வீர்யம் சாப்பிட்ட கிளியல்லவா. அதனால் கர்ப்பமான கிளி... ஒரு குட்டியைப் போட்டது. கிளி குட்டி போட்டதா?... புராணம் அப்படித்தான் சொல்கிறது.

அந்த கிளிக்குட்டி(!) எப்படி இருந்ததாம்?... தலையெல்லாம் கிளிபோல இருந்ததாம். உடல் மட்டும் மனுஷ்ய பாவணையாய் அமைந்ததாம். என்னடா இது புதுக் கொடுமையாக இருக்கிறதே என்கிறீர்களா?... இது பழம்பெரும் ‘கொடுமை’.

இருங்கள். கதை இன்னும் இருக்கிறது. அந்த ‘கிளிக்குட்டி’ வ்யாஸருக்கும் கிளிக்கும் பிறந்தது. இந்தத் தகவல் வ்யாஸருக்கு தெரிந்தது. உடனே அவர்... ‘டேய் பயலே’ என தன் குடிலுக்கு வெளியே வந்து குரல் கொடுக்க... அதற்குள் அந்த கிளிப்பயல் பறந்து விட்டான்.

வ்யாஸர் குரல் கேட்டு மரங்களெல்லாம் திரும்பிப் பார்த்ததாம். சரி... அந்த கிளிப் பிள்ளைக்கு என்ன பெயர்?...சுகஹா... என்றால் வடமொழியில் கிளி என்று பெயர். அதனால்... அவருக்கு ‘சுகர்’ என்று பெயர். சுகப்பிரம்மம் என்றும் சொல்லுவார்கள். ஏனென்றால்... வ்யாஸருக்கு வேதங்களை பிரித்து வகைப்படுத்தி தொகுத்த பின்பும், உபநிஷத்துக்கு வ்யாக்யானமாக ப்ரம்ம சூத்திரம் பண்ணியபோதும்... 18 புராணங்களை தொகுத்தபோதும் திருப்தி இல்லை.

அதனால்தான் ‘பாகவதம்’ என்று மகா காவ்யத்தை படைத்தார்.
பாகவதம் என்றால் கிருஷ்ண பரமாத்மாவின் முழு வாழ்க்கை வரலாற்று தகவல்கள் உள்பட பல பகவத் விஷயங்களை சொல்வது. இதைக் கேட்டாலோ, உபதேசம் பெற்றாலோ அவர்கள் மோட்சம் பெற்று பகவான் நாராயணனின் வைகுண்டத்தை அடைந்து விடலாம் என்பது நம்பிக்கை.

இந்தக் கிளிக் கதையை...“எம்ப்ரவ் விஷந்தம்அனுபேதம் உபதே ஹிருத்யம்தனவ பாயஹைவிரக காதரஹ ஆஹிஜாகாதேதீ தன்மயேதய தரவோ...” என்கிற பாகவத பாராயண ஸ்லோகமே சொல்கிறது.

சரி... வ்யாஸர் இயற்றிய இந்த பாகவதத்தை அவரை விட அறிவாளியான ஞானத்தில் சிறந்தவரான சுகர்... பரீட்சித்து என்னும் ராஜாவுக்கு உபதேசிக்கின்றார்.

அதுவும் ஒரே வாரத்தில் பரீட்சித்து ராஜா பாகவத உபதேசம் பெற்றால்தான் அவன் மோட்சம் பெறமுடியும் என்ற நிலைமை. அடித்துப் பிடித்து... உருட்டி விரட்டி... இன்று பரிட்சைக்கு ‘போர்ஷன்’ முடிக்கிறார்களே அதுபோல பரீட்சித்து ராஜாவுக்கு பாகவதக் உபதேசித்து முடித்தாயிற்று. அவன் சாபம் நீங்கி மோட்சம் பெற்றான்.

இங்கேதான் ஜெய்மினி கேட்ட கேள்விக்கு நாம் விடை தேடப் போகிறோம். அதற்காகத்தான் இந்த சுகர் கதையை உங்களுக்குச் சொன்னேன்.

மோட்சம், பெற்று வைகுண்டம் செல்கிறான் என்று சொல்கிறார்களே?... மோட்சம் என்றால் என்ன?... வைகுண்ட லோகம் எப்படி இருக்கும்?... இதற்கான விடையை நாம் உபநிஷத்துகளில் பார்க்கலாம். இங்கு போல் அங்கும் ஸகல போகங்களும் உண்டு என்கிறது உபநிஷது.

அப்படியென்றால்... வைகுண்ட லோகத்தில் வீடுகள் உண்டா?... மாடுகள், கிளிகள், மான்கள் உண்டா?... அங்கு வஸிப்பவர்கள் மனைவியுடன் இருக்கிறார்களா?... இங்கு போல் அங்கும் காம ஸூகத்தை அனுபவிக்கிறார்களா?... மகப்பேறுகளைப் பெறுகிறார்களா? ... அங்கேயும் திருடர்கள் இருப்பார்களா?... ஸந்யாஸிகள் இருப்பார்களா?... ஒரு புருஷன் மற்றொருவர் மனைவியை அங்கும் விரும்புவானா?

காமத்துக்கு அடிபணிந்த‌ முனிவர்கள். இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 85 – 87.


காமத்துக்கு முனிவர்கள் விலக்கல்ல‌.

ரிஷிகள் காமத்தை ஓர் அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்களாம். அதாவது... தங்கள் ஞானத்தின் இன்னொரு பயனுக்காக.. ?

பிராமணன் யுத்தத்துக்குப் போவதில்லை.

பரலோகம் யாருக்குத் தெரியும்?.... அதைப் பார்த்தவர்கள் யார்?... இருந்தால் வரச்சொல்?... அது எப்படியிருக்கும்?...

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 85. – 87.

பகுதி – 85. தெய்வ வழிபாடுகளைப் பற்றி நிறைய பார்த்தோம். இப்போது தெய்வம் யார் என்ற இன்னொரு தத்துவத்தைப் பற்றியும், தத்துவக்காரர்களையும் பார்க்கப்போகிறோம். தத்துவம் என்றதும் குழம்பிவிடாதீர்கள். இதைப் பார்க்க... கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம். வேதம் வகுத்துத் தந்த கர்மாக்கள் பற்றி நிறைய பார்த்தாகிவிட்டது.

வேதத்தை அடுத்து வந்த உபநிஷத்துக்காரர்கள். “நகர்மனா நப்ரஜா தனேனாதியாகேன ஏகேஅமிர்தத்வம் ஆனஸோ... ”கர்மாக்களை தியாகம் செய்துவிடுங்கள். அதாவது விட்டு விடுங்கள் அதுதான் மோட்சம் என்கிறது. இப்படி... வேத, உபநிஷத்துகாக்ரர்களின் கடவுளைப் பற்றிய சிந்தனைகள் வேறு வேறாய் இருக்க... இதன்அடிப்படையில் 6 தத்துவக்காரர்கள் தோன்றி... தத்தமது கொள்கைகளை தத்துவங்களை நிறுவினார்கள்.

அவர்கள் யார்? அவர்கள் சொன்னது என்ன?அதற்கு முன்...வேத சனாதன மதத்தின் பெரிய அதிர்ஷ்டம் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான். வேதங்களும் வேத வழி விளக்கங்களும் இன்றுவரை நிலைபெற்றிருப்பதற்கு அதன் அடிப்படையில் எடுத்த வியாக்யானங்களும் விளக்க புஸ்தகங்களும்தான்.

இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். பிராமணன் யுத்தத்துக்குப் போவதில்லை. அவனுக்கு அப்போதிலிருந்தே சிந்திப்பது மட்டும்தான் வேலை. அதனால் தான் இப்படி நிறைய புஸ்தகங்களை எழுதித் தள்ளிக் கொண்டிருந்தான்.

மதத்தை அன்று முதல் இன்றுவரை பிராமணனே கைக் கொண்டிருப்பதால் அவனே Leading பண்ணிக் கொண்டிருப்பதால்.பழையதை வைத்துக்கொண்டு புதியதை கற்பிப்பதில் பிராமணனுக்கு தனி சிரத்தை. எப்படி என்று கேட்டால் Vedic Prayer முழுக்க ‘எனக்கு அறிவைக் கொடு’ என்றே நிறைய இடங்களில் கேட்கிறான்.

சரி... அந்த 6 பேர் யாரென்று பார்க்கலாமா? கனாதர், அக்ஷபாதர், வ்யாஸர், கபிலர், பதஞ்சலி, ஜெய்மினி ஆகிய ஆறுபேர் உபதேசித்தவை தர்ஸனங்கள் என அழைக்கப்படுகின்றன. அதாவது தத்துவங்கள். இவர்களில் கனாதர், அக்ஷபாதர் ஆகியோர் உபதேசித்தது நியாயம், வைஷேஷிகம்.

அதாவது தர்க்கம் பண்ணுவது, வாதம் பண்ணுவது, கடவுளைப் பற்றி வாதம் பண்ணுவது, தர்க்கிகம் என்று பெயர் இதற்கு.கபிலர் சாங்க்யம் செய்தார். இதுவும் கடவுளைப் பற்றி கேள்வி கேட்கிறதுதான். பதஞ்சலி, ‘யோகம்’ என்ற தத்துவம் சொன்னார். நாம் இவர்களில் வ்யாஸரைப் பற்றியும், ஜெய்மினியைப் பற்றியும் தான் விஸ்தாரமாகப் பார்க்கப் போகிறோம்.

அதற்கு முன்...கங்கைக்கரை... பழைய காலத்தின் கங்கைக்கரை... அடர்ந்த காடு... அப்போதெல்லாம் நிறைய முனிவர்கள் அங்கே திரிந்து கொண்டிருப்பார்கள். தவம் செய்வார்கள். இதற்கு முனிவர்கள் மட்டுமன்றி காட்டு வாசம் செய்யும் துண்களும், அதாவது விறகு வெட்டுபவர்கள்... மூலிகை எடுப்பவர்கள். கங்கைக்கரையாதலால் மீன் பிடிக்கும் மீனவர் குலப் பெண்கள் உள்பட மக்கள் வசித்தார்கள். இவர்களுக்கிடையிலே தான் முனிவர்களும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார்கள்.

‘புத்ரேனே... பார்யேனே...’ என்ற சொல்லுக்கிணங்க மனையாள் வேண்டாம், மகனும் வேண்டாம் என்று வாழவேண்டும் முனிவர்கள். ஆனால்... அந்தக்கால வாழ்க்கை முறையில் எப்படியென்றால்... தவம் பண்ணிக் கொண்டிருக்கும்போதே பல பெண்கள் கண்ணில் தென்படுவார்கள். காம ஆசையை தூண்டுவார்கள்.

.முனிவர்கள் அவற்றை மறுதலித்து ஆசையை அடக்க வேண்டும். ஆனாலும்... தவத்துக்கு இடையூறாக அந்த ஸ்திரிகள் தேகம் தொந்தரவு செய்து கொண்டிருந்தால் சட்டென அவர்களை நெருங்கித் தொட்டுத் தங்களது காம ஆசையை தீர்த்துக் கொண்டு விடுவார்கள் முனிவர்கள்அந்த ஸ்திரீகளும் முனிவர்கள் இஷ்டப்பட்டால் மறுக்க முடியாத நிலைமையில் இருப்பவர்கள்.

இப்படிப்பட்ட கங்கைக்கரையிலே தான் பராசரர் எனும் முனிவர் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். கங்கைக்கரையிலே ஒரு சவுந்தர்ய பொழுதிலே அவர் நடந்து கொண்டிருந்த போதுதான்...

ஈர ஆடைகளுடன் நின்ற ஒரு தேகவனப்பு மிக்க அழகியைப் பார்க்கிறார். இவரது மனம் சட்டென அவள்மேல் தொற்றிக் கொள்கிறது. அவளை நெருங்கினார். பெண்ணே நீ யார்? “மகரிஷி... என் திருநாமம் மச்சகந்தி என்கிற சத்யவதி. நானொரு செம்படவப் பெண். என் அப்பா வலை வீசுவார். மீன் பிடிப்பார். நான் அவற்றைச் சேகரித்து எடுத்துச் செல்வேன்.

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பராசரர் அவளை இன்னும் அருகே நெருங்கினார். மச்சகந்தியின் உடலிலிருந்து மீன்வாசம் ‘கப்’பென அடித்தது. ஆனால் அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை. பெண் வாசம் தான் அவருக்கு அதிகமாய் வீசியது. மச்சகந்தியின் தோளைத் தொட்டார் முனிவர்.

‘மகரிஷி...’ என உடல் சிலிர்த்து இழுத்தாள் மச்சகந்தி. பெண்ணே...! எனக்கு கங்கையைக் கடக்க உதவி செய்வாயா? சம்மதித்தாள் மச்சகந்தி.

ஆற்றைக் கடந்த முனிவரால் ஆசையைக் கடக்க முடியவில்லை. மச்சகந்தியை நெருக்கமாக அணைத்தார். “இது பகவத் முகூர்த்தம். இந்த அருமையான தருணத்தில் என்னோடு நீ சம்மதித்து இணைந்துவிடு. ஒரு மாமுனிவனை எனக்குப் பெற்றெடுத்துக் கொடு.

இது யாருக்கும் தெரியப்போவதில்லை. என்ன?”மச்சகந்தி சம்மதித்தாள். அவளது மேனியில் மீன்வாசம் போய் ஆண்வாசம் வந்தது. -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

பகுதி – 86. மீனவப் பெண்ணான மச்சகந்தியின் மேனியில் மேவினார் பராசர். அந்த காட்டுப்பகுதிக்குள் அப்பொழுது ஒரு விசேஷ சிருஷ்டிக்கான விஷயம் நடந்தது. புதர்களுக்கிடையே ஒரு புதிய பூ பூப்பதற்கான பிராக்ரமத்தை (உடலுறவு கொண்டார்) செய்தார் பராசரர்.

“மச்சகந்தி... என் ஆசைக்கு ஒத்தாசை செய்தாய் நன்றி இனி நீ என் புத்ரனை பெற்றெடுத்துக் கொடுத்து விட்டு உன் அப்பாவிடம் செல்லலாம். அவருக்கு எதுவும் தெரியாது... நீ கன்னியாகவே இருப்பாய்.”

மச்சகந்தி அடுத்த கொஞ்ச நேரத்திலே ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். நீங்கள் ஆச்சரியப்படலாம். என்னடா இது...? மழை பெய்தவுடன் மரம் எழுந்து வந்துவிடுகிற மாதிரி இருக்கிறதே பராசரரோடு தேகசம்பந்தம் கொண்டவள் திடீரென பிள்ளை பெறுகிறாளா? அப்படியும் கன்னியாகவே இருக்கிறாளா?

ஆமாம்... ‘ரிஷி கர்ப்பம் ராத்தங்காது’ என்பார்கள். அதாவது ரிஷிகள் தங்கள் காமத்தை ஓர் அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள். அதாவது... தங்கள் ஞானத்தின் இன்னொரு பயனுக்காக. பராசரரும் மச்சகந்தியும் இணைந்த பிறகு பிறந்தது ஒரு குழந்தை. அவன் வளர்ந்தான்.

குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியாது என்று பராசர் சொன்னார் இல்லையா? ஆனால்... இந்தப் பையன் ஒரு வலையச்சிக்கு பிறந்தவன் என்பது அந்த காட்டில் உள்ள மற்றவர்களுக்கெல்லாம் தெரிந்து விட்டது. மச்சகந்தி குழந்தையை கொடுத்துவிட்டு போய்விட்டாள். ஆனால் அப்பகுயில் உள்ள மற்ற ரிஷிகள், பிராமணர்கள் எல்லாரும்...

‘ச்சீ ச்சீ... ஒரு மீனவத்தி பெற்றெடுத்த பிள்ளையை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இவனை அவளிடமே கொண்டு விட்டுவிடுங்கள். இவனுக்கு சாத்திரம் சொல்லித்தரக்கூடாது. சம்ப்ரதாயம் சொல்லித் தரக்கூடாது” கிட்டத்தட்ட அந்தப் பையனை பிராமணர்கள் பகிஷ்காரமே செய்துவிட்டார்கள். அதாவது புறக்கணித்து விட்டார்கள்.

ஆனால் அந்தப் பையன் வளர்ந்தான். சாஸ்திரம் கற்றான். சம்ப்ரதாயம் கற்றான். தனக்கு எதையெல்லாம் கற்றுக் கொடுக்கக்கூடாது என பிராமணர்கள் மறுத்தார்களோ அதையெல்லாம் கற்றான் அப்பையன்.

வளர்ந்தான் ஞானம் வளர்ந்தது. தாடி வளர்ந்தது. ரிஷியானார். இன்றைக்கும் பிராமணர்கள் கொண்டாடுகிறார்களே வேதம் அதை வகைப்படுத்தி தொகுத்தார். இன்றைக்கும் ஆயிரமாயிரம் தெய்வக் கதைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறதே அந்த 18 புராணங்களைத் தொகுத்தார்.

இன்றைக்கும் பிராமணர்களில் முதுபெரும் புனித நூலாக முழங்கப்படுகிறதே ‘ப்ரம்மசூத்ரம்’ அதை எழுதினார். அவர்தான் வ்யாஸர் வேதவ்யாஸர். வ்யாஸர் பிறந்த சம்பவங்கள் கதை என நாம் கருதிக்கொள்ளலாம்.

ஆனால், அந்தக் கதையில் ஒரு செய்தியைப் பாருங்கள். மீனவத்திக்குப் பிறந்தான் என்பதற்காக அவரை ஒதுக்கி வைத்த பிராமணர்கள்... பிறகு தங்கள் சமயத்துக்கே வ்யாஸரை பெரும் வரமாக ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த இடத்தில் ஒர் சின்ன சம்பவம் ஞாபகம் வருகிறது. கங்கை நதிக்கரையில் காட்டுப்பகுதியிலிருந்து அப்படியே காரைக்குடி பக்கம் வாருங்களேன்.

காரைக்குடியில் சனாதானிகள் கூட்டம். நாம் பேசிக் கொண்டிருந்தேன் நிறைய கூட்டம் கூடியிருந்து. அப்போது வியாஸரைப் பற்றியும் பேசினேன். அந்த வேளையில்...

அங்கே வந்தார் ராமசாமி நாயக்கர். நான் வ்யாஸரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட ராமசாமி நாயக்கர், ‘அய்யா..வ்யாஸர் மீனவப் பெண்ணுக்கு பிறந்தவரா? என்றார்.

‘ஆமாம்’ என்றேன்‘ அவர் பிறந்த போது அவரை பிராமணர்களெல்லாம் ஒதுக்கி வச்சாங்களாமே?...‘ஆமாம்’ அப்புறம் அவர் படைச்ச விஷயங்களையும் ஒதுக்கி வைக்கலாமே...? கூட்டம் நாயக்கர் பக்கம் திருப்பிப் பார்த்தது.

சரி... மறுபடியும் கங்கைக்கரையின் காட்டுப் பகுதிக்கே திரும்பபோவோம். வ்யாஸர் தனது ப்ரம்ம சூத்திரத்தில் கடவுளைப் பற்றி நான் முன்பு கூறிய தத்துவக்காரர்களை கண்டித்திருக்கிறார்.

சரி... வ்யாஸர் வ்யாக்யானம் என்ன? “நீங்களெல்லாம் ப்ரம்மத்தை, அதாவது கடவுளை காரணத்தின் அடிப்படையில் அணுகுகிறீர்கள் (based on reason) ஆனால் அவர் அறிவுக்கு அப்பாற்பட்டவர் தர்க்கங்களைத் தாண்டியவர்.
உலகத்தைக் கடவுள்தான் படைத்தார். அவர்தான் காப்பாற்றுகிறார். அவரை அறிவு, காரணம், தாக்கம் போன்றவற்றின் அடிப்படையில் அணுகாதீர்கள்.

கடவுள் காரணங்களை கடந்தவன். God is above logic...”...இதுதான் வ்யாஸரின் வ்யாக்யானத்தின் எளிய வடிவம். வ்யாஸர் புராணங்களைத் தொகுத்தவர். வேதத்தை புராண வடிவத்தின் அடிப்படையில் கதைகளாக சொல்பவர். அதனால் வேதம் சொன்னபடி கடவுளை ‘Poetic’ ஆக அணுகினார்.

அதாவது கவித்துவமான கதாம்சமாக.சரி... இப்படிப்பட்ட வ்யாஸருக்கு ஒரு சிஷ்யர் இருந்தார். அவரை ...Naturalist என்று சொல்லலாம். அதாவது இயற்கைவாதி. அவர்தான் ஜெய்மினி, வ்யாஸரின் சிஷ்யரான ஜெய்மினி, வ்யாஸரோடு நிகழ்த்திய வாதங்கள் சுவராஸ்யமானவை சிந்தனாசக்தியைத் தூண்டுபவை.

ஒருமுறை... காட்டில் வ்யாஸர் ஜெய்மினியோடு பேசிக் கொண்டிருக்கும்போது தனது வழக்கமான அறிவுரையை வழங்கினார்.

‘சிஷ்யா இந்த செடியை, மரத்தை...மண்ணை, உன்னை, என்னைப் படைத்தது கடவுள் அவர்தான் நம்மை படைத்துக் காத்து பரிபாலித்துக் கொண்டிருக்கிறார் என வ்யாஸர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க...

ஜெய்மினி... ஒரு செடியைக் கையில் பிடித்தவாறே...’ஸ்வாமி கூப்பிடுங்கள் அவனை’ என்றார். ‘யாரையப்பா?‘ அதுதான் நீங்கள் சொன்ன கடவுளை’ ஜெய்மினியின் வினா வ்யாஸரை... -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

பகுதி – 87. “ஸ்வாமி அவனை இங்கே கூட்டி வாருங்களேன்...? யாரையப்பா?...அவன் தான் உலகத்தையெல்லாம் ஒருத்தனே பொசுக்கென படைத்து முடித்து விட்டான் என்கிறீர்களே?... அந்த கடவுளைத்தான். ஜெய்மினியின் வினா வ்யாஸரை துளைத்துக் கொண்டு சென்றது.

விழிகளை சுருக்கி இமைத்த வ்யாஸர் ‘அவன் பரலோகத்தில் இருக்கிறானப்பா... அவனை இங்கே இருந்து பார்க்க முடியாது...’ என்கிறார் வ்யாஸர் ஜெய்மினி சிரிக்கிறார் “அது எப்படி இருக்கும்?”

இங்கே யாகத்தில் புகை அதிகமாக வந்தால் புகைமூட்டமாக இருக்குமே... அதுபோல இருக்கும்...”நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்... பரலோகம் உங்களுக்குத் தெரியுமா?... அப்படி தெரிந்தால் காட்டுங்கள் இல்லையென்றால் தெரிந்தவர்களை கூப்பிடுங்கள். அடியேன் பார்த்து பரவசப்பட்டுக் கொள்கிறேன்...?

”வ்யாஸர் பதிலின்றி மௌனித்தபோது...ஜெய்மினி சொன்னார். “கோஹி தஸ்வேத யத்ய முஷ்பின் லோகஅஸ்தீ வாரவேதீ...”யஜுர் வேதத்தில் வருகிற மந்த்ரம் இது.

பரலோகம் யாருக்குத் தெரியும்?.... அதைப் பார்த்தவர்கள் யார்?... இருந்தால் வரச்சொல்?... அது எப்படியிருக்கும்?...என கேள்விகளைச் சொடுக்குகிறது அந்த யஜுர் வேத மந்த்ரம். இந்த வேதக் கேள்விகளுக்காவது விடை வைத்திருக்கிறீர்களா?.......ஜெய்மினி கேட்டார்.

வ்யாஸரோ... “அவன் பரலோகத்தில் தான் இருக்கிறான்... உனக்கும் எனக்கும் இந்த செடிக்கும் கொடிக்கும் உயிர் கொடுத்தவன்... ”ஜெய்மினி... இதைக் கேட்டதும் டக்கென ஒரு கொடியை பிடித்தார்.

இந்தக் கொடிக்கும் பிராணன் உள்ளது வளர்கிறது அசைகிறது. பூக்கிறது, காய் கொடுக்கிறது, கனி கொடுக்கிறது. இதற்கு இத்தனையும்.. கொடுப்பது தண்ணீர். அந்த தண்ணீர் தான் கொடிக்கு சோறு....

இப்போது... இந்த கொடியை வாழவைப்பது கடவுள் என்றால்... தண்ணீர் தான் கடவுளா?... அல்லது கடவுள் தண்ணீர் தானா?...அந்தக் கொடிக்கு உள்சக்தி ஒன்று உண்டு.... அதற்கொரு வளரும் சக்தி உண்டு. அது தண்ணீரால் கிடைக்கிறது. அதை ஏன் கடவுள் என்கிறாய்? “இது தான் ஜெய்மினியின் மீமாம்ஸ அதாவது கடவுளைப் பற்றிய விசாரணை.

ஜெய்மினி இப்படி செடிகொடிகளை காட்டி விளக்கம் கொடுத்ததற்கு பலப் பலப் பல யுகங்கள் கழித்து தான் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று விஞ்ஞான ரீதியாக கருத்தும் உறுதிப்பட்டது.

ஜெய்மினி சொல்லும் சோறென்றால் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு ஏப்பம் விடுவதல்ல... “ஏதோ வானஸ்ய மஹிமாயத அன்னேனு அதிலோகதீ...”உயிர் சக்தியை கொடுக்கும் உணவுப் பொருள்தான் கடவுள். காலையில் நாம் சாப்பிடுகிறோம். மதியம் கடக்கும் வேளையிலே வயிறு பசிக்கிறதே... ஏன்?... அந்த உணவு கொடுத்த சக்தி தீர்ந்து போய் விடுகிறது. அடுத்தபடி... உயிரும் உடலும் இயக்குவதற்கு சக்தி இல்லை. அதற்கு அன்னம்தான் கடவுள். The food is God

ஜெய்மினி இப்படியாக இயற்கையை முதன்மைப்படுத்தினார். நம் கர்மாக்களை நாம் செய்து கொண்டிருந்தால்... கடவுளுக்கு என்ன அவஸ்யம்...? என்பது தான் ஜெய்மினியின் கேள்வி. இதுதான் வ்யாஸர்...ஜெய்மினி இடையே நடந்த உரையாடல்.

வ்யாஸர் பிரம்மசூத்திரம் எனும் நூலை இயற்றினார் என்று பார்த்தோம். அதற்கு உத்தர மீமாம்ஸா என்று பெயர். இதனை ராமானுஜர் சங்கரர் போன்றோர் பாஷ்யப் படுத்தியுள்ளார்கள். அதாவது உரையிட்டுள்ளார்கள்.

ஆனால்... ஜெய்மினி பூர்வ மீமாம்ஸ எனும் சித்தாந்த்தை கொடுத்தார். மீமாம்ஸா என்றால் enquiry விசராணை என்று பாத்தோம். வ்யாஸரின் மீமாம்ஸாவை தொட்ட சிலர் ஜெய்மினியின் ‘மீமாமம்ஸா’ வை தொடவில்லை.

ஏனென்றால் ஜெய்மினியை நாஸ்திகர் என்று அழைத்தவர்கள் கூட அன்று உண்டு. இங்கே ஒரு வேடிக்கை என்னவென்று கேட்டால்... அதுவும் வேதனையான வேடிக்கை.... கடவுளைப் பற்றிய enquiry விசாரணையில் ஈ டுபட்ட ஜெய்மினியை பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு... இன்னும் ஜெய்மினி கோத்ரம் என்று இருக்கிறார்கள்.

அவர்களோ... ஜெய்மினிக்கு எதிர்மாறாக இருக்கிறார்கள்.சரி... வ்யாஸரை பார்த்தோம். ஜெய்மினியைப் பார்த்தோம்.

இப்போது இன்னொரு புதிய தரிசனம் தலை முழுவதும் கிளி மாதிரி இருக்கிறது. உடல் முழுவதும் மனுஷன் மாதிரி இருக்கிறது. இந்த வித்தியாசமான பிறவி யார்...?அவர் எப்படி இப்படிப் பிறந்தார்.?...அவர் அந்த ராஜாவோடு அப்படி என்னதான் பேசிக் கொண்டிருக்கிறார்?... கேட்போமா?... இவருக்கும் வ்யாஸருக்கும் சம்பந்தம் உண்டு... -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்...)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.



ஆண்கடவுள் சிவனுக்கும் ஆண்கடவுள் பெருமாளுக்கும் பிறந்த சபரிமலை அய்யப்பன்.

ஆண்கடவுள் பெருமாள் எடுத்த‌ மோகினி ரூபத்தினால் ஏற்பட்ட பரமசிவனின் அடங்கா காமத்தின் விளைவுதான் சப‌ரிமலை ஐயப்பனாம். ஆக இரு ஆண் கடவுள்களின் புணர்ச்சியால் பிறந்தவர் ஐயப்பன்.

தன் வரமே தன்னை அழிக்க வருவதை நினைத்துப் பயந்து திருமாலிடம் ஒடின பரமசிவன்

சப‌ரிமலைப்பகுதியின் அய்யனார்... பிராமணர்களால் மணிகண்டானாகவும், அய்யப்பனாகவும் மாறினார்
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி  82–2 to 84.

பகுதி 82- 2. யப்பப்பா என்ன வேகம்... கொள்ளு தின்ன குதிரைகளா? குதிரையைத் தின்ற குதிரைகளா? இவ்வளவு வேகமாக, முரட்டுத்தனமாக, ஆஹா... சூறைக்காற்று வேகத்தில் சுழற்றியடிக்கின்றார்களே? யார் இவர்கள்...? அந்த மலைக் கிராமத்து மக்கள் பதறினார்கள்.

குதிரையில் உட்கார்ந்து கொண்டு லகானை ஒரு கையிலும், சாட்டையை இன்னொரு கையிலும் கொண்டிருந்த அந்த சிப்பாய்க் கொள்ளையர்கள் சாட்டையால் நர்த்தனம் ஆடினார்கள். ஸ்த்ரிகள் சிதறினார்கள். சின்னச் சின்ன குழந்தைகள் தெறித்தார்கள். ஆண்களில் சிலர் எதிர்த்து நின்றார்கள். ஆனால்... சாட்டைகளின் சமர் தாங்க முடியாமல் அப்படியே உதிர்ந்து போனார்கள். யார் அவர்கள்? அந்தக் கிராமம் எங்கிருக்கிறது? ஏன் அடிக்கிறார்கள்?

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்றைய மலையாள தேசத்தில் இருக்கும் மலைக்கிராமம் தான் அது. வந்தவர்கள்... அங்கே கொள்ளையடிக்க வந்த மிலேச்ச சிப்பாய்கள். ஒரு காலத்தில் பாண்டிய ராஜாவிடமிருந்த அந்த மலைதேசம்... அப்போதும் அதற்குப் பின்னரும் வளங்கொழித்துக் கிடந்தது. சுற்றிலும் கொள்ளையடித்துக் களித்த அந்தச் சிப்பாய்கள் சற்றே நிமிர்ந்தனர். சுற்றிலும் 5 குன்றுகள் அழகழகாய் இருந்தன. இயற்கை சௌந்தர்யமாக காட்சியளித்தாள்.

மேலே ஏதாவது வைத்திருப்பார்களோ? சிப்பாய்களில் ஒருவன் கேட்டான். ‘ம்... இருக்கலாம்’ கஷ்டப்பட்டு மேலே ஏறினார்கள்.அங்கே... அவர்கள் கண்ட காட்சி பற்றி தான் இருவேறு கருத்துகள் எதிரொலிக்கின்றன. காந்தமலை என்ற அந்த குன்றை அடைந்த அந்த சிப்பாய்களின் கண்கள் கூசின. சற்றே நெருங்க நெருங்க அவர்களின் இந்த்ரியங்கள் எல்லாம் பிரகாசம்.

அப்படியென்ன அங்கே இருந்தது? தங்கச்சிலை தகதகவென மின்னிய தங்கச் சிலை மலைவாழ் மக்களின் செழிப்பை உணர்த்தியது அந்தச் சிலை. அடித்தார்கள் கொள்ளை. இது செவி வழிச்செய்தி. இன்னொன்று அச்சிலையை உடைத்து நொறுக்கிவிட்டார்கள் என்ற செய்தி.

இதற்குப் பிறகு, தாங்கள் வழிபட்ட சிலை களவாடப்பட்டதைக் கண்ட மலைமக்கள் இங்கிருந்து காந்த மலையிலிருந்து சற்றே இறங்கி வந்தனர். 5 குன்றுகளுக்கும் நடுப்பட்ட அந்த ஸ்தலத்தில் இன்னொரு சிலையை உருவாக்கினார்கள்.

இயற்கையை வழிபட்டு பின் விலங்கு உருவங்களை வழிபட்ட பின் மனித உருவுக்கு மாறிய மக்களின் கிராமத்து தெய்வமாக விளங்கியது அய்யனார். பெண் காவல் தெய்வம் போல் இது ஆண் காவல் தெய்வம்.

இதேபோலத்தான் அந்த மலைமக்கள் தங்கள் காவல் தெய்வமாக அய்யனாரை அமர வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். இந்தச் சிலையும் சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மிலேச்ச சிப்பாய்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

முதலில் பொன் விக்ரகம் இருந்த இடம்தான் பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது. பொன்... தங்கம். அம்பலம்-என்றால் கோயில் என்ற அர்த்தத்துடன். அந்த சிலை கொள்ளைபோன பிற்பாடு...வேறொரு சிலையை மலைக்கு நடுவே பாதுகாப்பாய் வைக்கலாம் என்றால்... அதுவும் கொள்ளையடிக்கப்பட்டது. இங்கே இன்னொரு தகவல்...

இரண்டாவதாக நடந்த சம்பவத்தில் சிலை கொள்ளையடிக்கப்படவில்லை. உடைத்து நொறுக்கப்பட்டது என்றும் தகவல்கள்.

இப்படியாக எதிரிகளால் உடைத்து நொறுக்கப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட அந்த மலைமக்களின் சிலைதான் இன்று ஜோராக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. தினம் தினம்பூக்களால் பூஜை செய்து... திருவிழாக்களுடன் கொண்டாடப்பட்ட அந்த மலைமக்களின் சிலையை மையமாக வைத்து... இன்று சிலர் வருஷத்துக்கு சில நாட்கள் மட்டுமே அந்தச் சிலையை திறந்து தங்கள் வசம் வழிபாட்டு லகானை வைத்திருக்கிறார்கள். இப்போது அந்தச் சிலை...? -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

பகுதி – 83. உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு மிலேச்ச சிப்பாய்களால் துஷ்பிரயோகம் பண்ணப்பட்ட அந்தச் சிலை மலை மக்களால் மறுபடியும் செதுக்கி உட்கார்த்தி வைக்கப்பட்டது . சுத்தமாக ஓடிவருகின்ற மலை ஜலத்தை எடுத்துக் குளிப்பாட்டி... சில்லென்று அன்று பூத்த மலை மலர்கள் அன்றே பறித்து தங்கள் அய்யனாருக்கு கட்டி... மென்மை வழிபாடு செய்தனர்.

இன்னொரு பக்கம்... கூர்முனை அஸ்திரங்களால் குத்திக் கிழிக்கப்பட்ட வன விலங்குகளின் மாம்ஸத்தைக் கொண்டு வந்து தங்களது அய்யனாரின் காலடியில் சமர்ப்பித்து வன்மை வழிபாடும் செய்தனர்.இப்படி மென்மை வழிபாடு, வன்மை வழிபாடு இரண்டும் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான்..

அந்த மலைதேசத்துக்கு இப்போது ஆந்திரப்பிரதேசமாக இருக்கிறதே... அந்தப்பக்கத்திலிருந்து ஒரு கூட்டம் பிழைப்புக்காக தனியாய் நடந்து வந்தது. அப்போதுதான் அந்த அய்யனாரையும் மலை மக்களையும் பார்த்தார்கள்.

அது ராத்திரி நேரம். மலைமக்கள் இரு கையில் தீப்பந்தத்தையும் மறுகையில் மாம்ஸத்தையம் வைத்திருந்தனர். அய்யனாருக்கு எதிரே தீப்பந்தத்தை கொளுத்தி வைத்துவிட்டு... வேட்டையாடி வந்த உடல்களை அய்யனாருக்கு படைக்க ஆரம்பித்தனர். இன்றைய ஆந்திரப்பிரதேசத்திலிருந்து வந்தேறிய நம்பூதிரிகள் (பிராமணர்கள்)  தங்கள் பூணூலை முறுக்கிக்கொண்டு இக்காட்சியைப் பார்த்தனர்.

தீவிர வைதீகர்களான நம்பூதிரிகள்... இந்த அய்யனார் வழிபாட்டை கொஞ்சநாள் கவனித்தபடியே இருந்தவர்கள்... திடீரென ஒருநாள்... புது ஐதீகத்தை கிளப்பினார்கள். யப்பப்பா... இது என்ன அபச்சாரம்?

நெய்யும் தேங்காயும் படைக்கப்பட வேண்டிய இவனுக்கு கொழுப்பு வடியும் மாம்ஸத்தை படைக்கிறீர்களே...? இவன் யார் தெரியுமா உங்களுக்கு? மலைமக்கள் சிலிர்த்துப் போனார்கள். ஆஜானுபாகுவான நம்பூதிரிகளை பார்த்ததுமே இவர்கள் மேல் மலைமக்களுக்கு ஒரு புது மரியாதை பிறந்தது.என்ன சாமி சொல்றீங்க? இது உங்க அய்யனார் இல்லப்பா... எங்க அய்யப்பன். இவன் இங்க வந்த கதை உங்களுக்குத் தெரியாதா?

" தெரியுமே! ரெண்டு மூணு தடவ உடைச்சிட்டாங்க. அப்புறம் நாங்களே கஷ்டப்பட்டு இந்தச்சிலையை செஞ்சோம். காவலுக்கு வச்சிருக்கோம்'' -இதுதான் மலைமக்களின் பதில். நம்பூதிரிகளாக வந்த பிராமணர்கள் பதில் சொன்னார்கள். "தப்பு...தப்பு... இவன் எப்படி அங்கே வந்தான்னு பெரிய ஏதீகமே இருக்கு...' என்றபடி ஆரம்பித்தார்கள்.

சிவபெருமான் இருக்கிறாரே... தன்னை நினைத்து யார் தவம் செய்தாலும் அதில் மெச்சி மயங்கி அவர்களுக்கு வரம் கொடுத்துவிடுவார்.

அப்படித்தான் பத்மாசுரன் என்ற ஒர் அசுரன் சிவனை நினைத்து கடுந்தவம் இயற்றினான். வெயில், மழை, பரி, பாம்பு, புலி எதற்கும் பயப்படாமல் அசையாமல் சிவனது நாமத்தையே அசை போட்டான்.வந்தார் சிவன். என்னப்பா வரம் வேண்டும்? "தேவா... நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் பஸ்பமாய் எரிந்து இறந்துவிடவேண்டும்...'- கேட்ட வரத்தைப் பற்றி யோசிக்காமல் "தந்தேன் பத்மாசுரா' என சேங்ஷன் பண்ணிவிட்டார் சிவன்.

அன்றிலிருந்து அசுரனுக்கு கை அரித்தது. தன் எதிரிகள், மானிடர்கள் என பிடிக்காதவர்கள் தலை மேலே கை வைத்தான். உடனே அவர்கள் பஸ்பமாகி கருகிக் கிடந்தார்கள். பத்மாசுரனுக்கு விபரீத எண்ணம் உதித்தது. எல்லார் தலையிலும் கை வைத்தாகிவிட்டது. வரம் கொடுத்த சிவன்தான் பாக்கி...அவரிடம் போனான். "என்னப்பா?' என்றார் சிவன்.

"உங்கள் வரத்தின் வலிமையை சோதிக்க வேண்டும் போல இருக்கிறது. அதனால் உங்கள் தலையில் ஒரே ஒரு தடவை கை வைத்து...' சிவனுக்கு புரிந்துவிட்டது. தன் வரமே தன்னை அழிக்க வருவதை நினைத்துப் பயந்து திருமாலிடம் ஒடினார்.

புரிந்துகொண்டார் பெருமாள். இந்த அசுரனை திசை திருப்ப வேண்டுமென்றால் "தசை' யால் தான் முடியும் என்று நினைத்த பெருமாள்... அடுத்த கணமே மோகினியானார். மோகினி...? ஆமாம்... மோகம் முற்றிய நிலையில் சுவைக்க அழைக்கும் கனிகள் போன்ற அழகுடையவள் தான் மோகினி. வாலிப்பான தேகம், வளமையான பாகம், சின்ன இடுப்பு, வண்ண ஆபரணம், கண்டவரை கதிகலங்கச் செய்து காமுற வைக்கும் அழகுப் பதுமையாய் மோகினி நின்றாள்.

பார்த்தான் பத்மாசுரன். பாதத்திலிருந்து கேசம் வரை பாகம் பாகமாய் மோகினியைப் பார்த்தவன் தன்னை மறந்தான். தன்னையே மறந்துவிட்டபோது... சிவன், தசை, வரம் எல்லாம் அவனுக்கு எப்படி ஞாபகம் வரும்? மோகினிக்குள் மூழ்கிய பத்மாசுரனின் ஞாபகத்திலிருந்து எல்லாம் மறந்து போயின. பார்த்தார் பெருமாள். அதாவது மோகினி, பத்மாசுரனை இன்னும் கவனம் சிதறச் செய்வதற்காக தொடங்கினாள் நாட்டியத்தை.

அடடா... மோகினி சும்மா நின்றாலே சொக்கும் அழகு. இதில் அவள் ஆட அரம்பித்தால்...? கேட்க வேண்டுமா? "பத்மாசுரா என்னைப் போல் நீயும் அடினால் என்னை அடையலாம்? தயாரா?' -

மோகினியின் வார்த்தைகள் பத்மாசுரனை சொர்க்கத்தில் கொண்டு வந்து போட்ட மாதிரி குஷிப்படுத்தின. தான் ஆடிய ஆட்டத்தையெல்லாம் மறந்து மோகினிக்கு எதிராக நின்று ஆடத்தொடங்கினான். மோகினி இடுப்பை வளைத்தாள். அசுரனும் தன் இடுப்பை வளைத்தான். மோகினி தன் வளைக்கரங்களால் அபிநயம் பிடித்தாள். விடவில்லை அசுரனும் அதே அசைவைச் செய்தான். குனிந்து நிமிர்ந்து சிரித்தாள் மோகினி.

தன் காலைத்தூக்கி பட்டுப் பாதங்களைக் காட்டினாள். பத்மாசுரனும் முயன்றான். சுற்றினாள். பின்னல் காற்றில் பறந்தது. மறுபடியும் மோகினி தன் இடுப்பில் கை வைத்தாள். நெஞ்சில் கை வைத்தாள். பின் முகத்தைக் கைகளால் பொத்தி புன்னகைத்தாள். அசுரனும் ஆனந்தத்தில் அப்படியே செய்தான். கடைசியில்... முகத்தில் வைத்திருந்த கையை தலையில் வைத்தாள் மோகினி.எந்தத் தாமதமும் இல்லாமல் பத்மாசுரனும் தன் கைகளை தன் தலையில் எடுத்து வைத்தான்...? -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

பகுதி – 84. மோகினியாக வந்த பெருமாளின் சவுந்தர்ய ரூபத்தால் எல்லாவற்றையும் மறந்துபோன பத்மாசரன்... மோகினி போலவே தானும் தன் தலைமேல் கை வைத்தான். அவ்வளவுதான்!

அவன் வாங்கிய வரம் அவனுக்கே ஆபத்தாக முடிந்தது. நான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து இறந்துவிட வேண்டும் என அவன் வாங்கிய வரத்தின்படி... தன்னைத் தானே எரித்துக் கொண்டான். இதையடுத்து... சிவபெருமான் நிம்மதியடைந்தார்.

மோகினி... தன் அவதாரம் எடுத்தற்கான காரியம் நிறைவேறி விட்டதை கண்டு... முகம் மலர்ச்சியடைந்தாள். இனிமேல்... இந்த பத்மாசுரன் தொல்லை இல்லை... ஆமாம்... அசுரனை சம்ஹாரம் செய்துவிட்டு மோகினியாகவே இருந்த பெருமாளின் அழகு சிவனுக்குள் பிரேமத் தீயை மூட்டியது. மோகினியை மெல்ல நெருங்கினார். ‘அந்த அசுரனை சம்ஹாரம் செய்து விட்டீர்கள். ஆனால்... எனக்குள் பிரேமம் எனும் இன்னொரு அசுரன் முளைத்தெழுந்து விஸ்வரூபம் செய்கிறான். அவனை சம்ஹாரம் செய்யவும் உங்கள் தாட்சண்யம் தேவை’ சிவனும் மோகினியும் மோகித்தார்கள், பிரேமித்தார்கள்.

இந்த சம்பவத்தால் மோகினி ஒரு தெய்வக் குழந்தை பெற்றெடுக்க... அதுதான் அந்தக் குழந்தைதான்... அந்த தெய்வக் குழந்தை தான்... அய்யப்பன்.

சிவனுக்கும் மோகினிக்கும் (பெருமாளுக்கும்) பிறந்தவன் பிறக்கும் போதே கழுத்தில் மணியுடன் பிறந்ததால்... அவனுக்கு மணிகண்டன் என்றும் பெயர் உண்டு... ... என அய்யப்பன் பிறந்த கதையை நம்பூதிரிகள் மலைவாசிகளிடம் சொல்ல... மலைமக்கள் திகைத்து விட்டார்கள்.

இங்கே சுருக்கமாக நாம் பார்த்ததே இவ்வளவு சுவராஸ்யமாக இருக்கிறதென்றால்... அன்று... மலைவாசிகளிடம் கதை கதையாய் சொல்லப்பட்ட போது... அவர்கள் எவ்வளவு ஆர்வமாய் கேட்டிருப்பார்கள்.

அப்படியா?... எங்கள் அய்யனார் இப்படியா பிறந்தார்?... என்றார்கள். ‘ஆமாம்’... அவர் இன்னும் பல அரிய செயல்கள் செய்திருக்கிறார். இரண்டு மூர்த்திகளால் அவதரித்தவரான அய்யப்பனை இதுபோல நீங்கள் வழிபடக் கூடாது... அய்யப்பனை வழிபடும் வேலையை எங்களிடம் விட்டு விடுங்கள்.

‘நம்பூதிரிகள் சொன்ன புராணக் கதைகளை மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்தார்கள் மலைமக்கள் மலைப் பகுதியில் இருந்த தங்கள் அய்யனாரை அருகே சென்று பூக்கள் போட... சில படிகளைக் கட்டி வைத்திருந்தார்கள் மலைவாசிகள்.

இதைப் பார்த்த நம்பூதிரிகள்... ‘ஆஹா... இந்த படிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?’ எனக் கேட்க... ‘ஏன் தெரியாது... ஏறி வழிபாடு செய்ய வசதியாக இருக்கட்டுமே என நாங்கள் தான் செதுக்கி வைத்தோம்’ என்றார்கள் மலைமக்கள்.

அபச்சாரம்... அபச்சாரம்... இவை சாதாரண படிகள் அல்ல... ஒவ்வொரு படியும் ஒவ்வொரு தெய்வ அம்சம் கொண்டவை. 6 திருப்படிகள் சிவாம்சம் வாய்ந்தவை. 7 திருப்படிகள் பெருமாள் அம்சம் கொண்டவை. 5 திருப்படிகள் மணிகண்டனான அய்யப்பன் அம்சங்கள். இந்த 18 படிகளில்... நீங்கள் இனிமேல் சாதாரணமாக ஏறமுடியாது. விரதம் இருந்து... சும்மா இல்லை.

மண்டலம் விரதம் இருந்து... மாம்ஸம் விலக்கி... சுத்தமாக... இருந்தால்தான் இங்கே ஏறமுடியும். என்ன புரிகிறதா?... ...அவர்களின் தொனி உயரத்தில் இருந்தது. இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாய்... நாளடைவில் அந்த மலைப்பகுதியின் அய்யனார்... நம்பூதிரிகளால் மணிகண்டானாகவும், அய்யப்பனாகவும் மாறினார்.

மலைமக்கள் படிகளின் கீழே நின்றனர். பிராமணர்கள் மேலே சென்றனர். மேலே சென்றவர்களின் கண்களில்... ‘திரு திரு’வென ஒரு ஜோதிப் பிரகாசம் ஜொலித்தது. என்ன அது?... ...ஆச்சர்யமாய் கேட்டனர்.

மலைமக்களோ அதைப் பார்த்துச் சிரித்தனர். “நாங்கள் ஆச்சர்யப்படுகிறோம். பயப்படுகிறோம். பெரிதாக எரிகிறதே என்று, நீங்கள் எவ்வித முகபாவமும் காட்டாமல் இருக்கிறீர்களே?...” மறுபடியும் கேட்டார்கள் பிராமண நம்பூதிரிகள். ஓ... அதுவா?... நீங்கள் எங்களை பார்த்த ராத்திரி நேரம்... நாங்கள் தீப்பந்தம் கொளுத்திவைத்திருந்தோமே... கவனித்தீர்களா...?‘ஆமாம்...’  ‘இன்று எங்கள் திருவிழா.

நாங்கள் தீப்பந்தத்தை கொளுத்தி திருவிழா கொண்டாடுகிறோம். அதுதான் அந்த காந்த மலைமேல் ஜொலிக்கிறது’ என்றார்கள் மலைவாசிகள். கொஞ்சநாள் ஆனது... மலைமக்களின் தீப்பந்தத் திருவிழாவை தங்களது திருவிழாவாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தனர்.

அட அசடுகளே... அது உங்களின் திருவிழா அல்ல... அய்யப்பனுக்கு சபரி என்னும் காட்டுவாசி பக்தை இருந்தாள். அவளுக்கு மோட்சம் தந்தார் அய்யப்பன்... புஷ்ப மரங்கள் பூக்களை இறைக்க... தேவர்கள் எல்லாம் வந்திருந்து வாழ்த்த... ஒரு ஜோதி பெரிய அளவில் தோன்றியது. அதிலே சபரி கலந்து மோட்சம் அடைந்தாள். அந்த மோட்ச ஜோதி அது. நீங்கள் அதன் பிறகு திருவிழாவை ஆரம்பித்திருக்கிறீர்கள். புரிகிறதா?... இந்த மலைப் பகுதிக்குக் கூட சபரிமலை என்று பெயர்.

இப்படித்தான் பெயர் வந்தது. இப்போது தெரிந்துகொண்டீர்களா?.

பிராமணர்கள் தீப்பந்தத் திருவிழாவுக்கு புது ‘வெளிச்சத்தை’ கொடுத்தார்கள். தை மாதம் மகர நட்சத்திரத்தில்... இன்றும் அந்த காந்த மலைமேலே ஒரு ஜோதி தெரிகிறது. திடுதிப்பென மறைகிறது. இப்போதும் மலைமக்கள் தீப்பந்த திருவிழா கொண்டாடுகிறார்களா?... இல்லையே?... பிறகெப்படி?...

நம்பூதிரிகள் ரகஸ்ய ஏற்பாடு. அங்கே தீமூட்டி வருவார்கள். இதுபற்றி பிரபல்யமான கேரளத் தலைவர்கள் பலருமே சொல்லியிருக்கிறார்கள். மகரஜோதி என்பது மலைமக்கள் ஜோதி. அதை இப்போது நம்பூதிரிகள் தான் ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்



பிராமணர்களால் காளியை சிவனாக்கி பின் திருப்பதி பெருமாளாக எவ்வெவ்வாறு மாற்றப்பட்டது?

ஆண் ஆகிய‌ திருப்பதி பெருமாளுக்கு தலையை சீவி சிங்காரித்து அழகான பின்னல் ஏன்?

திருப்பதியில் உங்களை மொட்டை போடச்செய்து பிராமணர்களால் "மொட்டை" அடிக்கப்படுபவர்களே!. மொட்டை அடிக்கவேண்டியது ஏன்?

பெண்னை ஆணாக மாற்றிய ஆன்மிக ஆப்பரேஷன்.

திருப்பதி பக்தர்கள் தப்பாக நினைத்துக் கொண்டு விடாதீர்கள். சிந்தியுங்கள்.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 76 to 82 - 1.

பகுதி – 76. விரதங்கள்பற்றிப் பார்த்தோம். சாப்பிடாமல் தியானம் செய்வது வேதத்துக்கும், கீதைக்கும் எதிரானது என்பதையும் பார்த்தோம். இந்த விரதத்திலே இன்னொரு முக்கிய அம்சம்...இப்போதெல்லாம் குறிப்பிட்ட நாள்கள் விரதம் இருந்து ஒரு மண்டலமோ... இரண்டு மண்டலமோ விரதம் இருந்து... கூட்டம் கூட்டமாக பக்தர்கள் புறப்படுகிறார்கள். நடைபயணமாகவே உன்னை வந்து அடைகிறேன் என்று சொல்லி கால் கடுக்க நடக்கிறார்கள்...

பின் உடல் உயிர் எல்லாம் கஷ்டப்பட மலையேறுகிறார்கள். மலையிலே வீற்றிருக்கிற தெய்வத்தைப் பார்த்து வணங்கி தங்கள் விரதத்தை முடிக்கிறார்கள். விரதம் பற்றிய உண்மைகள் மலையேறி விட்டதாகச் சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தேனல்லவா?

விரதம் இருந்து மலையேறுவது தொடர்பான உண்மைகளை இப்போது பார்க்கலாம்.

``தயோ ரேவ அந்ததம் கிரியோஹாதேவ நதியோஹா யதந்தரம்தம்தேவ நிர்மிதம் தேசம் ஆரியவர்த்தம் விதுர்புதாஹா...’’ அதாவது இமயமலை, விந்தியமலைக்கு இடைப்பட்ட பகுதி தான் தெய்வப்பகுதி மற்றவை எல்லாம் மிலேச்ச பகுதி என்று மநு சொன்னார்.

ஆனாலும்... உலகின் அந்தந்த பகுதியில் வசிக்கும் மலை மக்கள் தத்தமது மலைகளை தெய்வத்தன்மை உடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒன்று தான் இந்த தென்னிந்திய மலை. இந்த மலையில் ஏழு குன்றுகள் இருப்பதால் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மலை... மிக மிகப் பழங்காலத்தில் எப்படி இருந்திருக்கும்? சிந்தனை செய்யுங்கள். எங்கு பார்த்தாலும் காடு, மிக அடர்ந்த காடு, அதற்குள் வனவிலங்குகள் கூட்டம். இந்த இயற்கை அடர்த்திக்கு இடையே தான் அந்த மலைக்கே உரிய மலைவாசிகளும்... அதாவது Hilltribes மக்களும் அங்கே வசித்து வந்தார்கள்.

அவர்களுக்கு மலையை விட்டால் வேறெதுவும் தெரியாது. கீழே இறங்கி வருவதெல்லாம் அந்த காலத்தில் சாத்தியம் இல்லாத காரியம். வாழ்வோ, சாவோ... அந்த மலை மேல் தான்.காட்டில் விளைந்திருக்கும் பழங்களைப் பறித்துத் தின்றார்கள். காட்டு விலங்குகளை பிடித்து அடித்து மாமிசம் உண்டார்கள்.

ஆனாலும்... அம்மலை மக்களுக்கு தங்கள் வாழ்க்கையைப் பற்றிய பயம் போகவில்லை.``என்னடா இது... கொடிய மிருகங்கள் எல்லாம் கொட்டம் அடிக்கின்றனவே. உலகத்தின் உயரத்தில் இருந்தும் நமக்கு எப்போதும் பய வாழ்வுதானா?...’’

மலைவாசிகளின் குழந்தைகளை மிருகங்கள் எப்போது கடித்துக் குதறும் என்பது தெரியாது. திடீர் திடீரென நடக்கும். அடர்ந்த காடுகளின் இருட்டே அவர்களுக்கு பயமாக இருந்தது.

பயம்தான் கடவுளை கண்டுபிடிக்க மனிதனுக்கு கிடைத்த முதல் சாவி என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

அந்த வாழ்க்கை பயத்தால் தான்... அந்த மலைவாசிகள் தங்களுக்கென ஒரு தெய்வத்தை வைத்துக்கொள்ள (Security God) விரும்பினார்கள். முதலில் சூரியனை வழிபட்டார்கள், பிறகு விலங்குகளை வணங்கியவர்கள், பின்... idol worship முறையில் தங்கள் தெய்வத்தை அமைத்தனர்.அவர்களின் தெய்வம் எப்படியிருக்கும்? அவர்களை மாதிரியே தான் இருக்கும்.

மலைவாசிகளுக்கு அப்போது கடவுளுக்குத்தான் பஞ்சம். கல்லுக்கா பஞ்சம். தங்கள் மலையிலேயே கல்லெடுத்து... தங்களைப் போன்றே உருவமுள்ள கருப்பான சிலையை அமைத்தார்கள். அதுதான் காளி.

ஆமாம்... காளி என்றால் கறுப்பு. பெண் தெய்வங்களை அதிலும் Rural Gods பற்றி ஏற்கெனவே நாம் பார்த்த போது... ஊருக்கு பாதுகாப்புக்காக பெண் தெய்வத்தை வைத்தார்கள். ஆண் என்றால் அலைந்துகொண்டே இருக்கும் பெண் என்றால் வீட்டை ஒழுங்காக பார்த்துக் கொள்வது போல ஊரையும் ஒழுங்காகப் பார்த்துக் கொள்ளும் என்பதற்காக Primitive மக்கள் தங்கள் பகுதி பாதுகாப்புக்காக பெண் தெய்வங்களைப் படைத்தார்கள் என பார்த்தோம்.

அந்த வகையில்... தங்கள் மலையை மக்களை காப்பாற்றிக் கொள்ள... முதன் முதலாக மலைக்காளி உருவத்தை செய்து வழிபட ஆரம்பித்தனர்.

வேட்டைக்குச் செல்லும்போது ஆண்கள் வழிபடுவதும்... வேட்டைக்குச் சென்று வந்தபின்னர்... வேட்டையாடிய பொருள்களை காளியின் கால்களில் படையலிட்டு பிறகு எடுத்துச் செல்வதும் அவர்களது பழக்கமானது. இதனால் தானோ என்னவோ... இப்பழக்கத்துக்கு ஏற்றாற்போல அக்கற்சிலையை வடிவமைத்திருந்தனர்.

காளிக்கு இரண்டு கைகள். வலது கையை கீழ்நோக்கிக் காட்டும்படி வைத்து இடது கையை தன்னை நோக்கி தூக்கிக் காட்டுவாள் காளி.`எனக்கு காலடியில் படையல் இட்டால், உன்னை நான் காப்பேன்’ என்பது, மலைவாசிகளின்‘Tribes Tradition Dictionary’ யில் இதற்கு அர்த்தமாக இருக்கலாம்.

இப்படியாக காளிக்கு படையலிட்டு பூசையிட்டு தங்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்து மலைமக்கள்... இதே காளியை மையமாக வைத்து கொண்டாட்டங்கள் நடத்தவும் தவறவில்லை.

காளிக்காக மலையெங்கிலும் உள்ள மலர் பறித்து... சூட்டி தங்களது உற்சாகப் பண்களை இசைத்துக் கொண்டாடவும் செய்தார்கள். இதெல்லாம் அவர்களது பயத்தைப் போக்கிக் கொள்வதற்காக ஒரு Entertainment.

இது போலவே பல நூறு வருஷங்களாக மலையில் இந்த காளி வழிபாடு தொடர்ந்து வந்தது. வெளி மனிதர்களால் அந்த மலை தீண்டப்படாதவரை இந்த காளி வழிபாடு தான் மலைமேல் நடந்த ஒரே வழிபாடு. மலைக்காளியை ஒருபுறம் வையுங்கள்.

இந்த விஞ்ஞான யுகத்திலே... பகவத் சிருஷ்டியையே மாற்றிப் பார்க்க துணிந்து விட்டார்கள். அதாவது ஏதேதோ ஆபரேஷன்கள் செய்து ஸ்த்ரீயை புருஷாளாகவும், புருஷாளை ஸ்த்ரீயாகவும் மாற்ற முடியும் என்று சொல்கிறார்கள். ஆணைப் பெண்ணாகவோ, பெண்ணை ஆணாகவோ மாற்ற முடியுமா?

விஞ்ஞானம் முன்னேறாத அந்த காலத்திலேயே இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்துமுடிந்து விட்டதே... எங்கே?....எங்கே....? 



பிராமணர்களால் காளியை சிவனாக்கி பின் திருப்பதி பெருமாளாக எவ்வெவ்வாறு மாற்றப்பட்டது?

ஆண் ஆகிய‌ திருப்பதி பெருமாளுக்கு தலையை சீவி சிங்காரித்து அழகான பின்னல் ஏன்?

திருப்பதியில் உங்களை மொட்டை போடச்செய்து பிராமணர்களால் "மொட்டை" அடிக்கப்படுபவர்களே!. மொட்டை அடிக்கவேண்டியது ஏன்?

பெண்னை ஆணாக மாற்றிய ஆன்மிக ஆப்பரேஷன்.

திருப்பதி பக்தர்கள் தப்பாக நினைத்துக் கொண்டு விடாதீர்கள். சிந்தியுங்கள்.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 76 to 82 - 1.

பகுதி – 76. விரதங்கள்பற்றிப் பார்த்தோம். சாப்பிடாமல் தியானம் செய்வது வேதத்துக்கும், கீதைக்கும் எதிரானது என்பதையும் பார்த்தோம். இந்த விரதத்திலே இன்னொரு முக்கிய அம்சம்...இப்போதெல்லாம் குறிப்பிட்ட நாள்கள் விரதம் இருந்து ஒரு மண்டலமோ... இரண்டு மண்டலமோ விரதம் இருந்து... கூட்டம் கூட்டமாக பக்தர்கள் புறப்படுகிறார்கள். நடைபயணமாகவே உன்னை வந்து அடைகிறேன் என்று சொல்லி கால் கடுக்க நடக்கிறார்கள்...

பின் உடல் உயிர் எல்லாம் கஷ்டப்பட மலையேறுகிறார்கள். மலையிலே வீற்றிருக்கிற தெய்வத்தைப் பார்த்து வணங்கி தங்கள் விரதத்தை முடிக்கிறார்கள். விரதம் பற்றிய உண்மைகள் மலையேறி விட்டதாகச் சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தேனல்லவா?

விரதம் இருந்து மலையேறுவது தொடர்பான உண்மைகளை இப்போது பார்க்கலாம்.

``தயோ ரேவ அந்ததம் கிரியோஹாதேவ நதியோஹா யதந்தரம்தம்தேவ நிர்மிதம் தேசம் ஆரியவர்த்தம் விதுர்புதாஹா...’’ அதாவது இமயமலை, விந்தியமலைக்கு இடைப்பட்ட பகுதி தான் தெய்வப்பகுதி மற்றவை எல்லாம் மிலேச்ச பகுதி என்று மநு சொன்னார்.

ஆனாலும்... உலகின் அந்தந்த பகுதியில் வசிக்கும் மலை மக்கள் தத்தமது மலைகளை தெய்வத்தன்மை உடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒன்று தான் இந்த தென்னிந்திய மலை. இந்த மலையில் ஏழு குன்றுகள் இருப்பதால் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மலை... மிக மிகப் பழங்காலத்தில் எப்படி இருந்திருக்கும்? சிந்தனை செய்யுங்கள். எங்கு பார்த்தாலும் காடு, மிக அடர்ந்த காடு, அதற்குள் வனவிலங்குகள் கூட்டம். இந்த இயற்கை அடர்த்திக்கு இடையே தான் அந்த மலைக்கே உரிய மலைவாசிகளும்... அதாவது Hilltribes மக்களும் அங்கே வசித்து வந்தார்கள்.

அவர்களுக்கு மலையை விட்டால் வேறெதுவும் தெரியாது. கீழே இறங்கி வருவதெல்லாம் அந்த காலத்தில் சாத்தியம் இல்லாத காரியம். வாழ்வோ, சாவோ... அந்த மலை மேல் தான்.காட்டில் விளைந்திருக்கும் பழங்களைப் பறித்துத் தின்றார்கள். காட்டு விலங்குகளை பிடித்து அடித்து மாமிசம் உண்டார்கள்.

ஆனாலும்... அம்மலை மக்களுக்கு தங்கள் வாழ்க்கையைப் பற்றிய பயம் போகவில்லை.``என்னடா இது... கொடிய மிருகங்கள் எல்லாம் கொட்டம் அடிக்கின்றனவே. உலகத்தின் உயரத்தில் இருந்தும் நமக்கு எப்போதும் பய வாழ்வுதானா?...’’

மலைவாசிகளின் குழந்தைகளை மிருகங்கள் எப்போது கடித்துக் குதறும் என்பது தெரியாது. திடீர் திடீரென நடக்கும். அடர்ந்த காடுகளின் இருட்டே அவர்களுக்கு பயமாக இருந்தது.

பயம்தான் கடவுளை கண்டுபிடிக்க மனிதனுக்கு கிடைத்த முதல் சாவி என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

அந்த வாழ்க்கை பயத்தால் தான்... அந்த மலைவாசிகள் தங்களுக்கென ஒரு தெய்வத்தை வைத்துக்கொள்ள (Security God) விரும்பினார்கள். முதலில் சூரியனை வழிபட்டார்கள், பிறகு விலங்குகளை வணங்கியவர்கள், பின்... idol worship முறையில் தங்கள் தெய்வத்தை அமைத்தனர்.அவர்களின் தெய்வம் எப்படியிருக்கும்? அவர்களை மாதிரியே தான் இருக்கும்.

மலைவாசிகளுக்கு அப்போது கடவுளுக்குத்தான் பஞ்சம். கல்லுக்கா பஞ்சம். தங்கள் மலையிலேயே கல்லெடுத்து... தங்களைப் போன்றே உருவமுள்ள கருப்பான சிலையை அமைத்தார்கள். அதுதான் காளி.

ஆமாம்... காளி என்றால் கறுப்பு. பெண் தெய்வங்களை அதிலும் Rural Gods பற்றி ஏற்கெனவே நாம் பார்த்த போது... ஊருக்கு பாதுகாப்புக்காக பெண் தெய்வத்தை வைத்தார்கள். ஆண் என்றால் அலைந்துகொண்டே இருக்கும் பெண் என்றால் வீட்டை ஒழுங்காக பார்த்துக் கொள்வது போல ஊரையும் ஒழுங்காகப் பார்த்துக் கொள்ளும் என்பதற்காக Primitive மக்கள் தங்கள் பகுதி பாதுகாப்புக்காக பெண் தெய்வங்களைப் படைத்தார்கள் என பார்த்தோம்.

அந்த வகையில்... தங்கள் மலையை மக்களை காப்பாற்றிக் கொள்ள... முதன் முதலாக மலைக்காளி உருவத்தை செய்து வழிபட ஆரம்பித்தனர்.

வேட்டைக்குச் செல்லும்போது ஆண்கள் வழிபடுவதும்... வேட்டைக்குச் சென்று வந்தபின்னர்... வேட்டையாடிய பொருள்களை காளியின் கால்களில் படையலிட்டு பிறகு எடுத்துச் செல்வதும் அவர்களது பழக்கமானது. இதனால் தானோ என்னவோ... இப்பழக்கத்துக்கு ஏற்றாற்போல அக்கற்சிலையை வடிவமைத்திருந்தனர்.

காளிக்கு இரண்டு கைகள். வலது கையை கீழ்நோக்கிக் காட்டும்படி வைத்து இடது கையை தன்னை நோக்கி தூக்கிக் காட்டுவாள் காளி.`எனக்கு காலடியில் படையல் இட்டால், உன்னை நான் காப்பேன்’ என்பது, மலைவாசிகளின்‘Tribes Tradition Dictionary’ யில் இதற்கு அர்த்தமாக இருக்கலாம்.

இப்படியாக காளிக்கு படையலிட்டு பூசையிட்டு தங்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்து மலைமக்கள்... இதே காளியை மையமாக வைத்து கொண்டாட்டங்கள் நடத்தவும் தவறவில்லை.

காளிக்காக மலையெங்கிலும் உள்ள மலர் பறித்து... சூட்டி தங்களது உற்சாகப் பண்களை இசைத்துக் கொண்டாடவும் செய்தார்கள். இதெல்லாம் அவர்களது பயத்தைப் போக்கிக் கொள்வதற்காக ஒரு Entertainment.

இது போலவே பல நூறு வருஷங்களாக மலையில் இந்த காளி வழிபாடு தொடர்ந்து வந்தது. வெளி மனிதர்களால் அந்த மலை தீண்டப்படாதவரை இந்த காளி வழிபாடு தான் மலைமேல் நடந்த ஒரே வழிபாடு. மலைக்காளியை ஒருபுறம் வையுங்கள்.

இந்த விஞ்ஞான யுகத்திலே... பகவத் சிருஷ்டியையே மாற்றிப் பார்க்க துணிந்து விட்டார்கள். அதாவது ஏதேதோ ஆபரேஷன்கள் செய்து ஸ்த்ரீயை புருஷாளாகவும், புருஷாளை ஸ்த்ரீயாகவும் மாற்ற முடியும் என்று சொல்கிறார்கள். ஆணைப் பெண்ணாகவோ, பெண்ணை ஆணாகவோ மாற்ற முடியுமா?

விஞ்ஞானம் முன்னேறாத அந்த காலத்திலேயே இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்துமுடிந்து விட்டதே... எங்கே?....எங்கே....? -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்


பகுதி – 77.  பெண்ணை ஆணாய் மாற்றும் ஆபரேஷன் பற்றி எழுதினேன் இல்லையா?... என்னடா இவர்,ஆன்மீக தொடரில் ஆபரேஷனை பற்றி எழுதுகின்றாரே என்று குழம்பாதீர்கள்.

அதாவது இது ஆன்மீக ஆபரேஷன். மலைமக்களின் பூர்வீக தெய்வமாக மலைக்காளி நிலைபெற்று வந்ததை சொன்னேன். பலநூறு ஆண்டுகளாக... வெளியாட்கள் மலையேறும் வரை காளிதான் அங்கே கடவுள்.

அப்படியென்றால் அந்தக் காளி... திருப்பதியில் அவதரித்த... ஏழுமலையிலே மலைமக்கள் பெற்றெடுத்து வணங்கிய காளி இன்று எங்கே?... இந்த கேள்வியின் பதிலில் தான் ஆன்மீக ஆபரேஷன் ஆரம்பமாகிறது.

பற்பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு...மலையின் மேலே... மலைமக்கள் அல்லாதவர்கள் ஏற ஆரம்பித்தனர். மலைமக்கள் அல்லாதவர்கள் என்றால்..?. பிராமணர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். மலையில் ஏறியவர்கள்... அந்தக் காளி சிலையை பார்த்தார்கள்.

காட்டு மலர்களை பறித்தும், வேட்டையாடிய மிருகங்களை படைத்தும் ‘பூசெய்’ செய்து வந்த மலைமக்களைப் பார்த்த பிராமணர்கள்... ‘இப்படியா பூசை செய்வது?

நாங்கள் ஆகமம் தெரிந்தவர்கள். பூசையை எப்படி செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வதால் காளிக்கு சக்தி கிடைக்காது. காளியின் அருளும் நமக்குக் கிடைக்காகது.அதனால் காளியை எங்களிடம் விட்டு விடுங்கள்” என்றார்கள் பிராமணர்கள்.. மலைமக்களுக்கு ஆச்சரியமாகிவிட்டது .

எங்கிருந்தோ மேலே ஏறி வந்து... நம் தெய்வத்தை கேட்கிறார்களே என்று. எல்லாரும் ஒன்றாகக் கூடினர். பலநூறு ஆண்டுகளாக நாம் வழிபட்டு வந்த தெய்வத்தை ‘நாங்கள் வழிபடுகிறோம்’ என்று சொல்கிறார்களே?... கொடுப்பதா வேண்டாமா... இதுதான் விவாதம்.கொடுப்போம்...

நம் காளிக்கு சக்தி அதிகம் கிடைக்கட்டும் என்றனர் சிலர். இல்லை... வேண்டாம் நம் காளியை நாமே வழிபடுவோம் என்றனர் சிலர்.உடனே இது நடக்கவில்லை. காலப் போக்கில்... நாளடைவில் அந்த காளிச்சிலை பிராமணர்களின் கைக்கு வந்தது.

இதுநாள் வரை நீங்கள் காளிக்கு பூஜை செய்திருக்கலாம். மலர்களையும், மாமிசங்களையும் இனிமேல் படைக்கக்கூடாது. மலைமக்களின் காளிதேவியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆகமவிதியில் வழிபாடுகளை ஆரம்பித்தனர் பிராமணர்கள். காளி தேவிக்கென மிக சின்னதாக ஒரு கோவிலும் கட்டப்பட்டது.

முற்றிலும் ஆஹம ரீதியிலான வழிபாடுகளை ஆரம்பித்த பிராமணர்கள் காளிதேவியை தங்களுக்குள் அடைத்தார்கள். ஆகமப்படி பெண் தெய்வங்கள் இருக்கும் கோவிலில் சிம்மத்தை ஸ்தாபித்து வைப்பார்கள். ஆண் தெய்வங்கள் இருக்கும் கோயில்களில் ரிஷபத்தை ஸ்தாபித்து வைப்பார்கள். இதன்படி... காளிக்கு பக்கத்தில் சிம்மத்தை ஸ்தாபித்தார்கள். இப்படியான காளியை தங்கள் வசம் எடுத்துக் கொண்ட பிராமணர்கள்...

‘இனிமேல் நீங்கள் உள்ளே வரக்கூடாது. நாங்கள் பூஜை செய்கிறோம். நீங்கள் வெளியே நின்று வழிபட்டு விட்டு அப்படியே போய்விடுங்கள். இது ஆகம ரீதியிலான காளி, உங்கள் பழைய காளி கிடையாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வழிபடுவதற்கு.

நாங்கள் நடத்தும் வழிபாட்டு முறைகளை மீறினால்... காளிக்கு சக்தியற்றுப் போய்விடும். அதனால்... காளிக்கு நீங்கள் இதுவரை நடத்திய உற்சவங்கள், திருவிழாக்கள், படையல்களுக்கான பொருளை எங்களிடம் கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும்பார்த்துக் கொள்கிறோம்.

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை மலைக்காரர்கள். இந்த ஆகம அதிரடியை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இன்னொரு மாற்றமும் கொஞ்ச காலத்தில் நடந்தது.

இதைத் தான் நான் ஆபரேஷன் என்று சொன்னேன். வழிபட வந்த மலைமக்கள்... தங்கள் காளியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். காரணம்?... நேற்று வரை பெண்ணாக இருந்த காளி... இன்று ஆணாக மாறிவிட்டாள். காளியின் கைகளில் நாகங்கள் சுருண்டிருந்தன. பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. அதாவது நாகக்காப்பு.என்ன இது?...

“நாங்கள் இந்த தெய்வத்தை ப்ராபகண்டா ஆக்கப் போகிறோம். இது சைவர்களின் தெய்வம்... சிவபெருமான். காளி கிடையாது...

”இப்போதுதான் பிராமணர்கள் தங்கள் அடிமடியை அவிழ்த்துக் கொண்டிருப்பதை மலைமக்கள் உணர்ந்தனர். போராடத் தொடங்கினார்கள். ஆயுதங்களை தூக்கினார்கள். ஆயுதங்களை பிராமணர்களின் அறிவு தோற்கடித்தது.

“இருங்கள். பொறுங்கள். இந்த தெய்வத்தால் உங்களுக்கும் பலன்கிட்ட வேண்டும். எங்களுக்கும் பலன் கிட்ட வேண்டும். உங்களின் பூர்வீக தொழில்களை கூறுங்கள்...

“வேட்டையாடுவது, தேனெடுப்பது, முடிமழிப்பது...” “என்னது?... கடைசியாய் என்ன சொன்னீர்கள்?...” “எங்களில் ஒரு பிரிவினர் அம்பட்டையர்கள். முடி மழிப்பது தான் எங்கள் வேலை...”

“சபாஷ்! இனிமேல் கோயிலுக்கு உள்ளே யார் வந்தாலும்... தரிசனம் செய்ய யார் வந்தாலும்... உங்களிடம் உட்கார்ந்து தலையைக் காட்டி முடிகளை மழித்துக் கொண்டுதான் உள்ளே வரவேண்டும்.

இது இன்று முதல் க்ரமம். அதற்கேற்ற தட்சணையை நீங்கள் வாங்கிக் கொள்ளவேண்டும். உள்ளே என்ன தட்சணையோ அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம்.உங்களுக்கும் பலன் எங்களுக்கும் பலன். உங்களுக்கும் தட்சணை. எங்களுக்கும் தட்சணை உங்களுக்கும் அனுக்ரஹம். எங்களுக்கும் அனுக்ரஹம். ”.

மலை மக்களான அம்பட்டையர்கள் காளியை வழிபடும் உரிமையை இழந்து வெளியே அமர்ந்து மொட்டையடிக்க ஆரம்பித்தார்கள். பிராமணர்கள் உள்ளே சென்று மலை மக்களுக்கு மொட்டையடித்தார்கள். இந்த நிலையில்தான்...-- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்


பகுதி – 78 . இந் நிலையில்தான்...எந்த நிலையில் தான்.... திருப்பதி மலைக்காளியை பரமசிவனாகவும் சுப்ரமண்யனாகவும் சைவர்கள் மாற்றி விட்ட நிலையில் தான் இந்தத் தகவல் வைணவர்களுக்குக் கிடைக்கிறது. கொதித்தெழுந்தனர்.

வைணவத்திலகம் எம்பெருமானார் என்ற உயர்ந்த பட்டப்பெயர் கொண்ட சான்றோர் ராமானுஜர் தலைமையில் கொதித் தெழுந்தனர். மலைமீது அடுத்ததாக வைணவப்படை ஏறியது.

ஸ்ரீராமானுஜர் காலம் 11-ஆம் நூற்றாண்டு அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. தன்னுடைய மாமா திருமலைநம்பியிடம் ராமாயணம் கேட்பதற்காக திருப்பதிக்குப் போனார் ஸ்ரீராமானுஜர். அங்கே கீழே ராமாயணம் கற்றுக்கொண்டிருந்த போது தான்... மேலே மலையில் சிவபெருமானை வழிபடுகிற தகவல் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். தன்னுடன் பல வைணவர்களை அழைத்துக்கொண்டு மலையேறினார். அங்கேயோ... கோயில் கட்டி அதற்குள் இந்த காளியை சிவனாக்கி சைவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

இந்த வைணவ-சைவ போரில் ஸ்ரீராமானுஜர் ஈடுபட்டதைப் பற்றி குருபரம்பரை என்றால் குரு என்றால் ஆச்சார்யர்கள் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். அதாவது... வைணவ சமய சம்பிரதாய ஆச்சாரியார்களின் வாழ்க்கைக் குறிப்புகளை தொகுத்தெடுத்து தரும் புஸ்தகம் தான் குருபரம்பரை. இந்த புஸ்கத்திலே தான் திருப்பதி மலை மேலே நடந்த அந்த சம்பவம் விளக்கப்படுகிறது.

ராமானுஜர் தன் தலைமையில் வைணவர்களை கூட்டிக் கொண்டு மலை உச்சிக்குச் சென்றதும் அங்குள்ள சைவர்கள் கோபத்தின் உச்சிக்குப் போனார்கள்.

‘இங்கே எங்கே வந்தீர்கள்’ இது எங்கள் கோயில், எங்கள் தெய்வம், மரியாதையாக இறங்கிப் போங்கள்’ சைவர்கள் குரல் எழுப்பினர்.

ராமானுஜரும், அவரது அடியார் குழாமும் அசையவில்லை. இது பகவான் நாராயணன் எழுந்தருளியிருக்கும் கோயில். இங்கே இத்தனை காலமாக, நீங்கள் இருந்தது போதும். இனி மேலாவது இடத்தைக் காலி பண்ணுங்கள்...

வைணவர்கள் வாதம் செய்தனர்.“முடியவே முடியாது பாருங்கள் அவர் கைகளில் பாம்புகள் சுருண்டிருக்கின்றன. அதனால் இவர் சிவன்தான்.” தாங்கள்கொஞ்ச காலத்துக்கு முன்பு மாட்டிய நாகக்காப்புகளை ஆதாரமாக எடுத்து வைத்தனர்.

இரண்டு தரப்பிலும் வாதப்பிரதிவாதங்கள் வெடித்த நிலையில் எங்கிருந்தோ ஒரு மன்னனை அவர் பேர் தொண்டமான் சக்கரவர்த்தியாம். மன்னன் முன்னிலையில் அந்த ‘பகவத் பஞ்சாயத்து’ தொடர்ந்தது. (அந்த காலத்தில் மலைமேலே மன்னன் ஏது? அவன் ஏன் இங்கு வந்தான்? என்ற கேள்விகள் எனக்குள்ளும் எழத்தான் செய்கின்றன.

ராமானுஜர் வாய்திறந்தார். “சரி... நாம் இரண்டு தரப்பினரும்... இப்படி வாதப் பிரதி வாதங்கள் பண்ணிக் கொண்டே இருக்கிறோம். இம்மலையில் இருப்பது பெருமாள்தான் என நாங்கள் அறுதியிட்டுக் சொல்லுவோம். நீங்களோ இதுசிவகிரி என்கிறீர்கள்.

இப்பிரச்சினையை நாம் பேசித்தீர்க்க முடியாததால்... பகவானே தீர்த்து வைக்கட்டும் நான் யார் பெருமாளா, சிவனா?...என அவனே தன் பதிலைச் சொல்லட்டும்” என்றார் ராமானுஜர்.

எம்பெருமானாரே... அவர் எப்படிச் சொல்லுவார்? எனக் கேட்டார் ராமானுஜரின் சிஷ்யர் ஒருத்தர். கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு. இத்தனை விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் அம்மலைக்கே உரிய மலைமக்கள், இந்த பஞ்சாயத்தைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா எனத் தெரியாமல் விழித்தனர்.

சரி மறுபடியும் குரு பரம்பரைக்குச் செல்வோம். பகவானே எப்படி பதில் சொல்வார் என்ற கேள்விக்கு ராமானுஜர் பதில் சொன்னார். “பெருமாளின் முக்கியமான ஆயுதங்கள்.... சங்கு, சக்கரம், சிவனின் முக்கிய ஆயுதங்கள் மான், மழு, இந்த இரண்டு தரப்பு ஆயுதங்களையும் எடுத்து வாருங்கள். சாதகமான சூழ்நிலை வந்தால் எடுத்துப் பொருத்தி விடலாம். என்ற நம்பிக்கையில்... இரண்டு தரப்பினரும் தத்தமது பகவான்களின் ஆயுதங்களைக் கொண்டு வந்தனர்.

“இந்த இரண்டு தரப்பு ஆயுதங்களையும் சன்னதியில் விக்ரஹத்துக்கு கீழே வைப்போம். ராத்திரி சன்னதியை இழுத்துப்பூட்டிவிடுவோம். எல்லோரும் போய்விட்டு சூர்யோதய சமயத்திலே வருவோம். சன்னதியை திறந்து பார்ப்போம். விக்ரகம் சங்கு சக்கரத்தை சூடிக் கொண்டிருந்தால் அவர் பெருமாள். மான், மழுவை தரித்துக் கொண்டிருந்தால் சிவன். இந்த முடிவுக்கு கட்டுப்படுகிறீர்களா?” ....கேட்டார் ராமானுஜர்.

கூடிப் பேசினார்கள். ‘எல்லாம் பகவத் சங்கல்பம். சரி... இதுதான் சரி...’ எல்லோரும் சம்மதித்தனர்.

சங்கு சக்கரத்தையும், மான், மழுவையும் அந்த சன்னதிக்குள் கொண்டுபோய் வைத்தார்கள். ராத்திரி நேரம். கும்மிருட்டு உள்ளே யாராவது ஒளிந்திருக்கிறார்களா? ராத்திரி இருட்டோடு இருட்டாக உள்ளே இருந்து, தங்களுக்கு சாதகமான ஆயுதத்தை எடுத்து மாட்டிவிடுவார்களோ என்ற சந்தேகத்தில் நன்றாய் சன்னதியை ஆராய்ந்து விட்டு வெளியேவந்தார்கள்.

சன்னதியை இழுத்துப் பூட்டினர்.உள்ளே விக்ரஹத்தைத் தவிர யாரும் இல்லை. இனி எல்லாம் அவன் தீர்ப்பு... கூட்டம் கலைந்தது. ராத்திரிப் பொழுது எதிர்பார்ப்போடு கரைய... சூர்யோதயம் நேர்ந்தது. வானம், பூமி வெளிச்சமாயின.
பகவான் யார்? அவன் தீர்ப்பு என்ன? ஆவலோடு கதவைத் திறந்தார்கள்... உள்ளே? -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

பகுதி – 79 , ராமானுஜரின் யோசனைப்படி... பெருமாள், சிவன் ஆகிய இருவரது இஷ்ட ஆயுதங்களையும் சந்நிதிக்குள் வைத்துப் பூட்டுகிறார்கள். மறுநாள் சூரியன் பிரவேசம் ஆவதற்கு முன்பே வாசலில் எல்லாரும் காத்திருக்க ஆரம்பித்தார்கள். அவர்களது நெஞ்சங்களில் ‘ஆண்டவன் தீர்ப்பு’ என்னவோ என்பதைஅறியும் ஆவல்.

சூரியன் பிரவேசித்த பிறகு... பூட்டு திறக்கப்பட்டது. கதவு விலக்கப்பட்டது. உள்ளே...தனது தோள்பட்டைகளில் சங்கு சக்கரம் தாங்கி ஜம்மென நின்றிருந்தது விக்ரஹம்.

காரணம், பெருமாளுக்கே உரிய நான்கு கைகள் இங்கே இல்லை. இரண்டு கைகள் தான். சக்கரம் சூடிக்கொண்ட சந்நிதியைப் பார்த்ததும் வைஷ்ணவர்கள் முகமெல்லாம் பூத்துப் போனது. சைவர்கள் முகமெல்லாம் செத்துப்போனது. இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

சங்கு சக்கரத்தை சூடிக் கொண்டதோடு நிற்கவில்லை பெருமாள். நேற்று ராத்திரி அங்கே வைக்கப்பட்டிருந்தன அல்லவா?... சிவனது மான், மழு மற்றும் சூலம் போன்ற ஆயுதங்கள். அந்த சிவ ஆயுதங்களெல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு தூள் தூளாகக்கிடந்தன.

பகவானின் சந்நிதியில் ஒரு பக்கா ரவுடி புகுந்தது போல... சிவனது ஆயுதங்கள் தூள் தூளாக சிதறடிக்கப் பட்டிருந்தன. இதைக் கண்டதும் வைஷ்ணவர்களுக்கு மேலும் கொண்டாட்டமானது. சைவர்கள் திரும்பிவிட்டனர். இந்த காரணத்தினாலேயே... ஸ்ரீராமானுஜருக்கு ‘அப்பனுக்கு சங்காழி அளித்தவர்’ என்ற பட்டப் பெயர் உண்டானது.

அப்பன் என்றால் திருப்பதி பெருமாள் என்று பொருள். அப்பனுக்கே அதாவது திருப்பதி பெருமாளுக்கே சங்கு, ஆழி அதாவது சக்கரம் வழங்கியவர் என்று அர்த்தம். இத்தனையும் குரு பரம்பரையில் குறிப்பிட்டுள்ளவை தான். இதுபோல... மற்ற சமயத்தவரிடமிருந்து வைணவத்தை போரிட்டு காப்பாற்றியவர் என்பதாக ராமானுஜர் மீதுராமானுஜ நூற்றந்தாதி... என்றொரு அந்தாதியே பாடியிருக்கிறார் திருவரங்கத்து அமுதனார்.

அதில் ஒரு பாடல் கேளீர்....‘தர்க்க சமணமும் சாக்கிய பேய்களும்-தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பரும் சூனியவாதமும் நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீ நிலத்தே பொற்கற்பகம் எம் ராமானுச முனி போந்த பின்னே..

.’‘அதாவது... வாதம் பண்ணும் சமணர்களும், புத்தமதம் என்னும் பேய்களும்... தாழ்சடையோனாகிய சிவபெருமானின் வழியை பின்பற்றும் சைவர்களும், கடும் சூனியவாதம் பேசுபவர்களும்... எல்லாமே பொய் என குறும்பு பேசும் அத்வைதிகளும்... செத்து ஒழிந்தனர். எப்போது?... எங்கள் ராமானுஜர் பிறந்த பிறகு...’என்கிறது இந்த அந்தாதி.

திருப்பதி மலையிலிருந்து திடீரென இறக்குவது போலிருக்கிறதே என எண்ணாதீர்கள். மேலே இன்னும் கொஞ்சம் செய்திகள் பாக்கியிருக்கிறது.

மலைமேல் உள்ள பகவான் தன் இஷ்டமான சங்கு, சக்கரத்தை சூடிக் கொண்டார் சரி... பிறகு எதற்கு சிவனுடைய ஆயுதங்களை அப்படி துவம்சம் பண்ணி சிறு சிறு துண்டுகளாக செய்யவேண்டும்?...

சங்கு, சக்கரத்தைச் சூடிக் கொண்டாலே... பெருமாள் என்பது அனைவர்க்கும் புரிந்து விடும். பிறகு எதற்கு... பகவான் நாராயணன் சிவபெருமானின்ஆயுதங்களை உடைக்க வேண்டும்.?... இப்படி உடைப்பதா தெய்வத்துக்கு அழகு?

...இந்தக் கேள்வியை கேட்கும் போதுதான் ‘செவி வழிச் செய்தி’ என்ற வகையில்... குருபரம்பரையை அடிப்படையாக வைத்து ஒரு செய்தி பரவியிருக்கிறது.

அதாவது முதல்நாள் ராத்திரி... இருதரப்பு ஆயுதங்களையும் உள்ளே வைத்துப் பூட்டி விட்டார்கள். உள்ளே மனுஷாள் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டுதான் எல்லாரும் சென்றார்கள். இதன்பிறகு... ராத்திரியில் ராமானுஜர் மறுபடியும் கோயிலுக்கு வந்தார். எப்படி?... ஒரு பாம்பு வடிவம் எடுத்தாராம். பாம்பா?..
.
ஆமாம். ராமானுஜர் ஆதிசேஷனின் அம்சம் என்று அவருக்கு ரொம்ப காலம் முன்பு வாழ்ந்த நம்மாழ்வாருக்கு பெருமாள் பிரசன்னமாகி கூறியதாக அய்திக குறிப்பு உண்டு....

அதன்படியே... நம்மாழ்வார் தனக்குப் பின் வரப்போகும் ராமானுஜரைப் பற்றி... ‘கலியும் கெடும் காண்மின்’ என பாடி வைத்திருக்கிறார். இந்த வகைக்கு பவிஷ்யதாசார்யர் என்று பெயர். அதாவது தனக்குப் பின் வரும் ஆசார்யரைப் பற்றி அறிந்து போற்றுதல். இப்படியாக ‘ஆதிசேஷனின் அம்சமாக ராமானுஜர் அவதரிப்பார்’ என்று பெருமாளே...நம்மாழ்வாருக்கு சொன்னதாக அய்தீகம்.

அப்படிப்பட்ட... ஆதிசேஷனின் அம்சமாகிய ராமானுஜர்... அன்று ராத்திரி மறுபடியும் கோயிலுக்கு வந்தார். சந்நிதி பூட்டிக் கிடக்கிறது. உள்ளே இருதரப்பு ஆயுதங்களும் இருக்கின்றன. காலையில் சங்கு, சக்கரம், சூடிக் கொண்டு பெருமாளாகத்தான் அவர் காட்சியளிக்க வேண்டும் என முடிவு கட்டிய ராமானுஜர்... கோயிலை சுற்றிச் சுற்றி வருகிறார்.

உள்ளே போக ஒரே வழி... கோமுகைதான். அப்படியென்றால்?... உள்ளே உள்ள விக்ரஹத்துக்கு திருமஞ்சன நீராட்டு வைபவம் நடத்தும் போது அந்த நீர்மம்... வழிந்து வெளியே ஓடி வருமே... அந்த துவாரத்துக்கு பெயர்தான் கோமுகை. அது ஒன்றை தவிர சன்னதிக்குள் செல்ல வேறு வழியில்லை.

டக்கென... ஆதிசேஷனின் அம்சமான ஒரு பாம்பாக வடிவெடுத்த ராமானுஜர் அந்த துவாரம் வழியாக சன்னதிக்குள் சென்று விட்டார். கடகடவென சங்கையும், சக்கரத்தையும் எடுத்து விக்ரஹத்தின் தோள் பட்டையில் சொருகுகிறார். காரியம் முடிந்தது. மறுபடியும் பாம்பாகி வெளியே வந்து...ராத்திரியில் மறைந்து விட்டார்.

பிறகு... காலை எல்லாரோடும் வந்து திறந்து பார்க்கும் போது சங்கும் சக்கரம் சூடியபடி நிற்க... சிவ ஆயுதங்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் அந்த செவிவழிச் செய்தி...அப்படியென்றால்?... -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

பகுதி – 80. குரு பரம்பரையை மையமாக வைத்து எழுந்த அந்த செவி வழிச் செய்தியைக் கேட்டீர்கள் அல்லவா? செவி வழிச் செய்தி என்றால், மறுக்கலாம், மறுக்காமலும் இருக்கலாம். தனியே மொட்டையாய் இந்தச் செய்தி முளைத்திருந்தால் இதை மறுதலித்து விடலாம். ஆனால், குரு பரம்பரையில் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளை ஒட்டியது என்பதால் ரொம்பவும் புறக்கணித்துவிட முடியவில்லை.

இன்னொரு பக்கம்... ராமானுஜர், ஆதிசேஷன் வடிவம் கொண்டு கோமுகம் வழியாக உள்ளே சென்ற வைபவமும் ஒரிஜினல் குரு பரம்பரையில் இருக்கிறது. அதை விட்டு வைத்தால்... ராமானுஜர் நிரூபணம் செய்தது கேள்விக்குறி ஆகிவிடும் என்று... அச்சம்பவத்தை செவி வழிச் செய்தியாக மாற்றி விட்டார்கள் என்றும் ஒரு கருத்து கனமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலைமையிலே... திருப்பதி மலையைப் பற்றிப் பேச நீர் யார்? உமக்கு என்ன பாத்யம் இருக்கிறது? என என்னிடம் சிலர் நேரடியாகவே வந்து கேள்வி கேட்கிறார்கள்.

இதற்குப் பதிலாகவும் திருப்பதி மலையைப் பற்றி இன்னொரு சுவாரஸ்யத்தையும் சொல்கிறேன்.

ராமானுஜரின் மாமா திருமலை நம்பி என்று சொன்னேன் அல்லவா? அவர் மலை மேலே இருந்து பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு வந்தாராம்.

அந்த மலையிலே செய்யக்கூடிய பெரிய கைங்கர்யம் பெருமாளுக்கு நித்யப்படி தீர்த்தம் கொண்டு வருவது தான். ஏனென்றால்... மலைமீது சிலச் சில குன்றுகளுக்கு இடைப்பட்ட ஆழப்பகுதியில் தண்ணீர் தேங்கியிருக்கும். அதை தேடிப்பிடித்து குடத்தில் எடுத்துக்கொண்டு வரவேண்டும். ரொம்ப கஷ்டமான காரியம். இதுபோல திருமலை நம்பி மலையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்று பெருமாளுக்கு கைங்கர்யம் பண்ணி வந்தார்.

அன்றைக்கு என பார்த்து... சுற்று வட்டாரத்தில் எங்கேயும் தண்ணீர் இல்லை. ஆஹா... பகவானுக்கு எப்படியாவது கைங்கர்யம் செய்யவேண்டுமே என யோசித்த திருமலை நம்பி எங்கெங்கும் அலைந்தார். தண்ணீரே கிடைக்கவில்லை. ரொம்ப ரொம்ப அலைந்து கஷ்டப்பட்டு ஒரு குடம் தண்ணீரை மொண்டு விட்டார். (திருமலை நம்பி பட்ட கஷ்டத்தை உரைப்பதற்காக ஆகாசகங்கை போய் தண்ணீர் கொண்டு வந்தார் என்றும் சொல்வார்கள்.)

ரொம்ப சந்தோஷப்பட்டபடியே அந்தக் குட தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு திரும்பினார். அப்போது... ஒரு குன்றின் அந்தப் பக்கத்திலிருந்து... `தாத்தா’ என ஒரு சத்தம். திரும்பிப் பார்த்தார் திருமலை நம்பிகள். தாகத்தால் தவிக்கும் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

`எனக்கு மிகமிக தாகமாக இருக்கிறது. வாய்க்குள் எச்சில்கூட வற்றிவிட்டது. கொஞ்சம் தீர்த்தம் தந்தீர்கள் என்றால் உங்களுக்கும் தன்யனாவேன். (நன்றிக்குரியவன் ஆவேன்) என கெஞ்சினார். அவரது கண்கள், கைகள் இரண்டும் திருமலை நம்பிகள் தண்ணீர் கொடுப்பார் என எதிர்பார்த்திருந்தன.

திருமலை நம்பிகள் திரும்பிப் பார்த்தார். இந்தக் காலத்தில் கிராமப் பகுதிகளில் எங்கெங்கோ அலைந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்து வருவதுபோலவும், நகரப் பகுதிகளில் லாரி வந்து நிற்கும் போது அடித்துப் பிடித்து ஒரு குடம் தண்ணீர் பிடித்தவன், எப்படிப் பார்ப்பானோ கிட்டத்தட்ட அதேபோல திரும்பிப் பார்த்தார்.

`மன்னிக்கணும் அய்யா.... இது பெருமாள் கைங்கர்யத்துக்கு எடுத்துக்கொண்டு போறேன். நானே ரொம்ப கஷ்டப்பட்டு பிடிச்சேன். உங்களுக்குக் கொடுக்க முடியாது.’``என்னப்பா ஒரு மனுஷன் தவியா தவிக்கிறேன். எனக்குக் கொடுக்காம... பெருமாள், பெருமாள்னு சொல்றியே? இது உனக்கே நியாயமா? எனக்குத் தண்ணீர் தந்தால் ஒரு உயிரை காப்பாற்றின புண்ணியம் கிடைக்கும். அந்தக் கல்லுக்கு ஊற்றி என்ன பண்ணப் போறே?’’ என்றார் அந்த தாகவாதி. திருமலை நம்பியோ `முடியவே முடியாது’ என சொல்லிவிட்டு நடந்தார்.

மீண்டும் தாத்தா... என குரல். இப்போது கொஞ்சம் வேகமாக ஒலித்தது... திரும்பிப் பார்த்தால் பெருமாள்தான் அந்த தாகவாதியாக வந்து தண்ணீர் கேட்டு சோதித்து இப்படி காட்சி தந்திருக்கிறார். இதையேன் நான் இப்போது சொல்கிறேன்? `தாத’ என்றால் சமஸ்கிருதத்தில் அப்பா என ஒரு அர்த்தம் உண்டு.

பெருமாளை பிரம்மனுக்கு அப்பா என்பார்கள். அப்படிப்பட்ட அப்பாவான பெருமாளே திருமலை நம்பியை `தாத...’ அதாவது அப்பா என அழைத்ததால்... திருமலை நம்பி அடியார்க்கு தாத்தா ஆனார். அவரது வம்சத்தினர் தாதாச்சாரியார்கள் ஆயினர்.

அதாவது...`பிதாமகஸ்ய அபி பிதாமஹாய பிராசேத்து ஆதேஸ பலப்ரதாய ஸ்ரீபாஷ்யகாரஉத்தம தேசிகாய ஸ்ரீஸைல பூர்ணாய நமோ நமஸ்தே...’- பிரம்மனுக்கு அப்பாவாகிய பெருமாளே திருமலை நம்பியை அப்பா என அழைத்ததால் அவரை நாம் போற்றுவோம் என்கிறது இந்த ஸ்லோகம்.

அதாவது திருமலை நம்பியின் வழிவழி வந்தவர்கள் `தாத்தாச்சாரி’ ஆகினார்கள். அடியேனும் அப்படி வந்தவன்தான் என என் குடும்பத்தினர் சொல்லியுள்ளார்கள்.

அதனால்... நானும் திருப்பதியைப் பற்றி பேச, எழுத பாத்யம் உள்ளவன்தான். இதற்காக மட்டும் அந்தக் கதையை நான் சொல்லவில்லை.

`மனிதனுக்கு உதவு. தெய்வத்தைப் பிறகு பார்’ என தெய்வமே திருமலை நம்பிகளிடம் சொன்னது என்ற நீதியை உணர்த்தவே இதை நானிங்கு குறிப்பிட்டேன். அடுத்து... திருப்பதி மலையைப் பற்றி நாம் பார்க்கையிலே முக்கியமானவர் ஹத்தியராம் பாபாஜி. யார் இவர்? - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

பகுதி – 81. திருப்பதி மலையின் ‘கல்லின் கடவுள்’ அதாவது மண்ணின் மைந்தன் என்று சொல்கிறோமே... அது போல இம்மலைக்கேயுரிய தெய்வம் காளி என்பதையும்... அவள் எவ்வெவ்வாறு மாற்றப்பட்டாள் என்பதையும் இதுகாறும் பார்த்தோம்.

சென்ற அத்யாயத்தின் முடிவில் ஹத்தியராம் பாபாஜி என்பவரை குறிப்பிட்டு அவர் முக்கியமானவர் என்றும் சொல்லியிருந்தேன். இவர் யார்?... திருப்பதியில் இவர் என்ன செய்தார்?... பேரைக் கேட்ட உடனே உங்களுக்கு அவர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என யூகிக்க தோன்றும்.

ஹத்தியராம் ஒரு வடக்கத்தியர், வட இந்தியாவிலிருந்து அமைசியைத் தேடி அலைந்து... பரதேசியாய் சுற்றிச் சுற்றி திருப்பதிக்கு வந்து சேர்ந்தார்.

அப்போது இங்கே வேங்கடாஜலபதி கோயிலில் வழிபாடுகள் இயல்பாக அமைதியாக நடந்து கொண்டிருந்தன. பாபாஜி வேங்கடாஜலபதி மீது பக்தி செலுத்தினார்.

சன்னிதிக்கு பக்கத்திலேயே இருப்பார். கோயில் காரியங்களை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். கொஞ்ச நாளில்... இந்த ஆர்வத்தினாலேயே பாபாஜி... திருப்பதி கோயிலின் நிருவாகியாகவே மாறினார். சரி... இவர் என்ன அப்படி... பெரிதாக செய்துவிட்டார் என்கிறீர்களா?...

மலை மீது ஏறி... தெய்வத்தைப் பார்க்க வருகிறவர்கள் மொட்டையடிக்கும் பழக்கம் எப்படி வந்தது என்று உங்களுக்கு விளக்கினேன். ஞாபகம் இருக்கிறதா?...

மலைமக்களில் பூர்வீக குடிகளில் ஒரு பிரிவினரான அம்பட்டையர்களுடன்... பிராமணர்கள் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி... ‘உனக்கும் தட்சணை வேண்டும். எனக்கும் தட்சணை வேண்டும்...’ என்று பேசிய பேரத்தின் படி... கோயிலுக்கு வருபவர்களுக்கு அம்பட்டையர்கள் மொட்டையடித்து வருமானம் பார்த்தார்கள்.

அந்த மொட்டையடிக்கும் பழக்கத்தை தனது காலத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார் பாபாஜி... கோயிலை ப்ராபகண்டா அதாவது பிரபல்யமாக்க வேண்டுமென்றால், இதுபோல ஏதாவது செய்யவேண்டும்... என நினைத்து இப்படிச் செய்தார்.

இந்த காலகட்டங்களில் தான் திருப்பதிக்கு ஜனங்கள் கொத்துக் கொத்தாக வரத் தொடங்கினர். இப்போது... புரட்டாசி மாசம்... திருப்பதிமலையே ஆடிப்போகும் அளவுக்கு பெருங்கூட்டம் கூடுகிறது. இந்த அளவு கூட்டம் அன்று இல்லையென்றாலும்... அந்தக் காலத்துக்கு ஏற்றவாறு... அப்போதைய சூழலுக்கு தக்கவாறு கூட்டம் வரத் தொடங்கியது
.
இப்படிப்பட்ட நிலையில்தான்... சில பிராமணர்கள் பாபாஜியிடம் சென்றனர். ‘விக்ரஹத்தின் கைகளில் பாம்பு இருக்கிறது. அதை எடுத்துவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். அதே போல... அந்த பின்னலையும்... நீக்கி விட்டால்...’ இதற்கு... ‘பழையபடி தான் இருக்கும். எதையும் மாற்ற முடியாது’... என மறுத்துவிட்டாராம் பாபா. அதென்ன பின்னல்?...

இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை. இதை உங்களிடம் சொல்லக்கூடாது. கூடவே கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனாலும்... கொஞ்சம் நெருடலுடனேயே சொல்கிறேன்.

பல வருடங்களுக்கு முன்பு...இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகள் பற்றி தான் உங்களுக்கு தெரியுமே... எப்போதும் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் மோதல் தேசங்கள். இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் யுத்தக் காற்றையே சுவாஸித்துக் கொண்டிருந்தனர். போர்ப்புழுதி படிந்த அந்த நித்யகண்ட பூமியில் உள்ளதுதான் ஜெருசேலம்.

திருப்பதி பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர் ஏதுக்கடா... ஜெருசேலம் போனார் என நீங்கள் யோசிக்கலாம். அந்த ஜெருசேலத்தில் ஜனித்த ஒரு ஸ்த்ரீக்கு இந்தியக் கோயில்களைப் பற்றி அறிய ரொம்ப அலாதியான ஆசை. அதுவும் திருப்பதி கோயிலை, பெருமாளை பார்க்கவேண்டும் என்கிற ஆசை. அந்த யூத இனத்தைச் சேர்ந்த யுவதிக்கு நம்மூர் இசையரசி எம்.எஸ். அம்மா அவர்களைத் தெரியும்.

அந்த அறிமுகம் மூலமாக திருப்பதி கோயிலுக்கு வந்தார். தனக்கு அவ்வப்போது வரும், சனாதன சமயம் பற்றி சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக வேதம் அறிந்த ஒருவரை தேடினார். அந்த யூத யுவதி.

உடனே... என்னைப் பற்றிய தகவல்களை அவருக்கு யாரோ கொடுக்க... என்னை அணுகினார். சரி என அவருடன் நானும் போனேன், திருப்பதி கோயிலுக்கு. அவர் மிலேச்ச மதத்தை சேர்ந்தவராயிற்றே எப்படி உள்ளே விட்டார்கள்?...

சிற்சில பராக்கிரமங்கள் நிகழ்த்திய பிறகுதான் உள்ளே போன அந்த யூதயுவதி... வேங்கடாஜலபதியை சுற்றிப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட...‘கொஞ்சம்’ சிபாரிசுகளுக்குப் பிறகுதான் அதற்கும் அனுமதி கிடைத்தது.

அப்போதுதானப்பா... நானும் பார்த்தேன். திருப்பதி பெருமாளுக்கு அழகான பின்னல். தலையை சீவி சிங்காரித்து பின்னல் செய்து போட்டிருந்தார்கள்.

இப்போது சரியா... அவள் மலைக்காளி தான் என்று நான் சொன்னது... நீ என்ன நேராகப் போய் பார்த்தாயா என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் ரொம்ப ரொம்ப தயக்கத்துக்குப் பிறகு... அரை மனதோடு இந்த முழு உண்மையையும் உங்களுக்கு சொல்லிவிட்டேன்

வேங்கடாஜலபதி பெருமாளை இப்போதும் எக்கச்சக்கமான பக்தர்கள் அதீத நம்பிக்கையோடு... வணங்கிச் செல்கிறார்கள். அவர்கள் நினைத்ததெல்லாம் நடந்து ‘திருப்பதிக்கு போய் வந்தால் வாழ்வில் திருப்பம் நேருமடா’ என்றெல்லாம் போற்றி புகழப்படுகிறது.

ஆனாலும்... திருப்பதியில் என்ன நடக்கிறது?...பணம் படைத்த முக்கியஸ்தர்கள் என்றால்... அவர்களை சற்றே கிட்டத்தில் நின்று பெருமாளை தரிசிக்க வைக்கிறார்கள். மற்றவர்களுக்கு 50 ரூபாய், 100 ரூபாய் என... பெருமாளைப் பார்க்க கட்டணம்.

அதுவும் பணம் இல்லாதவர்கள் என்றால்... 5 மணிநேரம், 8 மணிநேரம், ஏன் 24 மணிநேரம், 2 நாட்கள் என நின்று பார்க்க வேண்டிய கட்டாயம்... அதுவும்... பெருமாளுக்கு 15 அடி, 20 அடி முன்பே பக்தர்களை தடுத்து ‘நிறுத்தி’ `அப்படியே போய்க் கொண்டே இரு...’ என்கிறார்கள். இப்படி வர்த்தகக் கடவுளாக மாறிவிட்ட வேங்கடாஜலபதியின் முந்தைய நிலைமையைதான் நான் உங்களுக்குச் சொன்னேன்.

அதாவது... மலையின் மைந்தர்கள், முதலில் காளியை வழிபட்டவர்கள் இன்று வெளியே உட்கார்ந்து மொட்டையடிக்கிறார்களே... இதை பெரிய பிஸினஸ்ஸாகவும் ஆக்கி விட்டார்களே... அந்த ஆதங்கத்தில்தான்... திருப்பதி பற்றிய இத்தனை திருப்பங்களையும் சொன்னேன். அடுத்து...
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

பகுதி – 82 - 1. என்ன பார்த்தோம்...? திருப்பதியில் நான் பார்த்ததைப் பார்த்தோம். வெங்கடாஜலபதி விக்ரகம் குறித்த சர்ச்சைகளைப் பார்த்தோம். இதற்கு மேலும் சில ஆதாரங்களைக் கூட நாம் சேகரிக்க முடியும்.

பொதுவாகவே திருமாலுக்கு நான்கு கைகள். இரண்டு கையில சங்கு சக்கரமும் இன்னும் இரண்டு கைகள் எக்ஸ்ட்ராவாகவும் இருக்கும்.

ஆனால்... திருப்பதி பெருமாளுக்கு இரண்டே இரண்டு கைகள் தான். அந்த இரண்டு கைகளிலும் சங்கு சக்கரம் இல்லை. சங்கு சக்கரம் தோள்பட்டையில்தான் தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த கை கணக்கும் சர்ச்சைக்கு கை கொடுக்கிறது.

அடுத்ததாக முக்கியமான இன்னொரு ஆதாரம்... திருப்பதி பெருமாளின் பக்கத்தில் பிராட்டியைப் பார்த்ததுண்டோ? இருக்க மாட்டாரே? ஏன் இல்லை?

மலையை விட்டு கீழே இறங்கி கொஞ்ச தூரம் பயணித்த பின் திருச்சானூர் என்னும் இடத்தில் தான் பத்மாவதித் தாயாரை காட்டுகிறார்கள். ஏன் பக்கத்தில் இல்லை?

பெண்ணுக்குப் பக்கத்தில் ஜோடியாக எப்படிப் பெண்ணை வைக்க முடியும்.

ஆமாம்... ஏற்கெனவே மேலே இருக்கும் விக்ரகமே மலைமக்களின் தாயாராக இருந்ததுதானே?  அதனால் தான் மேலே... வெங்கடாஜலபதியானவருக்கு ஜோடியில்லை.

பின் கீழே திருச்சானூரில் பிராட்டி இருக்கிறார் என்ற கருத்துரு பரப்பப்பட்டது. இவைதான் இந்தச் சர்ச்சைக்கு ஆதாரங்கள். நமக்கு... இப்போது வெங்கடாஜலபதி ஆணா, பெண்ணா என்பது முக்கியமில்லை.

இருந்தாலும்... இன்றைக்கு உள்ளூர் குளிர்பானங்களான மாப்பிள்ளை விநாயகர், கோலிசோடா போன்றவற்றை வெளிநாட்டு பானங்கள் நசுக்கி நம் தண்ணீரையே பயன்படுத்தி சம்பாதிப்பது போல....Local People ஆன மலைமக்களின் காளியை மலையேறியவர்கள் மாற்றிவிட்டார்களே. அந்த உரிமைப் பிரச்சினைக்காகத்தான் இப்படிச் சொன்னேன்.

அதனால்... திருப்பதி பக்தர்கள் என்னை தப்பாக நினைத்துக் கொண்டுவிடாதீர்கள். பக்தி ஒன்றுதான்.‘சரி... அடுத்து...?’-



உனக்கு இப்போது ஒரு தேவடியாள் வேண்டுமா? குடும்பஸ்திரீ வேண்டுமா? அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு..?  எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம்.

 இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம். பரலோகத்தில் பேரின்பமாக மாறும்
இந்து மதம் எங்கே போகிறது?  பகுதி 89.

விரஜா என்னும் நதி மிக சன்னமாக சீராக ஜலஜலவென ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நதியைத் தாண்டி அபராஜிதை என்னும் ஒரு பட்டணம் இருக்கிறதாம். பட்டணம் என்றால் அப்பேர்ப்பட்ட பட்டணம் அதாவது எங்கு பார்த்தாலும் ஆண்கள், பெண்கள் ரொம்ப சந்தோஷமா கூடிக் குலவி களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் நிறைந்த இங்கே.. ஆயிரங்கால் மண்டபம் ஒன்று உள்ளதாம் அந்த மண்டபத்திலும் ஒரே ஆனந்த மயம்தான். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் திவ்யபர்யங்கம் என்னும் உயர்ந்த கட்டில் ஒன்று இருக்கிறது அதிலேதான்.. பாம்புப் படுக்கையிலே பெருமாள் இருக்கிறார்.

பக்கத்திலே அங்குள்ளவன் தனது விருப்பத்துக்கு தக்கபடி பித்ரு லோகம், ஸ்த்ரி லோகம் முதலியவற்றை படைத்துக் கொள்கிறான் சுகத்தையும் அனுபவித்துக் கொள்கிறான். இதெல்லாம் என்ன? இதுதான் மோட்சமாம். மோட்ச லோகத்தில் குடும்பம்  குட்டிகள் உண்டா? சன்னியாசிகள் உண்டா? ஒருவனுடைய பத்னியை இன்னொருவன் அபகரிப்பானா?

என்றெல்லாம் கேள்விகளைப் போன அத்தியாயத்தில் பார்த்திருப்பீர்கள்.

இதெல்லாம் நான் எழுப்பிய கேள்விகள் இல்லை.. மும்மதஸாரம் என்னும் புத்தகத்தில் சக்கரவர்த்தி ஆச்சாரியார் எழுப்பிய கேள்விகள். பின் அவரே விளக்குகிறார் பாருங்கள்.மோட்ச ஸ்வருபம் என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கிறார்.

இவர்கள் இணைந்துள்ள மோட்சம் எல்லோராலும் போற்றத் தகுந்தது ஜாதி, வர்ணம், மதம், பாகுபாடு இதில் கிடையாது எல்லாரும் ஏக ஜாதியைச் சேர்ந்தவர்கள் அங்கு போகத்திலும் வேற்றுமை இல்லை அனைவருக்கும் சமமான போகம் இதைத்தான் ஸாயுஜ்யம் என்பர் எல்லா வகைகளும் எல்லாருக்கும் சமமாகப் பரிமாறப்படுகின்றன என்றிருந்தால் தான் அது ஸாயுஜ்யம்.

குயில், கிளி, கருடன், கஜானன் (யானை) செடி, கொடி, மரம் முதலியவைகளும் அங்கு வைகுண்ட லோகத்தில் உள்ளனவே.. இவர்களும் ஜீவராசியை சேர்ந்தவர்கள்தானே, இதைக் கொண்டு வேற்றுமை ஏற்பட்டுவிடாதா என்கிற அய்யம் சிலருக்கு வரலாம்.

இதற்குப் பதில்.. இவர்கள் அனைவரும் அங்குள்ள நித்ய ஸ்திரீகள் ஆண், பெண் என்கிற வேறுபாடு அங்கிருந்தாலும்.. எவ்வகையிலும் அவர்களுக்குக் குறைவில்லை. கிளி, குயில் முதலியவைகளும் தத்தம் விருப்பப்படி பல உடல்களை எடுத்துக்கொண்டு பணிவிடை செய்யலாம்.

ஒரு முக்தாத்மா பல உடல்களை எடுக்கும்போது ஆண், பெண், குழந்தை முதலிய உடல்களை எடுத்துக்கொண்டு குடும்பமாக அடிமை செய்யலாம் அல்லது மற்றொரு முக்தாத்மாவை உதவியாக வைத்துக்கொண்டு அதற்குத் தக்கபடி இரு முக்தர்களும் பல உடல்களை எடுத்து குடும்ப தாஸ்யம் செய்யலாம்.

இவ்வாறு குடும்ப தாஸ்யம் செய்யும் போது.. ஆண் உருவமும், பெண் உருவமும் உடையவர்களாக இருந்து கொண்டு விளையாடினால் காமம் என்கிற இன்பம் இவர்களுக்கு வரும். ஆகையால், அது மோட்ச சொரூபத்துக்கு விரோதமா என்று சந்தேகப்பட வேண்டாம். இவர்களது எல்லா ரமணமும் அதாவது விளையாட்டும் பகவானுடையதே..

கிருஷ்ணன் கோபி ஸ்திரிகளுடன் ஏன் காம போகத்தை அனுபவிக்கவேண்டும்?

சிறீரங்கநாதன் தனது ஆனந்த நாடிகளைக் கொண்டு சிறீ ரங்கநாயகியுடன் ஆனந்தமாகக் கலவியை அனுபவிக்கிறான் என பாரசரபட்டர் சிறீகுணாத்ர கோசத்தில் எப்படி சாதித்தார்?

இவையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்தால்.. இங்கு போல் அங்கும் சகல போகங்களும் உள்ளன. அங்குள்ளவர்கள் நித்ய சுத்தர்களாக இருந்தாலும் லீலையாக ஜலக்ரீடை முதலியவைகளை செய்கிறார்கள் 'எல்லாம் பகவான் செயல்' என விளக்கமாக சொல்லிக் கொண்டே போகிறார் சக்கரவர்த்தி ஆச்சாரியார்.

இன்னும் நாம் உபநிஷது வாக்கியங்களின் மூலமாகவே அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போமா? "சஹ யதீ பிதுர் லோககாமோ பவதீ...சங்கல்பா தேவாஸ்யபிதர உபதிஷ்ட ந்தே...”

உனக்கு என்ன வேண்டும்? உன் அம்மாவை பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள் உன் அப்பாவைப் பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள் உன் புத்திரனை பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள்!

சரி.. குடும்ப உறவுகள் வெறுத்துப் போய் விட்டது உனக்கு இப்போது ஒரு பரஸ்த்ரீ வேண்டுமா? அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு.. நீ நினைத்தால் உன் முன்னே வந்து நிற்பாள் உன்னைப் பார்த்து சிரிப்பாள் நெருங்குவாள் அணைப்பாள் ஆனந்தம் தருவாள். இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம் அங்கே பேரின்பமாக மாறும். இந்த லோகத்தின் ஆனந்தங்கள் அல்பம் அங்கே பகவத் ஆனந்தம்.

இது Nature அது Super Nature. "யஷனன்னே க்ரீடன்னேரமமானாஹா ஸ்த்ரீபிர்வாயானிர்வா...”
என்று போகிற உபநிஷது.

இங்கு நீ மோட்டாரில் சுற்றுவது போல அங்கேயும் ஜாலியாக சுற்றலாம் அதுவும் எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம்.. அவளை நீயே படைத்துக் கொண்டு என்கிறது. அப்படியென்றால், அங்கே பகவானின் வேலை என்ன?  - 


vநம் தேசத்தில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? ‘ஹிந்து’ என்ற பெயரின் வரலாறு.

சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே... ஏன்?

 நமது புஸ்தகங்களில் வேதங்களில் ஆயிரம் இடங்களில் ‘சிந்து’ என்ற வார்த்தைதான் உள்ளதே தவிர... ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது.

‘ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 91-2 to 96

பகுதி – 91 - 2. இவ்வளவு விஷயங்களைப் பார்த்த நாம்.. எங்கேயாவது ஒரு இடத்திலாவது 'ஹிந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறோமா? முதல் அத்தியாயத்தின் முடிவில்... பிராமணர்கள் இங்கு (இந்தியாவிற்கு) வரும்போது 450 மதங்கள் இருந்தனவாம் இதில் எது இந்து மதம்? என கேள்வி எழுப்பியிருந்தேன்.

அந்தப் பிரயோகத்திற்குப் பிறகு வேறு எந்த இடத்திலாவது நாம் இந்து or ஹிந்து என்கிற வார்த்தையைப் பிரயோகப்படுத்தி யிருக்கிறோமா? யோசித்துப் பாருங்கள் தலைப்பே இந்து மதம் எங்கே போகிறது? என்பது தான் ஆனால், இதுவரை இந்து என்கிற பெயரையே உங்களுக்கு நான் அறிமுகப்படுத்த வில்லையே?

நமது மதத்தைப்பற்றி இவ்வளவு விஷயங்களை, நமது கலாச்சார மதத்தைப்பற்றி எத்தனை மேற்கோள்கள், சம்பவங்கள், கதைகள் பார்த்துவிட்டோம் ஆனால்...? இந்து or ஹிந்து என்கிற பதத்தை எடுத்து பயன்படுத்தவில்லையே?

இந்தக் கேள்வி வரும்போதுதான் இந்தப் பதம் எப்படி வந்தது என சொல்ல வேண்டியுள்ளது அதற்குமுன்.. உலகத்தில் பொதுவாக மனித இனங்களைப் பார்த்தோமென்றால்.. அய்ந்தாகப் பிரிக்கிறார்கள் Artho biological அறிஞர்கள்.

என்னென்ன இனம்? Semetic - யூதர்கள், அரேபியர்கள் Hemetic - இவர்கள் இன்று இல்லை என்கிறார்கள். Negroes - ஆப்பிரிக்கா மக்கள். Mongols - சீனா தேசத்தவர். Aryans - அய்ரோப்பியர்கள், இந்திய பிராமணர்கள் போன்றோர்..

இந்த இனப் பாகுபாட்டை அப்படியே பார்த்துவிட்டு பாபிலோனியாவுக்கு (IRAQ) வாருங்கள். பாபிலோனியா?
ஆமாம் உலக வரலாற்றாசிரியர்கள் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு.. அவர்கள் வெளியிட்ட ஒரு சொற்றொடரை இங்கே தருகிறேன் அப்போது பாபிலோனியா என்றால் என்ன என்று உங்களுக்கு விளங்கும்.

''In the dark past of ancient countries.. Bobylonia and Egypt are only lights with fine culture' உலகின் மிக இருட்டான பழைய காலத்தைப் புரட்டிப் பார்க்கிறபோது அங்கே இரண்டு இடங்களில் தான் நாகரிக கலாச்சார வெளிச்சம் கண்ணைப் பறிக்கிறது ஒன்று பாபிலோனியா (IRAQ) , மற்றொன்று எகிப்து.

இதில் ஒரு வெளிச்ச ஸ்தலமான பாபிலோனியாவைப் பற்றித்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம் அங்கே வாழ்ந்த மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகப் புரட்சி செய்தவர்கள், நாடமைத்து, நகரம் அமைத்து கட்டியாண்டவர்கள் அவர்களது மதமும், நாகரிகமும் பொருந்தியதாகத்தான் இருந்திருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் 'The Encyclopedia of world religions and Ethics’ என்ற களஞ்சியத்தில் நமக்குக் காணக் கிடைக்கிறது.

பாபிலோனியர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் வணங்கிய தெய்வங்கள் என்ன? பழைமை வாய்ந்த பாபிலோனியாவில் Fatamism worship அதாவது விலங்கு உருக்களை வழிபடும் வழக்கமும் இருந்தது.எப்படி? அவர்கள் அந்த விலங்குக் கடவுளுக்கு விழா எடுத்தார்கள் அதுவும் நம்மூரில் பல்லாக்கு தூக்குகிறோமே அதேபோல மரத்தாலான பல்லாக்கு செய்து அதை பூக்களால் அலங்கரித்து தங்கள் தெய்வத்தை அதற்குள் வைத்து தூக்கிக்கொண்டு சென்று உற்சவமே நடத்தியிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி... இன்னது இன்னதுதான் தர்மங்கள், இவைகளைச் செய்யக்கூடாது என நீதிக் கருத்துக்களை நிர்ணயிக்கும் அளவுக்கு அவர்கள் வளர்ந்திருந்தனர்.

குட்டைப் பாவாடை போல கட்டிக்கொண்டு கரடு முரடான கட்டுமஸ்தான உடலில் இடுப்பில் வாளை சொருகிக் கொண்டு அவர்கள் பார்க்கப் பயங்கரமாக இருப்பார்கள்.

ஆனால், முற்றிய நாகரிகத்திலிருந்து முளைவிட்டுப் பூத்திருந்தது அவர்களின் வாழ்க்கை.சரி.. பாபிலோனியாவில் கலாச்சார வெள்ளம் கரைபுரண்டு ஓடட்டும் அதற்கும், 'இந்து பேருக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்க வருகிறீர்கள். பொறுங்கள்.. பாபிலோனியாவைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்த்து விடுவோம். -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்


பகுதி – 92. பாபிலோனியர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். நமது விஷயத்துக்கு வரும் முன்னர் பாபிலோனியர்களின் நாகரிக கலாச்சாரம் பற்றி இன்னும் கொஞ்சம் பார்க்கலாம். என்ன பண்பாடு. அப்படியே ஆச்சரியம் பொத்துக் கொண்டு பாபிலோனியா மீது வழிகிறது. அப்பேர்ப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் பாபிலோனியர்கள்.

சுமேரிய நாகரிகத்தின் சுவடுகளைக் கொஞ்சம் எடுத்துக் கொண்ட பாபிலோனியர்கள் தங்களுக்கென்று தனிச்சிறப்பு மிக்க வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு பாபிலோனிய மண்ணுக்கு கொஞ்சம் செல்லலாமா?

பச்சைப் பசேலென பூத்துக் கிடக்கும் பச்சை மரங்கள். அந்தப் பக்கமாய் ஓர் இனிய இசை காற்றில் சலசலவென பரவுகிறது. அது என்ன நாதம்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாசிக்கப்பட்ட அந்த கீதத்தை, இசையை எப்படி வார்த்தைகளில் கொண்டுவர முடியும்?

அதோ அந்த இசை வரும் திசை நோக்கிச் சென்றால், ஒரு சிறிய கூட்டம் நடுவிலே மொட்டைத் தலையோடு நீண்ட சிவப்பு நிற முழு அங்கியோடு காட்சி தருகிறார் ஒருவர். யார் இவர்? அவர்தான் பாபிலோனியர்களின் மதகுரு.

பாபிலோனியர்களின் மதம் என்ன? இயற்கையான சூரியனையும் சந்திரனையும் வழிபட்டவர்கள். பிறகு விலங்குகளை வழிபட்டு பிற தங்களுக்கென கடவுள்களை தங்கள் மொழியின் பெயரில் உருவாக்கிக் கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில், டமாரம் இருக்கிறது. புல்லாங்குழல் இருக்கிறது. சிலர் இவற்றை வாசிக்க இன்னும் சிலர் பாடுகிறார்கள். “In the assembly of the elders may my speech he heardOh God.. daily walk with me thy prise I would sing...”பாபிலோனியர்களின் பலதரப்பட்ட பக்தி கீதங்களில் ஒரு சிறு துளி இது.

Encyclopedia of World Religions and ethics என்ற புத்தகத்தில் . . . Babytlonian’s Prayer என்ற தலைப்பின் கீழ் இந்த பாட்டை நாம் படிக்க முடிகிறது. என்ன அர்த்தம்?

“மாபெரும் சபைகளில் நான் நடந்தால் எனக்கு மாலைகள் விழவேண்டும். கடவுளே என்னை அந்த அளவுக்கு என்னை அறிவுள்ளவனாக மாற்று. தினமும் என்னோடு எனக்குத் துணையாக நடந்து வா. அதற்காகத்தான் உன்னைப் போற்றிப் பாடுகிறேன்..” கடவுளிடம் அறிவைக் கேட்டார்கள் பாபிலோனியர்கள்.

இங்கே மதகுருமார்களைப் பற்றி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. மதகுருக்களில் நிறைய வகைகள் பிரித்து வைத்திருக்கிறார்கள். பொதுவான மத குருவுக்கு சேங்கு என்று பெயர். இதற்கு தலைவர் என்று அர்த்தம். இதற்கு அடுத்தவர் ‘சேங்கு ரேபு’ என்றால் High Preist. அவரைவிட இவர் உயர்ந்தவர். அதற்கு அடுத்தவர் ‘சேங்கு டேனு’ இவருக்கு Mighty Preist என பெயர். இவரையும் விட உயர்ந்தவர்தான் ‘சேங்கு மேஹு’. அதாவது Supreme Preist.

இவ்வாறு மதகுருக்களில் இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் வழிபாடுகளில் அதாவது Public Prayer களில், மன்னனிலிருந்து பாமரர்கள் வரை அங்கே அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். பாமரர்களும் ஏன் அடிமைகள் கூட அங்கே கூட்டு வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் வழிபாட்டில் கலந்துகொள்ள ஒரு தகுதி வேண்டும்.

அதாவது பத்தில் ஒரு பங்கு வரி கட்டுபவன். வழிபாட்டில் வந்து கலந்துகொள்ளலாம். அப்படி வரிகட்ட இயலாதவன் அதாவது நிலமற்ற ஏழைகளும் வழிபாட்டில் கலந்து கொள்ளலாம். அதற்கு பதிலாக கோயில் காரியங்கள் சிலவற்றைச் செய்யவேண்டும். அதாவது உடல் உழைப்பை அர்ப்பணிக்கவேண்டும்.

வழிபாட்டில் பெண்கள்? ஏன் கிடையாது? இதே போல அவர்களுக்கும் வரி தகுதிதான். ஏனென்றால் பாபிலோனியர்கள் பெண் தெய்வங்களையும் வழிபட்டவர்களாயிற்றே.

இங்கேயொரு காட்சி. ஒரு கோயிலில் பொது வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அங்கே வந்த ஒரு பெண்ணை சில அதிகாரிகள் வழிபாட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விடுகின்றனர்.

‘ஏய். நான் யார் தெரியும்? ’‘யாராக இருந்தால் என்ன?’‘ என் பெயர் நின்குயயா (Ninaqaya). நான் இந்நாட்டு அரசனுடைய அம்மாவின் பணிப்பெண். அரண்மனையிலிருந்து வருகிற எனக்கே அனுமதி இல்லையா? ’‘வரியைக் கட்டு பெண்ணே. அதுவரை நீ ராஜாவின் அம்மாவாக இருந்தால் கூட உனக்குக் கவலையில்லை.’ பிறகென்ன? தாதிப்பெண் தன் பங்கான வரியைக் கட்டினாள். பிறகுதான் வழிபாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டாள்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், மதகுருமார்கள் பக்தி, ஆன்மிகம், வழிபாடு இவற்றில் மட்டுமல்ல, பல்வேறு நிர்வாகப் பணிகளையும் இதன் மூலம் செய்து வருகிறார்கள்.

இப்படி மதவிஷயத்தி லும் நிர்வாக விஷயத்திலும் கட்டுப்பாடு, வரி நிர்ணயம், அதன் மூலம் பொதுச்சேவை, அரசன் முதல் பாமரன் வரைக்கும் வரையறுக்கப்பட்ட நீதி என்றும் பொது வழிபாடு என்றும் நாகரிகமான வாழ்க்கை நடத்தி யிருக்கிறார்கள். இவர்களின் இந்த நகர நாகரிக வாழ்க்கை அடுத்த நாட்டு அரசர்களை உறுத்துவது வாடிக்கை தானே. பாபிலோனியா மீது ஆசை சொண்டான் அந்த நாட்டு மன்னன்.-- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

பகுதி - 93. உச்சகட்டமான பாபிலோனிய கலாச்சார வாழ்க்கை முறையைப் பார்த்தோம். இப்படிப்பட்ட பூமியை ஆள... யாருக்குதான் ஆசை வராது? வந்தது அந்த மன்னனுக்கு. எந்த மன்னனுக்கு? இன்றைக்கு இரண்டாயிரத்து 600 ஆண்டுகள் முன்பாக என்றொரு வரலாற்றுக் கணிப்பு -

பாபிலோனியாவுக்குப் பக்கத்து பூமியான பாரசீக நாட்டின் மன்னன் முதலாம் கேம்பசிஸ் (Cambysis I) என்பவனுக்கு ஒரு மகன் பிறந்தான். பிறக்கும் போதே ஒருவித ஆக்ரோசத்துடன் தான் அவதரிக்கிறான் அந்தப் பயல். எல்லாரும் யோசிக்கிறார்கள். ‘அடிமைகளின் தேசத்தில்... பிறந்த உடனேயே இப்படி ஆக்ரோசத்துடன் துடிக்கிறானே... சரியான வால்தான்’ என்று.

ஆமாம்... அப்போது பாரசீகர்கள் மிடீய நாட்டு அரசனான ஆஸ்ட்யாகஸ் (Astyages) சின் அடிமைகளாகவே (Vassals) வாழ்க்கை நடத்தி வந்தனர். மிடீயன் மன்னனுக்கு அடிமைகளாக இருந்தபோதும், பாரசீக நாடும் ஒரு அமைப்பாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தது. The Persian nation contains a number of tribes என்கிறார் வரலாற்றறிஞர் ஹெராடடஸ்.

அதாவது பல பழங்குடி மக்களின் தொகுப்பு தான் பாரசீகம்.

பாஸரகேட், மராஃபி, மாஸ்பி போன்ற பல பழங்குடியினத்தவர். இப்படி கொத்துக் கொத்தாக வாழ்ந்து வந்த இந்தப் பழங்குடியின மக்களைத் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தான் மிடீயன் நாட்டு மன்னன். இந்த சமயங்களில் சைரஸ் (க்யூரஸ் என்றும் அழைப்பார்கள்) சின்னப் பிள்ளை. தன் அப்பாவின் வளர்ப்பில் எல்லா கலைகளையும் கற்றுக் கொண்டு வந்த சைரஸ்... இளமை துடிக்கும்... முறுக்கேறிய வயதில் தன் நாட்டின் அரசன் ஆனான்.

அப்போதெல்லாம் பாரசீகர்களின் நாட்டுக்கு அன்சன் என்று பெயர். சைரஸ், அன்சனின் அரசானானதும்... தன் தந்தை கட்டி மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடி நாடோடி மக்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்தான். தன் தந்தையைவிட சைரஸ் அவர்களின் மேல் ஆதிக்கம் செலுத்த... அதாவது இவனே மிடீயன் அரசனுக்கு கட்டுப்பட்டு வந்தவன். ஆனால்... இவன் தனக்கு கீழே சில பழங்குடியினரை உதைத்து கப்பம் வாங்கிக் கொண்டிருந்தால்... அவர்கள் என்ன செய்வார்கள்?

கத்தி, கற்களைத் தூக்கிக் கொண்டு சைரஸ்க்கு எதிராகப் போராட ஆரம்பித்து விட்டார்கள். பார்த்தான் மிடீயன் அரசன். “இந்த சைரஸே நமது கட்டுப்பாட்டில் இருக்கிறான். இவன் எப்படி அந்தப் பழங்குடியினரை மேய்க்கலாம்?” என கோபப்பட்டு... தன்னுடைய ஒரு படையை சைரஸ் நாட்டுக்கு அனுப்பி விட்டான். மிடீயன் நாட்டுப்படை ஹார்பகஸ் (Harpogus) என்ற தளபதியின் தலைமையில் சைரஸ் நாட்டுக்கு விரைந்தது.

“வாடா... வா... நான் என்ன என் அப்பனைப் போல கிழவன் என்று நினைத்தாயா? யாரை அடிக்கலாம்... அதுவும் இவ்வளவு காலமாக எங்களை அடிமையாக வைத்திருந்த உன்னை எப்போது அடிக்கலாம் என காத்திருந்தேன்...” என தொடை தட்டிய சைரஸ்... தன்னை நோக்கி வந்த மிடீயன் நாட்டுப் படையை... ஓட ஓட விரட்டினான்.

தளபதி ஹார்பகஸ் என்பவனை அடித்து நொறுக்கிய சைரஸ் அடுத்த கட்டமாய்... மிடீயா நாட்டையும் பிடித்தான். அது முதற்கொண்டு... மிடீயா மற்றும் பார்ஸியா பேரரசின் தலைவனான் சைரஸ். தன் அப்பன் காலத்தில் தன்னை யார் அடிமையாக்கினார்களோ, அவர்களை தன் சுட்டு விரலுக்குக் கட்டுப்பட்டவர்களாக மாற்றினான்.

இந்த இடத்தில்தான் ஒரு ‘ராஜ ரகசியம்’ பதுங்கிக் கிடக்கிறது. இந்த ரகசியத்தை வரலாற்றாசிரியர் ஹெரடடஸ்ஸே பகிரங்கப்படுத்துகிறார். என்ன ரகசியம்?

சைரஸின் அப்பா இருக்கிறானே... அவன் தன்னை அடிமையாக வைத்திருந்த மிடீயா நாட்டு மன்னனின் மகள் மண்டனே (mandane) வை எப்படியோ வளைத்துப் பிடித்துக் கல்யாணம் செய்து கொண்டு விட்டான். அதாவது பல மனைவியரில் அவளையும் ஒருத்தியாக தன் அந்தப்புரத்து சுந்தரியாகக் கொண்டான்.

சரி... இதில் என்ன ராஜ ரகசியம்... இதுதான் அரச குலங்களிலே நடக்கும் அன்றாடச் செயலாயிற்றே? என நீங்கள் கேட்கலாம்.

ரகசியம் இனிமேல் தான் இருக்கிறது. சைரஸின் அப்பா மிடீயா நாட்டு மன்னனின் ஒரு மகளை கட்டிக் கொண்டானா? இதைத் தொடர்ந்து “Ctesias of Cnidus” என்ற கிரேக்க வரலாற்றாளன் எழுதுகிறார். “மிடீயா நாட்டு மன்னனின் இன்னொரு மகளை சைரஸ் கல்யாணம் பண்ணிக் கொண்டான்”

என்னடா இது? ஒரு மகளை அப்பா கல்யாணம் பண்ணிக் கொண்டான். இன்னொரு பெண்ணை பையன் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான். அதுவும் அப்பா கல்யாணம் பண்ணிக் கொண்ட பின்! அப்படியென்றால் சைரஸ் தன் சித்தியையே கல்யாணம் செய்து கொண்டிருக்கிறான்.

அதனால் மிடீயா ராஜாங்கத்துக்கு சைரஸ் சொந்தக்காரனாகி விட்டான். அதனால் தன் மாமனாரின் இன்னும் சொல்லப் போனால்... தன் தாத்தாவின் மிடீயா நாட்டு ராஜாங்கத்தையும், பெர்ஸியன் ராஜாங்கத்தையும் இரட்டை குடியாட்சி செய்தான் சைரஸ்.

இந்த சைரஸ்தான் பாபிலோனியா மீது ஆசைப்பட்டவன். ஆனால்...? பாபிலோனியப் படையை சமாளிக்க சைரஸ்க்கு இன்னும் கொஞ்சம் தேவை ராணுவம். அதற்காக என்ன செய்தான்? யாரை கேட்டான்... அடுத்து சொல்கிறேன். -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்


பகுதி – 94. என்ன பார்த்தோம்? பாரசீக மன்னன் சைரஸ் பாபிலோனியா மீது மண்ணாசை கொண்டதை பார்த்தோம்.

பாபிலோனியாவை வீழ்த்த ‘இந்த படை போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும்’ என்ற நிலையில்... அவனுக்கு சிலர் அறிவுரைகள் வழங்கினர். கொஞ்ச தூரம் தள்ளிச் செல்...

அங்கே The king of Sindhu Desh இருக்கிறான். அவனிடம் நீ உதவி கேள். கண்டிப்பாக கொடுப்பான் என்றனர். சைரசோ... அவனது ஆட்களோ சிந்து தேசத்தை அடைந்தனர். சிந்து தேசம் என்றால்... இன்றைய சிந்து நதியின் கரைப் பகுதியை உள்ளடக்கிய பிரம்மாண்ட தேசம்.

சிந்து... இன்றைய திபெத்தில் உள்ள மானசரோவரில் பிறந்து... ஓடி... ஓடி... ஓடி... பாகிஸ்தானின் கராச்சியில் கடலில் போய் கலக்கிறது. சிந்து நதியின் கரைகளிலும், கரைப் பகுதியைச் சுற்றிலும் சிந்து தேசம் வியாபித்து இருந்திருக்கக் கூடும். வலிமையான ராஜாங்கம் செய்து வந்த அந்த சிந்து தேசத்திடம் தான் சைரஸ், படை உதவிக்காக அணுகுகிறான்.

வரலாற்றாசிரியர் Arrian தன் குறிப்பில்... சைரஸ் சிந்து பகுதிக்கு வந்திருக்கிறான். ஆனால்.... அதை அவன் படையெடுத்து வென்றதாக கல்வெட்டுகளோ, ஆதாரங்களோ இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

சிந்து நதியின் ராஜாங்கத்தைப் போலவே சிந்து தேச ராஜாவும், சைரஸுக்காக தசை பலம் பொருந்திய யானைப் படை, குதிரைப்படையை கொடுத்தான். இந்தப் படையின் உதவி மூலம் தான் பாபிலோனியாவை சைரஸ் ஜெயித்துக் கைப்பற்றினான்.

இது.... வரலாற்றறிஞர் டால்மீயின் குறிப்புகளில் உள்ளது. திருவல்லிக்கேணியில் உள்ள (பி.டி. பாணி என நினைக்கிறேன்) ஒரு பப்ளிஷர்ஸ் வெளியிட்ட Age of Shankara என்ற புத்தகத்தில் டால்மீயின் மேற்கோள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

சரி... சிந்து தேச ராஜா, சைரஸுக்கு உதவிவிட்டுப் போகட்டும் என்கிறீர்களா?

இப்போதுதான் நமது விஷயத்துக்கு வருகிறோம். ஹிந்து என்ற பெயர் எப்படி வந்தது என கேட்டிருந்தேன் இல்லையா? இப்போது கேளுங்கள். இந்த சைரஸ்... சிந்து தேச ராஜா நட்பின் மூலம் சிற்சில வார்த்தைகளாவது பரிமாறப்பட்டிருக்காதா?

ஏனென்றால்... உலக ஃபிலாலஜி, அதாவது மொழியியல் வல்லுநர்களின் முடிவுப்படி... சமஸ்கிருத பாஷைக்கும், பாரசீக பாஷைக்கும் இடையிலான சில ஒற்றுமை வேற்றுமைகள் உள்ளன.

அதாவது இங்கே க்ஷ என்பதை அவர்கள் ‘ஹ’ என உச்சரித்தார்கள். அதாவது சரஸ்வதியை ஹரக்வதி என்றார்கள். நாம் ‘அசுரஹா’ என்று சொல்வதைப்போல அவர்கள்... அஹீரமஸ்தா என்ற கடவுளை வணங்கினார்கள்.

அந்த வகையில்தான் சிந்து தேசம் என்பதை ஹிந்து தேசம் என உச்சரித்தார்கள். தப்பாக உச்சரித்தார்கள் பாரசீகர்கள்.

ஆனால்... நமது புஸ்தகங்களில் வேதங்களில் ஆயிரம் இடங்களில் ‘சிந்து’ என்ற வார்த்தைதான் உள்ளதே தவிர... ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது.

சரி... சிந்து என்ற வார்த்தை எப்படி பயன்படுத்தப்பட்டது?

‘சிந்தோஹா... அபர பாதே ஆசன்ன...” இந்த வரியைத் தொடர்ந்து வரும் வேத வாக்கியங்கள் ஒரு நதியைப்போல சலசலவென ஓடுகின்றன.

இவற்றுக்கு என்ன அர்த்தம்? சிந்து நதி இப்போதுள்ள அகலத்தைவிட பல மடங்கு அதிகமான அகலத்துடன் ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அலைகள் அழகழகாய் அசைந்து கொண்டிருக்கின்றன.

அந்த ஜீவ நதியாம் சிந்துவிலே ஒரு தோணியிலே சிலர் ஏறி அக்கரையிலிருந்து இக்கரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் இந்த வேதவரியின் விளக்கம்.

இந்த சிந்து நதிக்கரையிலே தான் வாதம் வருத்த பல்வேறு கர்மாக்கள். அதாவது அங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளை ஆச்சார்யர்களிடம் படிக்க அனுப்பினார்கள். இதை உபநயனம் என்றார்கள். அதாவது... பள்ளிக்கு அனுப்புவதை இப்போது பூணூல் போட பயன்படுத்தி வருகிறார்கள்.

அடுத்து, கல்யாணம் பண்ணுவது, குழந்தை பிறப்பது, குழந்தைக்குப் பேர் வைப்பது, குழந்தைக்கு சோறூட்டுவது என்றெல்லாம் மக்கள் அன்றாடம் செய்யும் காரியங்களை மந்திரப்படுத்தினார்கள்.

இதன்படி... வேதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கர்மாக்கள் மட்டுமன்றி, அதாவது பூர்வ பிரயோகம், அபர பிரயோகம்.

அதாவது... இருக்கும் வரை செய்யும் கர்மா மற்றும் இறந்தபின் செய்யும் கர்மா போன்றவற்றை... ஆபஸ்தம்பர் என்ற ரிஷி விளக்கியுள்ளார். இதற்கு ஆபஸ்தம்ப சூத்ரம் என்று பெயர். “நதேவாஹா நகந்தர்வாஹாநபிதஇதீ ஆஜக்ஷதே அயந்தர்மோ ஆயந்தர்மேதீயந்தா ஆர்யா க்ருமாணம் சம்சந்தி நதர்மஹா”- அதாவது மக்கள் செய்யவேண்டிய இந்த மந்த்ர கர்மாக்களுக்கு தேஸாச்சாரம் என்று பெயர்.

இந்த ஆச்சாரத்தை ஆர்ய மதம் என்று அழைக்க வேண்டும் என்கிறார் ஆபஸ்தம்பர்.

அதாவது சிந்து நதிக்கரை மக்களின் பழக்கத்துக்கு சிந்து மதம் என்று கூட அவர் பெயர் வைக்கவில்லை. ஆர்ய மதம் என்று தான் பெயர் வைத்தார்.

அப்படியென்றால்... சிந்து நதிக்கரையிலிருந்து நாலாயிரம் மைல்கள் கடந்து வாழும் நம்மூர் பையனின் பள்ளி சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே... ஏன்? - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

பகுதி – 95. ஸிந்துவைப் பற்றியும் ஸ என்ற எழுத்து, உச்சரிப்பு ஹ என்று மருவி மாறியதைப் பற்றியும் பார்த்தோம். அதாவது ஸி என்பது ஹி என்று ஆனதைப் பார்த்தோம்.

ஹிந்து தேசம் என்று பாரசீகன் சொன்னானே தவிர... அந்த தேசத்தை வேதக்காரன் பாரதம் என்றுதான் அழைத்தான்.

ரிக் வேதத்தில் விஸ்வாமித்ரர் என்ற பிரபலமான முனிவர் பெயர் அடங்கிய ஒரு மந்த்ரம் எழுந்து வருகிறது பாருங்கள்.

“விஸ்வாமித்ரஸ்ய ரக்ஷதீப்ரம்மே இதம்பாரதஞ்ஜனம்...”...

இதற்கு என்ன அர்த்தம்? விஸ்வாமித்ரர் சொல்கிறார்.. .“என்னுடைய ஞான தேஜஸ்-ஸினால்... நான் கற்ற சாஸ்திரங்களின் பலனால்.... நான் உபதேஸிக்கும் மந்த்ரங்கள் இந்த பாரத தேசத்தின் ஜனங்களை யெல்லாம் வாழவைக்கும்... பாதுகாக்கும்...” என்று வீரமாக, நம்பிக்கையாக சொல்கிறார் விஸ்வாமித்ரர்.

‘என்னுடைய மந்த்ரம், இந்த ஹிந்து தேசத்தை பாதுகாக்கும்’ என்று விஸ்வாமித்ரர் சொல்லவில்லை என்னுடைய மந்த்ரங்கள் ஸிந்து தேசத்தை பாதுகாக்கும்; என்று சொல்லவில்லை, பாரத தேசம் என்றுதான் அழைத்திருக்கிறார்.

அடுத்ததாக...நான் முன்பு மேற்கோள் காட்டியிருந்தேனே... ‘சிந்தோ அபராபாதே ஆஸன்ன...’ என்று ஞாபகம் இருக்கிறதா?

அதற்கு முன்னே ‘பாரதாஸி ஏனா...’ என்றொரு சொற்றொடர் வருகிறது. அதாவது பாரத தேசத்தவர்கள் சிந்து நதியைக் கடக்கிறார்கள்... என்ற வகையிலே தான் இதற்கு அர்த்தம். சிந்து நதியின் பெயர் குறிப்பிடப்படும் இடத்தில் கூட பாரதம் என்றுதான் இந்த தேஸத்தை வேதக்காரன் விளித்திருக்கிறான்.

இதேபோல் இன்னொரு உதாரணம் பாருங்கள். ப்ராமணர்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது சங்கல்பம். சங்கல்பம் என்றால்... ஒவ்வொரு கர்மாக்கள் செய்யும் போதும் ‘இதை இந்த கர்மாவை சிறப்பாக, சிரத்தையுடன் பூர்த்தி செய்வேன்’ என்ற சபதம் எடுத்துக் கொள்ளும் மந்த்ரம்தான் இது. சங்கல்பம் என்றால் உறுதியான எண்ணம் அதாவது சபதம்.

சரி... அந்த சங்கல்பம் என்ன? “விஷ்ணோ...ஆக்ஞாய...... ...... ...பாரத வர்ஷே பரத கண்டே சகாப்ஹே...” இந்த சங்கல்ப மந்த்ரத்தில் அந்த இடையில் வரும் வரிக்காகத் தான் இதைச் சொன்னேன்.

பாரத வர்ஷே என்றால்...பாரத தேஸத்தில் வாழும் என்று அர்த்தம். பரத கண்டே.... என்றால்... பரதன் ஆண்ட தேசம் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

விஷ்ணு புராணம், பாகவதம் போன்ற பழம்பெரும் பக்தி இலக்கியங்களில் இந்த ‘சங்கல்பம்’ பிரகாசிக்கிறது. அதாவது... இதை பாரத தேசம் என்று தான் அப்போதும் சொல்லி யிருக்கிறார்கள். அதாவது சிந்து சேதம் என்று கூட அவர்கள் தங்களை அழைத்துக் கொள்ளவில்லை.

பிறகு... ‘ஹிந்து...’ என்ற பெயர் வந்தது எப்படி? நான் மேலே சொன்ன விஷயங்களெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு! இப்போது சொல்லப்போவது சிற்சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு.

ஆமாம்... எண்ணி சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால் தான் அய்ரோப்பியர், அதாவது வெள்ளைக்காரர்கள் நமது தேசத்தில் அடியெடுத்து வைத்தனர். அப்போது நமது தேஸத்தில் ஆங்காங்கே மொகலாய சாம்ராஜ்யம் ராஜாங்கம் செய்து கொண்டிருந்தது. அதாவது முகம்மதிய சுல்தான்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது வெறும் வியாபார நோக்கத்தில் இங்கே வந்தார்கள் வெள்ளைக்காரர்கள்.

அப்போது நமது பூமியில் எல்லா வளங்களும் கொழித்துக் கிடந்தன. ஆனால் ‘ஒற்றுமை’ என்னும் வளம் மட்டும் வறண்டு கிடந்தது. அதாவது... மொகலாயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள்... தங்களுக்குள்ளும் அடித்துக் கொண்டனர். சிற்றரசர்கள் என்ற ரீதியில் ராஜாக்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டனர்.

மக்களோ... ப்ராம்மண, சூத்ர, பஞ்சமர் பிளவுகளில் ஈடுபாட்டோடு இருந்தனர்.

பார்த்தான் வெள்ளைக்காரன், ‘என்னடா இது?’ என கேட்டான். ‘இதுதான் எங்கள் ஜாதி தத்வம்; இதை கேட்க நீ யார்?’ என குரல் எழுந்தது.

சரி... இவர்களிடையே இவ்வளவு பிளவுகள் இருக்கிறது. இந்த தேஸத்தில் இவ்வளவு வளங்கள் இருக்கிறது... என யோசித்த வெள்ளைக்காரன் தன் குடும்பம், குட்டிகளோடு இங்கே வந்தான். அங்கிருந்து பாதிரிகளும் இங்கே வந்தனர்.

நமது தேஸத்தில் புரையோடிப் போயிருந்த ‘ஜாதிதத்வ’ நடைமுறை...


அதாவது ‘ப்ராம்மணனே தெய்வம்’ நசூத்ரா மதிந்தத்யாது... (சூத்திரனை அடி உதை. அவனுக்கு எந்த உபதேசமும் கிடையாது) என்ற நிலைமைகளைப் பார்த்து...

ஒரு அணா, ரெண்டு அணாவுக்கு புஸ்தகங்களைப் போட்டான். அவற்றை சூத்ரர்களிடையே விநியோகித்தான். உங்கள் நிலைமை எப்படியிருக்கிறது பாருங்கள்... என அந்த புஸ்தகங்களைக் காட்டினான். ‘Don’t follow, religion of brhamin, we give you alternative’ என்பதுதான் அவர்களின் முழக்கமாக இருந்தது.

இப்படியாக சில பல வருடங்கள் ஓடிக் கொண்டிருக்க... இந்த ஒட்டுமொத்த மக்களை எப்படி அழைப்பது? என யோசித்தான் வெள்ளைக்காரன்.

அப்போதுதான் இவர்கள் சிந்துநதிக்கரை மக்கள், அப்படி யென்றால் இவர்களை ‘சிந்தூ’ எனக் கூப்பிடுவோம் என முடிவுக்கு வந்தான். அதாவது... பிரிட்டிஷ் டாக்குமெண்ட்களில் நம்மை அவன் முதன் முதலில் எப்படிக் குறிப்பிட்டான் என்றால் ‘Zindoo...’ - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.


பகுதி – 96 . நமது மதத்துக்குப் பெயராக வேதக்காரர் சொன்னது முதல் வெள்ளைக்காரன் சொல்ல வந்தது வரை பார்த்தோம். சிந்து நதிக்கரைக்காரன் என்ற அடிப்படையிலேதான் நம்மை Zindoo என எழுதினான் வெள்ளைக்காரன். இது உமக்கு எப்படித் தெரியும் என்று நீர் கேட்கலாம்.

நான் அந்த பிரிட்டிஷ் டாக்குமென்ட்டை பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். கும்பகோணத்தில் காவிரிக்கரையோரத்தில் எல்லாம் விளையும். அங்கே காவிரியின் மடியில் அறிவு விளையும், ஞானம் விளையும் ஓர் இடம் இருந்தது. அதுதான் என் ஆசான் ரகுநாதராவ் என்பவருக்குச் சொந்தமான Library.

ரகுநாதராவ், என்னை விட வயதில் மூத்தவர். அந்தக் காலத்தில் பரோடா சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். அவர் பதவிக் காலத்தில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர். அந்த ரகுநாதராவ் திவான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன்...

கும்பகோணத்தில் காவிரிக் கரையோரத்தில் ஒரு லைப்ரரியை ஆரம்பித்தார். அங்கே தான் பிரிட்டிஷாரின் டாக்குமென்ட்களையும் பார்த்தேன். முதலில் நம்மைப்பற்றி Zindoo என்று எழுதி வைத்திருந்தவன், காலப் போக்கில் இந்த உச்சரிப்பை மாற்றி Hindu என்று உச்சரித்தான்.

அவன் உச்சரித்ததையெல்லாம் படிப்படியாக அவனது டாக்குமென்ட்களில் பதிவும் செய்து வைத்தான்.

இப்போது Zindoo என்பது Hindu ஆகிவிட்டது.

ஆக... இப்போது நாம் நம்மை அழைத்துக் கொள்ளும் நமது மதத்தின் பெயரான ‘ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால்... இது Christian சூட்டிய பெயர்


நம்மையெல்லாம் என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் வெள்ளைக்கார Christian கண்டுபிடித்த... கண்டுகூட பிடிக்கவில்லை.


தன் வாய்க்கு வசதியாக வந்ததை உச்சரித்ததைத் தான் நாம் இன்று நமக்கான அடையாளமாக சுமந்து கொண்டிருக்கிறோம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதம், மநு, ஸ்மிருதி, சாஸ்திரம், புராணம், சுண்டைக்காய்... எல்லாவற்றையும் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு நாம் அவற்றிலிருந்து ஒரு பொதுப் பெயரை எடுத்து சூட்டிக் கொள்ளவில்லை. சூட்டிக் கொள்ள முடியாது.

ஏனென்றால்...நம் தேசத்தில் எக்கச்சக்க மதங்கள். நான் சொன்னேனே.... ஆரியர்களான பிராமணர்கள் இங்கு வரும்போதே! நம் தேசத்தில் சுமார் 450 மதங்கள் இருந்தன. இதில் எது ஹிந்து மதம் என்று கேட்டிருந்தேன் அல்லவா?

இப்போது நீங்களே சொல்லுங்கள்.

எது ஹிந்து மதம்...? வேத மதம், ஆரிய மதம், ப்ராமண மதம் இங்கே வந்தது. அதை எதிர்த்து புத்த மதம் உண்டானது. மத்வ மதம் பிறந்தது. த்வைதம் கிளைத்தது. விசிஷ்டாத்வைதம் வளர்ந்தது. சைவம், வைஷ்ணவம் பெரிதாகப் பேசப்பட்டது. இடையிலே சமணம் தோன்றியது.

வைணவத்தில் கூட தென் கலை, வடகலை, என கோர்ட் வரை கூட பிளவு படியேறியது.

இவையெல்லாம் தவிர்த்து... நம் தேசத்தின் அகண்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே சிறுதெய்வ வழிபாடுகள் எக்கச்சக்கம், காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன், அய்யனார், முனியப்பன், கருப்பசாமி, தூண்டிக்காரன் சாமி என.. சொல்லிக் கொண்டே போகலாம்.

அதாவது இவ்வளவு... வழிபாடுகளையும் பார்த்து திக்குமுக்காடிய வெள்ளைக்காரன் தான் எல்லாவற்றுக்கும் மொத்தமாகச் சேர்த்து இந்த தேசத்தில் வாழ்பவர்களை யெல்லாம் மொத்தமாக ‘இந்து’ என்று அழைத்தான்.

நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. என்ன செய்வோம்? பையனாக இருந்தால் தாத்தா பேர் வைப்போம். பெண்ணாக இருந்தால் பாட்டி பேர் வைப்போம். அல்லது குல தெய்வத்தின் பேரை சூட்டுவோம்.

ஆனால்... நமக்கு முன்பின் தெரியாத இதுவரை நம்மைப்பற்றி எதுவுமே அறியாத... எவனோ ஒருத்தன்... நம் பாஷையும் தெரியாத அவன் தன் வாயில் நுழையும் பெயரை வைத்துக் கூப்பிட்டதால்.... அந்த ‘சத்தத்தையே’ உங்கள் குழந்தைக்குப் பெயராக வைப்பீர்களா?... அப்படித்தான் வைத்திருக்கிறோம்.

நம் மதம் என்னும் குழந்தைக்கு! சரி... ‘ஹிந்து’ என்ற சொல்லின் வரலாற்றைப் பார்த்துவிட்டோம்.

இதுதான் உங்கள் பள்ளி சர்டிபிகேட்களிலும்.... வாழ்க்கையிலும் உங்களைப்பற்றி நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘ஹிந்து’ என்ற பெயரின் வரலாறு.

வெள்ளைக்காரன் நமக்குக் கொடுத்த இந்த அடையாளத்தை அப்படியே நாம் பின்பற்றி வருகிறோம்.

வித‌வைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்?

கணவனை இழந்த பெண் என்றால்... அவளை இறந்த கணவன‌து சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி.


விதவைகளாகி மறுமணம் முடிக்க நினைத்தால்?... இதை விபச்சாரம் என்னும் அடைமொழிக்குள் வைத்துப்பார்க்கிறது மநு.

கணவனை இழந்த பெண்கள், மிகச்சிறு வயதிலேயே விதவைகளாகி விடும்போது... சிதைக்கு போகாமல் தப்பித்த பெண்களும் உண்டு.

கணவனை இழந்த அவள் மேல் வேறெந்த ஆணுக்கும் ஆசை வரக்கூடாது என்பதற்காக உடனடியாக அவளுக்கு மொட்டையடிக்கப்பட்டது.

(
மொட்டை பாப்பாத்தி என கேள்விப்பட்டிருப்பீர்களே. இப்பொழுது விளங்குகிறதா?)

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 49.

கல்வியும் கிடையாது... மந்த்ரங்கள் வழியே கூட அதை பெறக்கூடாது. 8 வயசிலேயே கல்யாணம் பண்ணிக்கொண்டு நான்கு சுவர்களுக்குள் நன்கு குடித்தனம் நடத்து.

இதுதான் மநு தர்மம் பெண்களுக்கு சொன்னது.
வேதத்தில் ‘சதி’ பற்றி பார்த்தோமே... வேதமே அப்படி சொல்கிறதென்றால் மநு சும்மா விடுமா?... வேதத்தை விட இன்னும் தெளிவாக சொல்கிறது.

சிதா வாரோஹணம் பிரம்மச்சர்யம்...”

கணவனை இழந்த பெண் என்றால்... அவளை அவனது சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி மநு மணம் முடித்து இதுபோல் கணவனை இழந்த பெண்கள், மிகச்சிறு வயதிலேயே விதவைகளாகி விடும்போது... சிதைக்கு போகாமல் தப்பித்த பெண்களும் உண்டு.

ஆனால்... அவர்களது வாழ்க்கையிலும் பயங்கர கட்டுப்பாடுகள் பின்னப்பட்டன. கணவனை இழந்த அவள் மேல் வேறெந்த ஆணுக்கும் ஆசை வரக்கூடாது என்பதற்காக உடனடியாக அவளுக்கு மொட்டையடிக்கப்பட்டது.

உலகை ஆற்றுப்படுத்தும் அழகுதான் பெண்’ என்றது வேதம். அந்த அழகை மொட்டையடித்து அவலட்சணமாக்கி அழுவதை வேடிக்கை பார்த்தது மநு.

விர... அந்த விதவைப்பெண் வேறெந்த ஆணிடமும் பேசக்கூடாது, பழகக்கூடாது அவளது கண்களை கட்டுப்பாட்டால் கட்டிப் போட்டனர்.

இதையும் மீறி... வயதின் ஆட்சியால் வாலிபத்தின் தூண்டுதலால் மிக இளமையான வயதில் கணவனை இழந்த பெண்களுக்கு ஆண் துணை வேண்டுவது இயற்கையின் விதி. இதை இப்போது மறுமணம் என்கிறோம்.

ஆனால் மநு மணத்தில் மறுமணம் ஏது? ஒரு பெண், கணவனை இழந்த பின்பு... ஆறுதலுக்காகவும், வாழ்க்கை நடத்திட வழி வேண்டியும் இன்னொரு ஆணை அணுகினால் அது கிட்டத்தட்ட விபச்சாரம் ஆகி விடுகிறது என்கிறது மநு. இதற்கும் தண்டனை உள்ளது. அதற்கு முன் விதவைகளுக்கு மொட்டை போடுதல் என்ற தண்டனை பற்றி இன்னும் சில விளக்கங்களை சொல்லி விடுகிறேன்.

விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்று வடகலை வைணவர்கள் வலியுறுத்தினார்கள். அதெல்லாம் இல்லை மொட்டையடித்தே ஆக வேண்டும் என்பது தென்கலைக்காரர்களின் தரப்பு வாதம்.

இந்த இடத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் பற்றி உங்களுக்கு கேள்வி வரலாம். அப்படி என்றால் என்ன?
பிரம்மத்துவம் எனப்படும் கடவுள்தன்மை பெருமாளின் துணைவியான பிராட்டி அதாவது தாயாருக்கு உண்டா என்ற பிரச்சினை விவாதமாக எழுந்தது.

அப்போது... பெருமாளுக்கு துணையாக இருக்கிறாரே தவிர பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் பங்கு கிடையாது. உதவும் சக்தி கிடையாது. வெறும் சிபாரிசு மட்டும்தான் செய்யமுடியும் என்பது தென்கலைகாரர்களின் வாதம். பெருமாளின் துணைவிக்கே சக்தி இல்லை என்றவர்கள் சாதாரண ஸ்த்ரீ... அதுவும் கணவனை இழந்த ஸ்த்ரீக்கு என்ன சொல்வார்கள். மொட்டையடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

வடகலைக்காரர்களோ... பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் குறிப்பிட்ட பங்கு இருக்கிறது என்று நம்பினார்கள். அதனால் பெண்மைக்கு முக்யத்துவம் கொடுத்து... விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்றார்கள். இந்த ஒரு விஷயத்தின் அடிப்படையில் மட்டுமல்ல... பல விஷயங்களின் அடிப்படையில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தான் வடகலை, தென்கலை என்று பிரிந்தார்கள்.

அது இருக்கட்டும்... மநு மணம் முடித்த பெண்கள், விதவைகளாகி மறுமணம் முடிக்க நினைத்தால்?... இதை விபச்சாரம் என்னும் அடைமொழிக்குள் வைத்துப்பார்க்கிறது மநு.

அவளுக்கு ஒழுக்கம்தான் முக்யம். ஒரு ஆணுக்கு வாழ்க்கைப்பட்டவள் இன்னொரு ஆணோடு வாழ்வதா?... பிடி அவளை... அவளது படுக்கையோடு சேர்த்து அவளை சுற்று ஆமாம் அப்படியே தீ வை. எந்த படுக்கையில் விபச்சாரம் என்னும் அபச்சாரத்தை செய்தாளோ... அதிலேயே வைத்து அவள் எரிக்கப்பட வேண்டும் என மநு தன் கட்டளைகளில் கொள்ளிக்கட்டைகளை கொண்டு வருகிறார்.

வேதம் பெண்களை எப்படிப்பார்த்தது... மநு பெண்களை எப்படிப் பார்த்தது?... என்று இதுவரை பார்த்துவிட்டோம். சாதாரண மனித பெண்களை இப்படி நடத்தியிருக்கிறார்கள். அப்படியென்றால் தெய்வப்பெண்களை?... அதாவது பெண் தெய்வங்களை எப்படி பார்த்தார்கள்?

இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. சற்று முன்புதான் மோட்சம் வழங்குவதில் பிராட்டி அதாவது பெண் தெய்வத்தின் பங்கு பற்றி சில விஷயங்களை பார்த்தோம்.

கோவில்களில் பெருமாளை பார்த்திருப்பீர்கள். பெருமாளுக்கு வலது பக்கமும், இடது பக்கமும் பூதேவி, நீளாதேவி என இரண்டு பெண் தெய்வங்கள் இருப்பார்கள். ஆனால்... பிராட்டி எனப்படும் தாயார் தனிக்கோவில் நாச்சியாராகத்தான் இருப்பார். அதாவது அவருக்கென்று தனி சன்னதி இருக்கும். அங்கே தான் இருப்பார்.

கோவில்களில் உற்சவம் நடப்பதை பார்த்திருப்பீர்கள். பெருமாள் வாகனங்கள் புடைசூழ வெளியே வருவார்.

முதலில் அன்னபட்சி வாகனத்தில் வெளியே வருவார். கருடன் மீதேறி ஊர் சுற்றுவார். சூரியபிரபை என்னும் வாகனத்தில் புறப்பட்டு கடைத்தெருக்களை பார்வையிடுவார். பிறகு குதிரை வாகனம்... கடைசியில் தேர், ஊர்கூடி இழுக்க உள்ளே படாடோபமாக அமர்ந்திருப்பார் பெருமாள்.

ஆண் தெய்வமான பெருமாள் இப்படி ஊர் சுற்றி உலகம் சுற்றிவிட்டு வர... பெண் தெய்வமான பிராட்டியார்?

 

பகுதி 48 - 2 பூணூல், உபநயனம் என்றால் என்ன‌? மந்த்ரங்கள்ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான்.

பூணூலை மையமாகவைத்து கயிறுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பூணூல் போட்டவன்தான் பார்ப்பனன் என்றும் இந்த நூலை மையமாக வைத்து கயிறு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் சடங்காக்கி மந்த்ரங்கள் ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான்

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 48 - 2

உபநயனம் என்பது பிராமண ஆண்களுக்கு நடக்கும் முக்கியமான சடங்கு என்றும், பூணூல் போட்டவன்தான் பார்ப்பனன் என்றும் இந்த நூலை மையமாக வைத்து கயிறு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் பூணூல் என்ற பழக்கமே கிடையாது. முற்காலங்களில் யாகம் பண்ணும்போது வஸ்திரத்தை குறுக்காக அணியவேண்டும் என்ற விதி இருந்தது. வஸ்திரம் சரியாக வரவில்லை என்பதால் அதை சிறிய அளவில் நூலாக்கி போட்டுக் கொண்டார்கள்.

இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். அப்படியும் யாகம் பண்ணும்போதுதான் அதற்கு வேலையே தவிர மற்ற சமயங்களில் கிடையாது.

பிறகு... இந்த உபநயன சடங்கு எப்படி வந்தது? உபநயனம் என்றால் என்ன? என்னடா இவர்... பெண்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் ஏன் ஆண்களைப்பற்றி பேசுகிறார் என்று நினைக்காதீர்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம்தான்.

சந்தர்ப்பம் வாய்க்கும்போதே சில விஷயங்களை தெளிவுபடுத்திட வேண்டும். உபநயனம் உள்ளிட்ட எதுவும் பெண்களுக்கு கிடையாது என மநு சொல்லியிருக்கும்போது...

உபநயனம் என்றால் என்ன என்று தெரிந்தால் தானே மநு சொல்வதை புரிந்துகொள்ள முடியும். சரி! உபநயனம் என்றால் என்ன?

இப்போது உபநயன சுபமுகூர்த்தம் என்று ஆண் மகனுக்கு முதல் கல்யாணம்போல பெரியதாக விழா நடத்துகிறார்கள்.

உண்மையில் உபநயனம் என்றால்... பிராமணப்பையனை பள்ளிக் கூடத்துக்கு அனுப்புதல் என்று அர்த்தம். என்னது...?

இப்போது இருப்பதைப்போல அப்போதெல்லாம் பள்ளிக்கூடங்கள் கிடையாது. அதனால் வேத பாண்டித்யம் பெற்ற ஒரு ஆச்சாரியரிடம் அதாவது ஆசிரியரிடம் பையனை அனுப்பி வைப்பார்கள். வேதக் கல்வி கற்பதற்காக.
அந்த ஆச்சாரியர் அச்சின்னப்பையனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வார். இதற்குப் பெயர்தான் உபநயனம்.

அதாவது ஆசிரியர் மாணவனை கையைப்பிடித்து அழைத்துச் செல்வதுதான்.

இந்த சமயத்தில் அந்தக் குழந்தைப் பயலுக்கு நன்றாக ஸ்நானம் பண்ணி வைத்து, புது வஸ்திரம் கட்டிவிட்டு, இடுப்பில் `பெல்ட்’ (அந்த காலத்தில் துணியாலேயே) கட்டிவிட்டு குருகுலத்தில் சேர்த்துவிடுவார்கள்.

அப்போது அவனது அப்பா... ``பயலே... இனிமே நீ இந்தப் பக்கம் வரக்கூடாது. எல்லா கல்வியையும் கற்கும்வரை உனக்கு இந்த வீட்டு ஞாபகம் வரக்கூடாது. திரும்பிப் பார்க்காமல் ஆச்சாரியரோடு போ...’’ என்று பையனை வழியனுப்பி வைப்பார்.

அந்தச் சின்னப்பையனும் வீட்டை மறந்து கல்விக்காக ஆசிரியர் கையை பற்றிக்கொண்டு நடப்பான்.
இதுதானப்பா ஒரிஜினல் உபநயனம். இப்போது என்ன நடக்கிறது?

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிற பையனை லீவு போடச் சொல்லி வீட்டுக்கு வரவழைத்து உபநயனம் பண்ணுகிறார்கள். உபநயனம் என்றாலே வீட்டுப் பக்கம் வராதே என்று பையனை பாடசாலைக்கு அனுப்புவதுதான். ஆனால்... நடைமுறையில் அப்படியே முரண்பாடாகி விட்டது.

காரணம்...? இதையும் சடங்காக்கி மந்த்ரங்கள் ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான்.

இப்போது இங்கே பெண்ணை அழைத்து வருகிறேன் பாருங்கள். உபநயனம் உள்பட எந்த மந்த்ர சடங்கும் பெண்ணுக்குக் கிடையாது என்றால் என்ன அர்த்தம்?

பெண்களை பள்ளிக்கு அனுப்பக்கூடாது. உபநயனம் என்றால் பள்ளிக்குப் போவதுதானே?

ஆனால்... இன்று எல்லா ஜாதி பையன்களும், பெண்களும் உபநயனம் பண்ணிக் கொள்கிறார்கள். ஆமாம்... பள்ளிக்குப் போய் பாடம் படிக்கிறார்களே!

பெண்களுக்கு கல்வி கூடாது. வெளியில் செல்லவும் கூடாது.

ஆக... மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைஸியப் பெண்கள், க்ஷத்ரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது.

அதனால்... சூத்ரன் வெளியே உழைப்பதைப்போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும்.


இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 48 - 1

இத்தொடரில் முதல் சில அத்தியாயங்களில் நான் சொன்னது ஞாபகம் வருகிறதா? வேத காலத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்போது உடன் வந்த பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று குறிப்பிட்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் பெண்களே வரவில்லை என்றும் கருதலாம்.

அப்படிப்பட்ட நிலையில்...

இங்குள்ள எல்லா பெண்களையுமே சூத்திரர்களாக பாவித்தது மநு. இன்றுகூட... என்னை சந்தித்து வேத விளக்கங்கள் பெற வரும் பிராமணப் பெண்களிடம் `நீ சூத்ரச்சி... உன் அம்மா சூத்ரச்சி... உன் பெண்ணும் சூத்ரச்சி...என்று கூறுவேன்.

உடனே அவர்கள் மெல்லியதாக கோபப்பட்டு `எப்படி?’ என்பார்கள். நமது ஸ்மிருதியிலேயே இதுதான் விதி என சொன்னதும் `அப்படியா?’ என்ற ஒரு வார்த்தையோடு அடங்கிப் போய் விடுகிறார்கள்.

ஆக... மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைஸியப் பெண்கள், க்ஷத்ரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது. அதனால்... சூத்ரன் வெளியே உழைப்பதைப்போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும்.

அதாவது...
``
ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதினாம்...’’
பெண்கள் அனைவரும் சூத்ர ஜாதி.
`
நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம்...’

அதனால்... பெண்களும், சூத்ரர்களும், வேதங்களை ஓதக்கூடாது. வேத ஓசையை கேட்கக்கூடாது. யாகங்கள் நடந்தால்... அதில் ஓதப்படும் வேத மந்த்ரங்களை கேட்காமல் இருப்பதற்காக புடைவையால் காதை மூடிக் கொள்ளவேண்டும்.

பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது அப்புறம்...?

``
ஸ்த்ரீதாம் உபயநயனஸ்தானே
விவாஹம் மநு ரப்ரவீத்...’’

அதாவது பெண்களுக்கு உபநயனம் உள்ளிட்ட எவ்வித மந்த்ர சம்ஸ்காரங்களும் கிடையாது.-

பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை தொட , படிக்க, வேதம் கண்பட, ஓதும் ஓசை காதில் பட அருகதை கிடையாது. கல்யாணத்தின் போது சீதைக்கு வயது ஆறேதான்.

பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசைகூட அவள் காதில் படக்கூடாது.

அதனால் பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்காகவும் புராணங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை கேளுங்கள். வேதத்தின் பக்கம் வராதீர்கள்.

கல்யாணத்தின்போது சீதைக்கு வயது ஆறேதான்.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 47.

மநு தர்மப்படி எட்டு வயசுக்கு முன்பே கல்யாணம் செய்து கொண்ட ஒரே ஒரு ஜோடியையாவது காட்ட முடியுமா?

என் காலத்தில் என் கண்ணெதிரே எத்தனையோ பெண்களுக்கு மநு மணங்கள் நடந்திருக்கின்றன.


அவர்களை எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியுமோ? தெரிந்திருக்க வாய்ப்பில்லையே?

அப்படியென்றால் எல்லோருக்கும் தெரிந்த மிகப் பிரமாண்டமான ஒரு ஜோடியை பிடித்து உங்களுக்கு காட்டவேண்டும். அதுவும் மநுமணம் செய்துகொண்டதாக , அதாவது பால்ய திருமணம் செய்துகொண்ட ஜோடியாக இருக்கவேண்டும். அல்லவா?

சரி, இதோ உதாரணம். ராமர் சீதா தெரியுமா? அவர்கள்தான்.சற்று முன்பே சொன்னேனே. பெண் குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். கூப்பிட்டு... கல்யாணம் பண்ணி வைத்துவிடுகிறார்கள் என்று. அதேபோல்தான் ஜனக மகாராஜனின் புத்திரியான சீதாதேவி விளையாடிக் கொண்டிருந்த பருவத்திலேயே கல்யாணத்தை முடித்துவிட்டார்கள்.

கல்யாணத்தின்போது சீதாவுக்கு 6 வயது. ராமனுக்கு 12 வயது.என்ன சொல்கிறார் இவர். கம்பராமாயணத்தலே கம்பர் வேறு மாதிரியல்லவா சொல்லியிருக்கிறார்.

ராமரை சீதை பார்த்த போது, சீதையின் தேகம் வெட்கத்தாலும் வெப்பத்தாலும் சூடேறியது. அவள் படுத்திருந்த பஞ்சு மஞ்சம் இந்த சூடு தாங்கமுடியாமல் எரிய ஆரம்பித்தது. விரகச் சூடு தாங்காமல் அவளது பொங்கிய மார்பகம் அனல் கக்கியது.

சீதை தன் கழுத்தில் போட்டிருந்த கருகமணி மாலைகள் இந்த சூடு தாங்க முடியாமல் அறுந்து உதிர்ந்து, கீழே உருண்டோடுகின்றன. ராமனை... இப்படியாக சீதையை பாதித்தாள். அவனது கனவுகளை சோதித்தாள்” என்றல்லவா கம்பர் எழுதியிருக்கிறார்.

அப்படிப் பார்த்தால் சீதைக்கு கல்யாண பயத்தில் வயதுக்கு வந்த வயதாகத்தானே இருக்க முடியும் என்று நமக்கு நியாமான சந்தேகம் எழலாம்.

கம்பர்.. தமிழ்ச் சூழலில் கல்யாண பருவத்தில் சீதையை குழந்தையாக காட்டவேண்டாம் என நினைத்திருக்கலாம்.
ஆனால், வால்மீகி ராமாயணத்தில்,

தோஷாத் தாரக்தியாம்பதி
சிந்தையா மான தர்மாத்மா
சோபாத்யாய சபாந்த்த வஹா

என்கிறார் ராமன். சின்னப் பிள்ளையாக இருக்கும்போது அவனுக்கு 12 வயது ஆகும்போதே அவனது கல்யாணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார் தசரத சக்கரவர்த்தி.

விஸ்வாமித்ரரோடு ராமன் ஜனகராஜனின் அரண்மனைக்கு வரும்போது தனுஸ் அதாவது வில்லை ஒடிப்பவர்களுக்கு சீதையை திருமணம் செய்து தருவேன் என்கிறான் ஜனகன். ராமன் வில்லை ஒடித்தான். ஒடித்துவிட்டு நான் சீதையை கல்யாணம் செய்வதற்காக வில்லை ஒடிக்கவில்லை என் பலத்தை நிறுவுவதற்காகவே ஒடித்தேன் என சொல்கிறான். அதன்பிறகு தசரதன் சொல்லி பிறகு ராம சீதா கல்யாணம் நடக்கிறது.

கல்யாணம் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால், கல்யாணத்தின்போது ராமனுக்கு 12 தான். சீதைக்கு வயது ஆறேதான். இதுதான் வால்மீகி காட்டும் வயது.

வனவாசத்தின்போது சீதாதேவி ஆஞ்சநேயரிடம் சொல்கிறாள்.
"
அஷ்டாதஸ வருஷானி மம ஜென்மணி கன்யதே
நான் என் 18-ஆவது வயதில் வனவாசம் செய்ய வேண்டியதாயிற்று. எனது 6-ஆவது வயதில் கல்யாணமாகி 12 வருடம் ராமரோடு வாழ்ந்தேன். அதன்பிறகுதான் காடு புகும்படி விதி விளையாடிவிட்டது.” என சீதாதேவி ஆஞ்சநேயரிடத்திலே சொல்கிறார்.

இன்னொரு இடம் சீதா அக்னிப் பிரவேசம் தீக்குளிக்கும் முன்பு ராமனைப் பார்த்து கேட்கிறாள்.
நப்ரமாணி கிரதப்மாணி
பால்யே பாலேன பீடிதஹ்”
ராமா என்னையே நீ சந்தேகப்படுகிறாயே?

குழந்தைப் பருவத்திலேயே என் கையை இறுக்கமாக பிடித்தவனாயிற்றே. அப்படியிருந்துமா என்னை நீ புரிந்துகொள்ள வில்லை... என்கிறாள். இதிலிருந்து சீதாதேவியின் கல்யாணம் அவளது 6 வயதில் அதாவது மநு ஸ்மிருதிக்கு கட்டுப்பட்ட கல்யாணமாகவே நடந்திருக்கிறது என்பது புரிகிறது. உதாரணம் சொல்லியாகிவிட்டது.

கல்யாணம் என்றதுமே இக்காலத்தில்
மாங்கல்யம் தந்து நானே நவஜீவன கேது நாம்”
என்ற Trade Mark மந்த்ரம்தான் பலருக்கு ஞாபகம் வரும். இதற்கு என்ன அர்த்தம்?

அடியே இந்த புனிதமான நூலை உன்னுடைய கழுத்தில் கட்டுகிறேன். இது இருந்தால்தான் உன்னை என் மனைவி என்று இந்த ஊர் - உலகம் நம்பும். அதற்காகத்தானே தவிர வேறெதற்காகவும் இல்லை.” இதுதான் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்.

நான் சில பல அத்யாயங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தேனே. பனை ஓலையில் பெண்ணின் பெயரை எழுதி இவள் இவனுக்கு அடிமை என எழுதி அதை நூலில் கோர்த்து கழுத்தில் கட்டுவார்கள். பனை - தால் அதனால்தான் அதற்கு தாலி என்று பெயர் வந்தது என சொல்லியிருந்தேன்.

அப்படிப்பட்ட Symbol தான் தாலி. அதாவது ஊருக்கு தெரியவேண்டும். நீதான் என் மனைவி என்று. அதற்காக கட்டுகிறேன் என்பதுதான் அதன் அர்த்தம். இப்பழக்கம் பிற்காலத்தில் வந்தது. இந்த மந்த்ரமும் பின்னால் சேர்ந்ததுதான்.

மநு-ப்படி கல்யாணம் ஆன பெண்களும், இப்போது கல்யாணம் ஆகாத பெண்களும் ஒன்றுதான். அடுத்ததாக பொதுவாகவே பெண்களுக்கு வித்யா ரீதியாக என்ன வாய்ப்புகளை கொடுத்தது மநு?....

வேதத்தில் பெண்கள் அத்யயனம் செய்ததையும் சம்ஸாதம் நடத்தியதையும் பார்த்தோம். ஆனால், மநு உறுதியாக உரத்துச் சொன்னது.

பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசைகூட அவள் காதில் படக்கூடாது.

அதனால் பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்காகவும் புராணங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை கேளுங்கள். வேதத்தின் பக்கம் வராதீர்கள்.

 

ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அருந்து????.

ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.

எட்டு வய‌துக்குள் உன் ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்து கொடுக்காவிட்டால் ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.

எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும்.

கொடுமையான தண்டனை... அதிலிருந்து தப்பிக்க ‘வரும்படி’ தருகின்ற பரிகாரம்.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 46.

எட்டு வயதைத் தாண்டி, பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்கின்ற அப்பா... மநுவிடம் போட்ட மனு என்ன ஆனது?... இப்போது மந்திரி பிரதானிகளிடம் மக்கள் கொடுத்த மனு எப்படி குப்பைத் தொட்டிக்குப் போகிறதோ அதே மாதிரிதான்.

அதோடு நின்றால் பரவாயில்லை. கூடவே... நீ ஏனடா உன் பெண்ணுக்கு எட்டு வயது வரை கல்யாணம் செய்யாமல் இருந்தாய். கன்னிகா தர்மத்தை கால்களில் போட்டு மிதித்து விட்டாயே... இது பாவம் என்று உனக்குத் தெரியாதா? இந்த பாவத்துக்கு தண்டனை என்ன என்று உனக்கு தெரியாதா?... என மநு ஸ்மிருதி அந்த அப்பாவி அப்பாக்களை பார்த்து அதட்டுகிறது.

இக்கால அப்பாக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அக்கால அப்பாக்களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்த தண்டனையை அனுபவிப்பதை அவர்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அந்த அப்பாக்கள்.அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?

மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...”

இந்த ஸ்மிருதி விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது... தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.

அது என்னவென்றால்...அடே கையாலாகாத அப்பா... உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்கவேண்டும். தவறிவிட்டாய். அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.

ருதுவான பின் மூன்று வருஷத்துக்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால்... அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும் வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?

அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.

பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன்னதை தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல... இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது.

அடப்பாவிகளா?... வறுமையாலோ, ஜாதக தோஷத்தாலோ.. பெண்ணின் குறைபாடுகளாலோ கல்யாணம் தாமதமாகி எத்தனை பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். ருதுவான பிறகு தான் கல்யாணமே பண்ணவேண்டும் என்பது பொதுவான விழிப்புணர்வாளர்களின் கருத்து.

அதையும் தாண்டி மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு எத்தனை கடுமை?... கொடுமை?... எரிகின்ற தீயில் எது நல்ல தீ என்பது மாதிரி... இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பரிகாரத்தையும் அருள்கிறார் மநு. அப்படியா? என்ன பரிகாரம்?...

உன் மகள் ருது காலத்தில் அவளது ப்ரம்மஹத்தி தோஷத்தை சாப்பிடவேண்டும் என்று சொன்னேன் இல்லையா?...

அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமானால் அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின் (மாதவிடாய்)  போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பண்ணிவிடு. இந்த கோதானம் தான் உனக்கு பரிகாரம்.

அதாவது... மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ... அத்தனை பசுக்களை தானம் பண்ணவேண்டுமாம். இப்போது புரிகிறதா... எங்கு போய் எங்கு வருகிறார் மநு என்று?

அந்த கோதானம் பண்ணுகிற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கிறீர்களா?

கொடுமையான தண்டனை... அதிலிருந்து தப்பிக்க ‘வரும்படி’ தருகின்ற பரிகாரம். சரி.. கோதானம் கொடுத்தோ, கொடுக்காமலோ கல்யாணம் ஆகிவிட்டது.

அடுத்த ஒருவருஷம் வரை... அவளும் அவனும் தினமும் வீட்டில் ஒளபாசனம் பண்ணவேண்டும். அதென்ன ஒளபாசனம்

அக்னி காரியம் தம்பதிகள் தினமும் அக்னி வளர்த்து பண்ணவேண்டிய ஹோமம் இந்த ஒரு வருடம் வரை... அவள் கணவன் வீட்டில் இருந்தாலும்... கணவனுக்கு பணி விடைகள் செய்தாலும்... ஒரே மஞ்சத்தில் படுத்தாலும் தேக ஸம்பந்தம் கொள்ளக்கூடாது.

ஒரு வருஷம் கழித்து ஒளபாசன கடமைகளை முடித்த பின்னர்தான் சாந்தி கல்யாணம்.

இதற்கிடையில்... ஒரே மஞ்சத்தில் படுத்திருக்கும் இருவரும் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக மஞ்சத்தில் அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு தர்பை (புல்)யை கிள்ளிப் போடுவார்கள். அந்த தர்பை தான் கந்தர்வன். அவன்... இருவரும் இணையாமல் பார்த்துக் கொள்வானாம். இப்போது இன்னமும் சிலர் சாஸ்திரத்துக்காக இதைத் தொடருகிறார்கள் என்பது ஹாஸ்யம்.

இப்பழக்கம் ஆதிகாலத்தியது. க்ருஹ சூத்திரம் சொல்வது. இதன்படி, வகுத்தவர்களாலேயே நடக்க முடியவில்லை. என்ன ஆனது?... அந்த ஒரு வருஷம்... 6 மாசங்களானது... அப்போதும் கஷ்டம்... என்னடா இவ்வளவு நாள்கள் ஆகிறதே என்று... கொஞ்சமாய் குறைந்து மூன்று மாதங்கள் ஆனது.
அடுத்தடுத்து வந்த தலைமுறையினருக்கு மூன்று மாதமே பெருங்காலமாக இருந்தது. அப்புறம் பார்த்தார்கள். 15 நாள்கள் ஆக்கினார்கள். அதுவும் தேய்ந்து 7 நாள்களானது.

பின் கல்யாணம் ஆகி 3 நாள்கள் கழித்து... இப்போது காலையில் கல்யாணம் ராத்திரி சாந்தி கல்யாணம்.

நமது சௌகரியத்துக்கேற்ப சாஸ்திரத்தை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் ஆக்கி விட்டோம் என்பதற்காக சொல்ல வந்தேன்.

சரி... மநு சொன்னபடி பால்ய கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் யாரையாவது காண்பிக்க முடியுமா?.

பகுதி 44.(2) தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, ‘மகன்’கள் சொல்கிறார்கள். இனியொரு முறை திவசம் செய்யும்போது இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.


இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?


உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. (2)

இன்னொரு மந்த்ரம். இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.

ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.

ஆனால்...? “என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”

நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது.


ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.


இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

 

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?


இதுவரை வேதகாலத்தில் பெண்களின் உயர்ச்சி, தாழ்ச்சி, பொதுவான நிலைமைகள் என்று சகலத்தையும் பார்த்தோம். வேதத்தில் சாகித்யம் பெற்ற பெண்கள் இருந்திருக்கிறார்கள்.

சாபம் பெற்ற பெண்களும் இருந்திருக்கிறார்கள். சரி. அதற்கடுத்து வேதம் வகுத்த வரையறைகளை கட்டளைகளாக நெறிமுறைகளாக மாற்றியமைத்துத் தந்த மநுஸ்மிருதியில் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள். எப்படி வாழவேண்டும் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்?

முதலில் மநுஸ்மிருதி என்றால் என்ன? மநு என்பவர் வகுத்த ஸ்மிருதிகள் அதாவது தர்ம நெறிகள் மது ஸ்மிருதி எனப்படும். மநு என்பவர் யார்? ஒரு மநு அல்ல இரண்டு மநு அல்ல கிட்டத்தட்ட பதினெட்டு மநுக்கள் இருக்கிறார்கள். மநு என்னும் பொதுவான பெயருக்கு கடவுளின் கட்டளைப்படி சிருஷ்டியின் போது பூமியை காக்க அவரால் நியமிக்கப் பட்டவர்தான் மநு என்கிறார்கள்.

அதாவது மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று நெறிகளை திட்டமிட்டு வகுக்கத்தான் கடவுளால் மநு அனுப்பப்பட்டார் மநு என்ற சொல்லில் இருந்துதான் மனுஷன் என்ற பதமும் வந்தது என்றொரு மொழிக் குறிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

சரி... நாம் பார்க்கும்போது மநு யார்? வேதத்தை எளிமையாக்கி அவர் வகுத்த தர்மசாஸ்திரத்தில் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறார்?

உங்களுக்காக ஒரு காட்சியை கட்டவிழ்த்து விடுகிறேன். மனக்கண்ணால் அதைப் பாருங்கள். வீட்டு வாசலில் சின்னப் பெண்குழந்தை எட்டு வயதிருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

விளையாடிக் கொண்டிருக்கிறாள். மரப்பாச்சி (மரப்பாச்சி என்றால் இன்றைய நகர நாகரிகம் வளர்ந்துவிட்ட சூழலில் உங்களுக்குப் புரிகிறதா. மரத்தால் செய்யப்பட்ட உருவப் பொம்மைகள் தான்) களை வைத்துக் கொண்டு மழலை மாறாத அந்தக் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில்...திடீரென அந்தப் பெண் குழந்தையை...“வாம்மா... நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. சீக்கிரம் தயாராக வேண்டும். பார்... எல்லோரும் வந்துவிட்டர்கள்.

இப்போதே குளித்து முடித்து சீவி சிங்காரித்துக் கொண்டால் தானே தாமதம் ஆகாமல் சீக்கிரம் ஆரம்பிக்கலாம் வா.. வா...”என்று அழைக்கிறார்கள் அவளது அம்மாவும் அப்பாவும்.“இரும்மா.. விளையாடிட்டு இருக்கேன்... இன்னும் கொஞ்ச நேரம் விளையாடறேன்.”- ஆனால் மநுஸ்மிருதியின் விளையாட்டு இங்கேதான் ஆரம்பிக்கிறது. 

பகுதி 44(1)இறந்த கணவனுடன் மனைவியையும் உயிருடன் எரித்துவிடு.அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்து விடுகிறோம் சரியா? வேதம்.

இறந்தகணவனுடன் மனைவியையும் எரித்துவிடு உயிருடன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi92qFZGEWnCsI3Rf5BNbMxvk3Q8_YNJH7bbYDrAVZyQbzVOnEzUK99ra3rv13Z8i8XdFsU7UoaEa_38z0PTsgn8a2Mnm5evZaaSC3QYir2imI8aMs8Cv6I4oL8rE-z9IwS_O1pdPnmFNwu/s200/brahmin.jpg

உன் கணவனோட நீயும் போய்விடேன். அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்து விடுகிறோம் சரியா?

இறந்தகணவனுடன் மனைவியையும் உயிருடன்  எரித்துவிடு. வேதம்.






இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 44.(1)

சரியப்பா... அவள் இப்படித்தான் வாழ்கிறாள்... கணவனின் தலையில் ஏறி உட்கார்ந்திருக்கிறாள். சந்தோஷமாக வாழ்க்கை போகிறது.

ஒருநாள்... வயதானதாலோ, தேகப் பிரச்சினைகளாலோ கணவன் தலை சாய்ந்து விடுகிறான். அதாவது மரணம் சம்பவிக்கிறது. குடும்பமே அழுகிறது. குழந்தைகள் ஒன்றும் தெரியாமல் தன் பிதாவின்மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தன்மேல் பிரேமம் வைத்தவன், இப்படி பிரேதமாகக் கிடக்கிறானே என அந்த இளம்பெண் கண்களிலிருந்து நதிகளை பிரசவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்... அவளுக்கு என்ன தேவை? ஆறுதல் மொழிகள்தானே...

``
கவலைப்படாதேம்மா... அவன் விதி அவனை கொண்டு போய்விட்டது. உன்னை நம்பி குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம், அவர்களை நீ தான் நல்லபடியாக வளர்க்கவேண்டும்... அழு... அழுதுவிட்டு உன் குழந்தைகளோடு சந்தோஷமாக இரு...’’- இப்படித்தானே சொல்லவேண்டும்?

அவளுக்கு வேதம் ஒரு மொழியை வழங்குகிறது பாருங்கள்.

`
பத்யுர் ஜனித்வம் அபி சம்ப பூவ...’இப்படி தொடங்கும் மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம்?

``
உன் ஆம்படையான் இறந்துவிட்டான். பாவம்... இனி உன்னை யார் காப்பாற்றுவது? இனி நீ அவன் வீட்டிலேயே இருந்தால் பாரம்தானே? சுமைதானே? உன்னை ஆம்படையான் குடும்பத்தினர் எப்படி தாங்குவார்கள்? அதனால்...
அதனால்...? ஆமாம்மா புகுந்த வீட்டுக்கு பாரமாக கண்ணெல்லாம் ஈரமாக இனிமேலும் நீ வாழவேண்டுமா? அதனால் உன் கணவனோட நீயும் போய்விடேன்.அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்துவிடுகிறோம் சரியா?

அவளாக பற்றவைத்துக் கொள்வதை தீக்குளித்தல் என்கிறோம்

வேதம் அவளை தீக்குளிப்பாட்டியது. கணவனை இழந்த கைம்பெண்ணுக்கு இதுதான் கடைசி வழியானது. இந்த சதிச் செயல்தான் சுருக்கமாக ‘சதி’ என அழைக்கப்பட்டது.

இதை எதிர்த்துதான் ராஜா ராம்மோகன்ராய் போன்றவர்கள் பிற்காலங்களில் போராடினார்கள். ஏன்... சில வருடங்கள் முன்பு கூட ராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற ஸ்த்ரீயை கணவனை இழந்தவுடன் தீவைத்து தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள்.

வேதத்தீயின் வெளிச்சம் காலங்காலமாக கனலடித்துக் கொண்டிருப்பதற்கு இது ஓர் உதாரணம். பெண்களைப் பற்றிய பல வகையான அலசல்களை வேதத்தை மையமாக வைத்து நாம் இதுவரை பார்த்தோம்.

இதுபோன்று ‘சதி’ச் செயல்களால் எரிக்கப்பட்ட பெயர் தெரியாத அப்பாவி ஸ்திரிகளிடம் நாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்வோம்.

இப்படி நாம் நினைத்தாலும் பொதுவாகவே பெண்களின் ஆத்மாவை சாந்தியடைய விடாது போலிருக்கிறது

பகுதி 43. உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஆபாச திருமண மந்திரங்கள்.

ஆபாச திருமண மந்திரங்கள். உடலுறவின் போது...

ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள்.

உடலுறவை கண்காணிக்கும் தேவதைகள்.பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 43.

`விஷ்ணுர் யோனி கர்ப்பயது...’ எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.


அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள்.


இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம் உடலுறவுகொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள்.

அதாவது... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.

இவ்வாறு கவனிக்கும் தேவதைகள் விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய சக்திகள் அவளுக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள்புரிய வேண்டும்... என்கிறது இந்த மந்த்ரம்.

நாம் பெண் என்றால் தெய்வம் என்கிறோம். ஆனால், பெண்ணின் ஓர் உறுப்பிலேயே மூன்று தெய்வங்கள் எல்லை பிரித்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என்கிறது இந்த மந்த்ரம்.

இதை நீங்கள் பெண்மையின் உயர்வாகவே எடுத்துக் கொள்ளலாம். `அந்தரங்கம்’ எல்லாம் `அந்தரங்கன் அறிவான்’ என கண்ணதாசன் சொல்லி வைத்ததற்கு முதல் முதன் முன்னோடியாக விளங்கியிருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.இங்கே முக்கியமானதொன்று... வேத திருமணங்கள் பெரும்பாலும் கர்ப்பாதானம்ம என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன.

விவாஹம் என்றால் தூக்கிக் கொண்டு ஓடுதல் என்றும், பாணிக்ரஹணம் என்றால் கைப்பிடித்தல்என்றும் பார்த்திருக்கிறோம். வையெல்லாம் எதற்காக? கர்ப்பாதானம் செய்து... குழந்தைகள் பெற்று மகிழ்ந்து வாழத்தானே. அதனால்தான் திருமணத்தை கர்ப்பாதானம் என்றே குறிப்பிட்டது வேதம்.

இதற்காகவே கணவனுக்கும், மனைவிக்கும் மணமேடையில் நிகழும் உரையாடலாக வேதம் இப்படி பதிவு செய்திருக்கிறது.

அவள் கேட்கிறாள்.``மணாளா... நீங்கள் எனக்கு புருஷனாக கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இந்த கன்னி செய்த புண்ணியத்தால் உன்னை கைப்பிடித்தேன். நீ சம்பாதிக்கும் செல்வத்தையெல்லாம் வீட்டுக்கே கொண்டு வரவேண்டும். அதுபோல உனது இந்த்ரிய சந்தோஷத்தையும் நீ என்னிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டும். வேறு வேறு பெண்களை நாடி நீ போகக்கூடாது... என்ன சரியா?’’ என்கிறாள்.

அவன் இதற்கு பதில் சொல்கிறான்.``நீ பெண் என்பதால் தெளிவாகவே இருக்கிறாய். நான் ஈட்டும் பொருள் அனைத்தையும் உன்னிடம்தான் ஒப்படைப்பேன்.

அதேநேரம்...இந்த்ரிய சந்தோஷத்தை உன்னுடன் தான் அனுபவிக்கவேண்டும் என்று நீ என்னை கட்டளையிடக் கூடாது. நீ வேண்டுமானால் அதற்கான அழகோடு எப்போதும் இரு. உன் அழகை நீ காப்பாற்றி வைத்திருந்தால் நான் உன்னை விட்டு விலகிச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் நேராது...’’ என்கிறான் அவன்.

இதை தான்...``உதுத்தரம் மாரோஹந்திமுர்த்தானம் பத்யு ராரோஹ’’கல்யாணம் செய்து போன பெண்... கணவனது தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளவேண்டும்.

அதாவது... அவனது சிந்தனைகளில் எல்லாம் இவளே நிரம்பி இருக்கவேண்டும். அவனது மூளையில் இவளே முழுதும் இருக்கவேண்டும். அப்போது அவன் பிற பெண்ணை நாடிச் செல்லமாட்டான் அல்லவா? என்கிறது வேதம்.


கணவன் மூளைக்குள் தன்னை நிரப்பவேண்டும் என்றால் இவள் எப்படி குடும்பம் நடத்தவேண்டும்?

``
ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீஅனுமிருத்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்சம்மார்ஜன அனுரே பாப்யாம்க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆத்மானும்பூஷ்ஹேஸ்யதா’’

கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உனக்கு தெய்வம். அவனை விட்டுவிட்டு வெளியே நீ எங்கேயும் போகக்கூடாது. வென்னீர் போடு, கால் பிடி, கைபிடி, தூங்கினால் விசிறி விடு... இப்படி செய்வதால்தான் அவன் மூளையில் நீ குடியேற முடியும்.

சரியப்பா... அவள் இப்படித்தான் வாழ்கிறாள்... கணவனின் தலையில் ஏறி உட்கார்ந்திருக்கிறாள். சந்தோஷமாக வாழ்க்கை போகிறது.

ஒருநாள்... வயதானதாலோ, தேகப் பிரச்சினைகளாலோ கணவன் தலை சாய்ந்து விடுகிறான். அதாவது மரணம் சம்பவிக்கிறது. குடும்பமே அழுகிறது. குழந்தைகள் ஒன்றும் தெரியாமல் தன் பிதாவின்மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தன்மேல் பிரேமம் வைத்தவன், இப்படி பிரேதமாகக் கிடக்கிறானே என அந்த இளம்பெண் கண்களிலிருந்து நதிகளை பிரசவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்... அவளுக்கு என்ன தேவை? ஆறுதல் மொழிகள்தானே...

``
கவலைப்படாதேம்மா... அவன் விதி அவனை கொண்டு போய்விட்டது. உன்னை நம்பி குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம், அவர்களை நீ தான் நல்லபடியாக வளர்க்கவேண்டும்... அழு... அழுதுவிட்டு உன் குழந்தைகளோடு சந்தோஷமாக இரு...’’- இப்படித்தானே சொல்லவேண்டும்?

அவளுக்கு வேதம் ஒரு மொழியை வழங்குகிறது பாருங்கள்.

`
பத்யுர் ஜனித்வம் அபி சம்ப பூவ...’இப்படி தொடங்கும் மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம்?

``உன் ஆம்படையான் இறந்துவிட்டான். பாவம்... இனி உன்னை யார் காப்பாற்றுவது? இனி நீ அவன் வீட்டிலேயே இருந்தால் பாரம்தானே? சுமைதானே? உன்னை ஆம்படையான் குடும்பத்தினர் எப்படி தாங்குவார்கள்? 

தொடர்பு உள்ளவை...


ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.

ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.
ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59)
http://www.yarl.com/forum3/index.php?showtopic=38763
==================

திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதப் பார்ப்பனர் சமஸ்கிருதமாகிய வடமொழியில் தான் திருமணத்திற்குரிய `மந்திரங்களைக் கூறுவார். அப்படித் திருமணங்களில் கூறப்படும் மந்திரங்களில் ஒன்று.

மணப் பெண்ணைப் பார்த்துக் கூறுவதாவது:
சோமன் (சந்திரன்) முதலில் இவளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாம் கணவன் அக்னி. உன்னுடைய நான்காம் கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.

சோமன் உன்னைக் கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னி தேவன் இவளுக்குச் செல்வத்தையும் மக்களையும் கொடுத்து, பிறகு எனக்குத் தந்தான்.

இவ்வாறு அர்த்தம் கொண்ட கீழ்க்காணும் சமஸ்கிருத ஸ்லோகங்களை மணமகனின் சார்பில் புரோகிதர் சொல்லுவார்.

``
ஸோம: ப்ரதமோ விவிதே
கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்நிஷ்டே பதி:
துரீயஸ்தே மநுஷ்யஜா.
``
ஸோமோ (அ)தத் கந்தர் வாய
கந்தர்வோ (அ)தத் அக்நயே
ரயிஞ்ச புத்ராகும்ச அதாத்
அக்நிர் மஹ்யமதோ இமாம்

அகலிகை - அருந்ததி


மற்றொரு சடங்கு அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்பதாகும்.

கௌதம முனிவரின் மனைவி அகலிகை இந்திரனிடம் சோரம் போனதால் அவளைக் கல்லாகச் சபித்தார் அம்முனிவர் என்பதை வைத்து, கற்புக்கரசியாக வாழ வேண்டும் என்பதை நினைவூட்டவே அது என்று கூறப்படுகிறது!

கற்பிழந்தவள், சோரம் போனவளை அந்த நாளில் காட்டி, அச்சுறுத்தித்தான் மணப் பெண்ணைக் கற்பு நெறியில் நிற்கச் செய்ய வேண்டும் என்பது மிகவும் விசித்திரமான ஒன்றல்லவா?

அருந்ததி என்பது ஒரு நட்சத்திரம் என்று கூறி அதனைப் பட்டப் பகலில் அதுவும் பந்தலுக்குள் மணமகளை நிறுத்தி `அருந்ததி பார்த்தாயா என்று கேட்பதும், `ஆம் என்று பொய் சொல்லப் பழக்குவதும் மிகவும் வேடிக்கையான ஒன்று அல்லவா?

சூத்திரர்களுக்கு மண உரிமை இல்லை என்பதற்கு மற்றொரு நடைமுறை ஆதாரம் என்னவென்றால், பார்ப்பனப் புரோகிதர் வந்து நடத்தி வைக்கும் வைதீக பழைய திருமணங்களில், மணமகனுக்கு உடம்பில் பூணூல் அணிவித்து பிறகுதான் திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.

மற்றொரு வேடிக்கை. அத்திருமணத்திற்கு சாட்சி அக்னியும் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் மற்றும் கின்னரர்களும், கிம்புருடர்களும் மணமக்களில் எவருக்காவது ஒரு சிறு விவகாரம் ஏற்பட்டு நீதிமன்றத்துக்கு அவர்கள் சென்றால், இவர்களில் எந்த சாட்சியினர் வருவார்களோ!

``பெண்களைக் கேவலப்படுத்தும் `சம்பந்த திருமண முறையும் ஆரிய ஒழுக்கமும்!

 

மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwXW7-qTE757NsTsxSeNC04t5rgrRF83Vq7uzG_kS7sKFvmTrCxsjm2g8_0u0ZoCL0YQxBKc6vnAMGXEcGy7XuqK3wM5XpB3T32EkQVFmm4me-Np5NyU0iW90DsL28qpi1CeGwGqPrevmh/s1600/brahmin.jpg++3.jpg

தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.


இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?


உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. (2)

இன்னொரு மந்த்ரம். இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.

ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.

ஆனால்...? “என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”

நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது.


ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.


இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

 

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?


இதுவரை வேதகாலத்தில் பெண்களின் உயர்ச்சி, தாழ்ச்சி, பொதுவான நிலைமைகள் என்று சகலத்தையும் பார்த்தோம். வேதத்தில் சாகித்யம் பெற்ற பெண்கள் இருந்திருக்கிறார்கள்.

சாபம் பெற்ற பெண்களும் இருந்திருக்கிறார்கள். சரி. அதற்கடுத்து வேதம் வகுத்த வரையறைகளை கட்டளைகளாக நெறிமுறைகளாக மாற்றியமைத்துத் தந்த மநுஸ்மிருதியில் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள். எப்படி வாழவேண்டும் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்?

முதலில் மநுஸ்மிருதி என்றால் என்ன? மநு என்பவர் வகுத்த ஸ்மிருதிகள் அதாவது தர்ம நெறிகள் மது ஸ்மிருதி எனப்படும். மநு என்பவர் யார்? ஒரு மநு அல்ல இரண்டு மநு அல்ல கிட்டத்தட்ட பதினெட்டு மநுக்கள் இருக்கிறார்கள். மநு என்னும் பொதுவான பெயருக்கு கடவுளின் கட்டளைப்படி சிருஷ்டியின் போது பூமியை காக்க அவரால் நியமிக்கப் பட்டவர்தான் மநு என்கிறார்கள்.

அதாவது மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று நெறிகளை திட்டமிட்டு வகுக்கத்தான் கடவுளால் மநு அனுப்பப்பட்டார் மநு என்ற சொல்லில் இருந்துதான் மனுஷன் என்ற பதமும் வந்தது என்றொரு மொழிக் குறிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

சரி... நாம் பார்க்கும்போது மநு யார்? வேதத்தை எளிமையாக்கி அவர் வகுத்த தர்மசாஸ்திரத்தில் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறார்?

உங்களுக்காக ஒரு காட்சியை கட்டவிழ்த்து விடுகிறேன். மனக்கண்ணால் அதைப் பாருங்கள். வீட்டு வாசலில் சின்னப் பெண்குழந்தை எட்டு வயதிருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

விளையாடிக் கொண்டிருக்கிறாள். மரப்பாச்சி (மரப்பாச்சி என்றால் இன்றைய நகர நாகரிகம் வளர்ந்துவிட்ட சூழலில் உங்களுக்குப் புரிகிறதா. மரத்தால் செய்யப்பட்ட உருவப் பொம்மைகள் தான்) களை வைத்துக் கொண்டு மழலை மாறாத அந்தக் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில்...திடீரென அந்தப் பெண் குழந்தையை...“வாம்மா... நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. சீக்கிரம் தயாராக வேண்டும். பார்... எல்லோரும் வந்துவிட்டர்கள்.

இப்போதே குளித்து முடித்து சீவி சிங்காரித்துக் கொண்டால் தானே தாமதம் ஆகாமல் சீக்கிரம் ஆரம்பிக்கலாம் வா.. வா...”என்று அழைக்கிறார்கள் அவளது அம்மாவும் அப்பாவும்.“இரும்மா.. விளையாடிட்டு இருக்கேன்... இன்னும் கொஞ்ச நேரம் விளையாடறேன்.”- ஆனால் மநுஸ்மிருதியின் விளையாட்டு இங்கேதான் ஆரம்பிக்கிறது

பிராமிணர்களின் அலங்கோல ஆச்சார அதிர்ச்சிக‌ள்.

உற்றார் சம்மதத்துடன் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு.

பிராமணர்களால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்?

கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?. ஆனால் அது தான் உண்மை!

மேல்ஜாதி நம்பூதிரிகளால் (பிராமணர்கள்) ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்

இந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் (பிராமண) பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது.

 

10.பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் கள்ளஉறவு கொண்டால்?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 10

10. பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் உறவு கொண்டால் ? தவறு செய்யும் ஆணை விட்டுவிடலாம். பெண்ணை ஊருக்கு வெளியே புறம் தள்ளி வைக்க வேண்டும்.

என்ன?... அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா?


நீங்கள் இப்போது கேட்டதை நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி வாயால் கேட்டு லேசாக அதிர்ந்தேன். பிறகு... நான் மநுவுக்குள் மூழ்க ஆரம்பித்தேன். ‘சண்டாளர்கள்’ என குறிப்பிட்ட மநு அவர்களைப் பற்றி மேலும் என்ன சொல்லியிருக்கிறது என்பதுதான் தேடல்.

பிராமண வீட்டுப் பெண்கள் சூத்திரர்களோடு ப்பிரியப்பட்டார்கள் அல்லவா?... அதே காரணத்துக்காக அவர்கள் சமூகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டார்கள்.

சமூகம்?...ஆமாம்... தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை பிராமணர்கள் பார்த்தார்கள்.

நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி அழைப்பது’-சிந்தித்தார்கள். a stable society அதாவது நிலையான சமூகக் கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு.

அதற்காக? பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்.

சூத்திரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்திரன்தான். வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான். க்ஷத்திரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில் நின்றாலும் அவன் க்ஷத்திரியன்தான். இதுதான் அவர்கள் வகுத்த stable society.

மறுபடியும் மநுவுக்குள் செல்வோம்.

சாதி விட்டு சாதி மாறிய காதல்கள் பிராமண ஸ்திரிகளுக்கும், சூத்ர புத்ரர்களுக்கும் மட்டுமல்ல க்ஷத்திரிய ஸ்த்ரிகள்-சூத்ர புத்ரர்கள்வைசிய ஸ்திரிகள்-சூத்ர புத்ரர்கள்மேலும்...சூத்ர ஸ்திரிகள்-பிராமண, க்ஷத்திரிய, வைஸிய புத்ரர்கள்.

இப்படி காதல்தேவன் கட்டுகளை உடைத்து கல்யாணங்களை கள்ளத்தனமாக பண்ணிக் கொண்டிருந்தான்.

காதல் தேவனும், காமதேனும் கூட்டணி வைத்துஇஷ்டத்துக்கு திருவிளையாடல் நடத்திக் கொண்டிருந்தால் மநு நினைத்த stable society அமையுமா? அமையாதே.

இதுவும் தெரிந்திருந்தது மநுவுக்கு. அதனால் தான் இந்த பிரச்சினைக்காக மாற்றுச் சட்டமும் இயற்றியிருக்கிறார்.

என்ன மாற்றுச் சட்டம்? முறைகேடான சாஸ்திரங்களை சாகடிக்கக்கூடிய வகையில் இது போல கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவுகோல் வைத்துப் பார்த்தார். மநு

ஒன்று.. அனுலோம சங்கரம்...

இரண்டு... ப்ரதிலோம சங்கரம் அனுலோம...

பிரதிலோம என்றால் என்ன என தெரிந்து கொள்வதற்கு முன் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

முறைகேடான.. சபிக்கப் படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

முறைகேடான... சபிக்கப்படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’.

சரி அனுலோம சங்கரம் என்றால்? இந்த உறவில்.. ஆண் மேல் ஜாதிக்காரனாக இருந்தால், இதற்கு பெயர் அனுலோம சங்கரம்.

ஆனால், இவர்களை மநு சண்டாளர்களாக பார்ப்பதில்லை. ஏனென்றால் மேல் ஜாதி ஆண் அல்லவா? கீழ் ஜாதிப்பெண்ணை எடுத்துக் கொண்டிருக்கிறான்.

நம் இனத்து ஆண்... பிற இன பெண்களை பார்ப்பது, பறிப்பது, நுகர்வது, உறவுகள், உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் பொதுவாய் ‘சங்கரம்’.

இக்கட்டுரையின் முற்பகுதியிலேயே சொன்னது போல எல்லா ஜாதிக் காரர்களுக்கும் அந்த ப்ரியம் பொதுவானதாக இருந்தது.
இந்த சம்மந்தத்தில் ஆண் மேல் ஜாதிக்காரனாகவும் பெண் கீழ்ஜாதிக்காரியாகவும் இருந்தால் இதற்கு பெயர் அனுலோம ‘சங்கரம்’. உலகத்துக்கே அமைதியைத் தருவது பெண்களின் அழகுதான்... என்றது வேதம்.

மநுவோ... கீழ்ஜாதிப் பெண்கள் மேல் ஜாதி ஆண்களைக் கவர்ந்தபோது மட்டும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. என்ன செய்தாலும் அது பாபம் அல்ல என்கிறது மநு.

இவர்களை அடித்துத் துரத்தி கொடுமைகள் செய்யாமல் தங்கள் உடனேயே தங்க வைத்துக் கொள்கிறது மநு சாஸ்திரம்.

அடுத்து சொல்லப்போகும் ‘ப்ரதிலோம சங்கரம்’ பற்றி நீங்கள் யூகித்திருக்கலாம். அதாவது....மேல்ஜாதிப் பெண்களை கீழ்ஜாதி ஆண்கள் கவர்ந்தது, பறித்து நுகர்ந்து சென்றால் மநுவின் பார்வையில் இது பிரதிலோம சங்கரம்.

அடேய்.. அதெப்படி நம் இனத்து பெண்ணை ஒரு கீழ்சாதிப் பயல் கவர்ந்து செல்லலாம்?... இவளுக்கு எங்கே போயிற்று புத்தி? ஊரைவிட்டே பகிஷ்காரம் பண்ணுங்கள் நாம் வாழும் தெருவில் அவர்களின் பாபத்தடங்கள் படக்கூடாது அவர்களின் சுவாசக்காற்று நமது தெருக்காற்றை உரசக்கூடாது.அவர்களும், அவர்களைத் தொடர்ந்துவரும் சந்ததிகள் அத்தனை பேரும் சண்டாளர்கள் தான் சட்டம் இயற்றி தண்டனை விதித்தது மநு.

இதன் காரணமாக பிரதிலோம சங்கர கூட்டம் ஊரைவிட்டு விரட்டப்பட்டது. இன்று வரை அவர்கள் ஊரோரம் குடியிருக்கும் காரணம் புரிகிறதா?

ஆனால்... ‘அனுலோம சங்கர’ கூட்டத்துக்கு ஊரிலேயே இடம் கொடுத்து தேர் ஓட்டுங்கள் என ஆணையிட்டது மநு மநுவின் ‘சண்டாளன்’ என்ற பதத்துக்கு.

பிராமிணர்களின் அலங்கோல ஆச்சார அதிர்ச்சிக‌ள்.

உற்றார் சம்மதத்துடன் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு.

பிராமணர்களால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்?

கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?. ஆனால் அது தான் உண்மை!

மேல்ஜாதி நம்பூதிரிகளால் (பிராமணர்கள்) ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்

இந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் (பிராமண) பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது.


10.பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் கள்ளஉறவு கொண்டால்?

9. ” தலித் ” துகள் சண்டாளர்களாம். ? தலித் களுடன் பிராமண ஆண் பெண்களின் கள்ள உறவு.

மேற்க‌ண்ட‌ இரு க‌ட்டுரைக‌ளை சார்ந்த‌ ஆதார இணைப்பு பதிவு ப‌திவு.


"
உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்"

நாகரீகம் வளர்வதற்கு முந்தைய கற்காலத்தில், மனிதன் கால்நடைகளைப் போன்று வாழ்ந்தான் என்பதை வரலாற்றுப் பாடங்களில் படித்துள்ளோம். அத்தகைய காலகட்டங்களில் அச்சமூகத்திற்குத் தலைமையேற்ற ஏதோ ஒரு நல்ல பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட மன்னன் மேற்கண்டக் கட்டளையை இட்டுள்ளான் என நினைத்தால்.... அது தவறு!

இது நாகரீகம் வளர்ந்து உச்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த 17 - 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மன்னன் பிறப்பித்தக் கட்டளையாகும். 17 - 18 ஆம் நூற்றாண்டிலும் மக்கள் கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?. ஆனால் அது தான் உண்மை!

சரி, யார் இந்த மன்னன்?. எங்கு, எதற்காக, எந்தத் தருணத்தில் இந்தக் கட்டளையை அந்த மன்னன் பிறப்பித்தான்? என்பதை அறிய ஆவலாக உள்ளதா?.

இவ்வாறு கட்டளையிட்டது, இந்தியாவைப் பலகூறாகப் பிரித்து ஆண்டு கொண்டிருந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ, இராஜபுத்திர இன்னபிற மன்னர்களில் எவராவது ஒருவராக இருப்பார் எனக் கருதுவீர்களானால்....... அதுவும் தவறானதே.

இவ்வாறான அதிரடி உத்தரவைப் பிறப்பித்தவர் வேறு யாரும் அல்ல - இந்தியாவை அடக்கியாண்டுக் கொண்டிருந்தப் பரங்கியர்களுக்குச் சிம்மச்சொப்பனமாகத் திகழ்ந்து வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வீரத்துடன் வாழ்ந்த தீரர் திப்பு சுல்தானே தான்.

கேரள நம்பூதிரிகளின் அக்ரஹார அலங்கோல ஆச்சாரங்களை ஒரே கட்டளையின் மூலம் தகர்த்தெறிந்தத் திப்புவின் இந்தக் கட்டளைக்கான காரணம் என்ன? தனது ஆட்சிபரப்பை விரிவாக்கும் எண்ணத்தில் கேரளத்தில் அடியெடுத்து வைத்தத் திப்புவின் வாயிலிருந்து வெளியான இந்தக் கட்டளைக்கும் அன்றையக் கேரள அரசவைக் கூட்டத்தையும் அடிதட்டு மக்களையும் ஒருங்கே கைகளில் அடக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம்?

திப்புவைக் குறித்துப் பேசப்படும் வரலாற்று நூல்களில் பெரும்பாலானவைகளிலெல்லாம் காணப்படும் பிரசித்தமான இந்தத் திப்புவின் கட்டளைக்குக் காரணம் தான் என்ன?. அதனை அறிந்துக் கொள்ள வேண்டுமெனில், திப்பு கேரளத்தில் கால்பதித்த வேளை கேரள மக்கள் எந்நிலையில் வாழ்ந்து வந்தனர் என்பதைக் குறித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

சிறிது வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்....

விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின் மைசூரில் பிரபல சக்தியாக வளர்ந்து வந்த ஹைதர் அலியின் படை, அக்காலத்தில் மலபார் என அறியப்பட்டிருந்தக் கேரளத்தினுள் நுழைந்துத் தெற்கு மலபாரை ஆட்சி செய்துக் கொண்டிருந்த கேரள வரலாற்றில் மிகப்பெரிய மஹாராஜாவாக அறியப்பட்டிருந்த சாமிரி ராஜாவை அடக்கி அடிபணிய வைத்ததோடு ஹைதர் அலியின் மைசூர் ஆட்சி மலபாருக்கும் விரிவடைந்தது. அதனைத் தொடர்ந்து 1773 ல் மைசூர் ஆட்சியின் மலபார் கவர்னராக ச்ரீநிவாச ராவ் பதவியேற்றது முதல் 1790 வரையுள்ள 16 ஆண்டு காலம் மலபார், மைசூர் ஆட்சியின் கீழ் இருந்தது.

இதில் 9 ஆண்டுகள் ஹைதர் அலியும் 7 ஆண்டுகள் திப்புவும் ஆட்சி செலுத்தினர். மிகக் குறுகிய இந்தக் காலயளவில் மலபார் மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்த திப்பு முனைந்திருந்தாலும் இஸ்லாமிய பெயர் கொண்ட ஒரு நவீனத்துவ முகம் கொண்டிருந்ததால் அவரின் சீர்திருத்தங்கள் மூட பழக்க வழக்கங்களிலும் கீழ்த்தர ஆச்சாரமுறைகளிலும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்த அச்சமூகத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தாமல் போனது.

அக்காலகட்டத்தில், சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களையும் தம் கைகளில் அடக்கி வைத்திருந்த நம்பூதிரிமார்கள், (பிராமணர்கள் ) தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் அடக்கியாண்டு மோசம் செய்து கொண்டிருந்தனர். தங்களைத் தெய்வத்தின் பிரதிநிதிகளாகவும் பூஜிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தைச் சமூகத்தில் விதைப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

"
அவரின் - நம்பூதிரியின் - உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும் உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர்.

இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்" என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.

"நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் - எதிர்ப்பவர்கள் – தெய்வக் குற்றத்திற்கு ஆளாவர்".

இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தைகளைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப்பூர்வமாக விரும்பியிருந்தனர்.

"சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்".

(சி. அச்சுதமேனோன் - கொச்சின் மாநில கையேடு - 1910. பக்கம் 193. c. achchutha menon - Cochin State Manual - 1910. Page No: 193.)

நம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத தாழ்த்தப்பட்டப் பெண்களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள தெருக்களில் காணப்பட்ட விளம்பரங்கள் இவற்றைச் சரியென எடுத்தியம்புகின்றன.

அங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: "நம்முடைய நாட்டில் சொந்தம் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்" (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை - பக்கம் 147).

நம்பூதிரிமார்கள் கீழ்ஜாதி பெண்களைக் கற்பழித்தால் கூட தண்டிக்கப்படுபவர்கள் அந்தக் கீழ்ஜாதி பெண்களாகத் தான் இருப்பர்.

"
நம்பூதிரிகள் கீழ்ஜாதி பெண்டிர் மீது வன்கொடுமை செலுத்தினால் அந்த நபரின் கண்களைக் குத்த வேண்டும்(கண்கள் சிறிது காலத்திற்குக் கட்டப்பட வேண்டும் என்பது தான் சாதாரணமாக நடைமுறைபடுத்தப்பட்டிருந்தது).

அந்தக் கீழ்ஜாதி பெண்ணையும் அவள் குடும்பத்தையும் கொன்றொழிக்கவோ அல்லது முஸ்லிம்களுக்கு விற்றுவிடவோ செய்ய வேண்டும். அப்பெண்ணின் அழகு நம்பூதிரியைப் பாதிப்படைய வைத்ததே அவளும் அவள் குடும்பத்தினரும் செய்த தவறு" (கேரளம், ஃப்ரான்ஸிஸ் புக்கானன் - பக்கம் 75).

கீழ்ஜாதி பெண்டிர் மீது உயர்சாதியினரால் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட அடக்கு  முறையாகும் இது.

நம்பூதிரிகளின் திருமணமுறை இதனைவிட விசித்திரமானதாகும்.

நம்பூதிரிகளில் மூத்த சகோதரன் மட்டுமே சொந்தம் ஜாதியில் திருமணம் செய்ய வேன்டும். மற்றவர்கள் நாயர் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். மூத்த சகோதரனுக்கு மட்டுமே திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது என சங்கரஸ்மிருதியும் கட்டளையிடுகின்றது.

"
ஏக ஏவ க்ருஹம் கச்சேத் - ஜ்யேஷ்ட புத்ரோன சேரெ:
ஃப்ராத்ருஷ்வேகய் புத்ரிண(2-2-16)

இவ்வாறு மூத்த மகனுக்கு மட்டும் திருமணத்தை விதியாக்கி விட்டு மற்றவர்களின் விஷயத்தில் சங்கரஸ்மிருதி மௌனம் கடைபிடிக்கின்றது" (கேரள பிராமண வாழ்க்கையில், ஸ்மிருதி... - டாக்டர். பி.வி. ராமன்குட்டி).

இவ்வாறான நடைமுறைக்கு ஒவ்வாத விதிகளைக் கடுமையாகப் பேணியதால் நம்பூதிரிகளின் சமுதாயத்தில் உள்ள பெண்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக நம்பூதிரி சமுதாயத்தில் விளைந்த மோசமான விளைவுகளை வரலாற்றாசிரியர்கள் பலர் ஆவணப் படுத்தியுள்ளனர்.

"
நம்பூதிரி வீட்டில் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணம் செய்வதற்கு அனுமதி உண்டு. இந்தச் சௌகரியத்தை உபயோகப்படுத்தி வீட்டின் மூத்தமகன் குறைந்தது மூன்று திருமணமாவது செய்துக் கொண்டார். பல வேளைகளிலும் வரனாக இருந்த மூத்த மகன் முடமானவனாக இருப்பார் அல்லது மத்திய வயது கடந்தவனாக இருப்பார். இவ்விதம் ஒருவருவருக்கு பதினொன்றும் பதிமூன்றும் வயதுடைய ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பர்". (கண்ணீரும் கனவும், வி.டி. பட்டதிரிபாடு - பக்கம் 120).

"
மூத்த சகோதரன் மட்டும் சொந்தம் ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருப்பர். இதே நேரம் வீட்டில் மூத்த சகோதரன் பல மனைவிமார்களுடனும் இருப்பார்" (19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி - பக்கம் 120).

"
இவ்விதம் நம்பூதிரி பிரம்மச்சாரிகள், சூத்திர பெண்டிருடன் சோமபானங்களின் மத்தியில் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, நம்பூதிரி கன்னிப் பெண்கள் கர்ப்பகிருகத்தின் உள்பக்கம் தனிமையில் அடைக்கப்பட்டிருப்பர்.

இவர்கள் மிகக் கடுமையான பாதுகாவல்களுடன் கண்காணிக்கப்படுவர். பலர் திருமணம் செய்ய முடியாமல்(வரன் கிடைக்காமல்) வாழ்ந்துக் கன்னிகளாகவே இறக்கவும் செய்வர்" (கொச்சி நாடின் வரலாறு, கெ.பி. பத்மநாப மேனோன் - பக்கம் 896)

"
அப்பன்மார்கள் வேற்று ஜாதி உறவைத் தேடிச் சென்றபோது நம்பூதிரிப் பெண் குட்டிகள் இல்லங்களில் இருள்படர்ந்த அறை மூலைகளில் இருந்து நரைத்தனர். 1885இல் மலபாரில் மட்டும் 1017 இல்லங்கள் இருந்ததாக லோகன் ஆதாரப்படுத்தியுள்ளார். இக்காலகட்டத்தில் கேரளத்தில் மொத்தமாக 1500 இல்லங்களில் சுமார் 8000 க்கும் மேற்பட்ட வாழ்க்கை கிடைக்காத கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருந்ததாக கணிக்கப்பட்டிருந்தது"  (ஜாதிப் பாகுபாடும் கேரள வரலாறும் - பி.கே. பாலகிருஷ்ணன், பக்கம்: 159).

இதற்கும் மேலாக சிறு வயதுள்ள கன்னிப் பெண்களை வயதான நம்பூதிரிகள் திருமணம் புரிவதும் சர்வசாதாரணமாக நடைமுறையில் இருந்தது. அதன் மூலம் சிறுவயது விதவைகள் சமூகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தனர். (வாட்டர் எனும் திரைபடத்தில் தீபா மேத்தா இதனை மையமாக வைத்து, உயர்சாதிப் பிராமணச் சமூகத்தில் முன்பு நடந்த இத்தகைய அநியாயங்களால் விதவைகளாக்கப்பட்ட பால பருவப் பெண் குழந்தைகளின் மோசமான நிலையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியதாலேயே சங்கபரிவார அமைப்புகள் அப்படத்தைத் திரையிட விடாமல் அட்டூழியம் புரிந்தன).

பல நம்பூதிரிப் பெண்களுக்கும் திருமணம் புரியும் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கவில்லை. பல வேளைகளிலும் பெண்கள் கன்னிகளாகவே மரணமடைய வேண்்டிய துர்பாக்கிய நிலை இருந்தது.

"1912
இன் கணக்குப்படி 1000 நம்பூதிரிமார்களில் 516 பேர் திருமணம் புரிந்தவரும் 457 பேர் திருமணம் செய்யாதவரும் ஆவர். பெண்களில் 1000 க்கு 393 பேர் திருமணம் புரிந்தவர்களும் 387 பேர் திருமணம் புரியாதவர்களும் 230 பேர் விதவைகளுமாவர்"  (கேரள நம்பூதிரிப் பெண்களின் கடந்த கால வரலாறும் நிகழ்கால நிலைமையும் - டாக்டர். கெ.பி. ஸ்ரீதேவி).

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நம்பூதிரிகளுக்கிடையில் நடைமுறையிலிருந்த வரதட்சணை பழக்கவழக்கம் பெண்களுக்கு உருவாக்கிய பிரச்சனைகள் ஏராளம்.

"
இரண்டு, மூன்று திருமணங்கள் புரிய நம்பூதிரிகளுக்கு, அச்சமூகத்துப் பெண்களுக்கான வரதட்சணைக் கொடுமை ஒரு முக்கியத் தூண்டுகோலாக இருந்தது முதல் விஷயமாகும்.

இரண்டாவது இதனை விடக் கொடுமையானது: நம்பூதிரிகளில் அனைவரும் செல்வந்தர்கள் இல்லை. பொருளாதார - சமூக தலைமைகளைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த ஒரு பகுதி மட்டுமே தனவந்தர்களாக இருந்தனர். வறுமையில் வாடியவர்களும் அச்சமூகத்தில் நிறைந்திருந்தனர்.

வரதட்சணை கொடுக்கப் பணம் இல்லாமல் இருக்கும் பொழுது, உதவ ஆளில்லாத தந்தைகள் வயதிற்கு வந்தப் பெண்களைக் கர்நாடகா, சிர்சியி, சித்தாப்பூர் அல்லது கோயம்புத்தூர் போன்ற ஏதாவது இடத்திற்குக் கொண்டு சென்று ஏதாவது ஒரு பிராமணனுக்குத் திருமணம் செய்து கொடுப்பர்". ("கேரள நம்பூதிரிப் பெண்களின் கடந்தகால வரலாறும் நடப்புக் காலமும்" - டாக்டர். கெ.பி.ஸ்ரீதேவி)

நம்பூதிரிகளிடையே நடைமுறையிலிருந்து இத்தகையத் திருமண நிகழ்வுகளில் பெண்கள் வஞ்சிக்கப்படுவது இயல்பாகிப் போயிருந்தது. வி.டி. பட்டத்திரிபாடின் "பதில் கிடைக்காத கேள்வி" என்ற சிறுகதை, இதுபோன்று வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கொடுமையான அனுபவங்களைக் கூறுகிறது.

இந்தியாவில் பல பாகங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததன் ஓர் அங்கமாகக் கேரளத்திலும் நம்பூதிரிகளிடையே பெண்களுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகளுக்குக் குறைவில்லை.

பிராமணர்கள் பெண்களைப் போகப்பொருட்களாக மட்டுமே நினைத்துச் செயல் பட்டதன் விளைவே இது. சமீபத்தில் தீபாமேத்தா தயாரித்து வெளியான "வாட்டர்" என்ற திரைப்படமும் பெண் சமூகத்திற்கு எதிராக பிராமண சமூகம் கையாண்டிருந்த கொடூரமான பழக்கவழக்கங்களையும் அநியாயங்களையும் காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதனாலேயே சங் பரிவாரத்தின் கடுமையான எதிர்ப்புக்கும் அத்திரைப்படம் இலக்கானது.

இதுபோன்ற அனைத்துத் சுரண்டலுக்கும் இலக்காகி, வீடுகளின் உள்தளங்களில் ஒதுங்கி மறைந்து வாழவேண்டிய நிலைக்கு உள்ளாக்கப் பட்ட பெண்கள், கடுமையான உடற்பசியால் வாடி, பலவேளைகளிலும் வழிகெட்டுப் போக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். அவ்வாறு சோரம் போவது நம்பூதிரி ஆண்களுடனாக இருந்தாலும்கூட, அவர்கள் ஜாதிவிலக்கிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். அவ்விதம் ஜாதிவிலக்கிற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு, கோழிக்கோடு சேட்டுகளிடம் தஞ்சமடைவது அல்லது தெரு விபச்சாரிகளாவது ஆகிய இரண்டு மட்டுமே வாழ்க்கைக்கான வழிகளாக இருந்தன.

ஒரு பக்கம் நம்பூதிரிப் பெண்கள், நம்பூதிரிகளிடையே இருந்த மோசமான ஆச்சாரங்களால் கடுமையான உடல்-மன கொடுமைகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தபோது, மறுபக்கம் நாயர் பெண்களுக்கான மணவாழ்க்கை என்பது கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கும் 'புதுமைப் பெண்'களாக அவர்களை மாற்றிப் போட்டிருந்தது.

நாயர் பெண்கள் வயதிற்கு வருவதற்கு முன் ஒன்பது-பத்து வயதிருக்கும் பொழுது "கெட்டு கல்யாணம்" என்ற ஒரு திருமணச் சடங்கு நடைபெறும்.

சில வேளைகளில் ஒரு ஆணே பல பெண்களுக்குத் தாலி கட்டுவார். அவ்வாறு தாலிகட்டும் ஆணுக்கு, தாலி கட்டிய பெண்ணுடன் தொடர்பு கொள்வதற்கு அனுமதி கிடையாது.

'கட்டிய கணவனை'த் தவிர்த்து உயர்ஜாதியிலோ அல்லது அதே ஜாதியிலோ உள்ள வேறு எந்த ஆணுடனும் அப்பெண் இணைந்து கொள்ளலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை உடைய நாயர் பெண்கள், அதனை மோசமான பழக்கமாகக் கருதவில்லை.

மாறாக, அதிகமான பிராமணர்களுடைய, வழிபோக்கர்களுடைய உறவை நாயர் பெண்கள் மிகப்பெரும் கொடுப்பினையாக - பெருமையாகக் கருதியிருந்தனர்.

அத்தகைய தொடர்புகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்திருந்தது அப்பெண்களைப் பெற்ற தாய்மார்கள் தாம் என்பது அதிர்ச்சியின் உச்சகட்டம்!

"
கெட்டு கல்யாணம்" என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் நிலை முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

வீட்டிற்கு வெளியே வாள் வைக்கப்பட்டிருப்பது காணப்பட்டால், உள்ளே வேறு நபர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, பிற கணவர்களும் காதலர்களும் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்பது சட்டமாக இருந்தது.

நாயர் பெண்களுக்குப் பல கணவர்மார்கள் இருப்பதைச் சமூகம் அங்கீகரித்திருந்தது. அது அவர்களது மதச் சட்டமாகக் கருதப் பட்டதால் அதனைக் குறித்து கேள்வி கேட்பது தடை செய்யப்பட்டிருந்தது.

1800-1801
இல் மலபாரில் பிரயாணம் செய்து அங்குள்ள நிலைமைகளைச் சேகரித்த வரலாற்றாசிரியர் புக்கானல் இவ்விஷயங்களைத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனைக் குறித்து ஸைனுத்தீன் மக்தூமின் விளக்கத்தை இங்குச் சுட்டுவது பொருத்தமாக இருக்கும்:

"
ஒவ்வொரு பெண்ணிற்கும் தொடர்பு வைத்துக் கொள்ள இரண்டோ நான்கோ கணவர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளாமல் மிகுந்த இணக்கத்துடன் வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் ஒன்றுக்கும் மேற்பட்ட தன் தனது மனைவிகளிடத்தில் நேரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் ரீதியில், நாயர் மனைவியானவள் தனது சௌகரியத்திற்கு ஏற்ப கணவர்களை மற்றி மாற்றி உபயோகப்படுத்துகின்றாள்".

"
மேற்கண்ட இந்தத் தொடர்பில் மனைவி கர்ப்பம் தரித்தால் குழந்தையின் தகப்பன் யார் என்பதை மனைவி நிச்சயிப்பாள். தகப்பனாக சுட்டிக் காட்டப்பட்டவன் குழந்தைக்குத் தேவையானவைகளைச் செய்துக் கொடுத்துப் பாதுகாப்பான்; கல்வியளிப்பான். ஆனால், அவனது சொத்துகளுக்கு இதுபோன்ற குழந்தைகள் வாரிசுகள் ஆக மாட்டார்" (மலபார் மேனுவல் - வில்லியம் லோகன், பக்கம் 139).

மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்டக் கடுமையான சடங்குகளால், ஒரே நேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட நாயர் பெண்களால், சொந்தத் தந்தையின் பெயர் அறியாச் சமுதாயமாக நாயர் சமுதாயம் மாறியது. இதனை வரலாற்றாசிரியர் புக்கன்னான் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

"விசித்திரமான இச்சடங்குகளின் பலனாக ஒரு நாயருக்குக்கூட அவரின் சொந்தத் தந்தை யார் என்பது தெரியாமல் இருந்தது. எல்லோரும் அவரவரின் சகோதரி மகன்களை வாரிசுகளாகக் கருதி வந்தனர்" - கேரளம், பிரான்சிஸ் புக்கன்னான், பக்கம் 69-70.

குடும்பக் கட்டமைப்பினைச் சின்னாபின்னமாக்கும் மற்றொரு கேவலமான பழக்கமும் நாயர் சமூகத்தில் நடைமுறையில் இருந்தது.

அது, உடன்பிறந்த இரு சகோதரர்கள் (அண்ணன், தம்பி) ஒரே பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளும் சடங்காகும்.

வரலாற்றாசிரியர் இளம்குளம் குஞ்சன்பிள்ளை இச்சடங்கைக் குறித்துக் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்:

"
அண்ணன் திருமணம் முடிப்பான். அவனின் தம்பிகள், அதாவது அவனின் உடன்பிறந்த சகோதரர்கள் அண்ணனின் மனைவியோடு சேர்ந்து குடும்பம் நடத்துவர். தம்பிகள் வேறு திருமணம் செய்து கொண்டாலும் அண்ணன் மனைவியுடன் குடும்பம் நடத்துவது தொடர்ந்து நடக்கலாம்.

தாயின் சகோதரி (பெரியம்மா/சித்தி) மகன்களான ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் இவ்வுரிமை உண்டு. ஆனால், தந்தையின் சகோதரருடைய (பெரியப்பா/சித்தப்பா) மகன்களுக்கு இந்த உரிமை இல்லை.

அவ்வாறான தந்தையின் சகோதரரின் மகன்கள், தன் (பெரியப்பா/சித்தப்பா மகன்களான) சகோதரனின் மனைவியுடன் குடும்பம் நடத்துவது, பாதி விபச்சாரத்திற்கு ஒப்பாகக் கருதப்பட்டிருந்தது.

19
ஆம் நூற்றாண்டின் இறுதியில், இரு சகோதரர்களுக்கு ஒரு மனைவி என்பது தண்டனைக்குரியக் குற்றமாக சட்டமாகி விட்டாலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட, தன் மகளைத் திருமணம் முடித்துக் கொடுக்கும்போது, 'அண்ணன்-தம்பிகள் இணைந்து நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?' என தாய்-தந்தயர் ஆவலுடன் எதிர்பார்த்தனர்" - கேரள வரலாற்றில் இருண்ட ஏடுகள், பக்கம் 154.

ஆக மொத்தத்தில் நாயர் பெண்களுக்குச் சொந்த ஜாதியிலோ உயர்ந்த ஜாதியிலோ உள்ள எந்த ஓர் ஆணுடனும் எத்தருணத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ள அனுமதி இருந்தது. அவர்களுக்கு இருந்த ஒரே தடை, தாழ்ந்த ஜாதியிலுள்ள ஆண்களுடன் மட்டும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதாக இருந்தது.

அவ்வாறு தாழ்ந்த ஜாதியிலுள்ள ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பது வெளியானால் அந்தப் பெண்களை ஜாதியை விட்டு விலக்கி, அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.

இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில்கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார்.

திப்புவின் வெட்க உணர்வையும் பெண்களை அவர் நடத்திய விதத்தையும் அவரது பழக்க வழக்கத்தையும் குறித்து பி.கே. பாலகிருஷ்ணன் வியந்து போற்றுகிறார்:

"
மகாராஷ்டிரா போர் வேளையில் அவர்களின் கூடாரத்தில் தாக்குதல் நடத்தியவர்களில் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட அரச குமாரிகளைத் திப்புவின் முன்னிலையில் கொண்டு வந்த வேளையில், அந்த அபூர்வ அழகிகளின் அழகில் மயங்கி விடாமல் அந்த அழகிகளுக்கு ஆபரணங்களும் உயர்ந்த உடைகளும் பரிசுகளாக வழங்கி, போரை நிறுத்துவதற்கு அவர்களின் கணவர்களை வேண்டிக் கொள்ள வேன்டும் என்ற கோரிக்கையுடன் அவர்களைப் பாதுகாப்பாக திரும்ப அனுப்பிய குணம் வியப்பில் ஆழ்த்துகிறது! - திப்பு சுல்தான், பி.கே. பாலகிருஷ்ணன், பக்கம் 120.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளைவிடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்"

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

திப்புவின் கட்டளை உண்மையில் உயர்ஜாதி மடாதிபதிகளின் கோட்டையையே உலுக்கிப் போட்டது.

ஜாதியின் பேரில் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த உயர்ஜாதித் தம்புரான்களுக்கு, தங்களின் கட்டுப்பாடற்ற சுதந்திரமான சுகவாழ்வு நீடிக்க அவர்களின் ஜாதிச் சடங்கு, சம்பிரதாயங்களை நிலைநிறுத்த வேண்டியது கட்டாயமாக இருந்தது.

அதன் காரணமாக, ஆங்கிலேயர்களுடன் இணைந்து திப்புவிற்கு எதிராகப் பரவலான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தனர்.

உயர்ஜாதித் தீண்டாமை மற்றும் அடக்குமுறைக்கு எதிரானத் திப்புவின் சமூக சீர்த்திருத்த முயற்சிகள் அனைத்தும் இந்து மதத்துக்கு எதிரான செயல்பாடுகளாகத் திரிக்கப்பட்டதோடு, திப்பு ஒரு இந்து மதவிரோதி என்று பிரச்சாரமும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவைத் தங்களின் காலனி நாடாக வென்றெடுப்பதற்குப் பெரும் சவாலாக விளங்கிய திப்புவை அழிக்க வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயர்களுக்கு. அதே நேரத்தில், உள்நாட்டு மக்களிடையே உயர்ஜாதி மடாதிபதிகளால் திப்புவுக்கு எதிராகப் பரப்பப்பட்ட இந்தப் பொய் செய்தி, ஆங்கிலேயருக்கு எதிரான திப்புவின் போராட்டத்தில் ஒரு பெரும் பகுதி மக்கள் ஆங்கிலேயர்களுக்குத் துணை செல்லும் நிலையை ஏற்படுத்தியது

இந்திய வரலாற்றின் இருண்டபகுதி என்றே வர்ணிக்கலாம்.
அதனால், திப்புவின் சமூக சீர்திருத்த முயற்சிகளெல்லாம் மதமாற்றத்திற்கான திட்டங்களாக சாதாரண மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலையும் அதன் மூலம் இந்தியாவை அடக்கியாள வந்தேறிய ஆங்கிலேயர்களுடன் இணைந்து திப்புவை ஒழித்துக் கட்டும் சதிவேலைகளை உயர்ஜாதி ஜமீந்தார்கள் செய்வதற்கு இலகுவாகவும் அமைந்தது.

மக்களுக்குப் பயன்விளைவிக்கும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதைக் கூறுவது இஸ்லாமாக இருப்பின், அதனை "மதமாற்ற" காரணம் கூறி சமூகத்திற்குப் பயன் விளைவிப்பதிலிருந்து தடுத்து விடுவதை எக்காலத்தும் உயர்ஜாதியர்கள் கடைப்பிடித்தே வந்துள்ளனர்.

வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத் திட்டங்களால் உலகமே சீரழிந்து நிற்கும் இவ்வேளையில்கூட, வட்டியில்லாத வங்கி முறையை அமல்படுத்த முன்வந்த கேரள அரசின் முயற்சியை உயர்ஜாதியைச் சேர்ந்த சுப்ரமணியசுவாமி மதத்தின் காரணம் கூறி உச்சநீதிமன்றத்தில் தடையேற்படுத்திய அண்மை நிகழ்வு, இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

கேரள பெண்சமூகத்தில் திப்பு சுல்தான் நடைமுறைப் படுத்திய மற்றொரு சீர்திருத்தம்தான், பெண்களின் மேலாடை விஷயத்தில் தலையிட்டதாகும்.

இந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது.

அவ்வாறு நம்பூதிரிப் பெண்களைத் தவிர மற்ற பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடைஅணிவது, மிகப் பெரிய மதவிரோதச் செயலாக நாயர் பெண்களும் இன்னபிற தாழ்த்தப்பட்ட பெண்களும் கருதி வந்தனர்.

அதனைக் குறித்து எழுத்தாளர் அனந்த கிருஷ்ணன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

"நாயர் சமுதாயத்தில் (கீழ்ஜாதியினரில்) ஆணும் பெண்ணும் உடம்பின் மேல்பாகத்தை மறைப்பது தங்களின் எஜமானர்களுக்கும் பிரபுக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய எதிர்ப்பாக கருதப்பட்டிருந்தது".

அப்போதைய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வேதங்களையும் உபயோகித்து கீழ்ஜாதி மக்களை அந்த அளவுக்குத் தவறான சிந்தனையில் உயர்ஜாதியினர் ஊறவைத்திருந்தனர்.

இடுப்புக்கு மேல் உடம்பை மறைக்காத பெண்களின் நடைமுறை, சாதாரண வாழ்க்கையை மிக அலோங்கலப்படுத்தும் என்றும் மக்களின் முன்னேற்றத்துக்கு அது பெரிய தடையாக இருக்கும் என்றும் திப்பு புரிந்து கொண்டார்.

அதன் காரணமாக, இத்தகைய ஜாதி சம்பிரதாயத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் எல்லாப் பெண்களும் கட்டாயமாக தங்களின் மார்புகளை மறைக்க வேண்டும் என்றும் திப்பு சுல்தான் கண்டிப்பாக உத்தரவிட்டார். ஆனால், தன்னுடைய சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் மக்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குமான முயற்சிகள்தாம் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்து, தமது சீர்திருத்த முயற்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்மாறு செய்வது திப்புவுக்கு மிகக்கடினமானதாக இருந்தது.

தங்களின் கருத்துத் தெரிந்த காலம் முதல் தாங்கள் கடைபிடித்து வந்த ஆச்சார முறைகளை மீறுவதற்குக் கீழ்ஜாதி மக்கள் ஒரு போதும் தயாராகவில்லை. திப்புவின் சீர்திருத்தக் கட்டளைகள் அனைத்தும் அவர்களுக்கு மதமாற்ற முயற்சிகளாகவே உயர்ஜாதியினரால் திரித்துக் காட்டப் பட்டன.

குறிப்பாக, இடுப்புக்கு மேல் உடம்பு முழுவதையும் மறைக்கும் விதத்திலான மேலாடை அணிவது, முஸ்லிம் பெண்கள் ஆடைக்கு ஒப்பானதாக இருந்ததால், அவ்வாறு மேலாடை அணிவதையே மதமாற்றத்திற்கு ஒப்பானதாக அவர்கள் கருதினர்.

அக்காலத்தில் மட்டுமன்றி தற்போதைய வரலாற்று ஆசிரியர்களிலும் பெரும்பாலோர், திப்பு இந்து மதச் சம்பிரதாயங்களில் மாற்றம் ஏற்படுத்த முயன்றதாக குற்றம் சுமத்துவதுண்டு.

ஆனால், வரலாற்றை நடுநிலையாக உற்று நோக்கினால், இக்குற்றச்சாட்டு அநியாயமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அனைவரையும் சமமானவர்களாக ஆக்கி, அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்குமான முயற்சியாகவே இருந்தன. அதற்கு, கி.பி. 1785இல் மலபார் கவர்னருக்குத் திப்பு எழுதிய கடிதம் ஆதாரமாகத் திகழ்கிறது.

திப்புவின் சீர்த்திருத்தக் கட்டளைகள் மதமாற்ற முயற்சிகளாகவும் இந்து மதத்தை அழிப்பதற்கான முயற்சிகளாகவும் திரிக்கப்பட்டதை அறிந்த திப்பு தன் நிலைபாட்டை மலபார் கவர்னருக்குக் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்:

"
மலபாரில் சில பெண்கள் தங்களின் மார்புகளை மறைக்காமல் திரிவதைப் பார்த்தபோது எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அக்காட்சி வெறுப்பையும் நாகரீக, பண்பாட்டு சிந்தனைகளுக்கு எதிரான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

சன்மார்க்க சிந்தனைக்கு நிச்சயமாக அது எதிரானதுதான். இப்பெண்கள் ஒரு தனிப்பட்ட பரம்பரையில் உள்ளவர்கள் எனவும் அவர்களின் சம்பிரதாயப்படி, அவர்கள் தங்கள் மார்புகளை மறைப்பது கூடாத காரியம் எனவும் நீங்கள் எனக்கு விளக்கமளித்தீர்கள். நான் அதனைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். நீண்டகால சம்பிரதாயம் காரணமாகவா, அல்லது ஏழ்மையின் காரணமாகவா அவர்கள் தங்கள் மார்புகளை மறைக்காமல் இருக்கின்றனர்?

ஏழ்மையின் காரணமாகவே அவர்கள் தங்களின் மார்புகளை மறைக்காமல் இருக்கின்றனர் எனில், அவர்களுடைய பெண்கள் தங்களின் கவுரவத்திற்குக் களங்கம் ஏற்படாவண்ணம் கண்ணியமாக உடையணிவதற்குரிய உதவிகளை நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

அதற்கு மாற்றமாக நீண்டகால பழக்கமுடைய, கைவிடக் கூடாத சம்பிரதாயம் என்பது காரணம் எனில், அவர்களுடைய தலைவர்களிடையே நெருக்குதல் கொடுத்து இந்த (அரை நிர்வாணச்) சம்பிரதாயத்தை இல்லாமலாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அவர்களின் மதத் தத்துவங்களுக்கு எவ்வகையிலும் கேடுவிளைவிக்கா விதத்தில், சமாதானமான முறையிலான உபதேசத்தின் மூலமாக மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்" (கேரள முஸ்லிம்களின் போராட்ட வரலாறு - பேராசிரியர்: கெ.எம்.பகாவுத்தீன், பக்கம் 118,119.)

 

 

10.பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் கள்ளஉறவு கொண்டால்?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 10

10. பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் உறவு கொண்டால் ? தவறு செய்யும் ஆணை விட்டுவிடலாம். பெண்ணை ஊருக்கு வெளியே புறம் தள்ளி வைக்க வேண்டும்.

என்ன?... அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா?


நீங்கள் இப்போது கேட்டதை நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி வாயால் கேட்டு லேசாக அதிர்ந்தேன். பிறகு... நான் மநுவுக்குள் மூழ்க ஆரம்பித்தேன். ‘சண்டாளர்கள்’ என குறிப்பிட்ட மநு அவர்களைப் பற்றி மேலும் என்ன சொல்லியிருக்கிறது என்பதுதான் தேடல்.

பிராமண வீட்டுப் பெண்கள் சூத்திரர்களோடு ப்பிரியப்பட்டார்கள் அல்லவா?... அதே காரணத்துக்காக அவர்கள் சமூகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டார்கள்.

சமூகம்?...ஆமாம்... தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை பிராமணர்கள் பார்த்தார்கள்.

‘நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி அழைப்பது’-சிந்தித்தார்கள். a stable society அதாவது நிலையான சமூகக் கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு.

அதற்காக? பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்.

சூத்திரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்திரன்தான். வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான். க்ஷத்திரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில் நின்றாலும் அவன் க்ஷத்திரியன்தான். இதுதான் அவர்கள் வகுத்த stable society.

மறுபடியும் மநுவுக்குள் செல்வோம்.

சாதி விட்டு சாதி மாறிய காதல்கள் பிராமண ஸ்திரிகளுக்கும், சூத்ர புத்ரர்களுக்கும் மட்டுமல்ல க்ஷத்திரிய ஸ்த்ரிகள்-சூத்ர புத்ரர்கள்வைசிய ஸ்திரிகள்-சூத்ர புத்ரர்கள்மேலும்...சூத்ர ஸ்திரிகள்-பிராமண, க்ஷத்திரிய, வைஸிய புத்ரர்கள்.

இப்படி காதல்தேவன் கட்டுகளை உடைத்து கல்யாணங்களை கள்ளத்தனமாக பண்ணிக் கொண்டிருந்தான்.

காதல் தேவனும், காமதேனும் கூட்டணி வைத்துஇஷ்டத்துக்கு திருவிளையாடல் நடத்திக் கொண்டிருந்தால் மநு நினைத்த stable society அமையுமா? அமையாதே.

இதுவும் தெரிந்திருந்தது மநுவுக்கு. அதனால் தான் இந்த பிரச்சினைக்காக மாற்றுச் சட்டமும் இயற்றியிருக்கிறார்.

என்ன மாற்றுச் சட்டம்? முறைகேடான சாஸ்திரங்களை சாகடிக்கக்கூடிய வகையில் இது போல கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவுகோல் வைத்துப் பார்த்தார். மநு

ஒன்று.. அனுலோம சங்கரம்...

இரண்டு... ப்ரதிலோம சங்கரம் அனுலோம...

பிரதிலோம என்றால் என்ன என தெரிந்து கொள்வதற்கு முன் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

முறைகேடான.. சபிக்கப் படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

முறைகேடான... சபிக்கப்படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’.

சரி அனுலோம சங்கரம் என்றால்? இந்த உறவில்.. ஆண் மேல் ஜாதிக்காரனாக இருந்தால், இதற்கு பெயர் அனுலோம சங்கரம்.

ஆனால், இவர்களை மநு சண்டாளர்களாக பார்ப்பதில்லை. ஏனென்றால் மேல் ஜாதி ஆண் அல்லவா? கீழ் ஜாதிப்பெண்ணை எடுத்துக் கொண்டிருக்கிறான்.

நம் இனத்து ஆண்... பிற இன பெண்களை பார்ப்பது, பறிப்பது, நுகர்வது, உறவுகள், உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் பொதுவாய் ‘சங்கரம்’.

இக்கட்டுரையின் முற்பகுதியிலேயே சொன்னது போல எல்லா ஜாதிக் காரர்களுக்கும் அந்த ப்ரியம் பொதுவானதாக இருந்தது.
இந்த சம்மந்தத்தில் ஆண் மேல் ஜாதிக்காரனாகவும் பெண் கீழ்ஜாதிக்காரியாகவும் இருந்தால் இதற்கு பெயர் அனுலோம ‘சங்கரம்’. உலகத்துக்கே அமைதியைத் தருவது பெண்களின் அழகுதான்... என்றது வேதம்.

மநுவோ... கீழ்ஜாதிப் பெண்கள் மேல் ஜாதி ஆண்களைக் கவர்ந்தபோது மட்டும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. என்ன செய்தாலும் அது பாபம் அல்ல என்கிறது மநு.

இவர்களை அடித்துத் துரத்தி கொடுமைகள் செய்யாமல் தங்கள் உடனேயே தங்க வைத்துக் கொள்கிறது மநு சாஸ்திரம்.

அடுத்து சொல்லப்போகும் ‘ப்ரதிலோம சங்கரம்’ பற்றி நீங்கள் யூகித்திருக்கலாம். அதாவது....மேல்ஜாதிப் பெண்களை கீழ்ஜாதி ஆண்கள் கவர்ந்தது, பறித்து நுகர்ந்து சென்றால் மநுவின் பார்வையில் இது பிரதிலோம சங்கரம்.

அடேய்.. அதெப்படி நம் இனத்து பெண்ணை ஒரு கீழ்சாதிப் பயல் கவர்ந்து செல்லலாம்?... இவளுக்கு எங்கே போயிற்று புத்தி? ஊரைவிட்டே பகிஷ்காரம் பண்ணுங்கள் நாம் வாழும் தெருவில் அவர்களின் பாபத்தடங்கள் படக்கூடாது அவர்களின் சுவாசக்காற்று நமது தெருக்காற்றை உரசக்கூடாது.அவர்களும், அவர்களைத் தொடர்ந்துவரும் சந்ததிகள் அத்தனை பேரும் சண்டாளர்கள் தான் சட்டம் இயற்றி தண்டனை விதித்தது மநு.

இதன் காரணமாக பிரதிலோம சங்கர கூட்டம் ஊரைவிட்டு விரட்டப்பட்டது. இன்று வரை அவர்கள் ஊரோரம் குடியிருக்கும் காரணம் புரிகிறதா?


11.மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள்.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி–11

11. மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள்.

நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்’ என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம்.

வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப் பிறந்தவன் வணிகன்தான், சூத்திரனுக்குப் பிறந்தவன் வேளாண்மையை மறந்தாலும் அவன் சூத்திரன்தான். க்ஷத்திரியனுக்குப் பிறந்தவன் ஆள ராஜ்யமின்றி நடுத்தெருவுக்கு வந்தாலும் அவன் க்ஷத்திரியன்தான்.

-என ஸ்டேபிள் சொசைட்டிக்கு மனு முடிந்து வைத்த சாதி முடிச்சுகளைப் படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.

அப்படியானால், பிராமணனுக்குப் பிறந்தவன் என்ன தொழில் செய்தாலும் பிராமணன் என்றாகுமே. உண்மையில் பிராமணர்களுக்கு இன்னது தான் தொழில் என சாஸ்திரம் ஏதாவது சொல்லியிருக்கிறதா? என்ற கேள்விதான் அது.

இந்த கேள்வியின் பதிலுக்குள் செல்வதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ‘படம் பார்த்து தெரிந்துகொள்’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்டிருந்த பாடத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்.

‘என்னடா... ஒண்ணாவது பிள்ளைகள் படிப்பதையெல்லாம் நமக்கும் சொல்லிக் கொடுக்கிறாரே இந்த ஆள்’ என நினைக்காதீர்கள். அந்த பாடத்திலிருந்து தான் பதிலை ஆரம்பிக்கவேண்டும்.

சொல்லிக் கொடுத்தவுடனேயே ‘பசுமரத்தில் இறங்கிய ஆணிபோல’; ‘பற்றிக்கொள்ளும் கற்பூரம் போல கிரகித்துக் கொள்ளும் சின்னக் குழந்தைகளுக்கு என்ன தெரியுமா சொல்லிக் கொடுக்கப்பட்டது -

அந்த புத்தகத்தில்? க்ஷத்திரியன் (ராஜா போல் படம்) நாட்டை ஆள்பவன் வைசியன் (ஒரு வியாபாரி படம்), வியாபாரம் செய்பவன் சூத்திரன் (ஏர் உழுவது மாதிரி படம்), விவசாயம் செய்பவன் அய்யர் (ஒரு பிராமணர் படம்) நல்லவர். இந்த ஒன்றாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடத்தை வைத்துதான் நீங்கள் மேலும் மேலும் படித்திருப்பீர்கள். ஆனால், அதில் பிராமணர் என்பவருக்கான தொழிலாக ‘நல்லவர்’ என எழுதப்பட்டிருக்கிறது

ஏன்? பிராமணியம் தனிச் சிறப்பு வாய்ந்தது. தனி நோக்கம் கொண்டது. பிராமணன் ப்ரம்மத்தின் அவதாரம்.

பிராமணன் தெய்வம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்விக்க வந்தவன். தெய்வ நம்பிக்கையை வளர்க்க வந்தவன். பொய் சொல்லமாட்டான். கொலை செய்யமாட்டான். லோக சாந்திக்காக வாழ்வான். இவனால் தான் அரசர்கள் முதற் கொண்டு அனைவரும் சமாதானமாக சேமமாக வாழ்கிறார்கள் என வேத நூல் நீட்டி முழக்கிச் சொன்னதைத் தான் நமது பாட நூல் அய்யர் - நல்லவர் என இரண்டு வார்த்தைகளில் திரட்டித் திரட்டி தந்திருக்கிறது.

சரி... நல்லவனாக இருப்பது ஒரு தொழிலா? அப்படியானால், மற்ற வர்ணத்தவர்கள் கெட்டவர்களா? இப்படியும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். சிலருக்கு ஒன்றாம் வகுப்பிலேயே எழுந்திருக்கலாம்.

அப்போது கேள்விகள் கேட்டால் வாத்தியார் அதட்டி அமர வைத்து விடுவார். ஆனால், சாஸ்திர புஸ்தகங்கள் அப்படியல்ல, பிராமணர்களின் கடமைகள், வேலைகள் என்னென்ன என்பதுபற்றி அவைகளில் ரொம்ப விளக்கமாக விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்கள். சாஸ்திரக்காரர்கள்.

“அய்யர் - நல்லவர்” மாதிரி இங்கேயும் முதலில் இரண்டே இரண்டு பதங்கள்தான் யஜனம். யாஜனம் அப்படி என்றால்? யஜனம் – பண்ணுவது யாஜனம் - பண்ணுவிப்பது பண்ணிவைப்பது எதை? மந்த்ரம், யாகம், ஹோமம் ஆகியவற்றைதான்.

எப்படி? இங்கேயும் பள்ளிக் குழந்தைகளை உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது. சின்னக் குழந்தைகள் டைம் டேபிள் பயன்படுத்துவது போல ஒரு நாளில் இன்னின்ன சமயத்தில் இன்னதை செய்யவேண்டும். காலக்ரமப்படி கர்மாக்கள் வகித்துள்ளது சாஸ்திரம்.

என்னென்ன என்று பார்ப்போம்! காலை 4.30-இல் இருந்து 5 6 மணிக்குள் அதாவது சூரியோதயத்துக்கு முன் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவேண்டும்.

சிறுநீர் கழிக்கச் செல்லும் போது பூணூலை எடுத்து காதில் சுற்றிக் கொள்ள வேண்டும். காலைக் கடன்கள் கழித்த பின் கை, கால்களை அலம்பிக் கொண்டு சில மந்திரங்களைச் சொல்லவேண்டும்.

பிறகு ஸ்நானம் செய்வதற்கென சில மந்த்ரங்கள்.சூரியோதயத்துக்கு முன்னரே செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான சடங்கு சந்தியாவந்தனம்.

(பின்னாளில் ராட்சஸர்கள் சூரியனை மறைத்துக் கொண்டதாகவும், அதனால் ராட்சஸர்களிடமிருந்து சூரியனை மீட்பதற்காகவே எல்லோரும் பிராமணர்களைத் தேடியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. பிறகு பிராமணர்கள் சிறிது தீர்த்தத்தை எடுத்து மந்த்ரங்கள் சொல்லித் தெளிக்க அதன் வலிமையினால் அசுரர்கள் ஓடிவிட்டனர். சூரியன் மெல்ல மேலெழுந்தான் என சந்தியாவந்தனத்துக்கும் ஒரு திரைக்கதை தயாரித்தார்கள் பின் வந்தவர்கள்.

இந்தச் சடங்கில் ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியும் உண்டு. இதனை காலையிலும் மாலையிலும் செய்தால் உடம்புக்கு நல்லது என அன்றே அறிந்தவர்கள் பிராமணர்கள். இன்றைக்கு அனைவருக்கும் தேவைப்படுவது இந்த மூச்சுப் பயிற்சிதான்.

அடுத்ததாக யஜனம், யாஜனம். இரண்டும் தான் அன்று முழுக்க பிராமணர்களின் பிரதானப் பணி. அதாவது தங்களுக்குரிய பிற கர்மாக்கள் செய்யவேண்டும். பிறருக்கும் அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள கர்மாக்களை செய்து வைத்து தட்சணைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இக்கர்மாக்களில் அக்னிஹோத்ர உள்ளிட்ட மந்த்ர சம்பிரதாயங்கள் அடங்கும்.
சூரியன் உச்சி வரும் வேளையில் போஜனம் முடித்து, பின் கொஞ்ச நேரம் சயனம் அதாவது தூக்கம்.

பிறகு சில சாஸ்திர புஸ்தகங்களைப் படிப்பது. மாலையில் சூரியன் சாயும் வேளையில் மறுபடியும் சந்தியாவந்தனம் செய்வது, பின் உண்டு உறங்குவது.

இது தான் பிராமணர்களுக்கென சாஸ்த்திர புஸ்தகங்கள் வகுத்து வைத்த க்ரமம்.

மகாசிவராத்திரி கொண்டாடும் பக்தர்களே ஒரு கணம் சிந்திப்பீர்!

மகா சிவராத்திரியாம்! மகா ஒழுக்கக்கேடு!!

சிவராத்திரிக்காக ஆரியர்கள் புனைந்த கதைகள் மிக அற்பமான கருத்தை உடையவையே ஆகும். இதிலிருந்தே அக்கால ஆரியர்களின் புத்தியின் போக்குத் திறத்தை ஒருவாறு அறியலாம்.

 சிவராத்திரி கதை, ஆரியர்களின் புராணங்களில் உள்ளபடியும், பண்டிகை, உற்சவம், விரதங்களுக்காக என்று பார்ப்பனர்கள் தொகுத்த ஓர் ஆதாரமான புத்தகத்திலிருந்தும் இது தொகுக்கப்படுவதாகும்.

 அதாவது, ஒரு பார்ப்பன வாலிபன் பஞ்சமா பாதக அக்கிரமங்கள் பல செய்து கொண்டிருந்தான். அதனால் அவன் நாட்டை விட்டு விரட்டப்பட்டான். இந்த நிலையில் ஒரு நாள் அவன் பட்டினியோடு காலை முதல் இரவுவரை அலைந்து திரிந்து கொண்டிருந்தான். இரவு அவன் ஒரு சிவன் கோயிலை அடைந்து கர்ப்ப கிரகத்திற்குள் சென்று பார்த்தான். அப்போது கோயில் பூசாரி சிவன் சிலைக்குமுன் பிரசாத வகைகளை வைத்துவிட்டு எங்கோ சென்றிருந்தான். பிரசாதங்களைக் கண்டதும் அந்த வாலிபன் அவற்றைக் கவர்ந்து சென்று உண்ண எண்ணினான். அப்போது அந்தச் சிலைக்குப் பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கு மங்கலாக இருந்ததால் பூசைக்கு வைக்கப்பட்டிருந்த பலகாரங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. எனவே அவன் விளக்கைச் சிறிது தூண்டிவிட்டு அதிக வெளிச்சம் ஏற்படும்படிச் செய்தான். அப்போது அங்கு வந்த பூசாரி இந்த வாலிபன் பிரசாதங்களைத் திருடுவது கண்டு சீற்றமடைந்து அந்த வாலிபனை வெட்டிக் கொன்றுவிட்டான்.

அன்றைய நாள் சிவனுக்கு இரவு நாளாகும். அன்று பகல் முழுவதும் அந்த வாலிபன் பட்டினியாக இருந்தது சிவராத்திரி விரதம் இருந்தது போலாகிறதாலும், மற்றும் சிலையின் முன் வைத்திருந்த விளக்கைத் தூண்டிவிட்டு, அதிக ஒளியுடன் பிரகாசிக்கச் செய்தது போலாகிறதாலும், அந்த வாலிபனுக்குச் சிவன் மோட்சத்தை அருளினான். ஆதலால் அந்த வாலிபனைப் போல், பகலில் பட்டினி கிடந்து இரவில் கண்விழித்து அதிகாலையில் உணவு கொண்டால் எவ்வளவு அயோக்கியனுக்கும் மோட்சமளிக்கும் என்பதாக சிவராத்திரி விரத நாள் கொண்டாடப்படுகிறதாம்.(பாரததேவி 8.2.1953)

இதுதான் மகா சிவராத்திரியாம்.

இந்தக் கதையை நம்பினால், இதை நம்பி மகாசிவராத்திரியைக் கொண்டாடினால் மனிதனுக்கு ஒழுக்கம் வளருமா?

பஞ்சமாபாதகம் செய்தவனாம். அவனும் சிவனுக்குத் திட்டமிட்ட வகையில பக்தியின் அடிப்படையில்கூட பூஜை செய்யவில்லை. அத்தகைய கயவனுக்கு மோட்சமாம்!

அந்தப் பாதகன் சிவனுக்குத்தான் இவ்வளவும் செய்தான் என்று இட்டுக் கட்டி திணிக்கப்பட்டுள்ளது. எப்படியாக இருந்தாலும் சிவனைப் பூஜை செய்ய வேண்டும் என்ற வறட்டுத் தனம்தான் இதில் தொக்கி நிற்கிறது.

மகாசிவராத்திரி கொண்டாடும் பக்தர்களே, நீங்கள் எந்த பஞ்சமா பாதகத்தைத் செய்துள்ளீர்கள்? ஒரு கணம் சிந்திப்பீர்!
-------------------நன்றி:- “விடுதலை” 9-2-2010

தன்னுடைய"அதை" மட்டும்அனுப்பி இல்லறசுகம்!!!. முடியுமா உங்களால்?

“அது” மட்டும் விர்ரென பறந்துபோய் ஆனந்தமாக கலவி அனுபவித்து விட்டு திரும்பியதாம். .

நள்ளிரவிலும் பிராட்டியை சேரவேண்டும் என்ற ஆசை ரங்கநாதனுக்கு வந்தது. உடனே தன் அங்கத்தை (ஆண் குறி)அனுப்பி ரங்கநாயகி சன்னதிக்குள் சென்று இச்சையை தீர்த்துக்கொண்டு விடுகிறார்’ என்பதை குணரத்ன கோசத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார் பராசரபட்டர்.

பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன் போகத்துக்காக இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போதனையையும் தெய்வங்களிடமிருந்தே ஆரம்பித்து விட்டனர்.

தெய்வங்களிலேயே பெண் தெய்வங்களுக்கு எவ்வளவு கட்டுப்பாடுகள் பாருங்கள்.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 51.

பாரி வேட்டை படித்திருப்பீர்கள். அதாவது ஆண் தெய்வம் கோவிலை விட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இதை சகித்துக் கொண்டு பெண் தெய்வங்கள் கோயிலுக்குள்ளேயே தான் இருக்கவேண்டும்.

ஆமாம்... பெருமாள் இத்தனை வாகனங்களில் ஊர்விட்டு ஊர், தெருவிட்டு தெரு என ‘புறப்பாடு’ நடத்திக் கொண்டிருக்க தனிக்கோவில் நாச்சியாரான தாயார் நிலை என்ன தெரியுமா?“

நம் கணவர் ஜம்மென்று இப்படி ஊர் சுற்றுகிறாரே... நாம் சுற்ற முடியாதா?” என ஒருவேளை பிராட்டி நினைத்தால்...“ஓ... நீங்களும் சுற்றலாமே...ஆனால் உங்கள் கணவரான பகவானை மட்டும் சுற்றுங்கள். அதுவே ஊரைச் சுற்றியது போல் ஆகிவிடும்”... என பெண் தெய்வத்துக்கே கட்டளை போடுகிறது நமது ஆண் சாஸ்திரம்.

அதனால்... இன்றும் பெருமாள் கோவில்களில் தனிக்கோவில் நாச்சியாரான பிராட்டிக்கு ‘புறப்பாடு’ என்றால் கோயில் பிரகாரத்தை சுற்றி வருவதுதான் அதற்குமேல் எங்கேயும் வெளியே போகக்கூடாது என்பதுதான் பொது விதி. இன்னும், விதிவிலக்காக சிற்சில இடங்களில் சில ஸ்தலபுராணங்களை முன்வைத்து பெண் தெய்வமான பிராட்டி வெளியே தலைகாட்டும் உற்சவங்களும் அபூர்வமாக நடக்கின்றன.

அதாவது... தெய்வங்களிலேயே பெண் தெய்வங்களுக்கு எவ்வளவு கட்டுப்பாடுகள் பாருங்கள்.

இதெல்லாம் எதற்கு? தெய்வ விஷயத்திலேயே இப்படித்தான் இருக்கிறது. பெண் தெய்வம் படிதாண்டக்கூடாது என சாஸ்திரம் கோடு போட்டு வைத்திருக்கிறது.

அப்படியானால் மனித தர்மத்தில் பெண்கள் நிலைமை எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதற்குத்தான் இதெல்லாம்.இதெல்லாம் இருக்கட்டும்...

பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன் போகத்துக்காக இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போதனையையும் தெய்வங்களிடமிருந்தே ஆரம்பித்து விட்டனர்.

அந்த போதனையை சொல்லும் ஒரு காட்சியை உங்களுக்கு சொல்கிறேன்.இப்போது நாம் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றால் என்னென்ன தரிசிப்போம்?

படுத்துக் கொண்டிருக்கும் ரங்கநாதனை சேவிப்போம். பின் ரங்கநாயகியை வழிபடுவோம். ஸ்ரீராமானுஜரை சேவிப்போம். இப்படி ஒவ்வொரு சன்னதியாய் போய் சேவித்து வருவோம்.

ஆனால்... ஒரு பக்தர் இரவு நேரத்தில் பகவானை சேவிப்பதற்காக வந்திருக்கிறார். அர்த்த ஜாமம் எல்லாம் ஆகி சன்னதியை பூட்டி... சாவிக்கொத்தை மாட்டிக் கொண்டு அர்ச்சகர்கள் சென்றாகி விட்டது. அமைதியே உருவான ரம்யமான ராத்திரி அது.

அப்போது... ரங்கநாதன் சன்னதியிலிருந்து திடீரென ஒரு விசேஷ வெளிச்சம். பகவான்தான் காட்சி தரப்போகிறாரோ என்னவோ என அந்த பக்தர் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து... ரங்கநாதன் சன்னதிக்குள்ளிருந்து ஒரு பொருள் மட்டும் விர்ர்...ரென வெளியே வருகிறது.

அப்படியே வானத்தின் வழியாக பறந்து போய் ரங்கநாயகியின் சன்னதிக்குள் நுழைகிறது. அந்த பக்தர் இதையும் பார்க்கிறார்.

கொஞ்சநேரம் ஆனது... மறுபடியும் ஒரு விசேஷ வெளிச்சம். இப்போது... ரங்கநாயகி சன்னதிக்குள்ளிருந்து அந்த பொருள் கிளம்பி... வந்த வழியே திரும்பி பழையபடி ரங்கநாதன் சன்னதிக்குள் வந்தடைகிறது. முன்னால் இருந்த இடத்திலேயே சென்று சேர்ந்து விடுகிறது.

சரி... அது என்ன பொருள் என்கிறீர்களா? அந்த பக்தரை கேட்டால் சொல்வார் அல்லவா?

சொல்வது என்ன எழுதியே வைத்திருக்கிறார். அந்த பக்தர் வேறு யாருமல்ல... ராமானுஜரின் வலது கையான கூரத்தாழ்வானின் மகன் பராசரபட்டர்தான்.

பராசரபட்டர் தான் அருளியிருக்கும் குணரத்ன கோசத்தில் இந்த காட்சியை சாதித்திருக்கிறார். சரி...

பறந்து போனது என்ன?


‘அது... ரங்கநாதனின் ஆனந்த நாடி... (ஆண் குறி )அதாவது தேக சம்பந்தம் வைத்துக்கொள்வதற்கு உபயோகப்படுகிற அங்கம்.


நள்ளிரவிலும் பிராட்டியை சேரவேண்டும் என்ற ஆசை ரங்கநாதனுக்கு வந்தது. உடனே தன் அங்கத்தை (ஆண் குறி)அனுப்பி ரங்கநாயகி சன்னதிக்குள் சென்று இச்சையை தீர்த்துக்கொண்டு விடுகிறார்’ என்பதை குணரத்ன கோசத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார் பராசரபட்டர்.


இந்தக் கதை எதற்கு? விட்டலாச்சார்யா கதைபோல இருந்தாலும்... ‘ஆணின் போகத்துக்குத்தான் பெண். அவளை எந்நேரமும் எப்படியும் உபயோகப்படுத்த ஆணுக்கு உரிமை உள்ளது’ என்பதைத்தான் இப்படி ரங்கனின் அந்தரங்கத்தையே பார்த்ததாக விளக்கியிருக்கிறார் பட்டர்.

இதை பெருக்காரணை சக்ரவர்த்தி ஆச்சார்யர் எழுதிய ‘மும்மத்தஸாரம்’ என்னும் புஸ்தகத்தில் நீங்கள் தமிழிலேயே தரிசிக்கலாம்.

ஸ்ரீரங்கநாதன் தனது ஆனந்த நாடிகளைக் கொண்டு ஸ்ரீரங்கநாயகியுடன் ஆனந்தமாக கலவியை அனுபவிக்கிறான் என்று ஸ்ரீபராசரபட்டர் ஸ்ரீ குணரத்ன கோசத்தில் எப்படி சாதித்தார்?...” என்று கேட்கிறார் சக்ரவர்த்தி ஆச்சார்யர்.

இதைப் பார்த்துவிட்டு வைதீகர்கள் பலர் வேதனைப்பட்டார்கள். இப்படி எழுதியதை தமிழிலும் மொழிபெயர்த்து விட்டாரே என்று.

இதையே சக்ரவர்த்தி அய்யங்கார் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது... இக்காட்சி இடம் பெற்றால், பெண்ணடிமைத்தனம் ஆபாசமாக சித்தரிக்கப்படுகிறது என்ற பேர் வருமே என்பதற்காக... அந்த ஆனந்த நாடி பகுதியை மட்டும் வெட்டி எடுத்துவிட்டார்கள்.

இப்படியெல்லாம் பெண்களை போகப்பொருளாகக் காட்டுவது வைணவம் மட்டும்தானா... சைவமும் இதற்கு சளைத்ததல்ல.

தாசிகளுடன் கடவுள் - வருடாவருடம்…..

வருடாவருடம் தாசிகளுடன் இரவு முழுதும் தங்கியிருந்துவிட்டு திரும்பும் கடவுள் பெருமாள்..

பெருமாளுக்குப் பிராட்டியாரை பார்த்துப் பார்த்துப் பழகிப் பழகி அலுத்துப் போய்விடுகிறது. அதனால் என்ன நினைக்கிறார் என்றால்... கொஞ்ச நேரம் வெளியே போய் சுற்றிவிட்டு வரலாமே என்றுதான்.

இந்த உற்சவத்திலே இன்னொரு விசேடம் ஆண் மகன் எங்கே வேண்டுமானாலும் போவான். ஆனால்... பெண்ணானவள் அதையெல்லாம் சகித்துக் கொள்ளவேண்டும்.

தெய்வங்களிடையிலேயே இப்படித்தான் நடக்கிறது

இந்த உற்சவம் நடக்கும்போது எல்லாரும் கையெடுத்து சேவிக்கிறார்கள். இதில் சேவிக்க என்ன இருக்கிறது?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 50

ஆமாம். ஆண் தெய்வமான பெருமாள்... வாகனங்களில் ஏறி, ஊர் சுற்றுவார். ஆதிசேஷ வாகனத்தின் மீதேறி கம்பீரமாக வருவார். பின் அனுமார் வாகனம்... அடுத்தது யானை வாகனம். அம்பாரியில் ஜம்மென உட்கார்ந்து வீதிகளை மேளதாள வாத்தியங்களை ஜோராக ரசித்தபடி ஆடியபடி... சுற்றி வருவார் பெருமாள்.

அப்படியென்றால் பெண் தெய்வமான பிராட்டி? அதற்குமுன் பெண் தெய்வம் வந்த கதையைப்பார்ப்போம்...வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை. நீ வேண்டுமானால் அவருக்கு உருவம் இருப்பதாக நினைத்துக் கொள். ஆனாலும் நீ நினைப்பதால் நினைத்து வடிப்பதால் கடவுள் உருவத்துக்குள் அடங்கமாட்டார் - என்றது வேதம்.

ஆனாலும்... உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தோன்றிய வழிபாட்டு முறைகள்படி (Humanistic Worship) அதாவது மனித உருகொண்டு தெய்வத்தை வணங்கும் கலாச்சாரம் உருவானது.

அதிலும் ஆண் உருவங்கள்தான் முதலில் வழிபடப்பட்டன. பிறகு... இந்த ஆணுக்கு ஒரு பெண் துணை வேண்டாமா? என யோசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் பெண் தெய்வங்கள்! இது ஒரு பக்கம் என்றால்... சிறுசிறு குழுக்கள் தத்தமது பகுதிகளில் ‘அம்மன்’ என அழைக்கப்படும் பெண் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.

இதுபற்றி பிறகு பார்ப்போம். ஆண் தெய்வம், பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள். அவர்களே... விஷ்ணுவின் மனைவியான லட்சுமி அவருடைய மார்பில் இருக்கிறார் என்றார்கள்.

இதன் பிறகு...உற்சவம், திருவிழா என்றெல்லாம் தெய்வத்துக்கும் கொண்டாட்டங்களை குறித்து வைத்தார்கள்.

அதில் ஒன்று சொல்கிறேன் பாருங்கள். இந்த உற்சவத்துக்கு பேர் பாரிவேட்டை உற்சவம். இன்னொரு பெயர் மட்டையடி உற்சவம் என்றும் சொல்வார்கள். இன்றும் திருக்கண்ணபுரம், சிறீரங்கம், கீழையூர் போன்ற முக்கிய வைணவத் திருத்தலங்களில் இந்த உற்சவத்தை கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.

அப்படி என்ன உற்சவம்? வருடாவருடம் மாட்டுப் பொங்கலன்றும் மறுநாளும் இந்த உற்சவம்.

குதிரை வாகனத்தில் கிளம்புகிறார் பெருமாள். மேளதாளம் முழங்குகிறது. நாதஸ்வரம் இசைக்கிறது. குதிரை வாகனம் ஆடிஆடி சென்று கொண்டிருக்கிறது. குதிரைமீது இரண்டு பக்கமும் கால்களை போட்டுக் கொண்டிராமல்... ‘சைக்கிள் கேரியர்’-ல் நாம் உட்கார்ந்து போவோமே அதுபோல் இரண்டு கால்களையும் ஒரே பக்கத்தில் போட்டுக்கொண்டு போகிறார் பெருமாள்.

கொஞ்சதூரம் போன பிறகு... மேளம் நிறுத்தியாகி விட்டது. நாதஸ்வரத்தை எடுத்து அதற்கான துணியுறையில் போட்டு விடுகிறார் வித்வான், ஏன்?

அது தாசிகள் வசிக்கும் தெரு. அங்கே போகும்போது யாருக்கும் தெரியக்கூடாது என்று தான் வாத்தியத்தையும் நிறுத்திவிட்டனர். அங்கே போன பிறகு பெருமாளை இறக்கி வைக்கிறார்கள். இரவு அங்கே உள்ள ஒரு மண்டபத்தில் தங்குகிறார்.

இது உற்சவத்தில் வரும் காட்சிகள். ஏன் இந்த காட்சிகள்?

பெருமாளுக்குப் பிராட்டியாரை பார்த்துப் பார்த்துப் பழகிப் பழகி அலுத்துப் போய்விடுகிறது. அதனால் என்ன நினைக்கிறார் என்றால்... கொஞ்ச நேரம் வெளியே போய் சுற்றிவிட்டு வரலாமே என்றுதான்.

குதிரைமேல் ஏறுகிறார். கொஞ்ச தூரத்தில் இருக்கும் தாசிகள் தெருப்பக்கம் போகிறார். இவர் வெளியே போனாரே எங்கே இன்னும் காணோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் பிராட்டி. இரவு ஆகிவிட்டது. ஊரெல்லாம் அடங்கிவிட்டது. அப்படியும் பெருமாள் கோயிலுக்குத் திரும்பவில்லை. இரவு முழுதும் தாசிகளுடன் தங்கியிருந்துவிட்டு... மறுநாள் காலை ஆசுவாசமாகப் புறப்படுகிறார் பெருமாள்.

இதன்பிறகு மறுபடியும் அந்த உற்சவக் காட்சிகளை சொல்கிறேன் பாருங்கள்.காலையில் அதே குதிரையில் ஏறி... கோயிலுக்கு வருகிறார்.

ஆடிவரும் குதிரையோடு அப்படியே விடுவிடுவென கோயிலுக்குள் பெருமாள் நுழைவதற்காக வர... கோயில் வாசலில் எதிரே வழியை மறித்துக்கொண்டு நிற்கிறார் பிராட்டி.

“எங்கேய்யா போயிட்டு வந்தீர்?” இது பிராட்டியின் கேள்வி.
அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் மறுபடியும் உள்ளே நுழைய... மறுபடியும் தடுக்கிறார் பிராட்டி. இருவரும் எதிரெதிரே ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நிற்க.... இப்படியே நேரம் ஓடிக் கொண்டிருக்க... அப்போதுதான் சமாதானத்துக்காக வருகிறார் அங்கே ஒரு தூதுவர்.

அப்படியும் பிராட்டியார் சொல்கிறார். “கற்பூரம் காட்டும்போது பார்த்தேன். இன்னமும் காயாத ஈர சந்தனம் அவர் மார்பிலே ஒட்டிக் கொண்டிருக்கிறதே... அந்த சந்தன வாசனை வேறு ஏதோ ஒரு அந்நிய வாசனைபோல் உள்ளது. அவர் எங்கே போய்விட்டு வந்தார்? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அவரை உள்ளேவிட முடியாது...” - பெருமாள் மீது சந்தன வாசனை. இதனால் பிராட்டிக்கு சந்தேக வாசனை. ரொம்ப நேரத்துக்குப் பிறகு... நம்மாழ்வாரின் சமாதானத்துக்குப் பிறகு பெருமாளை உள்ளே விடுகிறார் பிராட்டி. இது உற்சவம்.

இந்த உற்சவம் நடக்கும்போது எல்லாரும் கையெடுத்து சேவிக்கிறார்கள். இதில் சேவிக்க என்ன இருக்கிறது? ஆனால், இங்கு ஞாபகப்படுத்த ஒன்று இருக்கிறது.

வேதத்தில் ஒரு வாக்கியம் வருகிறது என்று கூறியிருந்தேனே...

கணவன் - மனைவியிடம் சொல்கிறான்... “நீ உன்னை எப்போதும் அழகானவளாக உன்னை வைத்துக் கொண்டிருந்தால் நான் வெளியே ஏன் போகப்போகிறேன்?” என்று. இதே போல்தான் பெருமாள்... இந்த உற்சவத்தில் பிராட்டியாரிடம் சொல்கிறார். குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தும் இந்த உற்சவத்தை குடும்பத்தோடு வந்து சேவிக்கிறார்கள்.

இந்த உற்சவத்திலே இன்னொரு விசேடம் ஆண் மகன் எங்கே வேண்டுமானாலும் போவான். ஆனால்... பெண்ணானவள் அதையெல்லாம் சகித்துக் கொள்ளவேண்டும். தெய்வங்களிடையிலேயே இப்படித்தான் நடக்கிறது.


வித‌வைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்?

கணவனை இழந்த பெண் என்றால்... அவளை இறந்த கணவன‌து சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி.


விதவைகளாகி மறுமணம் முடிக்க நினைத்தால்?... இதை விபச்சாரம் என்னும் அடைமொழிக்குள் வைத்துப்பார்க்கிறது மநு.

கணவனை இழந்த பெண்கள், மிகச்சிறு வயதிலேயே விதவைகளாகி விடும்போது... சிதைக்கு போகாமல் தப்பித்த பெண்களும் உண்டு.

கணவனை இழந்த அவள் மேல் வேறெந்த ஆணுக்கும் ஆசை வரக்கூடாது என்பதற்காக உடனடியாக அவளுக்கு மொட்டையடிக்கப்பட்டது.

(மொட்டை பாப்பாத்தி என கேள்விப்பட்டிருப்பீர்களே. இப்பொழுது விளங்குகிறதா?)

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 49.

கல்வியும் கிடையாது... மந்த்ரங்கள் வழியே கூட அதை பெறக்கூடாது. 8 வயசிலேயே கல்யாணம் பண்ணிக்கொண்டு நான்கு சுவர்களுக்குள் நன்கு குடித்தனம் நடத்து.

“இதுதான் மநு தர்மம் பெண்களுக்கு சொன்னது.
வேதத்தில் ‘சதி’ பற்றி பார்த்தோமே... வேதமே அப்படி சொல்கிறதென்றால் மநு சும்மா விடுமா?... வேதத்தை விட இன்னும் தெளிவாக சொல்கிறது.

“சிதா வாரோஹணம் பிரம்மச்சர்யம்...”

கணவனை இழந்த பெண் என்றால்... அவளை அவனது சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி மநு மணம் முடித்து இதுபோல் கணவனை இழந்த பெண்கள், மிகச்சிறு வயதிலேயே விதவைகளாகி விடும்போது... சிதைக்கு போகாமல் தப்பித்த பெண்களும் உண்டு.

ஆனால்... அவர்களது வாழ்க்கையிலும் பயங்கர கட்டுப்பாடுகள் பின்னப்பட்டன. கணவனை இழந்த அவள் மேல் வேறெந்த ஆணுக்கும் ஆசை வரக்கூடாது என்பதற்காக உடனடியாக அவளுக்கு மொட்டையடிக்கப்பட்டது.

‘உலகை ஆற்றுப்படுத்தும் அழகுதான் பெண்’ என்றது வேதம். அந்த அழகை மொட்டையடித்து அவலட்சணமாக்கி அழுவதை வேடிக்கை பார்த்தது மநு.

விர... அந்த விதவைப்பெண் வேறெந்த ஆணிடமும் பேசக்கூடாது, பழகக்கூடாது அவளது கண்களை கட்டுப்பாட்டால் கட்டிப் போட்டனர்.

இதையும் மீறி... வயதின் ஆட்சியால் வாலிபத்தின் தூண்டுதலால் மிக இளமையான வயதில் கணவனை இழந்த பெண்களுக்கு ஆண் துணை வேண்டுவது இயற்கையின் விதி. இதை இப்போது மறுமணம் என்கிறோம்.

ஆனால் மநு மணத்தில் மறுமணம் ஏது? ஒரு பெண், கணவனை இழந்த பின்பு... ஆறுதலுக்காகவும், வாழ்க்கை நடத்திட வழி வேண்டியும் இன்னொரு ஆணை அணுகினால் அது கிட்டத்தட்ட விபச்சாரம் ஆகி விடுகிறது என்கிறது மநு. இதற்கும் தண்டனை உள்ளது. அதற்கு முன் விதவைகளுக்கு மொட்டை போடுதல் என்ற தண்டனை பற்றி இன்னும் சில விளக்கங்களை சொல்லி விடுகிறேன்.

விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்று வடகலை வைணவர்கள் வலியுறுத்தினார்கள். அதெல்லாம் இல்லை மொட்டையடித்தே ஆக வேண்டும் என்பது தென்கலைக்காரர்களின் தரப்பு வாதம்.

இந்த இடத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் பற்றி உங்களுக்கு கேள்வி வரலாம். அப்படி என்றால் என்ன?
பிரம்மத்துவம் எனப்படும் கடவுள்தன்மை பெருமாளின் துணைவியான பிராட்டி அதாவது தாயாருக்கு உண்டா என்ற பிரச்சினை விவாதமாக எழுந்தது.

அப்போது... பெருமாளுக்கு துணையாக இருக்கிறாரே தவிர பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் பங்கு கிடையாது. உதவும் சக்தி கிடையாது. வெறும் சிபாரிசு மட்டும்தான் செய்யமுடியும் என்பது தென்கலைகாரர்களின் வாதம். பெருமாளின் துணைவிக்கே சக்தி இல்லை என்றவர்கள் சாதாரண ஸ்த்ரீ... அதுவும் கணவனை இழந்த ஸ்த்ரீக்கு என்ன சொல்வார்கள். மொட்டையடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

வடகலைக்காரர்களோ... பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் குறிப்பிட்ட பங்கு இருக்கிறது என்று நம்பினார்கள். அதனால் பெண்மைக்கு முக்யத்துவம் கொடுத்து... விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்றார்கள். இந்த ஒரு விஷயத்தின் அடிப்படையில் மட்டுமல்ல... பல விஷயங்களின் அடிப்படையில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தான் வடகலை, தென்கலை என்று பிரிந்தார்கள்.

அது இருக்கட்டும்... மநு மணம் முடித்த பெண்கள், விதவைகளாகி மறுமணம் முடிக்க நினைத்தால்?... இதை விபச்சாரம் என்னும் அடைமொழிக்குள் வைத்துப்பார்க்கிறது மநு.

அவளுக்கு ஒழுக்கம்தான் முக்யம். ஒரு ஆணுக்கு வாழ்க்கைப்பட்டவள் இன்னொரு ஆணோடு வாழ்வதா?... பிடி அவளை... அவளது படுக்கையோடு சேர்த்து அவளை சுற்று ஆமாம் அப்படியே தீ வை. எந்த படுக்கையில் விபச்சாரம் என்னும் அபச்சாரத்தை செய்தாளோ... அதிலேயே வைத்து அவள் எரிக்கப்பட வேண்டும் என மநு தன் கட்டளைகளில் கொள்ளிக்கட்டைகளை கொண்டு வருகிறார்.

வேதம் பெண்களை எப்படிப்பார்த்தது... மநு பெண்களை எப்படிப் பார்த்தது?... என்று இதுவரை பார்த்துவிட்டோம். சாதாரண மனித பெண்களை இப்படி நடத்தியிருக்கிறார்கள். அப்படியென்றால் தெய்வப்பெண்களை?... அதாவது பெண் தெய்வங்களை எப்படி பார்த்தார்கள்?

இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. சற்று முன்புதான் மோட்சம் வழங்குவதில் பிராட்டி அதாவது பெண் தெய்வத்தின் பங்கு பற்றி சில விஷயங்களை பார்த்தோம்.

கோவில்களில் பெருமாளை பார்த்திருப்பீர்கள். பெருமாளுக்கு வலது பக்கமும், இடது பக்கமும் பூதேவி, நீளாதேவி என இரண்டு பெண் தெய்வங்கள் இருப்பார்கள். ஆனால்... பிராட்டி எனப்படும் தாயார் தனிக்கோவில் நாச்சியாராகத்தான் இருப்பார். அதாவது அவருக்கென்று தனி சன்னதி இருக்கும். அங்கே தான் இருப்பார்.

கோவில்களில் உற்சவம் நடப்பதை பார்த்திருப்பீர்கள். பெருமாள் வாகனங்கள் புடைசூழ வெளியே வருவார்.

முதலில் அன்னபட்சி வாகனத்தில் வெளியே வருவார். கருடன் மீதேறி ஊர் சுற்றுவார். சூரியபிரபை என்னும் வாகனத்தில் புறப்பட்டு கடைத்தெருக்களை பார்வையிடுவார். பிறகு குதிரை வாகனம்... கடைசியில் தேர், ஊர்கூடி இழுக்க உள்ளே படாடோபமாக அமர்ந்திருப்பார் பெருமாள்.

ஆண் தெய்வமான பெருமாள் இப்படி ஊர் சுற்றி உலகம் சுற்றிவிட்டு வர... பெண் தெய்வமான பிராட்டியார்?..

பார்வதி குளிப்பதை மறைந்து பார்த்த சிவன். விநாயகன் பரமசிவன் தான்.

குறும்பு, லீலைகள் என்பவையெல்லாம் மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்ததே தெய்வங்கள் தானோ என நினைக்கும் அளவுக்கு பகவத் சிலுவிஷமங்கள் புராணங்களில் நிறைந்து கிடக்கின்றன.

விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன் தான்.

‘டேய்... குளிப்பது உன் பத்தினியாக இருந்தாலும் எட்டிப் பார்க்காதே. பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று பரமசிவன் ஆண்களிடம் சொல்வதற்குத்தான். இது கதை.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 56 - 1.

முருகன் என்ற பேருக்கும் ஸ்கந்தன், சரவணன் என்ற பேர்களுக்கும் இடையே நிலவும் மொழி, கலாச்சார வேறுபாட்டைப் பார்த்தோம்.

அப்படியென்றால் முருகனின் அண்ணான விநாயகர், கணபதி யார் என்கிறீர்களா? அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மச்சினன் என தெய்வங்களுக்கிடையே உறவு வைத்ததெல்லாம் Humanistic Worship -ஆல் வந்தது.சரி... கணபதிக்கு வருவோம்.

கணபதி முருகனின் அண்ணன், சிவனின் மூத்த மகன் என்றுதான் பரவலாக நம்மவர்கள் பேசி வருகிறோம். நம்பி வருகிறோம்.

ஆனால்... சமஸ்கிருதக் கதைகள் இதற்கும் வேட்டு வைக்கின்றன. என்ன கதை? பரமசிவனின் மனைவியாகிய பார்வதி, ஒருநாள் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருக்கிறாள்.

குறும்பு, லீலைகள் என்பவையெல்லாம் மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்ததே தெய்வங்கள்தானோ என நினைக்கும் அளவுக்கு பகவத் சிலுவிஷமங்கள் புராணங்களில் நிறைந்து கிடக்கின்றன

சரி... சிவன் இங்கு என்ன செய்கிறார்? பார்வதி தேவி தண்ணீர் கொட்டிக் கொட்டி குளித்துக் கொண்டிருக்கிறாள். சிவனுக்கு ஒரு நப்பாசை. நம் தேவி எப்படி குளிக்கிறாள் என்பதை அவள் அறியாமல் பார்க்கவேண்டும். அதாவது... ஒருபெண் குளிப்பதை அவளுக்குத் தெரியாமல் இன்னொரு ஆண் (கணவனே என்றாலும் தெரியாமல் பார்க்கிறானல்லவா?) பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டார் சிவன்.

அதுபோலவே பார்வதி தேவி ஜலக்கிரீடை செய்யும்போது மறைந்து மறைந்து நின்று தேவியின் தரிசனத்தை அவருக்கே தெரியாமல் பெற்றுக் கொண்டிருந்தான் பரமசிவன்.

‘சகல லோகங்களையும் கண்காணிக்கும் சக்தி பெற்ற’ பராசக்திக்கு தான் குளிப்பதை இரண்டு கண்கள் திருட்டுத்தனமாக பார்ப்பது தெரிந்திருக்காதா என்ன?உணர்ந்தாள்.

தான் தன்னந்தனியாக குளித்துக் கொண்டிருப்பதை யாரோ ரசம் சொட்ட பார்த்துக் கொண்டிருப்பதை தன் சக்தியால் தெரிந்துகொண்ட பார்வதி திடுக்கிட்டாள். பெண் தெய்வம் என்றாலும் பெண் தானே?

உடனே... அவசரமாக தனது கச்சைகளையும், வஸ்திரங்களையும் பதறியபடியே உடுத்திக்கொண்ட பார்வதி, தன்னைப் பார்த்தவனை தேடினாள். டேய்... யாரங்கே? பராசக்தியின் ஸ்நானத்தை ஒளிந்து பார்க்கும் அளவுக்கு துணிச்சல்காரன் யார்?

என கோபத்தில் பார்வதிதேவி சத்தம்போட... பட்டென்று வெளியே வந்த சிவன்... ‘தேவி... யாம்தான் ஒரு சின்ன திருவிளையாடல்... அதற்குப் போய் ஏன் இப்படி கோபப்படுகிறாய்? சாந்தம்... சாந்தம்...’ என்கிறார்.

எது ஸ்வாமி திருவிளையாடல் ஒரு பெண் குளிப்பதை இன்னொரு ஆண் மறைந்து நின்று கண்களால் சுகிப்பது உங்கள் திருவிளையாடல் என்றால்... என் திருவிளையாடலையும் கொஞ்சம் பாருங்கள்.

சக்தியும் தன் திருவிளையாடலை அரங்கேற்றினாள். “மனைவியென்றும் ‘பாராமல்’ நான் குளித்ததைப் பார்த்த நீர்... யானைத் தலையனாகவும், மனித உடம்பாகவும் மாறக் கடவுவது...” என கோபத்தால் சாபமிட்டாள்.

அந்த க்ஷணத்திலேயே பரமசிவன் அவ்வாறே ஆனார். அதாவது யானை முகத்துடனும் மனித உடம்பாகவும் புது வடிவம் பெற்றார். அதாவது... விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன்தான் என்கிறது இக்கதை.

இன்றும் ஆற்றங்கரை, குளத்தங்கரைகளில் எல்லாம் விநாயகர்கள் நிறைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.அது எதற்கு என்றால்...?

‘டேய்... குளிப்பது உன் பத்தினியாக இருந்தாலும் எட்டிப் பார்க்காதே. பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று பரமசிவன் ஆண்களிடம் சொல்வதற்குத்தான்






அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.  (தொடரும்)


http://thathachariyar.blogspot.com/2010/12/blog-post_20.html




Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

திருக்குறள் கலைஞர் உரை கலைஞர் மு. கருணாநிதி-குறளோவியம்

(குறுந்தொகை: பாடல்: 32 பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்)-கலைஞர் மு.கருணாநிதி